-
14th February 2015, 07:01 PM
#1491
Senior Member
Platinum Hubber
தன்னால் எடுத்த முடிவுதான் என்றாலும்
தனக்காக பெற்றோர் தேர்ந்தெடுத்தாலும்
திருமணம் என்னும் பந்தம் பாழும் கிணறு
எங்கும் உலா வருதிந்த அரியதோர் கூற்று
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th February 2015 07:01 PM
# ADS
Circuit advertisement
-
16th February 2015, 10:28 AM
#1492
Senior Member
Senior Hubber
அரியதோர் கூற்றென்று சொன்ன நீரே
...அதன்படியே நடக்காமல் இருக்க லாமோ
கரியவிருள் சூழ்மனத்தை வெளிச்ச மாக்கும்
..கருத்துக்கள் சொன்னார்கள் ஆன்றோர் தாமே
விரியவைக்கும் நெஞ்சத்தை ஏற்றங் கொண்டே
..வியக்கதக மாற்றத்தைக் கொள்ள் வைக்கும்
செரியசொல் லதுவன்றோ சொல்லும் நீரே
..சீக்கிரமாய் சொல்லுங்கள் மறந்து போகும்!
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
16th February 2015, 10:44 AM
#1493
Junior Member
Devoted Hubber
மறந்து போகுமோ இக்கூற்று ! கொற்றவரோ அல்ல மற்றவரோ
குறையற்றார் இம்மேதினியில் குற்றமற்றவர் என்றுண்டோ
சுற்றிப்பார்க்கில் தனக்குவமை இலாது ஒருவனை இறையவனை
பற்றிப்பார் பாதம் மனதினில் மனிதனில் என்றும் உறைபவனை
Last edited by Muralidharan S; 16th February 2015 at 11:14 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th February 2015, 11:27 AM
#1494
Senior Member
Senior Hubber
உறைபவனை உரசினால் தெரியும் உள்ளவன் உறைவதில்லையென்று
உறங்குபவனை எழுப்பலாம் உறங்குவதுபோல் நடிப்பவனை முடியுமா?
இறைவனாய் நிற்பவன் இயற்கையாய் பிரபஞ்சம் எங்கும் நிற்கிறான்
இறங்கும் கணம் அறிந்து இடம் பிடித்து இறங்குவான் தாங்குவோமோ?
இரக்கம் கொண்டவனை அரக்கனாய் மாற்றிடலாமோ இம்மானுடர்?
.........-`҉҉´-
-`҉҉´..)/.-`҉҉´-
....¨´“˜~.)/¸.~“˜¨
........¨´“˜~.“˜
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th February 2015, 12:05 PM
#1495
Senior Member
Senior Hubber
இம்மானுடர் வாழ்வில்வரும் ஏற்றங்களின் போதிலே
செம்மாந்துதான் பலவண்ணமாய் சிறப்பாய்மகிழ்ந் திருப்பரே
சும்மாச்சில சோகம்வரின் சோர்வாய்மனம் குழம்பியே
கம்மாய்க்குளம் கல்பட்டதால் கலங்கும்வகை கொண்டவர்.
இறையின்கழல் எந்நாளிலும் பிடித்தேஅவர் தொழுதிட
குறையேயிலா வாழ்க்கையது கூடியேநிதம் பெற்றலும்
தரைமீதிலே நிலமீதிலே வான்மீதிலே வந்திடும்
கறைபோன்றிடும் அபாயங்களும் கரைந்தேசெல வாகிடும்..
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
16th February 2015, 02:01 PM
#1496
Junior Member
Devoted Hubber
செலவாகிடும் காசு அதை என்றும் சிக்கனமாய் செய்
சேர்த்து வைத்து பின் செலவு மீதி அதுவன்றோ திறமை
செலவு செய்து அது போக சேமிப்பென்பது செம பொய்
சீர்பட வாழ சேதி ஒன்று சின்னவனே செவி கொடுப்பாய் !
*****
இல்லாத எதுகை மோனைக்காக கொஞ்சம் மாற்றினேன் . மன்னிக்கவும் .முதலில் எழுதியது இதுதான்:
செலவாகிடும் காசு அதை என்றும் சிக்கனமாய் செய்
சேர்த்து வைத்து பின் செலவு மீதி அதுவன்றோ திறமை
செலவு செய்து அது போக சேமிப்பென்பது செம பொய்
சீர்பட வாழ சேதி ஒன்று செவி கொடுப்பாய் சின்னவனே
எனவே சின்னவனே என்பதே சரி! எனது பிழையே !சின்னவனே என்றே ஆரம்பிக்கலாம் சி கே.
Last edited by Muralidharan S; 16th February 2015 at 02:32 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th February 2015, 02:13 PM
#1497
Senior Member
Senior Hubber
சின்னவனே எனச்சொன்னாய் திகைப்பினையே அடக்கிவிட்டேன்
..சீர்மிக்க மன்னவனே எனச்சொன்னாய் மேன்மேலும்
எண்ணத்துள் உறைபவனே ஏந்திழையின் நாயகனே
..என்றெல்லாம் ப்லவிதமாய்ப் பேசுவதுன் வழியிலையே
கன்னத்தில் தெரிகின்ற செஞ்சாந்து நிறமதுவும்
..கன்னியுந்தன் வெட்கத்தின் கண்ணாடி ஆகிடுதே
இன்னுமென சொல்லிடுவாய் எனக்குத்தான் உம்தந்தை
..ஏற்கெனவே சொல்லிவிட்டார் நம்முடைய இணையும்நாள்..
-
16th February 2015, 02:14 PM
#1498
Senior Member
Senior Hubber
//இது போங்காட்டம்.. செவிகொடுப்பாய் சின்னவனே என முடித்திருந்ததாய் நினைவு //
-
16th February 2015, 02:18 PM
#1499
Senior Member
Senior Hubber
செவிகொடுப்பாய் என்றேதான் கதறுகிறேன் ஓசிவனே
..சேர்த்துவிடு உன்பதத்தில் சீக்கிரமாய் என்றேதான்
புவியினிலே வாழ்ந்தகஷ்டம் போதுமய்யா போதுமென
..புவனத்தை ஆள்கின்ற உன்னருளும் வேண்டுமென
பவித்திரமாய்ப் பலவாறாய் பாடல்கள் தான்பாடி
..பக்குவத்தை அடைவதற்கு முடியாமல் போயின்று
கவிதையிலே வேண்டூகிறேன் ஈசாவுன் அருட்பார்வை
..காட்டிவிடு அதுபோதும் அதுபோதும் ஓசிவனே..
//சரி சரி செவிகொடுப்பாய்க்கும் ஒண்ணு எழுதிப்பார்த்தேன் //
-
16th February 2015, 02:19 PM
#1500
Senior Member
Senior Hubber
//இன்னுமென சொல்லிடுவாய் எனக்குத்தான் உம்தந்தை
..ஏற்கெனவே சொல்லிவிட்டார் நம்முடைய இணையும்நாள்..// இந்தப்பாட் இறுதிச் சொல் வைத்துத் தொடருங்கள்
Bookmarks