இந்த இனிய தீப திருநாளில் , இந்த மதுர கான நண்பர்கள் எல்லோரும் எல்லாமும் பெற்று , இல்லாதோர் இல்லாத நிலைமை வரவேண்டும் என்று மன பூர்வமாக ப்ராத்தனை செய்துகொண்டு , இந்த இனிய பாடலை சமர்பிக்கின்றேன்
1. பேசாமல் வா என் பக்கம் நெருங்கு. பாடகர் திலகத்திற்கு வழக்கத்திற்கு மாறாக கீழ் ஸ்தாயில் கலக்க ராட்சசி வழக்கம் போல் கலக்க
விஜயபாஸ்கரின் இசை. படம்:உங்க வீட்டு கல்யாணம்
தங்கள் வளமான பாராட்டிற்கும், வாழ்த்துதல்களுக்கும் மிகவும் நன்றி! இங்கே உள்ள எல்லாருமே சிறப்பாக எழுதுகிறீர்கள் என்று மிகவும் பெருந்தன்மையோடு கூறி இருந்தீர்கள். உங்களுக்கு ஒன்று தெரியுமா? நாங்கள் எல்லோருமே தங்கள் எழுத்திற்கு ரசிகர்கள். அதுதான் நிதர்சனமான உண்மை. அமர்க்களமான சரளமான நடையில் சிறப்பாக எழுதி வெகு குறுகிய காலத்திலேயே எங்களுக்குள் ஐக்கியமாகி விட்டீர்கள்.
இன்னொன்று சார். 'தாழம்பூ' சஸ்பென்ஸ் கலந்து தந்த படம். 'தாழம்பூ' என்ற புத்தகத்தில்தான் அந்த ரகசியம் அடங்கியிருக்கும் என்று என்றோ பார்த்த நினைவு. அசோகன் மறைந்து மறைந்து எம்.ஜி.ஆர் அவர்களுக்குத் தெரியாமல் மணிமாலாவைப் பார்க்க வருவார். சரிதானே! எம்.ஜி.ஆரின் அண்ணன் என்று நினைக்கிறேன். எம்.ஜி.ஆர் காவல் துறை அதிகாரியாய் இருப்பார் அல்லவா! எம்.ஜி.ஆர் இந்தப் படத்தில் 'தாழம்பூவின் நறுமணத்தில் நல்ல தரம் இருக்கும் தரமிருக்கும்' என்ற பாடலும் ரொம்ப பிடிக்கும். அதே போல இன்னொரு பாடல். முன் சொன்ன பாடலை விடவும் பிடிக்கும்.
'தூவானம் இது தூவானம் இது தூவானம்
சொட்டு சொட்டா உதிருது உதிருது'
அதை விடவும் இந்தப் பாடல் பிடிக்கும்.
'வட்ட வட்டப் பாத்தி கட்டி
வண்ண வண்ண சேலை கட்டி
கட்ட்டழகி நடப்பது நாட்டியமா
அவள் கண்ணாலே சுற்றுவது ராட்டினமா'
சுசீலா அம்மா கோரஸுடன் சேர்ந்து பாடிய அமர்க்களம்.
இதே பாணியில் ஒரு பாடல் கே.ஆர் விஜயாவிற்கு சுசீலா அம்மா பாடி அற்புதமாக 'சர்வர் சுந்தரம்' படத்தில் அமைந்த பாடல்.
'சிலை எடுத்தான் ஒரு சின்னப் பெண்ணிற்கு
கலை கொடுத்தான் அவள் வண்ணக் கண்ணிற்கு'
'தாழம்பூ' படத்தில் வரும் இன்னொரு பாடல் என்னுடைய முதல் சாய்ஸ்.
'ஏரிக்கரை ஓரத்திலே எட்டு வேலி நிலமிருக்கு
எட்டு வேலி நிலத்திலேயும் என்ன வைத்தால் தோப்பாகும்?
மிக மிக அற்புதமான பாடல்.
'வாழை வைத்தால் தோப்பாகும்
மஞ்சள் வைத்தால் பிஞ்சு விடும்
ஆழமாக உழுது வைத்தால்
அத்தனையும் பொன்னாகும்'
வளமான வரிகள். விவசாயத்தின் மகிமையை எவ்வளவு உன்னதமமாக உணர்த்துகிறார் பாடலாசிரியர்.
இதோ எனக்கும், உங்களுக்கும் மிகவும் பிடித்த 'எங்கே போய் விடும் காலம்' பாடல் நம் இருவருக்காகவும், பாடலைப் பிடித்த பலருக்காகவும்.
//பேசாமல் வா என் பக்கம் நெருங்கு. பாடகர் திலகத்திற்கு வழக்கத்திற்கு மாறாக கீழ் ஸ்தாயில் கலக்க ராட்சசி வழக்கம் போல் கலக்க
விஜயபாஸ்கரின் இசை. படம்:உங்க வீட்டு கல்யாணம்//
தினம் தினம் நான் முணுமுணுத்துக் கொண்டே இருக்கும் பாடல். நேற்று இரவு கூட முழுப் பாட்டையும் பாடிப் பார்த்துக் கொண்டேன்.
அதிலும் என் ராட்சசி
'நித்தம் இப்படி ஒத்திகை பார்த்தால் நாடகம் அரங்கேறும்
இந்த பிச்சைக் கண்ணின் இச்சைகள் ஒருநாள் நிச்சயம் நிறைவேறும்'
என்று பாடும் அழகும், வரிகளின் அர்த்தமு இருக்கிறதே! வாவ்.!
இந்தப் பாடல் இல்லாமல் என் நாளே தொடங்காது முடியாது. நிஜம் நிஜம்.
கலக்கல் பாடலுக்கு நன்றியோ நன்றி.
Last edited by vasudevan31355; 5th December 2014 at 10:19 AM.
வாழ்க்கை என்பது ஒரு குறுகிய வழிபயணம் . அதற்குள் , நாம் கற்று கொள்ளவேண்டியவைகள் ஏராளம் - முக்கியமானவைகளை தவிர நாம் பல தேவை இல்லாத விஷயங்களை கற்று கொள்கிறோம் - இந்த ஆங்கில கவிதை வாழ்க்கையின் முக்கிய தத்துவத்தை எவ்வளவு அழகாக சொல்கின்றது என்று பாருங்கள்
This message is beyond all relationships, read this poem all.. it's touching reality
When I'll be dead.....,
Your tears will flow,..
But I won 't know...
Cry for me now instead !
you will send flowers,..
But I won't see...
Send them now instead !
you'll say words of praise,..
But I won't hear..
Praise me now instead !
you'll forget my faults,..
But I won't know...
Forget them now, instead !
you'll miss me then,...
But I won't feel...
Miss me now, instead
you'll wish...
you could have spent more time with me,...
Spend it now instead !!
Moral......
''Spend time with every person around you, your families, friends, lover, acquainted....
Make them feel Special,
Because you never know when time will take them away from you forever''...
''Spend time with every person around you, your families, friends, lover, acquainted....
Make them feel Special,
Because you never know when time will take them away from you forever''...
Life is too short...
Love all
and
Forgive all.
This is what I try to tell others, but haven't been too successful in changing too many minds so far!
Bookmarks