Results 1 to 10 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

Threaded View

  1. #11
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    இந்த படத்தைப்பற்றிய அலசலை ஒரு கேள்வி - பதில் முறையில் தந்துள்ளேன் சற்றே புதிய முறையில் .

    1. நீங்கள் இவ்வளவு பழைய படத்தை அலச காரணம் ? 70, 80, 90 இல் வந்த படங்களில் சிலவற்றை எடுத்துக்கொண்டிருக்கலாமே ??

    Nt படங்கள் எல்லாமே சுவையில் தேனைக்காட்டிலும் இனியவை - எதை விடுவது , எதை எடுப்பது என்று ஒரு குழப்பம் - அதிகமாக பேசப்படாத , ஆனால் பேசப்படவேண்டிய படங்கள் சில வற்றை பற்றி சிறிது பேசலாமே என்ற ஒரு ஆசைதான் காரணம் .

    2. இந்த படம் சுதந்திர தினத்தன்று வெளிவந்து nt க்கு 50வது படம் என்ற சிறப்பை தந்ததாமே - உண்மையா ? மேலும் தெலுங்கில் வந்த இதே படம் (ntr ஹீரோ ) இறுதி கட்டத்தில் கதையில் மாறுப்பட்ட படமாமே ?

    இமயத்தின் சிகரத்தை தொட்டவருக்கு - 50வது படத்தை 6 வருடங்களில் தொடுவது என்பது நாம் ஒருமுறை கண்ணை மூடி திறப்பதுபோல ----- தெலுங்கில் கதையின் இறுதியில் விரும்பத்தக்காத சில காட்ச்சிகளை திணித்திருப்பார்கள் .

    3. இந்த படத்தின் கதையை உங்களிடம் கேட்பதற்கு முன் , இப்படத்தின் வில்லன் யார் ? P .u சின்னப்பாவா ?

    இந்த படத்தில் இரண்டு வில்லன்கள் - ஒன்று இப்படத்தின் கதை , மற்றும் ஒருவர் m .n நம்பியார் . கதை mnn யை வில்லத்தனத்தில் இருந்து பல படிகள் கீழே இறக்கி விடுகின்றது .

