-
7th November 2014, 12:49 AM
#2641
உனக்கு பன்முகங்கள்.
பல்வேறு தளங்களில் வெற்றி தடம் பதித்தவன் நீ!
படிப்பில் நிபுணன்! முதுகலை பொறியாளன்!
வணிகத்தில் வித்தகன்!
அறுபது நாடுகளின் அத்தாட்சி பத்திரம் பெற்றவன்!
அந்நிய மண்ணில் கோலோச்சுபவன்!
பாரம்பரிய பத்திரிக்கை குடும்ப உறுப்பினன்!
இலக்கிய பித்தன்!
மணிக்கொடி காலமும் தெரியும்! இன்றைய மங்கிய காலமும் தெரியும்
கணையாழி முதல் கசடதபற வரை வாசிப்பவன்!
யதார்த்த நாடக கலைஞன்! உலக சினிமா ரசிகன்!
நல்ல சினிமாவை நேசிப்பவன்! நல்ல சினிமாவை சுவாசிப்பவன்!
சூரியனுக்கு கீழே உள்ள எதைப் பற்றியும் விவாதிக்கும் திறன் கொண்டவன்!
ஆனால் இவை எல்லாவற்றையும் விட சிவாஜி ரசிகன் என்பதே எனது தலையாய பெருமை என்று உவகை கொண்டு எந்த சபையாய் இருப்பினும் அதை முன் வைக்கிறாயே அந்த அர்ப்பணிப்புக்கு என் தலை சாய்ந்த வணக்கங்கள்!
விஜய விக்ரம கோபால காத்தவராயரே!
இன்னுமொரு நூற்றாண்டு இரும்!
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
7th November 2014 12:49 AM
# ADS
Circuit advertisement
-
7th November 2014, 07:03 AM
#2642
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
7th November 2014, 07:11 AM
#2643
Junior Member
Devoted Hubber

Originally Posted by
joe
பிறந்தநாள் காணும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் .. தல கமல்ஹாசன் மற்றும் அண்ணன் கோபால் ..வாழ்க பல்லாண்டு !
திரு கோபால் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
7th November 2014, 09:05 AM
#2644
Junior Member
Newbie Hubber
எவற்றின் நடமாடும் நிழல் நான்? என்னை பார்க்கவே கண்ணாடி தேவை பட்ட, என்னை புரியவே உறவுகள் தேவை பட்ட பலவீனன் நான்.என்னுடைய ஆடைகள்,உண்ணும் உணவு,இருப்பிடம் போன்ற அடிப்படை தேவைகளே மற்றவர்களின் கருணையாலேயே கிடைத்தது.யாரோ ஒரு முகம் தெரியா விவசாயி,நெசவாளர்,கட்டிட உழைப்பாளி என்று பலர் என் வாழ்கை தரத்தை மேம்படுத்தி ,தியாகம் செய்துள்ளனர். நமக்காகவே பிறந்தது போல பல உயிரினங்கள் நமக்காக எத்தனை தியாகங்கள் புரிந்துள்ளன?இவற்றுக்கு,இவர்களுக்கு மேலானவன் எனும் நினைவை தகர்க்க போராடுவதே ,என் அய்யன் பெரியார் எனக்களித்த பால பாடம்.
வெற்றி பெற்ற மனிதனா? கேள்வி தொடர்கிறது. லட்சிய வேலி ,என் வாழ்க்கையை ,நான் தொடங்கியிருக்க வேண்டிய இடத்தில், இவ்வளவு கடின உழைப்புக்கு அப்புறமே நிறுத்தியுள்ளது.
என்னை அறிந்து, மற்றவர்களை பயன் படுத்தி என்னை வளர்த்து கொண்டு,என் புகழை உயர்த்தி கொண்டேனா?பண பலம் பெருக்கி கொண்டேனா? இல்லை. எனக்கு கிடைத்தது போல பல மடங்கு ,என்னை சார்ந்தவர்களுக்கு கொடுத்தே வந்துள்ளேன். எனக்கு சேர வேண்டியதை விட்டதுமில்லை. அல்லாததை தொட்டதும் இல்லை.
என் கொடுப்பினை----பெருமையாய் சொல்லி கொள்ளும் விதத்தில் ,தாய்-தகப்பன் ,சகோதர-சகோதரிகள் ,நண்பர்களை வழங்கி என் வாழ்க்கையின் ஆரம்ப நாட்களை விதி வள படுத்தியது.இதில் எனக்கு திருப்தியே.
அருமையான தேர்வு எனக்கு மிக மிக சிறந்த வாழ்வின் இணையை அளித்தது. என்னை புரிந்த வியாபார வட்டங்கள்,நட்பு வட்டங்கள் என் தேர்வின் படி,எனக்கு நிறைவை அளித்தன. அற்புதமான குழந்தைகள் என் ஜனநாயக முறை வளர்ப்பினால் ,என்னை தாண்டி சென்று என்னை குளிர்விக்கின்றனர்.இதில் எனக்கு வெற்றியே.
என்னை சேர்ந்தோருக்கு, என்னால் வாழ்வில் ஏதோ ஒன்று வழங்க பட்டே வந்தது. என் பழக்க வழக்கங்கள் ,சூழ்நிலையை,சகமனிதர்களை ,சக ஜீவிகளை காக்கும் பொருட்டே அமைந்தன.இதில் எனக்கு வெற்றியே.
என் சுயம் , உறவு முறை பழகியவர்களை சக மாணவன்,உடன் வேலை பார்த்தவன். தலைமை நிர்வாகி என்ற மாறும் நிலையில் நினைவுருத்தாமல் ,கோபால் என்ற மனிதனாக நினைக்க செய்து ,இனிக்க செய்தது.இதில் எனக்கு வெற்றியே.
உலகத்தில் உள்ள அத்தனை விஷயங்களையும் அறியும் துடிப்பு இருந்தாலும், சிலவற்றை நன்கு அறிந்து துய்த்தேன் .இதில் எனக்கு கரை கண்ட பெருமிதமே.
காணும் உலகம் கையில் வந்த வாலிபம். நான் சுவைக்காதவை பூவுலகில் இல்லாதவையே என்ற விதத்தில் அத்தனையையும் ருசித்தேன் ,சுவைத்தேன்.(கண்ணதாசன் ,ஓமர் கய்யாம் எல்லாம் எனக்கு கீழேதான்). இதில் திருப்தி இல்லா விட்டாலும், ஓரளவு நிறைவே.(இன்னும் இருக்கிறது பாக்கி. முக நூலில் தெரியும்)
இதை மீறி ,குறைகளும் உண்டு. இயற்கை எனக்களித்த சிறப்புகளை, இன்னும் மனிதம் வளப் பட ,மகிழ்வுற பயன்படுத்தி ,நாம் வளர்ந்திருக்கலாமே என்பதே.
குறை,நிறை அனைத்தையும் மீறிய சில நெறிகளில் நான் கர்வ படுவதுண்டு.
கடவுள் என்ற ஒருவன் இருந்தால், என்னை தமிழனாக படைக்க தேர்வு செய்தமைக்காக. உலகில் சிலருக்கே அமைந்த பாக்கியம்.
என்னை தமிழில் தோய்ந்து, சுவைக்க வைத்து, உண்மை தமிழனாய் வாழ வைத்தமைக்காக.
சக மனிதர்களை,அவர்கள் புகழின் அளவு கொண்டு பூசிக்காமல்,தலை வணங்காமல், திறமையின்,உண்மையின், அளவு கண்டே என் விருப்பங்கள் தேர்வு கண்டன. எனக்கும் ,உலகுக்கும் ஒவ்வாதவை புறம் கண்டே உள்ளன என் தேர்வில்.
எனக்கு மிக சிறந்த நட்பு வட்டத்தை மிக குறுகிய நாட்களில் அளித்த மையம் திரிக்கு நன்றி.
என் வாழ்வின் அழகியல் தேர்ந்தெடுப்பை அர்த்தமுள்ளதாக்கி,என்னை தொடர்ந்து காத்து வரும் கலைதெய்வம் சின்னைய்யா கணேச மூர்த்திக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
Last edited by Gopal.s; 7th November 2014 at 10:18 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
7th November 2014, 09:25 AM
#2645
Junior Member
Newbie Hubber
என் சிறு வயது கனவுகளாய், நான் சாதிக்க எண்ணி, வாழ்க்கையில் எதிர் நீச்சலிடும் துணிவின்றி வாழ்க்கை வியாபாரியாய் சுருங்கி விட்டாலும், என் விட்ட குறை ,தொட்ட குறையை ஓரளவு நீக்கி என்னை ஆசுவாச படுத்தி வரும் ,பிறந்த நாள் சகோதரன்
கமலஹாசனுக்கு ,என் வாழ்த்துக்கள். உன்னுடைய மருத நாயக கனவு ,நனவாகி நம் சாதனைகள் விரிந்து ,தமிழினைத்தை பெருமை படுத்தட்டும்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th November 2014, 09:35 AM
#2646
Junior Member
Junior Hubber
Best wishes and many more happy returns of the day Sri.Gopal Sir. ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி, ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி அனுக்ரஹத்துடன் பல்லாண்டு வாழ
அவ் வெம்பெருமான்களைப் ப்ரார்த்திக்கிறேன். - என்.வி.ராகவன்
-
7th November 2014, 09:48 AM
#2647
Junior Member
Newbie Hubber
வாழ்த்துகளுக்கு நன்றி என்ற மரபின் பாற்பட்டாலும், என்னை இன்று குளிர்வித்த அன்பு நெஞ்சங்களுக்கு நிஜமாகவே கடன் பட்டுள்ளேன். குறுகிய கால நட்பு வட்டம், இறுகியதாக தொடர பிரார்த்திக்கிறேன்.
நன்றி.நன்றி ,நன்றி .
எஸ்வி
Irene hastings
சிவாஜி செந்தில்.
யுகேஷ் பாபு.
கலைவேந்தன்.
KC சேகர்.
சௌத்ரி ராம்.
ராகுல் ராம்.
கல்நாயக்.
prof .செல்வகுமார்.
SSS
Joe .
சிவா.
VCS .
பரணி.
முரளி.
ராகவேந்தர்.
ரவி ரவி.
வாசு தேவன் (நெய்வேலி)
சின்னகண்ணன்.
ராஜேஷ் .
parthasarathy.
N.V.Ragavan.
வாசு தேவன்(chithoor)
Last edited by Gopal.s; 7th November 2014 at 10:05 AM.
-
7th November 2014, 10:55 AM
#2648
Senior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
7th November 2014, 11:15 AM
#2649
Junior Member
Veteran Hubber
GOPAL SIR ,
MANY MORE HAPPY RETURNS OF THE DAY. THE MOST POPULAR BIRTHDAY SONG ACROSS ULAGA THAMIZHARGAL DEDICATED FOR YOU ON THIS GREAT DAY
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th November 2014, 11:23 AM
#2650
நான் படித்து ரசித்தது :
"பாசமலர்" படத்தில் இடம்பெற்ற "வாராய் என் தோழி வாராயோ..."என்ற பாடலை விஸ்வநாதன் - ராமமூர்த்தி பதிவு செய்து, பின்னர் படமும் ஆக்கப்பட்டது.படம் முழுமையாக முடிந்த பின்பு தணிக்கைக் குழுவுக்கு போட்டுக் காட்டப்பட்டது..
அவர்கள் இந்தப்பாடலில்,முக்கியமாக ஒரு சில வரிகளை ஆட்சேபித்தார்கள்..அது,"மலராத பெண்மை மலரும்..முன்பு தெரியாத உண்மை தெரியும்.."ஆனால் அவர்களே நீண்ட நேரம் விவாதித்த பின்னர் "கவியரசு" கண்ணதாசன் அவர்களின் கவிநயத்திற்க்காக பாடலை அப்படியே விட்டுவிடுவதா அல்லது தங்களுடைய தொழில் தர்மத்திற்கு கட்டுப்பட்டு நடப்பதா என்ற பெரும் குழப்பம்..
பிறகு,இரண்டு மூன்று நாட்கள் கழிந்த பின்னர்,குழப்பம் எல்லாம் நீங்கிய பின்,கண்ணதாசனின் தவிர்க்க முடியாத நடைமுறை தாங்கிய கன்னித்தமிழ் கற்பனையே மணிமகுடம் சூட்டிக்கொண்டது.
தணிக்கைக் குழுவினர்,"நாங்களும் எவ்வளவோ முயற்சி செய்தோம்..உங்களின் இந்த பிரச்னைக்குரிய இந்த வரிகளை நீக்குவதற்கு..ஆனால் அடிப்படையில் நாங்களும் ரசனையாளர்களாக இருந்ததால் உங்களை எங்களால் ஜெயிக்கமுடியவில்லை..அந்த வரிகளை அப்படியே விட்டுவிடுகிறோம்"
உலகிலேயே, தணிக்கைக் குழுவிற்கு தணிக்கை செய்ய அதிகாரம் இருந்தும் கவிநயத்திற்கு
மயங்கி, தன்நிலை மறக்க வைத்த பாடல் உண்டென்றால் அது "பாசமலரின்" "வாராய் என் தோழி" மட்டுமே..
Bookmarks