-
15th December 2014, 10:31 PM
#2161
Senior Member
Seasoned Hubber
பொங்கும் பூம்புனல் - துயிலூட்டும் தொண்ணூறு
வாசு சார் நிச்சயம் 80களுக்கென தனித் தொகுப்பை கொண்டு வந்து விடுவோம்.
தொடர்ந்து..
கங்கைக்கரை பாட்டு திரைப்படத்தில் தேனிசையாக தேவா இசையில் ஒரு பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் குழலோசை..
எஸ்.பி.பி. சித்ரா குரல்கள் சொக்க வைக்கும் இனிமை..
http://www.mayuren.org/site/mayureng...Karai%20Paattu
Last edited by RAGHAVENDRA; 15th December 2014 at 10:46 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
15th December 2014 10:31 PM
# ADS
Circuit advertisement
-
15th December 2014, 10:47 PM
#2162
Senior Member
Seasoned Hubber
பொங்கும் பூம்புனல் - துயிலூட்டும் தொண்ணூறு
தொடர்வது ஆதித்யன் இசையில் அசுரன் படத்திலிருந்து
ஓ... வான்மதி...
உன்னி கிருஷ்ணன் சங்கீதா சுஜீத் குரல்களில்
http://play.raaga.com/tamil/album/asuran-t0000523
Last edited by RAGHAVENDRA; 15th December 2014 at 11:11 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
15th December 2014, 10:52 PM
#2163
Senior Member
Seasoned Hubber
பொங்கும் பூம்புனல் - துயிலூட்டும் தொண்ணூறு
90களில் வெளிவந்த ஜீவனுள்ள பாடல்களில் ஒன்று சௌந்தர்யன் இசையில் சேரன் பாண்டியன் திரைப்படத்தில் இடம் பெற்ற காதல் கடிதம் வந்ததா பாடல்..
சௌந்தர்யன் அவர்களின் இசைக்கெனத் தனி ரசிகர் பட்டாளமே உருவானது இந்தப் பாடலால்..
மறக்க முடியாத இனிமயான பாடல்..
காதல் கடிதம் வரைந்தேன்..
Last edited by RAGHAVENDRA; 15th December 2014 at 11:11 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
15th December 2014, 11:04 PM
#2164
Senior Member
Seasoned Hubber
பொங்கும் பூம்புனல் - துயிலூட்டும் தொண்ணூறு
நட்புக்காக திரைப்படத்தில் தேவா இசையில் கருடா கருடா என் காதலை சொல்லி விடு பாடல். குரல்கள் கிருஷ்ணராஜ், சுஜாதா. பாடல் காளிதாசன்
http://play.raaga.com/tamil/album/Natpukkaga-T0000900
Last edited by RAGHAVENDRA; 15th December 2014 at 11:11 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
16th December 2014, 03:56 AM
#2165
Junior Member
Newbie Hubber
வாசு ,
தங்களை தொடரும் நிரந்தர ரசிகர்களில் ஒருவன் நான். என்னை வரவழைக்க ஒரு பதிவா ,என்று யோசித்த போது சாட்டை கையில் கொண்டு விட்டீர்கள். நான் ஓடி வருவதை தவிர வேறு வழி?
வண்டி பாடல்கள், அது சார்ந்த வேகத்துடன் கூடிய தாளக்கட்டு என்றால் டி.கே.ராமமூர்த்திதான்.ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலிக்கு நிகரான பாடல் சாட்டை கையில் கொண்டு. சீர்காழி குரல் யாருக்குமே பொருந்தி வராத ஒரு விசித்திர குரல் எனினும், அவரின் கல்லிலே கலை வண்ண உருக்கமும்,நித்தம் நித்தம் விரக்தி கலந்த இயலாமையும்,உள்ளத்தில் நல்ல உள்ள பாத்திர அனுதாபமும்,மாம்பழ தோட்ட ஓட்டமும், சைக்கிள் வண்டி மேலே ராக்கிங் குறும்பும், சாட்டை கையில் கொண்டு சக்தி நிறை உற்சாக துள்ளலுடன் கூடிய ஓட்டமும், வேறு பாடகரால் தொடவே முடியாதது. என்ன செய்வது?இவரை தமிழிசைக்கென்றே,பக்திக்கென்றே இறைவன் படைத்து விட்டானே? ஆனால் 50 களில் சிவாஜியின் பாடும் குரலாக டி.எம்.சௌந்தரராஜன் அறிய பட்டது போல எம்.ஜி.யாரின் பாடும் குரல் சீர்காழியே. நல்லவன் வாழ்வான் வரை அது தொடர்ந்தது.
ரவியை பற்றி கேட்கவே வேண்டாம். சிவாஜியின் உருவ தோற்றம்,ஸ்டைல், ஷம்மியின் energy நிறைந்த uninhibited dancing skill ,அவ்வப்போது எம்.ஜி.ஆர் போன்று ஒரு ஆரம்ப நடிகனின் அலுப்பு தெரியா புத்துணர்வு வேகம் நிறைந்த சுழல் நடிப்பு முறை(ஒரு எட்டே எட்டு action, permutation மாற்றி மாற்றி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புக்கிணங்க திரும்ப திரும்ப )என்று அற்புத இளமை சக்தி.ரவிக்கு சிவாஜியை போன்றே நகரம்,கிராமம் இரண்டுமே பொருந்தும் தோற்றம் . காதல் ஜோதியில் டி.கே.ராமமூர்த்தி- ரவிச்சந்திரன் ஒரு மிக பெரிய பலம். ஆனால் இன்னொரு நடிகரால் படம் போதிய வெற்றி அடைய முடியவில்லை. ரவியின் இன்னொரு பாடலான உன் மேலே கொண்ட ஆசை
எனது பிடித்தங்களில் ஒன்று.
எங்கேயிருந்துதான் அலுக்காமல் கான்செப்ட் பிடிப்பீர்களோ? சிவாஜி செந்தில் தங்களின் ஆசிரியப் பாவை ,குறட் பாவாக்கி நடிகர்திலகத்தின் கதாநாயகி யர் கான்செப்ட் செய்து கொண்டிருக்கிறார்.
வாழ்த்துக்கள் வாசு.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
16th December 2014, 04:40 AM
#2166
Junior Member
Newbie Hubber
தொடரும் கொண்டாட்ட தோல்விகள்.
மனித மனங்கள் விசித்திரமானவை. அதுவும் collective psychology என்பது ஆபத்தானதும் கூட. ஒரு சுயவிரும்பி(நார்சிஸ்ட்) நினைத்தால், விளிம்பு நிலை மனபிறழ்வு கொண்டவன் (psychologically disturbed ) நினைத்தால் ,சில தேர்ந்த பொய்யர்களின் துணை கொண்டு,மனிதர்களை மூளை சலவை செய்து , வரலாற்றையே உருவாக்கி விடலாம் என்று ஹிட்லர்-கோயபல்ஸ் இணைவு நமக்கு உணர்த்தும் பாடம். இது ஜெர்மனி போன்ற அறிவு சார் வளர்ந்த நாடுகளிலேயே சாத்தியம் என்றால், ஆட்டு மந்தையாக படிப்பறிவின்றி திரிந்த கூட்டங்கள் கொண்ட நாடுகளில்? இதில் ஒரு சோகம் என்னவென்றால் சும்மாவா எல்லோரும் புகழ்கிறார்கள் ,என்று இடைநிலை அறிஞர்களும் தயவு தாட்ஷன்யமின்றி எதிர் நிலை எடுக்காமல், ஜோதியில் கலக்கும் மிக பெரிய வரலாற்று பிறழ்வுகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். இந்த வரலாற்று விபத்துகளை நிர்வாகம், விற்பனை திறன் என்றெல்லாம் கதைக்கும் unethical intellectual கூட்டங்களும் உண்டு.பிறர் வெற்றியை கேள்வி கேட்காமல் கொண்டாடுவது ,கூட்டு மனித சக்தியின் அழிவில் முடியும் அபாயங்கள் அதிகம்.இதில் பொது மீடியா க்கள் இணைவது கேட்கவே வேண்டாம்.
நாம் திறமையின் தோல்விகளை கொண்டாடுவோம்.
சுதர்சனம்-
ஒரு இசையமைப்பாளர் மூன்று வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்தும் ,நல்ல வெற்றிக்கு தோதுவான பாடல்களை கொடுத்தும், ஆதரவு கொடுத்த பிரபல நிறுவனத்தால் (ஒரே இனம் வேறு) தூக்கி எறிய பட்ட சோகம் உண்டா?
ஸ்ரீவள்ளி, பராசக்தி,செல்ல பிள்ளை,தெய்வ பிறவி,களத்தூர் கண்ணம்மா, அன்னை,நானும் ஒரு பெண்,அன்பு கரங்கள், பூம்புகார்,பூமாலை,மணி மகுடம்,வாலிப விருந்து என்ற படங்களில் ஒரு பாடலாவது சோடை போனது என்று சொல்ல முடியுமா?
நெஞ்சு பொறுக்குதில்லையே,அன்பாலே தேடிய,காளை வயசு, ஆடாத மனமும்,அன்னை என்பவள் நீதானா,பக் பக் பக் பக்கும் பக்கும் மாடப்புறா, கண்ணா கருமைநிற கண்ணா,ஏமாற சொன்னது ,இரவு முடிந்து விடும், என்னை முதன் முதலாக,வாழ்க்கை என்னும் ஓடம்,பெண்ணே உன் கதி ,அவன் காதலித்தான்,எங்கே எங்கே என் மனது போன்ற வேறு பட்ட வெற்றி பாடல்களை கொடுத்த சுதர்சன் என்ற அற்புத இசையமைப்பாளரை வரலாறு புறம் தள்ளிடப் போமா? சில அயல் மொழி பாடல்களின் வெற்றி கரமான தமிழாக்கத்தில் வேதாவின் முன்னோடி. மெல்லிசைக்கு 50 களில் வெற்றிகரமான ஆரம்ப-கர்த்தா.
ஒரே தவறு .ஸ்டுடியோ சார்ந்த தயாரிப்பு முறை மாறி வந்த காலங்களில் 60 களில் ,மாற்றங்களை புரிந்து கொள்ளாமலோ ,எதிர்கொள்ளும் திறன் இன்றியோ ,கால வெள்ளத்தால் அடித்து செல்ல பட்டார்.மகா சோகம் என்னவெனில்,63 இல் மிக பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக,இசையமைப்பில் பேச பட்ட படங்களில் ஒன்றான நானும் ஒரு பெண் கொடுத்த கையேடு, ஏ.வீ.எம் இவரை கூப்பிட்டனுப்பி, நீங்கள் இனி இசையமைக்க தேவையில்லை,சும்மா இருங்கள்,பாதி சம்பளம் கொடுத்து விடுகிறோம் என்று சொல்லி இவர் தன்மானத்தை சீண்ட , இவர் அதுவும் தேவையில்லை என்று உதறி வெளியில் வந்தார். 64 முதல் 68 வரை பல வெற்றி படங்களுக்கு தோதான வேறு பட்ட இசை கொடுத்தும் , படவுலகால் உதறி எறிய பட்டு சக்கையான சோகம் நிகழ்ந்தது.
(தொடரும் தோல்விகள்)
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
16th December 2014, 07:00 AM
#2167
Senior Member
Veteran Hubber
Jugalbandi 14
Qawwali to set the mood for holidays!
From Vallavanukku Vallavan
Paaradi KaNNe Konjam........
The original tune from Ustadon Ke Ustad
Miltte Hi Nazar Tum Se.......
Qawwali in Hindi/Urdu sounds much better!
...........
Last edited by rajraj; 16th December 2014 at 07:05 AM.
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
16th December 2014, 08:47 AM
#2168
Senior Member
Diamond Hubber
நன்றி குரு.
தொடரும் கொண்டாட்ட தோல்விகள்.
இப்போதுதான் தங்களுடைய ஜி.ராமநாதன், சுதர்சனம் இசையமைப்பாளர்கள் பற்றிய பதிவுகளைப் படிக்க ஆரம்பித்துள்ளேன். அருமையான நினைவூட்டல்கள். நிதர்சனமான உண்மைகள், ஆதங்கங்ககள் தங்கள் பதிவில் அப்பட்டமாக தெரிகின்றன. பொய் அழித்து மெய்யுரைக்கும் இப்படிப்பட்ட பதிவுகள் இங்கு அவசியம் தேவையே. கடை விரித்தோம் கொள்வாரில்லை என்ற இந்த நிலைமை எத்தனை இசையமைப்பாளர்களை இம்சைப் பட வைத்திருக்கிறது. சுதரசனத்தை எடுத்துக் கொண்டால் அனைத்தும் மகுடம் தரித்த பாடல்கள். சாகா வரம் பெற்றவை.
,//மாற்றங்களை புரிந்து கொள்ளாமலோ ,எதிர்கொள்ளும் திறன் இன்றியோ ,கால வெள்ளத்தால் அடித்து செல்ல பட்டார்//
இரண்டாவதும் ஒன்று உண்டு. தன்மானம். எத்தனையோ பேர் உதாரணம் உண்டு. ஏ.எம்.ராஜா, குமார் என்று. திறமை இல்லாமல் இல்லை. ரசிக்கும் சீமானைத் தந்தவர் அப்படியே கால மாற்றத்துக்குத் தக்கபடி 'அவன் காதலித்தான்' தந்தாரே! 'ஒன்றைக் கண்ணு டோரியா' என்ற ரசிக்கும்படியான சீப் பாடல்களும் அவர் கொடுத்தவையே. இவர்களால் எந்த நேரத்திலும்,எத்தருணத்திலும் தேவைக்கேற்ப அம்சமாகத் தர முடியும் என்றே நான் நினைக்கிறேன். ஆனால் அவமானப்படுத்தல் என்ற ஒன்றை தாங்கும் சக்தி இவர்களுக்கில்லாததே இவர்கள் ஒதுங்கி மறையக் காரணம். இன்னும் கேட்டால் சுதர்சனம் என்ற இசையமைப்பாளர் இருந்தாரா என்ற புருவ உயர்த்தல்களை நான் நிறையப் பார்த்து நொந்து போய் இருக்கிறேன்.
Last edited by vasudevan31355; 16th December 2014 at 10:22 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th December 2014, 08:49 AM
#2169
Senior Member
Diamond Hubber
பக்காவான செலெக்ஷன் பாடல்கள் ராகவேந்திரன் சார். திரும்ப உங்களால் கேட்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறேன்.
-
16th December 2014, 08:58 AM
#2170
Senior Member
Diamond Hubber
ராகவேந்திரன் சார்,
நீங்கள் கேட்ட கழுகு திரைப்படப் பாடல். பஸ்ஸில் ரஜினி, ரதி காதல் ரசம் சொட்ட சொக்கியிருக்க, பின்னணியில் ராஜாவும், ஜானகியும் பாடும் செம பாடல்.
பொன்னோவியம்....
கண்டேனம்மா எங்கெங்கும்.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks