-
8th April 2015, 12:09 PM
#901
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
8th April 2015 12:09 PM
# ADS
Circuit advertisement
-
8th April 2015, 03:02 PM
#902
Junior Member
Veteran Hubber
Immense thanks to SSS for his impressive array of NT's Enga Mama stills!
when movies are remade in tamil from other languages, some would hit the bull's eye more than the original and most others fall below expectations even if the quality is maintained in terms of acting or music or story line....Enga Mama a remake of Hindi Brammachchaari starring Shammi Kapoor was by all means an equally impressive movie in which NT had improvised many of the acting scenes better than Shammi. Also, of all the NT movies this movie brought out a very slim and handsome NT who excelled in style in the song sequences and exhibited a very impinging and exemplary performance in close-up drama scenes, the area that was not so comfortable for Shammi. Besides a fitting physique for a lad, the dress sense of NT was amazing and pleasing to the eyes...a real visual feast for fans!!
In the climax scene Shammi sports a white coat-suit-tie get up in line with the style of Rock Hudson in 'Come September' while NT preferred the dinner jacket get up of Sean Connery/Bond in Goldfinger/Thunderball! Though Shammi had given an impressive performance in this piano scene, NT proves his mettle of timing and tuning sense to the situation far better than Shammi saab!
Last edited by sivajisenthil; 8th April 2015 at 04:39 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
8th April 2015, 04:12 PM
#903

........................ஒரு சகாப்தம் நிசப்தமாய்!!...........................
ஒரு நடிகன் இறக்கவில்லை
“நடிப்பு” இறந்து விட்டது!!
மூன்று பக்க வசனத்தை
மூச்சு விடாமல் பேசும் நீ
இன்று
மூச்சு விடாமல்....
உன் புகழை எழுதுவதற்கு
சுவர்கள் தேடிப் போனால்
சீனச் சுவரும்
சின்னதாகத்தான் இருக்கும்
சிங்கமே!!
காலை ஒன்பது மணிக்கு
படப்பிடிப்பு என்றால்
8.30க்கே காத்திருக்கும்
கண்ணியம் உனக்கு!
மரணநிமிஷம் கூட உனக்கு
8.00க்குத்தான் குறிக்கப்பட்டிருக்கும்
நீதான் 7.30க்கே போய்விட்டாய்!!
மரண தண்டனையை எழுதிவிட்டு
பேனா முனையை ஒடித்து விடுவது
நீதிபதிகளின் வழக்கம்!
உன் மரணத்தை எழுதி விட்டு
காலன் தன்
விரலையே
ஒடித்துக் கொண்டிருப்பான்
என்ற சிந்தனைதான் எனக்கும்!!
நீ தூங்குவதைப் போலவே
இறந்திருக்கிறாய் என்றார்கள்.
எனக்கென்னவோ
நீ இறந்ததைப் போலவே
நடித்துக் கொண்டிருக்கிறாய்
என்றே தோன்றியது
எனக்குத் தெரிய
நீ வசனம் பேசாமல் நடித்த
ஒரே நடிப்பு
இந்த இறுதி நடிப்புத் தான்.
நடிகர் திலகமே!
உன் நினைவிடத்தில்
இப்படி எழுதி வைக்கலாம் --
“இந்தியாவின் தேசிய விருது
இங்கே உறங்குகிறது!”.
..........................வித்தகக் கவிஞர் பா.விஜய்!!.
thanks: https://www.facebook.com/photo.php?f...type=1&fref=nf
Last edited by sss; 8th April 2015 at 04:17 PM.
-
Post Thanks / Like - 2 Thanks, 5 Likes
-
8th April 2015, 06:46 PM
#904
மிக மிக அற்புதமான ஆணழகின் உச்சங்களை தொட்டு விடும் நடிகர் திலகத்தின் ஸ்டில்களை எங்க மாமா படத்தில் வரிசைக்கிரமமாக வரும் பாடல்களிலிருந்து எடுத்து தரவேற்றிய சதிஷுக்கு நன்றி!நன்றி!நன்றி!
என்னங்க சொல்லுங்க பாடலில் வரும் அந்த half sleeve checked ஷர்ட்-ம் வெளிர் நிற நீல கலர் trousers-ம் எல்லாவற்றையும் தாண்டி முதலிடம் பிடிக்கிறது.
அதே போல் எனக்கு தெரிந்து பா. விஜய் எழுதிய பாடல்கள்/கவிதைகளிலேயே நடிகர் திலகத்திற்காக எழுதப்பட்ட இந்த அஞ்சலி கவிதைதான் மிகச் சிறந்தது என்பதும் மறுக்கப்பட முடியாத ஒன்று! நன்றி சுந்தர பாண்டியன் அவர்களே!
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
9th April 2015, 06:04 AM
#905
Junior Member
Senior Hubber

Originally Posted by
sss
........................ஒரு சகாப்தம் நிசப்தமாய்!!...........................
ஒரு நடிகன் இறக்கவில்லை
“நடிப்பு” இறந்து விட்டது!!
மூன்று பக்க வசனத்தை
மூச்சு விடாமல் பேசும் நீ
இன்று
மூச்சு விடாமல்....
உன் புகழை எழுதுவதற்கு
சுவர்கள் தேடிப் போனால்
சீனச் சுவரும்
சின்னதாகத்தான் இருக்கும்
சிங்கமே!!
காலை ஒன்பது மணிக்கு
படப்பிடிப்பு என்றால்
8.30க்கே காத்திருக்கும்
கண்ணியம் உனக்கு!
மரணநிமிஷம் கூட உனக்கு
8.00க்குத்தான் குறிக்கப்பட்டிருக்கும்
நீதான் 7.30க்கே போய்விட்டாய்!!
மரண தண்டனையை எழுதிவிட்டு
பேனா முனையை ஒடித்து விடுவது
நீதிபதிகளின் வழக்கம்!
உன் மரணத்தை எழுதி விட்டு
காலன் தன்
விரலையே
ஒடித்துக் கொண்டிருப்பான்
என்ற சிந்தனைதான் எனக்கும்!!
நீ தூங்குவதைப் போலவே
இறந்திருக்கிறாய் என்றார்கள்.
எனக்கென்னவோ
நீ இறந்ததைப் போலவே
நடித்துக் கொண்டிருக்கிறாய்
என்றே தோன்றியது
எனக்குத் தெரிய
நீ வசனம் பேசாமல் நடித்த
ஒரே நடிப்பு
இந்த இறுதி நடிப்புத் தான்.
நடிகர் திலகமே!
உன் நினைவிடத்தில்
இப்படி எழுதி வைக்கலாம் --
“இந்தியாவின் தேசிய விருது
இங்கே உறங்குகிறது!”.
..........................வித்தகக் கவிஞர் பா.விஜய்!!.
thanks:
https://www.facebook.com/photo.php?f...type=1&fref=nf
GOLDRNWORDS TO BE INCORPORATED IN THE HISTORY OF indian cine field records and NT memorials.
thanks to pa vijay
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
9th April 2015, 11:14 AM
#906
Junior Member
Veteran Hubber
Another youthful slim trim get up of NT in the lighter vein comedy Anjal Petti 520!
So also,these song sequences from Thirudan
Last edited by sivajisenthil; 10th April 2015 at 04:45 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
9th April 2015, 12:29 PM
#907
ஜேகே என்ற ஜெயகாந்தன்
ஜேகே என்ற ஜெயகாந்தன். தமிழ் இலக்கிய உலகம் என்றுமே மறக்க முடியாத நபர். தமிழ் இலக்கிய செழுமைக்கு அவரது பங்களிப்பு அபாரமானது. யாரும் தொட முடியாத உயரங்களை வெகு இலகுவாக அடைந்தவர். தன்னுடைய அக்கினிப் பிரவேசம் என்ற ஒரே கதையின் மூலம் தமிழ் சமுதாயத்தின் மனசாட்சியை உலுக்கியவர். 60-களிலும் 70-களிலும் ஒரு மிகப் பெரிய ஆளுமையாக வலம் வந்தவர். ஒரு சிவப்பு சிந்தனையாளனாக தொடக்கத்தில் இருந்தவர் பிறகு காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். பெருந்தலைவர் மீதும் அன்னை இந்திரா அவர்களின் மீதும் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சின் மீதும் நேசம் கொண்டவராகவே வாழ்ந்தார். சோவியத் யூனியன் உடைவதற்கு முன் இந்தியாவில் அதன் கலாச்சார தூதுவராகவே விளங்கிய ஜேகே ரஷ்யாவில் பெரிதும் மதிக்கப்பட்ட இந்திய எழுத்தாளர்களில் ஒருவர். அதன் காரணமாகவே சென்னையில் இயங்கும் ரஷ்ய கலாச்சார மய்யத்தோடு இறுதிவரை நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.
60-களில் உன்னைப் போல் ஒருவன் மற்றும் யாருக்காக அழுதான் போன்ற தன் நாவல்களை திரைப்படமாக்கினார். ஆனால் அவை வெற்றி பெறாமல் போனபோது திரையுலகை விட்டு விலகி இருந்த அவர் 1977-ல் சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தின் மூலமாக மீண்டும் உள்ளே நுழைந்தார். பிறகு 1978-ல் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் படமும் வெளி வந்தது. நடிகர் திலகத்தின் நடிப்பின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த அவர் ஒரு காலகட்டத்தில் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்தார். ஒரு படைப்பாளிக்கே உரிய ஈகோவினால் சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தில் நடிகர் திலகம் நடிக்க வேண்டிய வேடத்தில் பிடிவாதமாக ஸ்ரீகாந்தை நடிக்க வைத்தார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது நிகழ்ந்த ஒரு சம்பவத்தை பின்னாட்களில் அவர் வருத்ததுடன் நினைவு கூர்ந்தார்.
என்னவென்றால், படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் இயக்குனருக்கு தெரிந்த ஒரு குடும்பம் ஷூட்டிங் பார்க்க வந்திருக்கிறார்கள். ஜேகேயும் அங்கே இருந்திருக்கிறார். ஸ்ரீகாந்த் லட்சுமி சம்மந்தப்பட்ட ஒரு உணர்ச்சிமயமான காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்திருக்கிறது. இயக்குனர் பீம்சிங் எதிர்பார்க்கும் output கொடுக்க ஸ்ரீகாந்த் சிரமப்பட [அதே நேரத்தில் லட்சுமி அனாயாசமாக செய்கிறார்] ஷூட்டிங் பார்க்க வந்த குடுமபத்தில் ஒருவர் இதே இடத்தில சிவாஜியாக இருந்திருந்தால் பிச்சு உதறியிருப்பார் என்று கமண்ட் அடிக்க சற்று தள்ளி உட்கார்ந்திருந்த ஜேகேயின் காதுகளில் அது விழுந்து விடுகிறது. அவரின் ஈகோ துள்ளி எழ அந்த குடும்பத்தினரைப் பார்த்து சத்தம் போட்டு கத்தி விடுகிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத அவர்கள் செட்டை விட்டு வெளியேறி விடுகின்றனர்.
பல வருடங்களுக்கு பிறகு இதை நினைவு கூர்ந்த ஜேகே அன்று தான் நடந்துக் கொண்டது முற்றிலும் தவறு என்பதை ஒப்புக் கொள்கிறார். அந்த நபர் சொன்னது உண்மைதான் என்றும் அந்த வேடத்தில் சிவாஜி நடித்திருந்தால் படம் இன்னும் பல உயரங்களை தொட்டிருக்கும் என்ற உண்மையை பதிவு செய்கிறார். இப்போது அந்தப் படத்தை பார்க்கும்போது அந்த உண்மை பளிச்சென்று தெரிகிறது என்பதையும் மறைக்காமல் சொன்னார். பீம்சிங் என்ற இயக்குனர் எத்தகைய திறமை வாய்ந்தவர் என்பதை அடுத்த தலைமுறைக்கு சொன்ன படம் என்ற முறையிலும் லட்சுமி என்ற நடிகையின் அபார திறமைக்கு தீனி போட்ட முறையிலும் அதன் காரணமாக அவருக்கு சிறந்த நடிக்கைக்கான தேசிய விருது பெற்று தந்த படம் என்ற முறையிலும் தமிழ் சினிமாவில் ஒரு யதார்த்த படத்தை கொடுத்து வெற்றி பெற வைக்க முடியம் என்பதை நிரூபித்த வகையிலும் சில நேரங்களில் சில மனிதர்கள் ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது.
என்னைப் பொறுத்தவரை சமூகத்தில் அடிமட்ட நிலையில் வாழும் மனிதர்களின் மன ஓட்டத்தை சினிமா என்ற ஊடகம் அவர்களை எப்படி பாதிக்கிறது குறிப்பாக பெண்களின் மனதை குறிப்பாக ஆண்களோடு ஏற்படும் உறவை எப்படி பார்க்கிறார்கள் என்பதை மனோதத்துவ முறையில் அலசிய வகையில் சினிமாவிற்கு போன சித்தாளு மிக முக்கியமான ஒன்று. அதே போல் 1976-ல் வந்த ஜய ஜய சங்கரா குறு நாவல் ஆன்மிகத்தை குறிப்பாக சங்கர மடத்தின் செயல்பாடுகளை உள்ளடக்கிய கவனம் ஈர்த்த ஒன்று. ஆனால் இரண்டாவது சராசரி வாசகனுக்கு சற்றே அன்னியப்பட்ட நடையில் அமைந்திருந்து என்றே சொல்ல வேண்டும்.
சிவப்பு சிந்தனையாளர்களுக்கு அவர்கள் மறைந்து விட்டால் கூட ஆன்மா சாந்தியடையட்டும் என்ற சம்பிரதாய வார்த்தை ஒரு ஒவ்வாமையாகவே தோன்றும். ஆகையால் தமிழ் இலக்கிய தலையாய முன்னோடிகளில் ஒருவரான ஜேகே என்ற ஜெயகாந்தனுக்கு லால் சலாம்!
அன்புடன்
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
9th April 2015, 03:12 PM
#908
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
9th April 2015, 03:20 PM
#909
Junior Member
Diamond Hubber
-
9th April 2015, 03:22 PM
#910
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks