-
11th November 2014, 01:58 PM
#1091
Senior Member
Diamond Hubber
கோ, சின்னக் கண்ணன் சார்,
நான் புதுப்படங்கள் பார்ப்பதே இல்லை. புதுப்படப் பாடல்களையும் பார்ப்பதில்லை. எனக்கு அறவே காட்டுக் கத்தல்களும், கூச்சல்களும் பிடிப்பதே இல்லை. பாலையில் சோலையாக ஒரு புதுப் பாடலைப் பார்க்கும் சந்தர்ப்பம் வைத்தது. நிரம்பப் பிடித்திருந்தது. அழகான வார்த்தைகள், அளவான, அம்சமான இசை, ரம்யமான வெளிப்புறப் படப்பிடிப்பு, விமல், அனன்யாவின் கேஷுவலான மூவ்மெண்ட்ஸ், சின்ன சின்ன எக்ஸ்ப்ரஷன்ஸ், இயல்பான டான்ஸ் ஸ்டெப்ஸ், அற்புதமான அருவி என்று இந்தப் பாடல் என் மனதை ரொம்பவே கவர்ந்தது. அனன்யாவின் சுட்டித்தனமான முகபாவங்கள் வெகு அற்புதம்.
நீலாங்கரையில் கானாங்குருவி
தானா தவிக்குதே
வானம் திரண்டு வையம் கடந்து
பறப்போம் காற்றிலே
இசைக்கருவிகளின் ஆதிக்கம் இல்லாமல் பாடலின் வரிகள் வெகு சுகமாக காதில் வந்து தேனைப் பாய்கின்றன. கார்த்திக் மற்றும் ஸ்ரேயா கோஷாலா அல்லது சைந்தவியா?.. மிக இனிமையாகப் பாடியுள்ளனர். இசை ஏ.ஆர்.ரகுநந்தன் என்பவராம். ஒரு நல்ல பழைய பாடலைக் கேட்கும் சுகம் மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தப் புதுப்படப் பாடலைக் காணும் போது எனக்குக் கிடைத்தது.
நீங்களும் அனுபவியுங்களேன்.
Last edited by vasudevan31355; 11th November 2014 at 02:22 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
11th November 2014 01:58 PM
# ADS
Circuit advertisement
-
11th November 2014, 04:10 PM
#1092
Senior Member
Senior Hubber
I have seen puli vaal movie. I think I fast forwarded the song. I will hear and let you know. Thanks vasu sir
Also try to hear the songs of Jeeva.. Some songs are really very good melody.
-
11th November 2014, 06:34 PM
#1093
Senior Member
Diamond Hubber
சி.க சார்,
இளையராஜா தொடரில் மூழ்கி விட்டதால் இப்போதுதான் தங்களுடைய மிட் நைட் மசாலா தொடரின் இது நம்ம பூமி படப் பாடலான
ஒரு போக்கிரி ராத்திரி பார்க்கிற பார்வை தான்
எனை தாக்குது கேக்குது பூக்குது ஆசை தான்
பாடலைப் பார்த்தேன்.
'பிறக்குது சபலம் சபலம்
கொடுப்பது சுலபம் சுலபம்'
வரிகளைக் கேட்கும் போது
'கொதிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து'
ஞாபகம் வருது இல்லையா?
பாடலைப் பார்த்து pause பண்ணி பண்ணி வரிகளை டைப் அடிப்பது கடினமான காரியம். திரும்ப திரும்ப பார்க்க,கேட்க வேண்டும். சமயத்தில் கடுப்பாகி விடும்.
பாடலின் முழு வரிகளுக்கும் நன்றி. சொர்ணலதா, மனோ நன்றாகவே பாடியுள்ளார்கள்.
அபூர்வமான பாடலைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி! இந்த முயற்சி எனக்கும் ரொம்பப் பிடிக்கும். வாழ்த்துக்கள்.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
11th November 2014, 06:40 PM
#1094
Senior Member
Diamond Hubber
நன்றி ராகவேந்திரன் சார் சாய்ந்தாடம்மா சாய்ந்தாடம்மா பாராட்டுதல்களுக்கு.
இசைக் கலைஞர்கள் இறைவனின் தூதுவர்கள் -
தொடரின் வரிசையில் டி.ஆர். பாப்பா இசையமைத்த பாடல்களை நீங்கள் அளிக்கும் போது சொல்லொணா மகிழ்ச்சி ஏற்படுகிறது. அபூர்வ பாடலான
காதல் கதை பேசிடுவோம்
காவியங்கள் பாடிடுவோம்
நீதி தவறியதுமில்லை
நாங்கள் நினைவை இழந்ததுமில்லை
பாடலைத் தந்து இன்னும் மனம் மகிழச் செய்து விட்டீர்கள். விஜயகுமாரியும், சந்திரகாந்தாவும்தான் சற்று எரிச்சல்.
நல்ல பாடலுக்கு நன்றி!
-
12th November 2014, 01:55 AM
#1095
Senior Member
Seasoned Hubber
வாசு ஜி,
ஆஹா சுகமோ ஆயிரம் .. அருமையிலும் அருமையான பாட்டு.
பஞ்சுவின் வரிகளும் சரி, இசையரசியின் குரலும் சரி
ஆஹா தேனோடு கலந்த தெள்ளமுது. அதுவே நம் பண்பாடு அதை நாளும் பண் பாடு...
வார்த்தை இல்லாமல் ஒரு கவி பாடவா .. புதைந்து போன ஒரு முத்து..
பாடல்களை வெளி கொண்டுவந்ததற்கு நன்றி .
சுகமோவின் சுகமான வீணை ஈ.காயத்ரியினுடையது.
-
12th November 2014, 04:02 AM
#1096
Senior Member
Seasoned Hubber
வாசு ஜி,
முன்பு நான் இளையராஜா குழுவில் இளையராஜா-வாலி பாடல்கள் பற்றி எழுதினேன்
இதோ
http://www.rakkamma.com/ilaiyaraaja_vaali.phtml
-
12th November 2014, 10:12 AM
#1097
Senior Member
Diamond Hubber
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 17)

அடுத்து 'இசைச் சக்கரத்தின் அச்சாணி' இளையராஜா இசையமைத்த இன்னொரு கருப்பு வெள்ளைப்படம் 'அச்சாணி'. 1978-ல் வெளிவந்து ராஜாவின் பாடல்களுக்காக பேசப்பட்ட படம். பேசப்படுகின்ற படம் இன்றுவரை.

முத்துராமன்,லஷ்மி, அசோகன், ஸ்ரீகாந்த், ஷோபா நடித்திருந்தனர். காரைக்குடி நாராயணன் இயக்கம்.
ரகளையான 3 முத்தான பாடல்கள் ராஜாவின் ராஜ முத்திரையோடு.
1. முத்துராமன், லஷ்மி இருவரின் காதலோடு கூடிய பிள்ளைத் தாலாட்டுப் பாடல்.
தாலாட்டு
பிள்ளை உண்டு தாலாட்டு
மணித் தொட்டிலில் முல்லை மெத்தையிட்டு
சிறு மாங்கனிக் கன்னம் முத்தமிட்டு
பாராட்டு
அன்னை என்னைப் பாராட்டு
உந்தன் பேர் சொல்லப் பிள்ளை பெற்றெடுத்தேன்
அந்த பாக்கியம் செய்து பேரெடுத்தேன்
சூப்பர் டூப்பர் ஹிட் பாடல் வகையைச் சார்ந்தது. பாலாவின் குரலோடு இசையரசியின் குரல் இழைந்து கால்களில் கடலலை வந்து மோதும் சுகம் போல உள்ளத்தில் இனிய இசை அலைகளால் இன்பம் தரும் பாடல்.
தாங்கள் வளர்க்கும் மகன் எதிர்காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று கனவு காணும் இரண்டு உள்ளங்களின் எதிர்பார்ப்புகளை பாடலாசிரியர் அற்புதமாக வடித்திருப்பார்.
'வாழ்க்கையிலே வழக்குகளை என் மகன் நாளை தீர்த்து வைப்பான்'
என்று மகன் மேல் நீதிபதி கனவும்,
'வருத்தமுறும் மானிடர்க்கு மருத்துவம் செய்து மகிழ்ந்திருப்பான்'
என்று அவன் மேல் டாக்டர் கனவும் காணும் தம்பதியர்.
புல்லாங்குழல் இசையுடன் சேர்ந்து அழகான வீணையின் நாதம் தேவையான இடங்களில் ஒலிக்க, வார்த்தைகள் தெளிவாக நம் இதயத்தில் இறங்க நல்லதொரு பாடலை அற்புதமாகத் தந்திருப்பார் ராஜா.
2. அடுத்து ஜானகியின் குரலில் நம் அணுக்களின் அணுக்களோடு கலந்துவிடும் ராஜாவின் ராஜாங்கப் பாடல். ஒரு கிறித்துவப் பாடல். 'அவர் எனக்கே சொந்தம்'படத்தில் 'தேவன் திருச்சபை மலர்களை'த் தந்து நம் நெஞ்சமெல்லாம் குடி கொண்ட ராஜா இந்த 'அச்சாணி' படத்தில்
'மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்'
தந்து தன் ஸ்திரத்தன்மையை உறுதியாக்கினார். ஜானகி மிக உணர்ந்து நெஞ்சை உருக்கும் வண்ணம் பாடி நம் இதயங்களில் நிறைந்தார். கிறித்துவர் அல்லாத ஏனைய மதத்தினரும் இந்தப் பாடலைக் கேட்டால் மாதாவை மெழுகுவர்த்தி ஏற்றிக் கும்பிடும் அளவிற்கு சக்தி வாய்ந்த பாடல் இது. லஷ்மியும் நன்றாகப் பண்ணியிருப்பார்.
பிள்ளை பெறாத பெண்மை தாயானது
அன்னை இல்லாத மகனை தாலாட்டுது
கர்த்தரின் கட்டளை நான் என்ன சொல்வது மாதா
'மாதா' எனும் போது ஜானகி மெழுகு போல் உருகுவார்.
அருள்தாரும் தேவ மாதா...
எனையாளும் மேரி மாதா...
அன்னை மேரி உன்னையன்றி ஆறுதலை யார் தருவார்...
வரிசையில் போற்றிப் புகழ வேண்டிய பாடல்.
3. அடுத்து நான் உங்களை அழைப்பது சுசீலா அம்மாவின் இசைத் தேன் குளத்தில் நீந்த.
முந்தின இரண்டும் தென்றல் என்றால் இந்தப் பாடல் புயல். அவையிரண்டும் அமைதி. இது ஆர்ப்பாட்டம்.
ஆஹாஹா! இசையசியின் மேற்கத்திய பாணி குரல். அழகான ஆங்கிலம் கலந்து. ஆங்கில் உச்சரிப்பும் அமர்க்களம். பாடலின் துவக்கத்தில் இருந்தே ராஜா ரகளை படுத்துவார். துவக்க இசையாக வரும் அந்த பாங்கோஸ் உருட்டல்கள், கிடார் மிரட்டல்கள், கிளாரிநட், ஷெனாய் மற்றும் டிரம்பெட்டின் அட்டகாசங்கள். என்னத்தை சொல்ல?
அப்படியே வெல்லப் பாகுவாய் வழிந்து உருகும் அந்த தெய்வீகக் குரல் துவங்குமே!
நான் அழைக்கிறேன்
தேன் குளத்திலே நீ குளிக்கலாம் வா
பெண்ணல்ல ரோஜா
என் கண்ணல்ல ராஜா
டோன்ட் மேக் மீ ஷை
ஓ மை பட்டர்பிளை
எத்தனயோ சந்நியாசிகள்
எத்தனயோ சம்சாரிகள்
விழிகளில் நானாட
மழை மேகம் எதிர்பார்க்கும்
மயில் தோகை
அல்வா பாடல். பாடல் முழுதும் பாடல் முழுதும் ஒலித்துக் கொண்டிருக்கும் அந்த கிடார் ஓசையை மறக்கவே முடியாது. இனி ராகவேந்திரன் சார் தான் சொல்ல வேண்டும்.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
12th November 2014, 10:45 AM
#1098
Senior Member
Seasoned Hubber
அச்சானியில் அனைத்து பாடல்களும் வாலி ஐயா
எனக்கு மிகவும் பிடித்த பாடல் தாலாட்டு பிள்ளை உண்டு தாலாட்டு ஆஹா ஆஹா
-
12th November 2014, 11:32 AM
#1099
Senior Member
Diamond Hubber
ராஜேஷ்ஜி!
வணக்கம். 'வண்ணத்திரை' சுசீலா அம்மா ஆவணம் வாசித்தீர்களா?
-
12th November 2014, 11:38 AM
#1100
Senior Member
Diamond Hubber

Originally Posted by
rajeshkrv
Excellent Rajesh Sir.
Bookmarks