-
30th October 2014, 11:10 AM
#2511

Originally Posted by
Gopal,S.
உள்ளத்தில் நல்ல உள்ளம் ஆஹிர் பைரவ் (அ )சக்ரவாகம் பல்லவி மட்டுமே. சரணம் முழுக்க சரசாங்கி.
தர்மவதி
ஆரோகணம்: ஸ ரி2 க2 ம2 ப த2 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி3 த2 ப ம2 க2 ரி2 ஸ
"திசி" என்றழைக்கப் படும் 10வது சக்கரத்தில் 5 வது மேளம்.
23வது மேளமாகிய கௌரிமனோகரியின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும்.
மூர்ச்சனாகாரக மேளம். இதன் ரிஷப, பஞ்சம மூர்ச்சனைகள் முறையே சக்ரவாகம் (16), சரசாங்கி (27) ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கும்.
மூர்ச்சனாகாரக மேளம் என்பது கருநாடக இசையில் கிரக பேதத்தினால் புதிய இராகங்களை உண்டாக்கக் கூடியது.
உ-ம்: சங்கராபரணத்தின் கிரக பேதத்தின் வழியாக ரிஷபத்தை ஷட்ஜமாக வைத்துக் கொண்டால் கரகரப்பிரியாவை கொடுக்கும். அதே போல க, ம, ப, த ஆகிய சுரங்கள் முறையே ஹனுமத்தோடி, மேசகல்யாணி, ஹரிகாம்போஜி, நடபைரவி ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கின்றன.
-
30th October 2014 11:10 AM
# ADS
Circuit advertisement
-
30th October 2014, 01:14 PM
#2512
Junior Member
Newbie Hubber

Originally Posted by
gkrishna
தர்மவதி
ஆரோகணம்: ஸ ரி2 க2 ம2 ப த2 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி3 த2 ப ம2 க2 ரி2 ஸ
"திசி" என்றழைக்கப் படும் 10வது சக்கரத்தில் 5 வது மேளம்.
23வது மேளமாகிய கௌரிமனோகரியின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும்.
மூர்ச்சனாகாரக மேளம். இதன் ரிஷப, பஞ்சம மூர்ச்சனைகள் முறையே சக்ரவாகம் (16), சரசாங்கி (27) ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கும்.
மூர்ச்சனாகாரக மேளம் என்பது கருநாடக இசையில் கிரக பேதத்தினால் புதிய இராகங்களை உண்டாக்கக் கூடியது.
உ-ம்: சங்கராபரணத்தின் கிரக பேதத்தின் வழியாக ரிஷபத்தை ஷட்ஜமாக வைத்துக் கொண்டால் கரகரப்பிரியாவை கொடுக்கும். அதே போல க, ம, ப, த ஆகிய சுரங்கள் முறையே ஹனுமத்தோடி, மேசகல்யாணி, ஹரிகாம்போஜி, நடபைரவி ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கின்றன.
OK.Where is the relevance? Pl.Refer my introductions on Raga. My posting simply tells Pallavi is Ahir Bairav,Saranam is Sarasangi. That's it. Different ragams are based on different permutation &Combinations. When they club two Ragas for Conventional Songs,it will be cpmplimentary.
-
30th October 2014, 01:29 PM
#2513
Junior Member
Veteran Hubber

Originally Posted by
s.vasudevan
Courtesy: Mr Harish
இமயம்
படிப்பு அதிகமில்லாத, உருவ லட்சணங் களும் சுமாராக உள்ள ஒரு மனிதர், தம் நடிப்புத் திறமையை மட்டும் வைத்து நம்மையெல்லாம் நாற்பது ஆண்டுகளுக்குக் கட்டிப் போட்டிருந்தார்.
அவரை அபிமானிகள், "இமயம்' என்கிறார்கள். என்ன தவறு?
ஹரிஷ் என்ற நபர் இணையதளத்தில் பதிவிட்டது. இது நல்ல ஒரு முயற்சி. இருப்பினும் அவர் சில இடங்களில் கூறியிருப்பது அவருடைய கருத்தே அல்லாமல் அனைவரின் கருத்தும் அல்ல என்பதை நாம் உணரவேண்டும்.
இதை கூற காரணம் ...அந்த நண்பர் குறிப்பிடுகையில் "உருவ லட்சணங் களும் சுமாராக உள்ள ஒரு மனிதர்" என்று கூரியிர்ப்பது வியக்கவைக்கும் அல்லது அதிர்ச்சியளிக்கும் ஒரு குறிப்பு.
நடிகர் திலகம் அவர்களுடைய சம கால நடிகர் யாரை எடுத்துகொண்டாலும் ..எந்த வகையில் அவர்களை நடிகர் திலகத்துடன் ஒப்பிட்டு பார்த்தாலும் ஒரு சாமுத்ரிகா லட்சணம் கொண்ட முக அமைப்பு மற்று உருவ அமைப்பு கொண்ட ஒரே நடிகர் நடிகர் திலகம் மட்டுமே.
அவருடைய வேடங்களில் எந்த 10 வேடங்களை எடுத்துகொண்டாலும் அந்த வேட பொருத்தம் "உருவ லட்சணங்களும் சுமாராக உள்ள ஒரு மனிதர்" எவருக்காவது பொருந்துமா என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும். உதாரணம் : தங்கபதக்கம் SP சௌதரி, கெளரவம் பாரிஸ்டர் ரஜினிகாந்த், ராஜ ராஜ சோழன் மற்றும் பல கதாபாத்திரங்கள் உதாரணம்.
68 - 70 வயதில் உடல் இளைத்த நிலையில் கூட பசும்பொன் மற்றும் தேவர் மகன், ஒண்சு மோர் திரைப்படங்களில் கூட அந்த கதாபாதிரதிர்க்கு எப்படி முகம் இருக்கவேண்டுமோ அப்படி முகம் மற்றும் உருவ அமைப்பு இருக்கும்.
இரெண்டாவது எல்லா காலத்திலும் நடிப்பை பற்றி ஒரு விஷயமும் தெரியாமல் இயற்க்கை நடிப்பு என்ற போர்வையில் வலம் வருபவர்கள் கூறும் மிகை நடிப்பு பற்றி உரைத்திருப்பது.
இன்றைய காலகட்டத்தில் ஒரு ரவுடி கதாபாத்திரம் ஒரு ஆளை அரிவாளால் வெட்டும்போது அரிவாளால் ஒரு போடு போட்டாலே எதிரில் உள்ளவர் வேட்டுபடுவர். ஆனால் அதற்க்கு மாறாக.....யாஆஆஆஆஆய் ...என்று கேட்பவர் காது செவிடாகும்வரை கத்தியபின் வெட்டுவார்....அதை இப்போதுள்ளவர் பலரும் கை தட்டி விசில் அடித்து பாராட்டுவார்கள். - இது மிகை இல்லையா ?
அதே போல கதாநாயகியை வில்லனோ அவர் ஆட்களோ ஜீப்பில் அல்லது காரில் கடத்துவார்கள். அப்போது நாயகி அல்லது கடத்தப்படும் பெண் கதாபாத்திரம்......ஆஆஆஆஅ....என்ன காபாதுங்காஆஅ என்று கத்துவார். ஜீப் அல்லது கார் குறைந்தது 80 கிலோ மீட்டர் வேகத்தில் போகும்....இது ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாயகன் அதுவும் மலை மீது binocular வைத்து பார்த்துகொண்டிருக்கும் நாயகன் பார்வையில் விழும்....மலைக்கு கீழே தயாராக ஒரு குதிரை வண்டி இருக்கும் அல்லது மாட்டு வண்டி இருக்கும்....மலை மீதிலிருந்து கீழே ஓடி கூட வரமாட்டார்...அங்கிருந்து ஒரு DIVE ...நேராக குதிரை அல்லது மாட்டு வண்டியில் சர்ர்ர்ர்ர்....என்று அமர்ந்து 80 கிலோ மீட்டர் ஓடும் கார் அல்லது ஜீப்பின் மிக அருகில் கண்ணிமைக்கும் நேரத்தில் வந்துவிடுவார்......- இது இவர்களுக்கு மிகையில்லை - கேட்டால் தலைவர் சூப்பரா வந்து காபாத்தறார் பார் என்று விசில் அடிப்பார்கள்....
இதே போல இயக்குனர் திலகம் என்றழைக்கப்படும் பாரதிராஜா - இவர் படங்கள் முக்காலும் அபத்தத்தின் உச்சமாக இருக்கும். இவர் எடுத்த மூன்று உருப்படியான படங்கள் - முதல் மரியாதை, கிழக்கு சீமையிலே மற்றும் பசும்பொன் .
சமீபத்தில் ஐவரும் மிகை நடிப்பு உள்ள காலம் என்று உளறியதை நாம் கண்டோம் அதை பார்த்து கண்ணீர் வேறு வடிக்க ஆட்கள் இருக்கிறார்கள்.
நடிப்பை மிகை, குறை என்று அளவெடுக்கும் இவர் படம் எடுக்கும் விதம் மற்றும் நடிப்பு சொல்லி கொடுக்கும் விதம் பற்றி நாம் இங்கு இப்போது பாப்போம்.
சூரியகாந்தி பூ இல்லாத இடத்தில் இவரால் படம் எடுக்கவே முடியாது... !
புதுமுக கதாநாயகன் இவருடைய படங்களில் ஒரு சொன்கியாகவே பார்க்க இருப்பான்..உருப்படியான ஒரு நாயகனை இவர் அறிமுக படுத்தியதே கிடையாது....இவர் படங்களில் நாயகனோ நாயகியோ ஓடி வரும் காட்சியை பார்த்தாலே தெரியும் இவர் சொல்லி கொடுத்த நடிப்பின் தரம் !
பெரும் பாலும் நாயகி ஒரு நிலையை அடைவர் இவர் படத்தில். அதன் காரணம் என்ன என்பது அனைவருக்கும் தெரியும். புதுமை பெண் பட கிளைமாக்ஸ் காட்சி ரேவதி பேசும் வசனகாட்சி இயற்கையாக இருந்ததா...?
இவர் சொல்லிகொடுத்து செயற்கையாக இருந்தத இவர் சொல்லிகொடுத்த நடிப்பின் வெளிப்பாடு என்பதை பார்த்தால் விளங்கும்..!
இதே போல தான் பாலச்சந்தர் மற்றும் ஒரு சிலர்...!
இவர்களை போல் இன்னும் பலர் உள்ளனர்...இவர்கள் சிங்கத்திடம் சண்டையிடுவது இவர்கள் ஜெயிப்பார்கள் என்ற நம்பிக்கையில் அல்ல...சிங்கத்துடன் போரிட்டோம் என்ற விளம்பரம் பெறுவதற்கு மட்டுமே !
நடிகர் திலகம் அவர்களை வைத்து மாதவன், திருலோக், கோபாலகிருஷ்ணன், ராஜேந்திரன், விஎட்னாம் சுந்தரம் போன்றோர் மாபெரும் வெற்றிப்படங்களை கொடுக்க முடிந்தாது...ஆனால் ஒரு இயக்குனர் சிகரம் என்று மானியம் விடும் பாலச்சந்தரால் கொடுக்கமுடியவில்லை. காரணம் ... KB உக்கு நடிகர் திலகம் அவர்களை பயன்படுத்த தெரியவில்லை !
RKS
Last edited by RavikiranSurya; 30th October 2014 at 01:45 PM.
-
30th October 2014, 01:40 PM
#2514
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Gopal,S.
OK.Where is the relevance? Pl.Refer my introductions on Raga. My posting simply tells Pallavi is Ahir Bairav,Saranam is Sarasangi. That's it. Different ragams are based on different permutation &Combinations. When they club two Ragas for Conventional Songs,it will be cpmplimentary.
சார் ...நீங்க மொதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க...
சிந்து பைரவி ராகத்த ..சிவரஞ்சனியோட மிக்ஸ் பண்ணி...
அட்டான ராகத்த ..அவரோகணத்தில புடிச்சு ...
தொடையில தாளம் போட்ட கிடைக்கிற ராகம்,
கல்யாணியா..காம்போதியா ...
கரகரப்ரியாவா..ஷண்முகப்ரியாவா...இல்ல ஸ்ரீப்ரியாவா ?
மொதல்ல இதுக்கு பதில் சொல்லிட்டு அப்புறம் உங்க கேள்வி பதில் தொடருங்க !
RKS
-
30th October 2014, 01:43 PM
#2515
Junior Member
Veteran Hubber

Originally Posted by
gkrishna
தர்மவதி
ஆரோகணம்: ஸ ரி2 க2 ம2 ப த2 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி3 த2 ப ம2 க2 ரி2 ஸ
"திசி" என்றழைக்கப் படும் 10வது சக்கரத்தில் 5 வது மேளம்.
23வது மேளமாகிய கௌரிமனோகரியின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும்.
மூர்ச்சனாகாரக மேளம். இதன் ரிஷப, பஞ்சம மூர்ச்சனைகள் முறையே சக்ரவாகம் (16), சரசாங்கி (27) ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கும்.
மூர்ச்சனாகாரக மேளம் என்பது கருநாடக இசையில் கிரக பேதத்தினால் புதிய இராகங்களை உண்டாக்கக் கூடியது.
உ-ம்: சங்கராபரணத்தின் கிரக பேதத்தின் வழியாக ரிஷபத்தை ஷட்ஜமாக வைத்துக் கொண்டால் கரகரப்பிரியாவை கொடுக்கும். அதே போல க, ம, ப, த ஆகிய சுரங்கள் முறையே ஹனுமத்தோடி, மேசகல்யாணி, ஹரிகாம்போஜி, நடபைரவி ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கின்றன.
You too . சார் ...நீங்க மொதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க...
சிந்து பைரவி ராகத்த ..சிவரஞ்சனியோட மிக்ஸ் பண்ணி...
அட்டான ராகத்த ..அவரோகணத்தில புடிச்சு ...
தொடையில தாளம் போட்ட ..கிடைக்கிற ராகம்,
கல்யாணியா..காம்போதியா ...
கரகரப்ரியாவா..ஷண்முகப்ரியாவா...
மதுர மிநிப்ரியாவா ..சினிப்ப்ரியாவா
இல்ல நீயா படத்து ஸ்ரீப்ரியாவா ?
RKS
மொதல்ல இதுக்கு பதில் சொல்லிட்டு அப்புறம் உங்க கேள்வி பதில் தொடருங்க !
-
30th October 2014, 01:54 PM
#2516

Originally Posted by
RavikiranSurya
You too . சார் ...நீங்க மொதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க...
சிந்து பைரவி ராகத்த ..சிவரஞ்சனியோட மிக்ஸ் பண்ணி...
அட்டான ராகத்த ..அவரோகணத்தில புடிச்சு ...
தொடையில தாளம் போட்ட ..கிடைக்கிற ராகம்,
கல்யாணியா..காம்போதியா ...
கரகரப்ரியாவா..ஷண்முகப்ரியாவா...
மதுர மிநிப்ரியாவா ..சினிப்ப்ரியாவா
இல்ல நீயா படத்து ஸ்ரீப்ரியாவா ?

RKS
மொதல்ல இதுக்கு பதில் சொல்லிட்டு அப்புறம் உங்க கேள்வி பதில் தொடருங்க !
சத்யப்ரியாவை விட்டுடேளே
-
30th October 2014, 04:44 PM
#2517
Junior Member
Seasoned Hubber
a recap from Mr Murali Srinivas old post
முன்பு வெளி வந்துக் கொண்டிருந்த எங்கள் சிவாஜி என்ற இதழின் சில பகுதிகளை காணும் வாய்ப்பு கிடைத்தது [குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த இதழை நடத்திய விஜயன் இன்று எம்.ஜி.ஆருக்காக இதயக்கனி என்ற இதழை நடத்திக் கொண்டிருக்கிறார்]. அதில் இலங்கையில் நடிகர் திலகத்தின் படங்கள் நிகழ்த்திய சில சாதனைகள் அதில் வெளியிடப்பட்டிருந்தது. அதிலிருந்து சில துளிகள். முதலில் தலைநகர் கொழும்பு.
கொழும்பில் பொதுவாக ரசிகர்கள் ரீலீசுக்கு முதல் நாள் இரவே தியேட்டரில் கூட்டம் கூட ஆரம்பித்து விடுவார்கள். ஆகவே படம் முதல் நாள் இரவே ஆரம்பித்து விடும். அப்படி கூட்டத்தின் காரணமாக நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கே ஷோ ஆரம்பித்து சாதனை புரிந்த படம் அன்பைத் தேடி. அரங்கம் நவா. அதற்கு முன் 12.30 மணிக்கு படம் ஆரம்பித்ததே சாதனையாக இருந்தது.
பாட்டும் பரதமும் நகரின் வெளிப்பகுதியில் அமைந்திருந்த பெரிய திரையரங்கமான சமந்தாவில் தொடர்ந்து 39 காட்சிகள் அரங்கு நிறைந்து புதிய சாதனையை ஏற்படுத்தியது. நகரின் மையப்பகுதியில் அமைந்த தியேட்டரிலேயே உலகப் புகழ் பெற்ற படங்கள் எல்லாம் வெறும் 32 காட்சிகள் மட்டும் அரங்கு நிறைந்த போது, நடிகர் திலகத்தின் சாதாரண படம் கூட அதை விட அதிக சாதனை புரிந்திருக்கிறது.
கொழும்பு நகரில் எங்கள் தங்க ராஜா பெற்ற வசூல் - Rs 2,06,204.20 p.
இது அதே வருடம் வெளியான பெரிய வெற்றிப்படத்தின் வசூலை விட ஐம்பதினாயிரம் அதிகம்.
கொழும்பில் மெயின் அரங்கை தவிர இரண்டாவது அரங்கிலும் படம் வெளியிடப்படும். அந்த அரங்குகளில் படங்கள் பெற்ற வசூல் விவரங்கள்.
எங்கள் தங்க ராஜா - பிளாசா - Rs 2,06,204.20 p
சிவகாமியின் செல்வன் - ஈராஸ் - Rs 1,99, 815.35 p
இந்த இரண்டு படங்களுமே மற்ற படங்களின் வசூலை குறைவான நாட்களியே முறியடித்திருக்கிறது.
யாழ் நகர் சாதனைகள்
மன்னவன் வந்தானடி வெலிங்டன் அரங்கில் 25 காட்சிகள் தொடர் ஹவுஸ் புல். வேறு சில படங்கள் மூன்று தியேட்டர்களிலும் சேர்த்தே 19 காட்சிகள் தான் ஹவுஸ் புல்.
வசந்த மாளிகை ஓடி முடிய ஹவுஸ் புல் காட்சிகள் - 218
சிவகாமியின் செல்வன் ஓடி முடிய ஹவுஸ் புல் காட்சிகள் - 89
நடிகர் திலகத்தின் பெரிய வெற்றிப் படம் என்று சொல்ல முடியாத சி.செல்வன் போன்ற படங்களே பெரிய வெற்றிப் படம் என்று சொல்லப்பட்ட படங்களின் ஹவுஸ் புல் காட்சிகளை விட அதிகமாக ஆகியிருக்கிறது.
தங்கப்பதக்கம் 50 நாட்களில் பெற்ற வசூல் ஒரு போட்டி படத்தின் 80 நாட்கள் வசூலை விட அதிகம். அதே போல் எங்கள் தங்க ராஜா 90 நாட்களில் போட்டி படத்தின் 100 நாள் வசூலை விட அதிகம் வசூலித்திருக்கிறது.
தங்கப்பதக்கம் 50 நாள் வசூல் - Rs 3,04,679/- [அரங்கம் ஸ்ரீதர்]
எங்கள் தங்க ராஜா 90 நாள் வசூல் - Rs 3,63,820/- [அரங்கு ராஜா].
அதே போல் வசந்த மாளிகை யாழ் நகரில் ஓடி முடிய பெற்ற வசூல் போட்டி படத்தின் வசூலை விட ரூபாய் ஒரு லட்சத்திற்கும் அதிகம்.
வசந்த மாளிகை ஓடி முடிய வசூல் - Rs 5,54,419.
-
30th October 2014, 04:45 PM
#2518
Junior Member
Seasoned Hubber
நேற்று சொன்னது போல் கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரில் 1976-77 ஆண்டுகளில் நடிகர் திலகம் நிகழ்த்திய சில சாதனைகள் கீழே கொடுத்திருக்கிறோம். இதை குறிப்பாக வெளியிடுவதன் நோக்கம் இந்த ஆண்டுகளில் நடிகர் திலகத்தின் படங்கள் சரியாக போகவில்லை என்பது போன்ற மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டிருந்தது. அது எந்த அளவிற்கு உண்மைக்கு புறம்பானது என்பதை விளக்கவே இந்த சின்ன சாதனைகளை இங்கே வெளியிடுகிறோம்.
1976 ஆண்டு இறுதியில் வெளியான ரோஜாவின் ராஜா திரைப்படம் பெற்ற வசூல்
லட்சுமி - 28 நாள் - Rs 1,21,135.45
நடராஜ் - 28 நாள் - Rs 1,16,073.05
விநாயகா, நியூசிடி - 21 நாள் - Rs 53,439.65
நலந்தா - 7 நாள் - Rs 35,192.70
பாலாஜி - 7 நாள் - Rs 24,671.45
கந்தா - 7 நாள் - Rs 21,745.15
கபாலி - 7 காட்சி - Rs 20,120.80
சாந்தி - 7 காட்சி - Rs 7,905.10
மொத்தம் - Rs 4,00,283.50
1977 ஆண்டு தொடக்கத்தில் வெளியான தீபம் செய்த சாதனை
சங்கீத் - 29 நாள் - Rs 1,46,883.40
கீனோ - 29 நாள் - Rs 1,19,020.50
நியூசிடி- 29 நாள் - Rs 77,871.10
நலந்தா - 14 நாள் - Rs 46,760.20
கபாலி - 9 காட்சி - Rs 24,992-50
மொத்தம் - Rs 4,15,527.70
1976-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து மேற்சொன்ன இரண்டு படங்களை தவிர வேறு எந்த படமும் நான்கே வாரத்தில் நான்கு லட்ச ரூபாய் வசூல் செய்ததில்லை.
சங்கீத் - இவ்வரங்கில் தீபம் 42 காட்சிகள் ஹவுஸ் புல் ஆனது. மற்ற படங்களெல்லாம் 20 காட்சிகள் கூட அரங்கு நிறையவில்லை.
தீபம் நான்கு வாரத்தில் பெற்ற வசூலை மற்ற படங்கள் ஓடி முடிய கூட பெறவில்லை.
ரோஜாவின் ராஜா 8 அரங்குகளில் முதல் வாரத்தில் பெற்ற வசூல் Rs 2,04,526.40. அந்த காலக்கட்டத்தில் குறிப்பாக அந்த இரண்டு வருடக் காலத்தில் [1976 -77] வேறு எந்த படமும் செய்யாத வசூல் சாதனை அது.
அன்புடன்
PS: இந்த வசூல் விவரங்கள் எல்லாம் விநியோகஸ்தர்களான என்னாம் பிலிம் கார்பரேஷன் மற்றும் ஈஸ்வரி பிக்சர்ஸ் அவர்களிடமிருந்து திரட்டிய தகவல்கள்
-
30th October 2014, 04:49 PM
#2519
சித்தூர் வாசு அவர்களால மீள் பதிவு செய்யப்பட்ட கர்ணன் படப் பாடல்களைப் பற்றிய என்னுடைய முன்னாள் பதிவின் தாக்கம் கொண்டு உள்ளத்திள் நல்ல உள்ளம் பாடலைப் பற்றியும் அதன் காரணமாக அந்த பாடலின் ராகம் பற்றியும் ஒரு சுவையான சர்ச்சை பதிவு செய்யப்பட காரணமாக இருந்ததற்கு நன்றி கிருஷ்ணாஜி.
மௌன வாசிப்பை நிறுத்தி விட்டு (தற்காலிகமெனும் போதிலும்) பங்களிப்பு செய்தமைக்கு நன்றி கோபால்!
உங்கள் இருவரிடையே இது போன்ற ஊடல்கள் தொடரட்டும். காரணம் விஷய ஞானம் உள்ளவர்கள் சர்ச்சை செய்யும்போது எங்களைப் போன்ற ஞான சூன்யங்கள் அறிவு பெறுகிறோம்!
அன்புடன்
-
30th October 2014, 04:51 PM
#2520
இன்றைக்கு வெளியான ஆனந்த விகடன் சினிமா ஸ்பெஷல் ஆக வந்திருக்கிறது. அண்மையில் மறைந்த ஒளிப்பதிவாளர் அசோக் குமார் அவர்களைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டிருக்கும் இயக்குனர் மகேந்திரன் அந்த பேட்டியில் தன் படங்களைப் பற்றியும் பேசியிருக்கிறார். அந்த பேட்டியில் நமது நண்பர் கோபால் பற்றியும் சொல்லியிருக்கிறார். வியட்நாம் ரசிகர் வியட்நாம் நண்பர் என்று (கோபால் பெயரை குறிப்பிடவில்லையென்றாலும் கூட) அவருடனான தன் உரையாடலை பற்றி சொல்லியிருக்கிறார்.
வாழ்த்துகள் கோபால்!
அன்புடன்
Bookmarks