    4. வில்லன் -கதையை பற்றி சுருக்கமாக -------

    அதிகமாக நானும் விளக்க விரும்பவில்லை - ராஜா ராணி கதை - இளவரசர்- சாரங்கதாரா (nt ) அழகிலும் , பாடும் திறமையிலும் , போரிலும் , மற்றவர்களை மதிக்கும் பண்பாட்டிலும் , அமைதியாக பேசுவதிலும் , மற்றவர்களை பாராட்டி நட்ப்பை வளர்த்துக்கொள்வதிலும் சிறந்தவர் - விளையாடுத்தனமாக தன் உற்ற நண்பனுடன் புறமுது கொண்டு போரில் திரும்பி வந்த சேனாதிபதியை ( mnn ) கிண்டல் செய்கிறார் - அந்த கிண்டல் அவருக்கு எதிராக ஒரு சதி திட்டத்தை உருவாக்க காரணமாகின்றது . அடுத்த நாட்டின் இளவரசி - சித்ராங்கி ( பானுமதி ) எதேர்ச்சையாக இளவரசரை சந்திக்கின்றாள் - எவரையும் மயக்கும் மன்மதனின் அழகில் தன்னை பறிகொடுக்கின்றாள் . இளவரசரோ தனது நாட்டில் இருக்கும் ஒரு கவியின் மகளை ( ராஜசுலோசனா ) விரும்புகிறான் . இளவரசரின் தந்தை - நாட்டின் மன்னர் - ராஜராஜ நரேந்திரா ( ரங்கராவ் ) மன்னர் இரு நாட்டிற்கும் வெகு நாட்களாக இருக்கும் சண்டையை , இவர்களை இணைத்து வைப்பதின் மூலம் தீர்த்து விடலாம் என்று நினைத்து இளவரசனை திருமணம் செய்துகொள்ள கட்டாயம் படுத்துகின்றார் - என்றுமே தனது கொள்கையில் உறுதியாக இருக்கும் சாரங்கன் இந்த திருமணம் இந்த ஜென்மத்தில் நடக்காது என்று திட்டவட்டமாக தன் தந்தையிடம் சொல்லி விடுகிறான் - இந்த சண்டையை சேனாதிபதி தனக்கு சாதகமாக பயன் படுத்திக்கொள்கிறான் - மன்னரரின் மனதை மாற்றி , இரு நாட்டுகளின் ஒற்றுமைக்காக என்று சொல்லி சித்ராங்கிக்கும் , சாரங்கனுக்கும் தான் திருமணம் என்று சொல்லிவிட்டு , மன்னரையே சித்ராங்கிக்கு தாலி கட்டும் படி செய்து விடுகிறான் . முதல் இரவில் உண்மை தெரிந்து சித்ராங்கி எரிமலை என வெடிக்கின்றாள் - தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு இளவரசரும் ஒரு காரணம் என்று நினைக்கின்றாள் - இருந்தாலும் அவனை அடையும் மோகம் அவளை விட்டு விலக மறுக்கின்றது - புறாக்களின் பந்தயம் என்ற ஒரு போட்டியின் மூலம் தனது தனி இடத்திற்கு சாரங்கனை அழைக்கின்றாள் - தன் புறாவை திரும்ப பெற , அவளை சந்திக்க சம்மதிக்கின்றான் சாரங்கன் - ஒரு பேசாத புறாவினால் என்ன பயன் - பேசும் இந்த புறாவை எடுத்துக்கொள்ளுங்கள் என்று இளவரசரிடம் மன்றாடுகின்றாள் . எதற்கும் இளையாத சாரங்கன் அவளை தன் சிற்றன்னை என்று சொல்லி வணங்குகின்றான் - அந்த இடத்தில் இருந்து வெறுப்புடன் வெளியேறுகிறான் - சற்று நேரத்தில் அங்கு வரும் மன்னர் சித்ராங்கியின் சோகத்தையும் , அங்கு விடப்பட்ட சாரங்கனின் சில தடயங்களையும் இணைத்து சாரங்கன் தவறான முறையில் அங்கு வந்து , சித்ராங்கியை மான அவமானம் செய்திருப்பான் என்று தப்பு கணக்கு போட்டு அவனுக்கு சேனாதிபதியின் தூண்டுதல் மூலம் மரண தண்டனை விதிக்கிறார் . சேனாதிபதிக்கு அவன் திட்டம் நிறைவேறுவதில் மிகவும் மகிழ்ச்சி -- இதன் நடுவில் இளவரசர் உண்மையாக காதலிக்கும் கவியின் மகள் சித்ராங்கியை சந்தித்து இளவரசர் ஒரு நிரபராதி என்றும் , தனக்கு வாழ்வு கொடுக்கவேண்டி உண்மையை மன்னரிடம் சொல்லி , இளவரசரை மரண பிடியிலிருந்து விடுவிக்க கெஞ்சுகிறாள் - இறுதியில் சித்ராங்கியின் மனம் தெளிவடைகின்றது - இளவரசரை காப்பற்ற , அவனை கொல்ல இருக்கும் பட்டறைக்கு ஓடுகின்றாள் - சேனாதிபதியின் கத்திவீச்சுக்கு பலியாகுகிறாள் - மன்னர் தன் தவறை உணர்ந்து இளவரசரை விடுவிக்க ஆட்களை அனுப்புகிறார் - அவர்கள் சேனாதிபதியை கொன்று இளவரசரை மீட்கிறார்கள் - முடிவு கவியின் மகளை மணந்துகொள்கிறான் இளவரசன் - சந்தோசம் , மகிழ்ச்சி திரும்புகின்றது அவன் ஆட்சி செய்யும் நாட்டில் -------

    (தொடரும் )

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •