-
22nd November 2014, 11:36 AM
#1501
தமிழ் சினிமா உலகம் தன் கைக்கெட்டும் தூரத்தில் வைத்திருந்தும் அதிகம் பயன்படுத்திக் கொள்ளாத அற்புதமான கலைஞர்களில் இசையமைப்பாளர் வி.எஸ்.நரசிம்மனும் ஒருவர். எண்பதுகளிலே எவ்வளவுக்கெவ்வளவு இசைஞானி இளையராஜாவின் பாடல்களைக் கேட்டு அனுபவிக்க வேண்டும் என்ற தீரா வெறி இருந்ததோ அதையும் கடந்து மனதில் தென்றலாக வந்து போன இசையமைப்பாளர்களில் இசைஞானி இளையராஜாவுக்கு அடுத்த தட்டில் வைத்து என் மனசு எப்போதும் கெளரவிக்கும் வி.எஸ்.நரசிம்மன் இசையமைப்பாளராகக் கொடுத்த பங்களிப்பை.
ஆவாரம்பூவு ஆறேழு நாளா பாடலில் பொங்கி வரும் அருவியாகப் பாயும் இசையாகட்டும், பூமேடையோ பொன்வீணையோ பாடலில் ஒரு மினி இசை ஆலாபனையைப் பாடலின் இடையிசையில் நிரப்பிவைத்திருப்பதாகட்டும், வி.எஸ்.நரசிம்மனின் தனித்துவத்துக்குச் சின்ன உதாரணங்கள் அவை. வி.எஸ்.நரசிம்மன் இசைக்க, பிரியதர்ஷன் இயக்கத்தில் கார்த்திக் நடிக்க "சின்ன மணிக்குயிலே" என்று எடுக்கவிருந்த படத்தில் வந்த "அழகிய கல்யாணப்பூமாலை தான் விழுந்தது என் தோளில் தான்" என்ற பாடலுக்கு ஆயுட்கால அடிமை நான்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd November 2014 11:36 AM
# ADS
Circuit advertisement
-
22nd November 2014, 11:57 AM
#1502
வாசு சார்,
1978-ல் பயங்கர ஹிட்டடித்த சிட்டுக்குருவி படப்பாடல்களை சிறப்பாக த்ந்துள்ளீர்கள். ஆனால் வழக்கமான விஸ்தாரமாக இல்லாமல் எல்லாப்பாடல்களையும் ஜஸ்ட் தொட்டு சென்றுள்ளீர்கள். நேரமின்மை காரணமா?. அதிலும் மறக்காமல் கட்டபொம்மன் படத்தை செருகிவிட்டீர்கள்.
விவித்பாரதியில் சக்கைபோடு போட்ட பாடல்கள் அனைத்தும்.
என் கண்மணி உன் காதலி பாடல் ரெக்கார்ட் செய்யப்பட விதம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ரொம்ப வித்தியாசமான முயற்சி. கிருஷ்ணா சொன்னதுபோல கவுண்ட்டர் பாயிண்ட் முறையில் செய்யப்பட்டது.
இதை எப்படி ரெக்கார்ட் செய்தார் என்பதை இளையராஜாவே சிங்கப்பூர் இசை நிகழ்ச்சியொன்றில் விளக்கியிருந்தார். வீடியோ கேசட்டில் பார்த்தோம். சித்ராவையும் எஸ்.என்.சுரேந்தரையும் பாடவைத்து விளக்கினார்.
படத்தில் மீராதான் கொஞ்சம் நெருடியது. (மீரா இனிக்கும் இளமை படத்தில் கொஞ்சம் விவகாரமான ரோலில் நடித்திருந்தார்).
-
22nd November 2014, 12:33 PM
#1503
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
22nd November 2014, 12:43 PM
#1504
Senior Member
Diamond Hubber
நன்றி ஆதிராம் சார்.
எல்லோருக்கும் தெரிந்த ரொம்பவும் ஹிட்டடித்த மிகப் பிரபலமான பாடல்களை விஸ்தாரமாக எழுத வேண்டாம் என்று தான் சுருக்க முடித்துக் கொண்டேன். அப்படி எண்ணித்தான் இந்தத் தொடரையும் ஆரம்பித்தேன். புகழ் பெற்ற பாடல்களை 'ஸ்கிப்' செய்யலாம் என்றால் மனதும் கேட்க வில்லை. அதுதான் அவற்றை லைட்டாகத் தொடக் காரணம். இளையராஜா இசையில் அதிகம் பிரபல்யமாகாத அருமையான பாடல்களை விவரமாக அலச ஆசை. இன்னும் கேட்டால் அதற்காகத் தான் இந்தத் தொடரையேயே தொடங்கினேன். வேறொன்றுமில்லை. நீங்கள் வாசித்து பின்னூட்டம் அளிப்பதற்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. தங்கள் கருத்துக்கள் எப்போதுமே ஆணித்தரமாயும், உண்மையாகவும் இருக்கும்.
-
22nd November 2014, 12:45 PM
#1505
Senior Member
Diamond Hubber

Originally Posted by
adiram
வாசு சார்,
அதிலும் மறக்காமல் கட்டபொம்மன் படத்தை செருகிவிட்டீர்கள்.
பின்னே?
-
22nd November 2014, 12:46 PM
#1506
Senior Member
Diamond Hubber

Originally Posted by
adiram
(மீரா இனிக்கும் இளமை படத்தில் கொஞ்சம் விவகாரமான ரோலில் நடித்திருந்தார்).
கொஞ்சம் இல்லை சார். நிறையவே.
-
22nd November 2014, 01:20 PM
#1507
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd November 2014, 01:39 PM
#1508
dear vaasu sir
திரு விஜி மனுவேல் சமீபத்தில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்டு இளையராஜாவுடன் தன அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். 2007 ஆம் ஆண்டு ஒரு விபத்தில் உயிர் தப்பி சற்று நடக்கவே கஷ்டப்பட்டு கொண்டே வந்தார் . ஆனால் கி போர்டு வாசிக்கும் போது ஹே ராம் 'நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி .நமை (நம்மை ) சேர்த்த இரவுக்கு நன்றி ' மனுஷர் பின்னி விட்டார்
நண்பர் கே எஸ் சுகா அவர்கள் வலைப்பூவில் இருந்து திரு விஜி மனுவேல் அவர்களை பற்றிய தகவல்
’சதிலீலாவதி’ படத்தின் பாடல் பதிவு. பேசிக்கொண்டே நடந்து செல்லும், சாப்பிடும், வாத்தியார் பாலுமகேந்திராவின் Usual காதலர்களுக்கான Montage பாடல். முதல் முறையாக இளையராஜாவிடம் பாட வந்த உன்னிக்கிருஷ்ணன், செருப்பைக் கிழற்றிவிட்டு பயபக்தியுடன் ரிக்கார்டிங் தியேட்டருக்குள் நுழைந்தார். பாடலின் Preludeஇல் வரும் Sax bit-ஐ கீபோர்டிலேயே வாசிக்கச் சொல்கிறார் ராஜா ஸார், விஜி மேனுவலின் மேல் உள்ள நம்பிக்கையில்.
‘வாசிச்சிடறீங்களா, விஜி?’
‘எஸ் ராஜா’.
விரல்கள் விளையாடின. இரண்டாவது இடையிசையிலும் (Interlude)விளையாட்டு தொடர்ந்தது. வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தேன். பத்தே நிமிஷத்தில் ரெக்கார்டிங் முடிந்து விட்டது.
‘என்னய்யா! நீ இன்னும் கெளம்பலியா?’ காரில் ஏறும்போது கேட்டார், ராஜா ஸார்.
நான் விஜி மேனுவல் கிளம்பும்வரைக்கும் அங்கேயே இருந்து, அவரையேப் பார்த்துக் கொண்டிருந்தேன். இன்றைக்கு விஜய் டி.வியில் அந்த சண்டாளப் பாவி கீபோர்ட் வாசித்து, எல்லோரும் எழுந்து நின்று கைதட்டி மரியாதை செய்தபோது, பழைய நினைவில் மூழ்கினேன்.
’எங்கேயோ, எப்பவோ கொஞ்சம் புண்ணியம் பண்ணியிருக்கோம்’ என்று தோன்றியது.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd November 2014, 01:44 PM
#1509
Junior Member
Junior Hubber
புதியவன்
வி எஸ் நரசிம்மன்..
நானோ கண்பார்த்தேன்..
எல்லோர் நடிப்பும் பிடிக்கும்.. சிவாஜி மட்டுமே விருப்பம்..!
-
22nd November 2014, 01:46 PM
#1510
நன்றி வாசு சார், கிருஷ்ணா சார்,
மீரா, நடிகர்திலகத்தின் இமயம் படத்தில் ஜெய்கணேஷின் இன்னொரு ஜோடியாக நடித்தவர். கேரக்டர்களுக்கு நதிகள் பெயர்கொண்ட அப்படத்தில் மீராவின் பெயர் சிந்து. நேபாளத்தில் எடுக்கப்பட்ட இமயம் கண்டேன் என்ற அழகான பாடலும் இவ்விருவருக்கும்.
நடிகர்திலகத்தின் மைத்துனி. ஆனால் அவரை தங்கள் காதலுக்கு வில்லனாக நினைப்பவர்.
Bookmarks