Results 3,791 to 3,800 of 4000

Thread: Makkal thilakam mgr part-11

Threaded View

  1. #11
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் காசு கொடுக்காத பொழுது - ஆமாம் அவர் வள்ளல் தான் , ஆனாலும் அவரே கொடுக்காமல் விட்ட தருணமும் உண்டு

    அன்பே வா படத்தின் இரண்டாவது கட்ட படப் பிடிப்பு ... ஊட்டிக்கு செல்கிறார் மக்கள் திலகம் . அவருடன் ஜானகி அம்மையாரும் செல்கிறார் , மக்கள் திலகத்தின் உதவியாளர் சபாபதி , எம் ஜி ஆர் பிக்சர்ஸ் ரவீந்தர் என்று நால்வரும் காரில் சென்று கொண்டிருக்க , கூனூரைத் தாண்டிய பொழுது ... ஒரு முஸ்லிம் வயோதிகர் நடந்துச் செல்வதை காண்கிறார்கள் ....

    மக்கள் திலகம் காரை நிறுத்தச் சொல்கிறார் , டிரைவரிடம் :

    "இராமசாமி , அந்த பெரியவர் போற இடம் கேட்டு ஏத்திக்க , ரவீந்திரன் , நீங்க என் பக்கத்திலே வாங்க " - என்றார் .

    அந்தப் பெரியவரை கூப்பிட்டதும் சற்று நேரம் உற்று பார்த்தார் , காரில் ஏறிக் கொண்டார் . கார் புறப்பட்டது

    அவர் ஏதோ பிரார்த்தனை செய்வது போலிருந்தார் . அப்பொழுது மக்கள் திலகம் அவரைப் பார்த்து கேட்டார்

    " பெரியவரே எங்க போயிட்டு வரீங்க ? "

    "கீழே போய் விறகு வித்துட்டு வர்றேன் "

    " இந்த வயசுல நீங்க வேலை செய்யனுமா ? ... உங்களுக்கு பிள்ளைக் குட்டி கிடையாதா ?"

    " இருக்கிறாங்க , ஆனா அவங்களுக்கும் பிள்ளைங்க இருக்குதே .... " என்றார் பெரியவர்

    மௌனம் நிலவியது .... சற்று தூரம் வந்தவுடன் பெரியவர் வண்டியை நிறுத்துச் சொல்லி , இறங்கிப் போய் விட்டார் ....

    மக்கள் திலகம் ரவீந்தரைப் பார்த்து கேட்கிறார் :

    " ரவீந்திரன் , இந்தப் பெரியவர் பற்றி என்ன நினைக்கறீங்க ? "

    " ரொம்ப பெரியவர் . ஏன்னா நீங்க கேட்ட கேள்விக்கு அவர்களுக்கும் பிள்ளைகள் இருக்குதேன்னு ஒரு பெரிய விஷயத்தை சுருக்கமா சொல்லிட்டாரு " என்று ரவீந்தர் சொல்ல ....

    அதற்கு மக்கள் திலகம்

    " அட , அதை கேக்கலேய்யா , அவருக்கு என்னை தெரியலே , நீர் என்னமோ அன்னிக்கு நாட்டுலே என்னை தெரியாதவங்களே இருக்க மாட்டாங்கன்னு சொன்னீரே ! நீர் தோத்துப் போயிட்டீர் ..." என்று சிரித்தார் .

    அப்பொழுது இன்னமும் கார் நின்றுக் கொண்டதை அறிந்த மக்கள் திலகம்

    " ஏம்பா இராமசாமி நிக்குறே... போயேன் " என்றார்

    " அந்தப் பெரியவர் என்னை நிக்க கை காட்டிட்டு , போனாருங்க . அதோ வரார் பாருங்க " என்றார் இராமசாமி

    அந்தப் பெரியவர் வந்தார் , கைகளில் பழங்களுடன் ....

    " ஐயா , நான் சாவுறதுக்கு முன்னால ஒரு தரம் உங்களைப் பார்க்கணும்னு இருந்தேன் . உங்க கூட உங்க கார்லே வர்றதை நினைச்சதும் எனக்கு பேச்சு மூச்சு இல்லை . என் அல்லா கிட்டே உங்களை நல்லாக்கி வைக்க வேண்டிக்கிட்டே இருந்தேன் . என் பிள்ளைங்க உங்க படம் பார்ப்பாங்க . நான் படம் பார்க்க மாட்டேன் . உங்க படத்தை சுவரொட்டியிலே பார்த்திருக்கேன் .. வெறுங்கையோட பார்த்துட்டோமேங்கற கவலை வேறே . அதைப் போக்கத் தான் இதுங்களை வாங்கியாந்தேன் . "மிஸ்கேன்" (யாசகன் ) தர்றேன் வாங்கிக்குங்க " என்றார் அந்தப் பெரியவர்

    பொன் சிரிப்புடன் மக்கள் திலகம் அவற்றை பெற்றுக் கொண்டார் , கார் கிளம்பியது , ஜானகி அம்மையார் மக்கள் திலகத்தை பார்த்து கேட்டார்

    " பாவம் .. எதாச்சும் அவருக்குக் கொடுத்திருக்கலாம் ,நான் கொடுக்கலாம்னு வந்தப்ப ஏன் தடுத்தீங்க ? "

    அதற்கு மக்கள் திலகம் பதிலளித்தார் ...

    " ஜானு , தன்மானதுக்காக தன பிள்ளைங்க கிட்டே கேட்காம , தானே விறகு வித்து சாப்பிடுறவர் கிட்டே , நாம பணம் கொடுத்தா வருத்தப் படுவாரு . அவர் ஒரு பெரிய கேரக்டரு ! சரி அவர் கொடுத்த இந்தப் பழங்களை பத்திரமாவை . நானே சாப்பிடப் போறேன் , யாருக்கும் கொடுக்க மாட்டேன் " என்று சின்னப் பிள்ளை போலச் சொன்னார்
    மக்கள் திலகம் ....

    இதனை விவரித்தவர் , எம் ஜி ஆர் பிக்சர்ஸ் ரவீந்தர் ,

    குல்லா மாட்டிக் கொண்டு கஞ்சி உருஞ்சுவதால் மட்டும் வருவதில்லை பாசமும் அன்பும் புரிதலினால் வருவது அது


    courtesy kishore k samy net

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •