Quote Originally Posted by thozhar View Post
Simple as the man and powerful as his music

இந்த அதிமேதாவிகளுக்கு எல்லாம் ரஹ்மானை திட்டினால் தான் தூக்கமே வரும் போல. இவர்களுக்கு ராஜாவை புகழ வேண்டும் என்றால் புகழ்ந்து விட்டு போக வேண்டியதுதானே. தேவையே இல்லாமல் எதற்கு ரஹ்மானை வம்புக்கு இழுக்க வேண்டும். இதில் ஒரு சாரார் எனக்கு ரஹ்மானை பிடிக்கவில்லை, அவரின் இசை சகிக்கவில்லை என்பார்கள். அவர்களை கூட சகித்து கொள்ளலாம். ஆனால் இந்த வஞ்சப் புகழ்ச்சி அணியைதான்

ஒருவர் கூறுகிறார், ராஜாவை தவிர* வேறு யாராலும் இது போல் ஒரு ட்யூனை சிந்தித்திருக்க முடியாது என்று. இவர் என்ன கடவுளா அல்லது இசையில் கரை கண்டவரா? ஞானியை ரசிப்பவன் எல்லாம் ஞானியாக முடியாது.
அந்த ஒருவர் கூட்டத்தில் நானும் இருக்கேன் யாருமே நினைத்துப் பார்க்காத முற்றிலும் வேறுபட்ட இசைவடிவத்தில் அதே வேளையில் பாடல் சூழ்நிலைக்கு மிகவும் பொருந்திவருவது போல.. எல்லோருமே அவரவர் இசைக் கேட்கும் அனுபவத்தை வைத்துதான் இதுபோன்ற முடிவுக்கு வரமுடியும். இதிலென்ன தவறு இருந்துவிடப் போகிறது? அதுபோல வேறொரு இசையமைப்பாளர் முயற்சித்த இடங்கள் எத்தனை, அப்படியே முயற்சித்தாலும் அதில் ராஜாவின் ஆக்கத்தைப் போன்ற ஒரு முழுமை வந்ததா என்ற தன்னளவில் ஒரு பகுப்பாய்வு செய்தாலே போதும் அதுபோன்ற ஒரு முடிவுக்கு வர. Out of the box thinking / Pushing the envelope ன்னு சொல்வாங்களே! மரபை உடைத்தல்.. அதையும் இலக்கண முறையோடு.. அதுதான் ராஜாவின் தனித்துவம் என நினைக்கிறென்.

இதே வரிசையில் இன்னொரு பாடல் உங்கள் செவிக்கு.. "அம்மையப்பா அடிவாங்கிடப் பிறந்தேன் உண்மையப்பா உதைவாங்கியே இளைத்தேன்" - எனக்குநானேநீதிபதி என்ற படத்திலிருந்து மலேசியாவாசுதேவன் குரலில் அமைந்த பாடல்.

http://ilayaraja.in/tamil-songs/play...ne-neethipathi

உங்களுக்கு அப்படிப்பட்ட வகையில் ரஹ்மானின் பாடலாக்கங்கள் இருந்தால் எடுத்துப் போட்டு சிலாகியுங்கள். வாசித்து தெரிந்து கொள்கிறோம்.