-
13th March 2015, 10:15 AM
#3071
Senior Member
Senior Hubber
Originally Posted by
kalnayak
சி.க.,
சத்தியமாக சொல்கிறேன். மருத காசி இவ்வளவு நிறைய நல்ல பாடல்களை வழங்கியுள்ளார் என்று எனக்கு தெரியாது. அதுவும் நீங்கள் உங்களுக்கு பிடித்த பிரபலமான பாடல்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளதாக சொல்லும் போது அவர் எழுதியுள்ள எல்லாப் பாடல்களையும் நினைத்தால் மலைப்பாய் இருக்கிறது.
பாவை விளக்கு குற்றாலத்துப் பாடல் நல்ல அழகானப் பாடல். குற்றாலக் குறவஞ்சியுடன் போட்டி போடும் பாடல்தான். நல்ல தேர்வு. Kvm-ன் நாட்டுப் புறப் பாடல் எனப் பெயர் பெற்ற "சிட்டு போல பென்ணிருந்தா..." tms குரலில் மயக்குமே.
வாலியின் இரங்கற்பாவில் அவரது வழக்கமான டச்சிங் தெரிகிறது.
மருதகாசி ஐயா மிகச்சிறந்த பாடலாசிரியர். அதற்கு முன் கவிஞர்களாக பாடல்கள் எழுதி வந்தனர். பாடலாசிரியர் எப்படி எழுதவேண்டும் என்று வழி வகுத்தவர் மருதகாசி ஐயா.
திரையிசைத்திலகம் தான் அவருக்கு கடைசி வரை நிறைய வாய்ப்புகள் வழங்கினார்.
நமக்கெல்லாம் பிடித்த நீல வண்ண கண்ணா வாடா முதல் ஓசை கொடுத்த நாயகியே வரை எல்லாவிதமான பாடல்களையும் எழுத வல்லவர்.
முகனூலில் இவரைப்பற்றி நான் எழுதியதை விரைவில் இங்கே பதிவிடுகிறேன்.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
13th March 2015 10:15 AM
# ADS
Circuit advertisement
-
13th March 2015, 10:21 AM
#3072
Senior Member
Senior Hubber
Originally Posted by
kalnayak
நிலாப் பாடல் 37:"வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே"
--------------------------------------------------------------------------------------------------------
மிகப் பிரபலமான ஒரு பாடல். தமிழ் திரை உலகில் நினைவில் கொள்ளவேண்டிய படம். இசை ஜாம்பவான்கள் மெல்லிசை மன்னர் M.S. விஸ்வநாதனும், இசைஞானி இளையராஜாவும் இணைந்து இசையமைத்த படம். பாடல்களினாலேயே படமும் புகழடைந்தது. இப்படிப்பட்ட படத்தில் ஒரு நிலாப் பாடல் இல்லையென்றால் என்ன செய்வது? யோசித்தார்கள். வைத்துவிட்டார்கள். மச்சக்காரர் மோகனும், மச்சக்காரிகள் அமலாவும், ராதாவும் (இப்படிப்பட்ட படத்தில் நடித்ததால்) இருக்கிறார்கள். இந்த காதல் பாடலுக்கு மோகனும் அமலாவும் மட்டுமே. எங்கே இந்த பாடலையெல்லாம் எழுதாமல் விட்டுவிடுவேனோ என்று பயம் வந்துவிட்டது. அதனால் தொடர்ந்து சில பிரபலமான பாடல்கள் வரும். பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகியுடன் பாடிய பாடல்.
இந்த மாதிரி பத்து பதினைந்து நிலாப் பாடல்களை கேட்டால் எல்லோருமே நிலாப் பாடல் எழுதிவிடலாம் என்று தோன்றுமே.நாம்தான் எத்தனை விதமான நிலப் பாடல்களை பார்த்துவிட்டோம்!!! இங்கே வெண்ணிலாவை வானம் தேடுவதாக கவிஞர் ஆரம்பிக்கிறார். மேலாடை மூடி போவது ஏன் என்று அதனிடம் கேள்வி கேட்பது நன்றாகவே இருக்கிறது அல்லவா?
சரி. பாடல் வரிகள் இங்கே:
---------------------------------------------------
வா வெண்ணிலா உன்னை தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னை தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்
திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்
ஒரு முறையேனும் ஆ ஆ திருமுகம் காணும்
வரம் தர வேண்டும் ஆ ஆ எனக்கது போதும்
எனைச்சேர எதிர்பார்த்து உன்னை ஏழு ஜென்மம் ஏங்கினேன் (வா வெண்ணிலா )
மலர் போன்ற பாதம் நடக்கின்ற போது
நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்
இடையினில் ஆடும் உடையென நானும்
இணை பிரியாமல் துணை வர வேண்டும்
உனக்காக பனிக்காற்றை தினம் தூது போக வேண்டினேன் (வா வெண்ணிலா )
----------------------------------------------------------------
பாடலை பாருங்கள் இங்கே :
---------------------------------------------
மெல்லத் திறந்தது கதவு - இன்னாத்துக்கு இப்பிடி சொல்றாங்கோ? வேகமாய் திறக்காதே கதவை என்று ஏன் உத்தரவிடவில்லை.
வரிகள் வாலி ஐயா
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
13th March 2015, 10:24 AM
#3073
Senior Member
Senior Hubber
Originally Posted by
kalnayak
நிலாப் பாடல் 29: "ஆகாய வெண்ணிலாவே தரைமீது வந்ததேனோ"
---------------------------------------------------------------------------------------------------------
மறுபடி ஒரு காதல் பாட்டுதான். வெண்ணிலா கீழே இறங்கி வந்ததாக காதலன் காதலியை பாடுவதாக ஒரு பாடல். பாசிலின் படத்திற்காக பிரபு, ரேவதி நடிப்பில் கே.ஜே.ஜேசுதாஸ், உமா ரமணன் பாட இளையராஜா இசையமைத்த்து கிறக்கினார். பாடல் நெறய உவமைகளாக கொண்டிருக்கிறது. காதல் இல்லாம படம் எடுத்து நிலா இல்லாமல் பாடல் எழுதுறதை விட, காதலை படமெடுத்த்து நிலா மற்றும் மலர் இல்லாம பாடல் எழுதுவதுதான் சிரமம் என்று நினைக்கிறேன். மலர்களை பற்றி அடுத்த தொடர் துவங்கினால் தமிழில் 60-லிரிந்து 70 சதவீத பாடல்களை குறிப்பிட்டு விடலாம்.
பாடல் வரிகள்:
----------------------
ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
ஆண்: மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட
பெண்: உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட
(ஆகாய வெண்ணிலாவே)
ஆண்: தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் ஒன்று
பூவாரம் சூடிக்கொண்டு தலைவாசல் வந்ததின்று
பெண்: தென்பாண்டி மன்னன் என்று திருமேனி வண்ணம் கண்டு
மடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று
ஆண்: இளநீரும் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்
பெண்: கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்
ஆண்: கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட
பெண்: நடு ஜாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட
( ஆகாய வெண்ணிலாவே )
பெண்: தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்
ஆதாதி கேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்
ஆண்: வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு கானம் கிளி பேச்சை கூட்டக் கூடும்
பெண்: அடியாளின் ஜீவன் ஏறி அதிகாரம் செய்வதென்ன?
ஆண்: அலங்கார தேவ தேவி அவதாரம் செய்ததென்ன
பெண்: இசை வீணை வாடுதோ இதமான கைகளில் மீட்ட
ஆண்: ஸ்ருதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட
(ஆகாய வெண்ணிலாவே)
-----------------------------------------------------------------------------------------------------------
பாடல் காட்சி:
---------------------
சாயங்கால வேளையில் இரவு நேரங்களில் பாடலாம். எல்லா அரங்கேற்றவேளைகளில் இப்பிடியெல்லாம் பாட முடியுமா?
வரிகள் வாலி ஐயா
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
13th March 2015, 10:36 AM
#3074
Senior Member
Senior Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
13th March 2015, 10:49 AM
#3075
Senior Member
Senior Hubber
வாங்க ராஜேஷ் வாங்க..
//மைவண்ணக் கண்ணன் இங்கே
மான் குட்டி ராதா எங்கே
உறவாடும் காதல் கங்கை விளையாடுது..
சொல்லாதே யாரும் கேட்டால் பொல்லாத வார்த்தை சொல்வார்//
வாலி ஐயாவா வரிகள்.. தாங்க்ஸ் ராஜேஷ்.. இந்தப் பாட்டு கேட்டதுமில்லை பார்த்ததுமில்லை..பார்த்தால் கொஞ்சம்
கஷ்டம் தான் என்னவோ ஸ்ரீகாந்துக்கும் ஜெயசித்ராவிற்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகவில்லை (அக்கா தம்பி போல் இருக்கு )
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
13th March 2015, 10:54 AM
#3076
Senior Member
Senior Hubber
இந்தப் பாட்டும் ஃபர்ஸ்ட டைம் பாக்கேன் கேக்கேன்
ஜெய்சித், விஜயகுமார்.. என்னா படம் ?
https://www.youtube.com/watch?featur...&v=qrVn0rVwPc0
என்ன சொல்ற்து நான் என்ன சொல்றது..
டாடி எனக்கொரு டவுட்டு பிங்க் தாவணிக்கு எப்படி யெல்லோ பிளவுஸ் மேட்ச் ஆகும்?!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
13th March 2015, 10:57 AM
#3077
Senior Member
Senior Hubber
ஹையாங்க்..இந்தப் பாட்டையும் இப்பத் தான் பாக்கேன் (கேட்டு மட்டும் ரசித்ததுண்டு..) ஆமா ஏந்தான் பார்த்தேனோ..
உதடுகளில் உனது பெயர் ஒட்டிக் கொண்டது
அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது..
https://www.youtube.com/watch?featur...&v=jESkyexXYA4
ம்ம் கார்த்திக் வர்றாரான்னு பார்க்கலாம்.. (தங்க ரங்கன் படத்திலிருந்து விஜயகுமார்பிரமீளா)
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
13th March 2015, 10:59 AM
#3078
Senior Member
Senior Hubber
Originally Posted by
chinnakkannan
வாங்க ராஜேஷ் வாங்க..
//மைவண்ணக் கண்ணன் இங்கே
மான் குட்டி ராதா எங்கே
உறவாடும் காதல் கங்கை விளையாடுது..
சொல்லாதே யாரும் கேட்டால் பொல்லாத வார்த்தை சொல்வார்//
வாலி ஐயாவா வரிகள்.. தாங்க்ஸ் ராஜேஷ்.. இந்தப் பாட்டு கேட்டதுமில்லை பார்த்ததுமில்லை..பார்த்தால் கொஞ்சம்
கஷ்டம் தான் என்னவோ ஸ்ரீகாந்துக்கும் ஜெயசித்ராவிற்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகவில்லை (அக்கா தம்பி போல் இருக்கு )
jodi Jaichitra muthurman. srikanth will just sing that;s all
-
13th March 2015, 11:05 AM
#3079
Senior Member
Senior Hubber
ஒரு பக்கம் மறைந்தால் மறுபக்கம் வருவேன்
ஒளிந்து மறைந்தால் வளைத்துப் பிடிப்பேன்
உனக்கு நான் சொந்தம் எனக்கு நீசொந்தம்
ஹைஇதுவும் ஃபர்ஸ்ட் டைம் பாக்கறேன்.. கேட்டிருக்கிறேன்.. ஆமா என்ன படம் ரொம்ப த்ரில்லிங்கா இருக்குதுங்க்ணா..
https://www.youtube.com/watch?featur...&v=neZf0FlcNA4
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
13th March 2015, 11:09 AM
#3080
Senior Member
Senior Hubber
//jodi Jaichitra muthurman. srikanth will just sing that;s all // happaadi.. ippa thaan manasukku nimmathi.. rajesh anthak kaala makkaLs paavamnu ninaichukkittirunthEn..
https://www.youtube.com/watch?featur...&v=4D3NCYGQ9ZQ
மேலே உள்ளதும் நான் முதலில்பார்க்கிறேன் கேட்கிறேன்.. ராதா ராதா உன் காதோடு சொல்ல ஒரு சேதி இருக்கு.. முத்துராமன் தெரிகிறது..கூட இருப்பது?
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks