-
3rd March 2015, 07:34 PM
#1961
Junior Member
Platinum Hubber
-
3rd March 2015 07:34 PM
# ADS
Circuit advertisement
-
3rd March 2015, 07:34 PM
#1962
Junior Member
Platinum Hubber
-
3rd March 2015, 07:35 PM
#1963
Junior Member
Platinum Hubber
-
3rd March 2015, 07:35 PM
#1964
Junior Member
Platinum Hubber
-
3rd March 2015, 07:36 PM
#1965
Junior Member
Platinum Hubber
-
3rd March 2015, 07:37 PM
#1966
Junior Member
Platinum Hubber
-
3rd March 2015, 08:31 PM
#1967
Junior Member
Veteran Hubber

Originally Posted by
kalaiventhan
நண்பர் திரு.ஆர்.கே.எஸ்.,
அப்பாடா..! நீண்ட நாட்களாக உங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். வந்தீர்களே. சரி, முதலில் ஒரு விஷயம்.
பெரிய இடத்துப் பெண் படத்தின் வசூல் பற்றி நேற்றிரவு கருத்து தெரிவித்துள்ளீர்கள். திரு.லோகநாதன் தனக்கு கிடைத்த தகவலையும் படங்களையும் பதிவிட்டுள்ளார். எங்கள் வீட்டு சாப்பாடு நன்றாக இருக்கிறது என்றுதான் நாங்கள் கூறுகிறோம். உங்கள் சாப்பாட்டை குறை கூறவில்லை. தர்மம் எங்கே? படத்தை விட பெரிய இடத்துப் பெண் அதிக வசூல் பெற்றது என்று திரு.லோகநாதன் முதலில் கூறவில்லை.
உங்கள் பதிவுக்குப் பிறகுதான் திரு.செல்வகுமார் , பெரிய இடத்துப் பெண்ணை விட, தர்மம் எங்கே? ரூ.5,000 குறைவாக வசூலானது என்று அதுவும் தியேட்டர் மேனேஜர் திரு.பாலமுருகன் மூலம் கிடைத்த தகவலை தெரிவித்தார். விழா கொண்டாட்டங்கள் பற்றிய புகைப்படங்களைப் போடும்போது அதில் இடம் பெற்ற வாசகங்களுக்காக நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு கோபப்பட்டதாக, உங்கள் தரப்பில் நியாயம் கற்பிக்க முனைந்தால் நாங்கள் தினமும் கோபப்பட வேண்டியிருக்கும். இன்று கூட உங்கள் திரியில் 342,343வது பதிவுகளை பாருங்கள். தான் உணர்ச்சிவசப்பட்டதற்காக திரு.செல்வகுமார் பெருந்தன்மையுடன் வருத்தமும் தெரிவித்துள்ளார். நீங்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டாம். உணர்ந்தால் சரி. சர்ச்சைகளை தவிர்ப்போமே. அந்த நேரத்தில் நமது அபிமானத்துக்குரியவர்களை அவரவர் வாழ்த்தி பதிவிடுவோமே.
சரி, இனி நான் கேட்க விரும்பிய கேள்வி..
எங்கள் திரிகளின் துவக்கத்துக்கு வாழ்த்து தெரிவிக்கிறீர்கள். ஆயிரக்கணக்கில் பதிவுகளைக் கடந்தவர்களை வாழ்த்துகிறீர்கள். திரு.ராமமூர்த்தி பாங்காக் பயணத்துக்கு வாழ்த்தினீர்கள். திரு.குமார் சார் போல மூத்த நண்பர்கள் திரியில் பங்கு பெற வந்தால் வாழ்த்துகிறீர்கள். எங்கள் பிறந்த நாளுக்கு வாழ்த்துகிறீர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக புரட்சித் தலைவர் நினைவுநாளில் இரங்கல் கவிதை எழுதினீர்கள். அவர் பிறந்த நாளில் வாழ்த்துக்கட்டுரை எழுதினீர்கள்.
இப்படி எங்கள் சுக துக்கத்தில் பங்கு கொள்பவர், புதிய சாதனை படைத்தால் நாங்களும் வாழ்த்து தெரிவிப்பதுதானே முறை? நீங்கள் 2,000 பதிவுகளை கடந்ததற்காக திரு.எஸ்.வி, திரு.யுகேஷ் பாபு ஆகியோர் உங்கள் திரிக்கே வந்து உங்களை வாழ்த்தினார்கள். நீங்களும் பதில் அளித்தீர்கள். இங்கே உங்களுக்கு மக்கள் திலகம் திரியின் கடந்த பாகத்தில் 289-ம் பக்கத்தில் நான், 290-ம் பக்கத்தில் திரு.சைலேஷ் சார், திரு. செல்வகுமார் சார், 301ம் பக்கத்தில் திரு.ரவிச்சந்திரன் ஆகியோர் வாழ்த்தினோம்.
ஒருவரை வாழ்த்துவதே அவர்கள் மேலும் ஊக்கம் பெறத்தான். அந்த வாழ்த்தே அவர்களுக்கு தெரியவில்லை என்றால் வாழ்த்தால் பயன் என்ன? இதை ஏற்கனவே தெரிவித்தேன்.
அந்த வாழ்த்துக்களை நீங்கள் பார்த்தீர்களா?...... இதுதான் நான் கேட்க விரும்பிய கேள்வி.
பார்க்காவிட்டால் பரவாயில்லை. எங்கள் அனைவரின் சார்பிலும் வாழ்த்துக்கள். உங்களை இங்கே வரவழைக்க வேண்டும், உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் ‘பயப்படுகிறாரா?’ என்று கேட்டிருந்தேன். மன்னிக்கவும்.
கடுமையான வேலைகள் இருந்தாலும் அங்கே வரும்போது இங்கேயும் தலைகாட்டவும். இதுவும் உங்கள் திரிதான். மீண்டும் வாழ்த்துக்கள். நன்றி.
அடடே, கோபால், எப்ப வந்தீங்க? திரிக்கு வரமாட்டேன் என்ற விரதத்தை கைவிட்டு 5ம் முறையாக திரும்பியிருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள். இம்முறையாவது கோபித்துக் கொண்டு போகாமல் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
இனிய நண்பர் கலைவேந்தன் அவர்களே
தங்களுடைய பதில் பதிவு படித்தேன். மகிழ்ச்சி.
முதற்க்கண் வாழ்த்துக்கு நன்றி சொல்லாதது மனபூர்வம் அல்ல. அதற்க்கு பிறகு பல பதிவுகள் பதிவாகியதால் சரிவர நான் கவனிக்கவில்லை. என்றாலும் தவறு தவறுதான். மன்னிக்கவும். வாழ்த்துக்கள் நல்கிய அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். தக்க சமயத்தில் நினைவு படுத்திய தங்களுக்கு எனது சிறப்பான நன்றிகள்.
இரெண்டாவது - தர்மம் எங்கே வசூல் மற்றும் பெரிய இடத்து பெண் வசூல் பற்றிய திரு செல்வகுமார் அவர்களுடைய இரெண்டாவது பதிவு பற்றியது மற்றும் தாங்கள் எழுதிய அதனைப்பற்றிய பத்தியை பற்றியது.
முதற்க்கண் நான் தர்மம் எங்கே வசூலையும் பெரிய இடத்து பெண் வசூலையும் ஒப்பிட்டு பதிவு செய்யவில்லை என்பதை திரு செல்வகுமாரும் தாங்களும் சவுகடிக்கு பாராட்டு என்று பதிவிட்ட திரு லோகநாதன் அவர்களும் புரிந்துகொள்ளவேண்டும்.
சென்ட்ரல் திரையரங்கில் போஸ்டர் ஒட்டிய ஆளுங்கட்சியில் பதவியில் இருக்கும் நண்பரும் போஸ்டர் வசனம் எழுதிய ரசிகரும் தேவையில்லாமல் வம்புக்கிழுக்கும் வாசகம் எழுதியது முற்றிலும் தவறு. அதுவும் உண்மைக்கு புறம்பான கேவலமான காழ்புணர்ச்சியில் பொய் புனைந்து போஸ்டர் ஒட்டியது அதைவிட வருந்தத்தக்க ஒரு செயல். அவர்கள் கூறியது பொய் என்பதை ஆதாரபூர்வமாக திரை அரங்கின் உள்ளும் புறமும் எடுத்த புகைப்படத்துடன் பதிவு செய்த பதில் அது.
அந்த போஸ்டர் எதேச்சையாக உங்கள் திரியில் பதிவிட்டது என்று சொன்னால் ஏற்புடையதாக எப்படி இருக்கும் ? சம்பந்தப்பட்டவர்கள் நினைத்திருந்தால் அந்த இரண்டு போஸ்டர் படத்தை பதிவு செய்யாமல் மற்றவைகளை பதிவு செய்திருக்கலாம்.!
என் பதில் அவர்களுக்கே ..அதாவது அந்த மாபெரும் சுவரொட்டியை தயார் செய்து ஊர் முழுதும் ஒட்டிய கண்ணியவானுக்கு.
வசூலை ஒப்பிட்டு எழுதவேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தால் நான் மதுரை சென்ட்ரல் திரையரங்கின் தாயை காத்த தனயன் திரைபடவசூலுடன் தர்மம் எங்கே மற்றும் சின்னத்தம்பி வசூலை ஒப்பிட்டு எழுதியிருக்கலாம். காரணம், தாயை காத்த தனயனை விட ( ரூபாயை இங்கு நான் இரு திரியின் மாண்பு கருதி குறிப்பிடவில்லை என்றாலும் ) கணிசமான ஒரு தொகை "தர்மம் எங்கே" மற்றும் "சின்னத்தம்பி" திரைப்படம் அதிகமாக வசூல் செய்துள்ளது. அதை திரு செல்வகுமார் அவர்கள் குறிப்பிட்டதை போல திரு பாலமுருகன் அவர்களிடமே கேட்டு தெரிந்துகொள்ளலாம்.
நான் எழுதிய பதில் அந்த போஸ்டர் சம்பந்தப்பட்டது, அதை புனைந்த, ஒட்டிய, ஊக்கப்படுத்தியவர்களுக்கு மட்டுமே சம்பந்தப்பட்டது. அனால் அவசரப்பட்டு திரு செல்வகுமார் அவர்கள், தவறான தகவல் சொல்லவேண்டும் என்பதற்காகவே 200 டிக்கெட் வாங்கி இலவசமாக விநியோகம் செய்ததாக நம்பத்தகுந்த வட்டாரம் அவருக்கு தெரிவித்தது என்று தொலைக்காட்சி செய்திகளில் கூறுவதை போல கூறி உண்மைக்கு புறம்பான தகவலை பதிவு செய்தார். உணர்ச்சி வசப்படுதல் அனைவருக்கும் உள்ள ஒரு பலஹீனம் தான் இல்லை என்பதற்கில்லை.
அவர் எப்படி பக்தர் என்கிறாரோ அதே போலதானே நாங்களும். வேண்டுமென்றே வம்புக்கு இழுக்கும் அந்த போஸ்டருக்கு பதில் பதிவு செய்தது எந்தவிதத்திலும் தவறு இல்லை என்பதே என் நிலைப்பாடு.
புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
மிக்க நன்றி
rks
-
3rd March 2015, 08:59 PM
#1968
Junior Member
Diamond Hubber
தாயை காத்த தனயன் எவ்வளவு வருட இடைவெளி ( இருந்தால் ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் இருக்கலாம் ) நீங்கள் குறிப்பிடும் தர்மம் எங்கே எனக்கு தெரிந்து இப்பொழுது தான் மறு வெளியிட்டில் வருகிறது சின்ன தம்பி எத்தனை வருட இடைவெளி விட்டு திரைக்கு வருகிறது என்று திரு rks விலக்கினால் நன்றாக இருக்கும் . மேலும் தாங்கள் பெரிய இடத்து பெண் வசூலை பற்றி கூறவில்லை இப்பொழுது ஒரே ஒரு கேள்வி மட்டும் தான் பெரிய இடத்து பெண் வசூல் தர்மம் எங்கே படத்தின் வசூலை மிஞ்சியதா ? நண்பர் விளக்கவும் நாங்கள் தியேட்டர் நிர்வாகத்திடம் தீர விசாரித்து விட்டோம் உங்கள் பதிலை எதிர் நோக்கும் அன்பு நண்பன்

Originally Posted by
RavikiranSurya
இனிய நண்பர் கலைவேந்தன் அவர்களே
தங்களுடைய பதில் பதிவு படித்தேன். மகிழ்ச்சி.
முதற்க்கண் வாழ்த்துக்கு நன்றி சொல்லாதது மனபூர்வம் அல்ல. அதற்க்கு பிறகு பல பதிவுகள் பதிவாகியதால் சரிவர நான் கவனிக்கவில்லை. என்றாலும் தவறு தவறுதான். மன்னிக்கவும். வாழ்த்துக்கள் நல்கிய அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். தக்க சமயத்தில் நினைவு படுத்திய தங்களுக்கு எனது சிறப்பான நன்றிகள்.
இரெண்டாவது - தர்மம் எங்கே வசூல் மற்றும் பெரிய இடத்து பெண் வசூல் பற்றிய திரு செல்வகுமார் அவர்களுடைய இரெண்டாவது பதிவு பற்றியது மற்றும் தாங்கள் எழுதிய அதனைப்பற்றிய பத்தியை பற்றியது.
முதற்க்கண் நான் தர்மம் எங்கே வசூலையும் பெரிய இடத்து பெண் வசூலையும் ஒப்பிட்டு பதிவு செய்யவில்லை என்பதை திரு செல்வகுமாரும் தாங்களும் சவுகடிக்கு பாராட்டு என்று பதிவிட்ட திரு லோகநாதன் அவர்களும் புரிந்துகொள்ளவேண்டும்.
சென்ட்ரல் திரையரங்கில் போஸ்டர் ஒட்டிய ஆளுங்கட்சியில் பதவியில் இருக்கும் நண்பரும் போஸ்டர் வசனம் எழுதிய ரசிகரும் தேவையில்லாமல் வம்புக்கிழுக்கும் வாசகம் எழுதியது முற்றிலும் தவறு. அதுவும் உண்மைக்கு புறம்பான கேவலமான காழ்புணர்ச்சியில் பொய் புனைந்து போஸ்டர் ஒட்டியது அதைவிட வருந்தத்தக்க ஒரு செயல். அவர்கள் கூறியது பொய் என்பதை ஆதாரபூர்வமாக திரை அரங்கின் உள்ளும் புறமும் எடுத்த புகைப்படத்துடன் பதிவு செய்த பதில் அது.
அந்த போஸ்டர் எதேச்சையாக உங்கள் திரியில் பதிவிட்டது என்று சொன்னால் ஏற்புடையதாக எப்படி இருக்கும் ? சம்பந்தப்பட்டவர்கள் நினைத்திருந்தால் அந்த இரண்டு போஸ்டர் படத்தை பதிவு செய்யாமல் மற்றவைகளை பதிவு செய்திருக்கலாம்.!
என் பதில் அவர்களுக்கே ..அதாவது அந்த மாபெரும் சுவரொட்டியை தயார் செய்து ஊர் முழுதும் ஒட்டிய கண்ணியவானுக்கு.
வசூலை ஒப்பிட்டு எழுதவேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தால் நான் மதுரை சென்ட்ரல் திரையரங்கின் தாயை காத்த தனயன் திரைபடவசூலுடன் தர்மம் எங்கே மற்றும் சின்னத்தம்பி வசூலை ஒப்பிட்டு எழுதியிருக்கலாம். காரணம், தாயை காத்த தனயனை விட ( ரூபாயை இங்கு நான் இரு திரியின் மாண்பு கருதி குறிப்பிடவில்லை என்றாலும் ) கணிசமான ஒரு தொகை "தர்மம் எங்கே" மற்றும் "சின்னத்தம்பி" திரைப்படம் அதிகமாக வசூல் செய்துள்ளது. அதை திரு செல்வகுமார் அவர்கள் குறிப்பிட்டதை போல திரு பாலமுருகன் அவர்களிடமே கேட்டு தெரிந்துகொள்ளலாம்.
நான் எழுதிய பதில் அந்த போஸ்டர் சம்பந்தப்பட்டது, அதை புனைந்த, ஒட்டிய, ஊக்கப்படுத்தியவர்களுக்கு மட்டுமே சம்பந்தப்பட்டது. அனால் அவசரப்பட்டு திரு செல்வகுமார் அவர்கள், தவறான தகவல் சொல்லவேண்டும் என்பதற்காகவே 200 டிக்கெட் வாங்கி இலவசமாக விநியோகம் செய்ததாக நம்பத்தகுந்த வட்டாரம் அவருக்கு தெரிவித்தது என்று தொலைக்காட்சி செய்திகளில் கூறுவதை போல கூறி உண்மைக்கு புறம்பான தகவலை பதிவு செய்தார். உணர்ச்சி வசப்படுதல் அனைவருக்கும் உள்ள ஒரு பலஹீனம் தான் இல்லை என்பதற்கில்லை.
அவர் எப்படி பக்தர் என்கிறாரோ அதே போலதானே நாங்களும். வேண்டுமென்றே வம்புக்கு இழுக்கும் அந்த போஸ்டருக்கு பதில் பதிவு செய்தது எந்தவிதத்திலும் தவறு இல்லை என்பதே என் நிலைப்பாடு.
புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
மிக்க நன்றி
rks
-
3rd March 2015, 09:04 PM
#1969
Junior Member
Veteran Hubber
அன்பு நண்பர் திரு யுகேஷ் பாபு அவர்களே
சர்ச்சைக்காக நான் பதிவு செய்யவில்லை. திரு கலைவேந்தன் அவர்களுக்கு அவர் பதிவிற்கு விளக்கம் தான் கூறினேன்.
அன்புடன்
rks
-
3rd March 2015, 09:53 PM
#1970
Junior Member
Diamond Hubber
50-ம் ஆண்டில் எம்ஜிஆரின் எங்க வீட்டுப் பிள்ளை... பொன்விழா எடுக்கும் ரசிகர்கள்!
எங்க வீட்டுப் பிள்ளை எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடிக்க, நாகி ரெட்டியின் விஜயா மூவீஸ் தயாரித்து, வெற்றிகரமாக ஓடிய படம் 'எங்க வீட்டு பிள்ளை'. இதில் நாயகியாக சரோஜா தேவி நடித்து இருந்தார். நம்பியார், நாகேஷ், தங்கவேலு உள்பட பலரும் நடித்திருந்தனர். சாணக்யா இயக்கினார்.
இனிய பாடல்கள் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில், கவிஞர் வாலி, ஆலங்குடி சோமு எழுதிய ‘‘நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால், 'கண்களும் காவடி', 'குமரி பெண்ணின் உள்ளத்திலே' 'மலருக்கு தென்றல்', 'நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்', 'பெண் போனால்' போன்ற பாடல்கள் இன்று கேட்டாலும் அத்தனை இனிமையானவை. 1965-ல் பொங்கலையொட்டி ஜனவரி 14-ம் தேதி வெளியான இப்படத்தை, அறுபது, எழுபதுகளில் பிறந்த யாரும் இந்தப் படத்தைத் தவறவிட்டிருக்க மாட்டார்கள்.
வசூல் மழை இந்தப் படம் பெரும் வசூலைக் குவித்து வெள்ளி விழா கண்டது அன்றைக்கு. சென்னையில் மூன்று அரங்குகளிலும், வெளியூர்களில் 15 அரங்குகளிலும் படம் நூறு நாட்கள் ஓடியது.
பொன்விழா தற்போது இப்படம் வெளியாகி 50 ஆண்டுகள் ஆனதை விழாவாகக் கொண்டாட ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். வருகிற 15-ந் தேதி தியாகராய நகரில் உள்ள சர்.டி.பி. தியாகராயர் அரங்கில் இவ்விழா நடக்கிறது.
Read more at: http://tamil.filmibeat.com/news/gold...rticle-fbshare
Bookmarks