Page 144 of 397 FirstFirst ... 4494134142143144145146154194244 ... LastLast
Results 1,431 to 1,440 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #1431
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    தேனிசைத்தென்றலின் முத்துக்கள் -20

    சுரேஷ் கிருஷ்ணா ஒரு நல்ல இயக்குனர். பல நல்ல படங்கள் இயக்கினார். அப்படித்தான் தேசாப் படத்தை தமிழில் ரோஜாவை கிள்ளாதே என்ற பெயரில் எடுத்தார்.
    தேஸாப் சாயல் தான். இதில் தேவாவின் பாடல்கள் அனைத்தும் அருமை.

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் , சித்ராவின் குரலில் “யமுனா நதிக்கரையில் “


  2. Likes kalnayak liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1432
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    ருத்ரய்யா பற்றிய அலசல் அருமை. வாசு ஜி, கோபால் ஜி, ராகவ் ஜி அருமை அருமை

  5. #1433
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    Roman Polanski அவர்களின் ஒரு படம், பெயர் நினைவில் இல்லை, அதிலிருந்து ஒரு காட்சியமைப்பை அவள் அப்படிததான் படத்தில் தமிழுக்கேற்றவாறு பயன் படுத்தியிருப்பார். மிக அற்புதமாக இருக்கும். கோபால் சார் அந்தப் படம் நினைவிருக்குமோ என்னவோ..

    மறக்கமுடியாத இயக்குநர் ருத்ரையா அவர்களின் மறைவு தமிழ்த்திரையுலகிற்கு ஈடு செய்யமுடியாத இழப்பு.
    I think it is from the Film "Knife in the Water". I have full collections of Roman Polanski,Michael angelo, Fellini,Godardt,Bergmen,Kurasowa,Kim Ki Duc,and many more. Actually ,I sacrificed my regular Film viewing sessions for the sake of participation in the thread. I have to catch up with my reading and viewing. You are well verse with movies Sir.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  6. #1434
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு,



    இளையராஜாவை பற்றி நிறைய பேசியுள்ளோம். தொடர் தொடங்கியதற்கு நன்றி. என்னுடைய கல்லூரி நாட்களை வளமாக்கிய ஒரு அற்புத இசை மேதை. எனக்கு பிடித்த பாடல்களை பட்டியலிட்டு ,உங்கள் கை வண்ணத்தில் அவை வரும் போது ,என் இசை குறிப்புகளுடன் தொடர்வேன். கார்த்திக் திரும்பியவுடன்,என் எம்.எஸ்.வீ தொடரை தொடர்ந்து,அது முடிவுற்றதும், இளையராஜா பற்றி ஒன்று எழுதும் உத்தேசம்,உத்வேகம் உள்ளது. பார்ப்போம்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. #1435
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Knife in the Water ... Thank you Gopal.

    இந்தப்படம் கிட்டத்தட்ட முழுமையாகவே ஒரு தமிழ்ப் படத்திற்கு ஆதாரமாக இருந்தது. குறிப்பாக வசந்த கால நதிகளிலே பாடல் காட்சி அப்படியே Knife in the Water படத்தை நினைவூட்டும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. Likes rajeshkrv liked this post
  9. #1436
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    Knife in the Water ... Thank you Gopal.

    இந்தப்படம் கிட்டத்தட்ட முழுமையாகவே ஒரு தமிழ்ப் படத்திற்கு ஆதாரமாக இருந்தது. குறிப்பாக வசந்த கால நதிகளிலே பாடல் காட்சி அப்படியே Knife in the Water படத்தை நினைவூட்டும்.
    உண்மை ராகவேந்தர். இந்த படம் 1963 இன் சிறந்த அயல் நாட்டு படைப்புக்கான ஆஸ்கார் வென்றது. ரோமன் போலன்ஸ்கி எனது பிரிய இயக்குநர் , knife in the water , ஒரு தாம்பத்ய முரண் வாழ்க்கை கொண்ட தம்பதியர் ,ஒரு ஓய்வுக்கு செல்லும் போது எதிர்பட்ட இளைஞனை அழைத்து சென்று, படகிலும் ஏற்றி செல்லும் வழியில், பெண்ணிற்காக இருவருக்கும் வரும் வாக்குவாதம் முற்றி கத்தி குத்தில் முடியும். கணவன் குதித்து தப்பி விட, அந்நியனோ கத்தி குத்தில் பிழைத்து, தனித்திருக்கும் மனைவியிடம் இசைவுடன் இணைய, தனித்து கரை கண்ட நாயகனுடன் நாயகியின் உரையாடல் என்று, ஆண் -பெண் உளவியல் முரண்கள், அது சார்ந்த ஒழுக்க விதிகள்,மீறல், தீர்வின்மை என்று பல கேள்விகளை எழுப்பும்.



    பாலச்சநதரின் மூன்று முடிச்சு ,இன்த படத்தை நினைவூட்டும் . குதற பட்டு,குற்றுயிராக்க பட்ட படம். மகா மோசம்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  10. #1437
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //அதில் ஒரு pretentious என படும் ஒரு போலி தன்மை வராமலிருக்க, ஒரு பாத்திரமாவது நம் உணர்வுகளை,கேலிகளை பதிவு செய்து படத்தை நடைமுறை வாழ்க்கையில் இணைத்து ,பார்வையாளர்களுடன் இணைப்பை வழங்கும்//

    'போலி தன்மை வராமலிருக்க' என்பது சரியா pretentious என்றாலும் கூட. இயல்பு தானே முழு நோக்கமும் அல்லது இயல்பு கெடாமல். எதற்கும் காம்ப்ரமைஸ் ஆக வேண்டாமே. சுவாரஸ்யம் இருந்தால் கூட அல்லது தேவையில்லையே. ஒருவேளை அதுவும் இயல்பாக இருந்தால் அதுபற்றி குற்றமில்லை. பார்வையாளனை ஈர்க்க வைக்கும் அல்லது இருக்கையில் இருக்க வைக்கும் உத்தி இப்படிப்பட்ட படங்களுக்குத் தேவைதானா என்று கூறுங்கள். விதண்டாவாதம் புரிவதற்கு அல்ல. நிஜமாகவே தெரியாமல் கேட்கிறேன். அங்கு கேரகடர் போய் ரஜனி மேனரிசங்கள் தலை தூக்க வில்லையா. ரஜினி என்ற நடிகன் தானே அங்கு முன்னிலைப் படுகிறான். புகழவும் படுகிறான். நீங்களே கூட கூறியுள்ளீர்கள். பாத்திரம் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடுகிறதே. அது நடிகனின் சாமர்த்தியமா அல்லது பாத்திரப் படைப்பின் பின்வாங்கலா?
    Last edited by vasudevan31355; 20th November 2014 at 09:06 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #1438
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    //அதில் ஒரு pretentious என படும் ஒரு போலி தன்மை வராமலிருக்க, ஒரு பாத்திரமாவது நம் உணர்வுகளை,கேலிகளை பதிவு செய்து படத்தை நடைமுறை வாழ்க்கையில் இணைத்து ,பார்வையாளர்களுடன் இணைப்பை வழங்கும்//

    'போலி தன்மை வராமலிருக்க' என்பது சரியா pretentious என்றாலும் கூட. இயல்பு தானே முழு நோக்கமும் அல்லது இயல்பு கெடாமல். எதற்கும் காம்ப்ரமைஸ் ஆக வேண்டாமே. சுவாரஸ்யம் இருந்தால் கூட அல்லது தேவையில்லையே. ஒருவேளை அதுவும் இயல்பாக இருந்தால் அதுபற்றி குற்றமில்லை. பார்வையாளனை ஈர்க்க வைக்கும் அல்லது இருக்கையில் இருக்க வைக்கும் உத்தி இப்படிப்பட்ட படங்களுக்குத் தேவைதானா என்று கூறுங்கள். விதண்டாவாதம் புரிவதற்கு அல்ல. நிஜமாகவே தெரியாமல் கேட்கிறேன். அங்கு கேரகடர் போய் ரஜனி மேனரிசங்கள் தலை தூக்க வில்லையா. ரஜினி என்ற நடிகன் தானே அங்கு முன்னிலைப் படுகிறான். புகழவும் படுகிறான். நீங்களே கூட கூறியுள்ளீர்கள். பாத்திரம் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடுகிறதே. அது நடிகனின் சாமர்த்தியமா அல்லது பாத்திரப் படைப்பின் பின் பின்வாங்கலா?
    மக்கள் என்னும் ஆட்டு மந்தை உயிரை கொடுத்து நடிக்கும் நடிகனின் நடிப்பை பார்க்காமல் ஓ இது ரஜினி இது கமல் என்று பார்க்கத்தான் செய்கிறது ,அது தான் பல நல்ல பாத்திர படைப்புக்கள் பேசப்படாமலே போனதற்கு காரணம்

  12. #1439
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    //அதில் ஒரு pretentious என படும் ஒரு போலி தன்மை வராமலிருக்க, ஒரு பாத்திரமாவது நம் உணர்வுகளை,கேலிகளை பதிவு செய்து படத்தை நடைமுறை வாழ்க்கையில் இணைத்து ,பார்வையாளர்களுடன் இணைப்பை வழங்கும்//

    'போலி தன்மை வராமலிருக்க' என்பது சரியா pretentious என்றாலும் கூட. இயல்பு தானே முழு நோக்கமும் அல்லது இயல்பு கெடாமல். எதற்கும் காம்ப்ரமைஸ் ஆக வேண்டாமே. சுவாரஸ்யம் இருந்தால் கூட அல்லது தேவையில்லையே. ஒருவேளை அதுவும் இயல்பாக இருந்தால் அதுபற்றி குற்றமில்லை. பார்வையாளனை ஈர்க்க வைக்கும் அல்லது இருக்கையில் இருக்க வைக்கும் உத்தி இப்படிப்பட்ட படங்களுக்குத் தேவைதானா என்று கூறுங்கள். விதண்டாவாதம் புரிவதற்கு அல்ல. நிஜமாகவே தெரியாமல் கேட்கிறேன். அங்கு கேரகடர் போய் ரஜனி மேனரிசங்கள் தலை தூக்க வில்லையா. ரஜினி என்ற நடிகன் தானே அங்கு முன்னிலைப் படுகிறான். புகழவும் படுகிறான். நீங்களே கூட கூறியுள்ளீர்கள். பாத்திரம் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடுகிறதே. அது நடிகனின் சாமர்த்தியமா அல்லது பாத்திரப் படைப்பின் பின்வாங்கலா?
    அது அப்படியில்லை வாசு. பொதுவாக இம்மாதிரி படங்களுக்கு தேர்ந்தெடுக்க படும் களங்கள் பூடகமாக, பல வித suggestive யூகங்களுக்கு ,தேர்ந்த பார்வையாளனை இழுத்து செல்லும்.

    பெரும்பாலும், நமக்கு பரிச்சயமான பின்னணியில் அசாதாரண சூழலில் அமைக்க பட்டு (பஞ்சம்,போர் , சுரண்டல் ,அதீத மனோதத்துவ பின்னணி கொண்ட விசித்திர பாத்திரங்கள்) , தீர்வை வழங்காமல், கேள்விகள் எழுப்பி சிந்தனையை தூண்டும்.



    casting பெரும்பாலும், பொருந்த கூடிய ஒரு நடிகனையே வேண்டும். சுற்றி அசாதாரமான பாத்திரங்கள் சூழ ,ஒரு சராசரி ரசிகன் அன்னியப்பட்டு விடுவான். அதில் ஒரு உண்மை தன்மை கொண்ட ஒரு பார்வையாளன் மனநிலையுடன் ஒருங்கிணைக்கும் ஒரு பாத்திரம் நுழைக்க பட்டே ஆக வேண்டும். அதுதான் இப்பட தியாகு. ஆனால் படத்தின் உயிர்நாடியை குலைக்காமல் ,ஓரளவு அருமையாக கையாள பட்டது.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  13. #1440
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    ஆனால் படத்தின் உயிர்நாடியை குலைக்காமல் ,ஓரளவு அருமையாக கையாள பட்டது.
    அது உண்மைதான். ஒத்துக் கொள்கிறேன். விளக்கம் புரிகிறது.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •