Page 95 of 397 FirstFirst ... 45859394959697105145195 ... LastLast
Results 941 to 950 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #941
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    தீபம் பார்த்தது சிந்தாமணியில்.. ஒரு மாலைக் காட்சி என நினைக்கிறேன்.. வழக்கம்போல க்யூ அண்ட் ஃபுல் தான்.. நீங்கள் சொன்ன ராஜா யுவ ராஜா பாடலை விட எனக்கு ந.தியின் இருவர் உள்ளம் (பறவைகள் பலவிதம்) தெய்வமகன் (வக்கீலாத்து வசந்தா உன் மனதை எந்தன் வசம்தா) மிகப் பிடிக்கும்.. தீபம் படத்தில் பிடித்தபாடல்களின் வரிசை என்றால் அந்தப்புரத்தில் ஒரு மகராசன், பேசாதே வாயுள்ள ஊமை நீ, ராஜா யுவராஜா, பூவிழி வாசலில் யாரடி வந்தது தான்..

    சுருளி மனோரமா – பாம்பு தவளைக் காமெடி என நினைவு.. ஆனால் சிவாஜி கேரக்டர் அனாவசியமாக ச் சாகவைத்திருப்பார்கள்..(அந்தக் காலத்தில் அப்படி ஒரு தேவையில்லாத விஷயம் வேறு..) அதில் எனக்குக் கொஞ்சம் கோபம் தான்..

    தாங்க்ஸ் ஃபார் த ஸாங்க்.. ம்ம் நடத்துங்க நடத்துங்க..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #942
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    இளையராஜா ஸ்பெஷலிலும் ஸ்பெஷலாக தீபம் பாட்டைப் போட்டு அசத்தி விட்டீர்கள்.. ஆஹா... என்ன அருமையான வர்ணனை.. சி.க. சார்... உங்களுக்குப் போட்டியை எங்கும் தேடாதீர்கள்...

    சூப்பரோ சூப்பர்..

    இதே போல பேசாதே பாட்டுக்கும் சென்னை சாந்தி தியேட்டர் அதகளப்படும். அதுவும் குறிப்பாக வீட்டுக்குள் நடக்கும் போது ராஜாவின் பின்னணி இசை... ஆஹா.. ரிதம் என்றால் அதுவல்லவோ ரிதம்... சிவாஜியின் நடைக்காக ரிதமா.. ரிதத்திற்காக சிவாஜியின் நடையா என்று பட்டிமன்றமே நடத்துவார்கள்... அந்த அளவிற்கு அவ்வளவு அற்புதமாக இருக்கும்.. இருவருமே முதல் படத்திலேயே உச்சத்தைத் தொட்டவர்களாயிற்றே...

    பாடலின் துவக்கத்தில் வரும் பாறைகள்... எங்கோ பார்த்த ஞாபகம் வரவில்லை... நினைவூட்டிப் பாருங்கள் ... உங்களுக்குத் தெரியும்...



    நண்பர்களே.. தீபம் படத்தில் இன்னொரு பாட்டையும் பகிர்ந்து கொள்ளக் காரணம் இளையராஜாவின் பின்னணி இசையே...
    Last edited by RAGHAVENDRA; 1st November 2014 at 10:06 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. Thanks chinnakkannan thanked for this post
    Likes JamesFague, Russellmai, aanaa liked this post
  5. #943
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு,

    தீபம் பல விஷயங்களில் விசேஷமானது.

    1)ஸ்ரீதர்,வேலுமணி,பந்துலு,வீரப்பன்,இவர்கள் படங்களின் தரத்தில் பாலாஜி படத்திற்கு விஸ்வநாதன் இசையமைப்பதில்லை என்ற மனக்குறை (தங்கை நீங்கலாக)இருந்ததுண்டு.அந்த குறை நீக்க புதியவர் இளையராஜா தேர்ந்தெடுப்பு நமக்கு அத்யாவசிய தேவையானது.இளையராஜா தன்னை நிரூபித்தார்.தொடர்ந்து தியாகம்.

    2)அவள் ஒரு தொடர்கதை பார்த்து, ஏற்கெனெவே சாரதா,ஜெயந்தி ,ஸ்ரீவித்யா போன்றோர் சிவாஜி படங்களில் போதிய வாய்ப்பு பெறாததால்,இவராவது (சுஜாதா)ஜோடியானால் நல்லது என்று நான் நினைத்தது ,நல்ல விதத்தில் பலித்தது.(பின்னாட்களில் இன்னொரு கே.ஆர்.விஜயாவாக ஆகி உறுத்தியது வேறு விஷயம்)

    3)தீக் கனல் என்ற நல்ல மலையாள படம் ,பாலாஜி உனக்காக நான் சறுக்கலுக்கு பின் ,combination மாற்ற ,அப்போது புதுமை படங்கள் தந்து வெற்றி மேல் வெற்றி குவித்து வந்த மாதவன் உதவியாளர்கள் தேவராஜ்-மோகனை அணுக ,அவர்கள் ஏனோ நிராகரிக்க ,ஆஸ்தான இயக்குனர் சி.வீ.ஆரிடம் போக ,அவரும் ரீ மேக் முத்திரை துறக்க எண்ணி நிராகரிக்க, காவல் தெய்வம்,ரோஜாவின் ராஜா என்று நமக்கு ஓரளவு பரிச்சயம் ஆகி இருந்த (சிவந்த மண்-நடிகராக)கே.விஜயனுக்கு யோகம்.நமக்கும் திருப்பு முனையானது.மாறும் ரசனைக்கு பொருந்தும் ஒரு மாற்று இயக்குனர்.(ஆனாலும் நமக்கு யோகானந்த்,திரிலோக் சந்தர்,சி.வீ.ஆர் போன்ற பழைய சிந்தனை இயக்குனர்களிடமிருந்து முழு விடுதலை கிடைத்து ,மகேந்திரன்,பாலு மகேந்திரா,பாரதி ராஜா,பாலசந்தர் என்று அமையும் முழு யோகம் வாய்க்கவில்லை)

    4)நெஞ்சிருக்கும் வரை ,ஒரு அருமையான outline .என்ன பாடல்கள்?(Hats off the great M .S .V ),என்ன ஒரு நடிப்பு?ஆனாலும் திரைக் கதையில் சொதப்பி ,சுமாரான படமாக்கினார் ஸ்ரீதர்.அந்த கோட்டிலேயே பயணித்த தீபம் ,அந்த குறை நீக்கி ,சிவாஜியின் பிரம்மாண்ட வெற்றி பட அணிவகுப்புகளின் முன்னோடியானது. 76 இன் வறட்சியை நேர் செய்தது.

    5)சிவாஜி, தன் நடிப்பிலே ரியலிச பாணியை திருப்பி (தன் முத்திரைகளையும் இழக்காமல்),அதை தியாகம் படத்திலும் தொடர்ந்து ,இளைய தலைமுறைக்கேற்ப ,தன்னை புதுப்பித்த ஆரம்ப புள்ளி இந்த படம்.பிறகு இந்த பாணியே அவருக்கு துணையாகி,முதல் மரியாதை தந்து,தேவர் மகன் யார் என்று இனம் காட்டியது.

    6)சுஜாதாவை வசீகரிக்க இவர் கடலை போடும் காட்சி, யாருடனோ காதல் செய்வதை பார்த்து வெடிப்பது,வில்ல-வில்லிகளை
    எச்சரிப்பது ,பின் காட்சிகளில் சுஜாதா-விஜயகுமார்-சங்கீதா ஊசலாட்டம் என்று என்ன ஒரு ஆழம் ?

    7)இந்த படம் பலதர பட்ட ரசிகர்களையும் கவர்ந்திழுத்து,பாலாஜியை மீண்டும் நிமிர்த்தியது.

    வாசு என்ன ஒரு nerration ? என்னை மீண்டும் குதித்து வர செய்து விட்டாய். இதை நல்ல முறையில் சாதிக்க உனக்கு மட்டுமே வலிமை உண்டு.
    Last edited by Gopal.s; 2nd November 2014 at 09:05 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  6. Likes kalnayak liked this post
  7. #944
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஓரளவு எனக்கு சமநிலை மீண்டு,எழுதும் ஆவல் வரும் போது ,எம்.எஸ்.வீ தொடர் முடித்து,இளையராஜா தொடர்ந்து, கீற்று கொட்டகையில் ஓரிரு பங்களிப்பு. நடிகர்திலகம் திரியில் ஓரிரு விட்ட படங்களின் தொடர்ச்சி என்று december வரை திட்டம். பார்ப்போம்.

    யாரையும் குத்துவதில்லை என்று சங்கல்பம்.பார்க்கலாம்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  8. #945
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    for me deepam songs could have been better

  9. #946
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சி.க.சார்,

    தீபம் பற்றிய தங்களது கருத்துக்களுக்கு நன்றி! என்னது உங்களுக்குக் கோபம் கூட வருமா? இறுதியில் அணை ந்தால்தான் அது தீபம்.

    உங்கள் அம்மானை சுவைதான்.

    மண்தின்னும் சிறுகண்ணன் மாயமிதே அம்மானை! எல்லாம் கண்ணன் செயல். நம் கையில் ஒன்றுமில்லை. பொன் மான் பட்டுக்க்க்ளைத் தேடி தேடித் பிடித்துத் தந்தற்கு நன்றி?

    மோகனுக்கு கமல் பாடும்

    பொன்மானைத் தேடுதே
    என் வீணை பாடுதே

    பாடல் கேட்டதுண்டா?
    நடிகர் திலகமே தெய்வம்

  10. Thanks chinnakkannan thanked for this post
  11. #947
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'தீபம்' பாடலை ரசித்து தத்தம் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட முரளி சார், (நடை ரசிப்பு அழகு) கிருஷ்ணா சார், (சுவையான திரையரங்கு அனுபவங்கள்) கோபால் சார், (குறு ஆய்வு, மீண்டும் வருவேன் அருமை கோ) சின்னக் கண்ணன் சார், (நடிகர் திலகம் ஸ்டைலைத் தொட்டிருக்கலாம்) லைக்குகளை கிளிக் செய்த அன்பு நண்பர்கள் கல்நாயக் சார், கோபு சார் மற்ற அனைவருக்கும் நன்றி! பாடல்களை இன்னும் எதிர்பார்த்த ராஜேஷ்ஜிக்கும் நன்றி!
    நடிகர் திலகமே தெய்வம்

  12. #948
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பொங்கும் பூம்புனல்

    நீலக்கடலின் ஓரத்திலே ...



    வாணி ஜெயராம் குரலில் புலமைப்பித்தன் வரிகளில் மெல்லிசை மன்னரின் இசையில் அருமையான பாடல்..

    அழகுக்கு முகவரி கேட்டேன்..

    http://www.inbaminge.com/t/n/Neelakkadalin%20Orathile/
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. Likes Russellmai liked this post
  14. #949
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பொங்கும் பூம்புனல்

    சந்திரபோஸ் இசையில் இனிமையான பாடல்...

    வைரமுத்துவின் வரிகளை, வாணி ஜெயராமுடன் பாடியுள்ளவர், தியாகராஜன் ... இவர் திருச்சி லோகநாதன் அவர்களின் புதல்வர் என எண்ணுகிறேன்.

    பாடலில் சந்திரபோஸின் பின்னணி இசை நம்மை சொக்க வைக்கின்றது.

    படம் அவள் போட்ட கோலம்

    http://www.inbaminge.com/t/a/Aval%20Potta%20Kolam/
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. Likes Russellmai liked this post
  16. #950
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பொங்கும் பூம்புனல்

    ஷ்யாம் இசையில் சந்தோஷக் கனவுகள் படத்திலிருந்து அருமையான டூயட்

    முத்து முத்து புன்னகையோ..

    பின்னணி இசை நாடி நரம்பை வருடிச் செல்லும் ...

    http://www.inbaminge.com/t/s/Santhosha%20Kanavugal/
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  17. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •