-
16th March 2015, 05:31 PM
#10
Senior Member
Senior Hubber
நிலாப் பாடல் 42: "வாராயோ வெண்ணிலாவே?"
-----------------------------------------------------------------------
பாடியவர்: ஏ.எம். ராஜா, பி. லீலா
இயற்றியவர்: தஞ்சை என். ராமையா தாஸ்
இசை: எஸ். ராஜேஸ்வர ராவ்
திரைப்படம்: மிஸ்ஸியம்மா
அற்புதமான ஒரு மெலோடி பாட்டு நல்லதொரு திரைப்படத்தில். என்ன இனிமையாய் ஒலிக்கிறது பாருங்களேன். திரைப்படத்தோடு பார்க்கும்போது இன்னும் அது அதிகரிக்கும். ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரி அழகாக நடித்திருக்கிறார்கள். காதல் பாட்டு(?) படம் பார்த்தால் புரியும். இங்கு வெண்ணிலாவை அழைத்து தங்களின் கதையை சொல்கிறார்கள்.
பாட்டு வரிகள்:
-----------------------
வாராயோ வெண்ணிலாவே? கேளாயோ எங்கள் கதையே?
வாராயோ வெண்ணிலாவே?
வாராயோ வெண்ணிலாவே? கேளாயோ எங்கள் கதையே?
வாராயோ வெண்ணிலாவே?
அகம்பாவம் கொண்ட சதியாள் அறிவால் உயர்ந்திடும் பதி நான்
அகம்பாவம் கொண்ட சதியாள் அறிவால் உயர்ந்திடும் பதி நான்
சதி பதி விரோதம் மிகவே சிதைந்தது இதந்தரும் வாழ்வே
வாராயோ வெண்ணிலாவே? கேளாயோ எங்கள் கதையே?
வாராயோ வெண்ணிலாவே? கேளாயோ எங்கள் கதையே?
வாராயோ வெண்ணிலாவே?
வாக்குரிமை தந்த பதியால் வாழ்ந்திடவே வந்த சதி நான்
வாக்குரிமை தந்த பதியால் வாழ்ந்திடவே வந்த சதி நான்
நம்பிடச் செய்வார் நேசம் நடிப்பதெல்லாம் வெளி வேஷம்
வாராயோ வெண்ணிலாவே? கேளாயோ எங்கள் கதையே?
வாராயோ வெண்ணிலாவே?
தன் பிடிவாதம் விடாது என் மனம் போல் நடக்காது
தன் பிடிவாதம் விடாது என் மனம் போல் நடக்காது
தமக்கென எதுவும் சொல்லாது நம்மையும் பேச விடாது
வாராயோ வெண்ணிலாவே? கேளாயோ எங்கள் கதையே?
வாராயோ வெண்ணிலாவே?
அனுதினம் செய்வார் மோடி அகமகிழ்வார் போராடி
அனுதினம் செய்வார் மோடி அகமகிழ்வார் போராடி
இல்லறம் இப்படி நடந்தால் நல்லறமாமோ நிலவே
வாராயோ வெண்ணிலாவே? கேளாயோ எங்கள் கதையே?
வாராயோ வெண்ணிலாவே?
காணொளிக் காட்சி:
-----------------------------
Last edited by kalnayak; 16th March 2015 at 06:05 PM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks