-
30th April 2015, 06:35 PM
#3421
Senior Member
Senior Hubber
ஹச்சோ.. நான் அங்கிட்டு உள் நுழைய முடியலைன்னு ஹெல்ப்கேட்டு நுழைஞ்சு டெஸ்ட் மெஸேஜ் அடிச்சனா..அதான் 
அல்லாருக்கும் சி.பெள நல்வாழ்த்துக்கள்..
-
30th April 2015 06:35 PM
# ADS
Circuit advertisement
-
30th April 2015, 06:36 PM
#3422
Senior Member
Senior Hubber
என்ன பண்ணப் போறீக? // முடிஞ்சா வீக் எண்ட்ல நெம்ப எழுதலாம்னு இருக்கேன்.. எதுவும் வேலை வராம இருக்கணும்..
-
30th April 2015, 07:07 PM
#3423
Senior Member
Diamond Hubber

Originally Posted by
kalnayak
இந்த மோனிஷா திமிழில் அறிமுகமான படத்திற்கு டி. ராஜேந்தர் இசையமைத்திருந்தார். படத்தின் பெயர் நினைவில் வரமாட்டேன் என்கிறது. பாடல்கள் அப்போதைக்கு கவர்ந்திருந்தது.
தங்கள் அன்பான வரவேற்பிற்கு என் இதயம் மகிழ்ந்த நன்றி கல்நாயக்.

நீங்கள் குறிப்பிடும் படம் 'பூக்கள் விடும் தூது'. மோனிஷாதான் நாயகி. ஹரீஷ் நாயகன். இதே ஹரிஷ் பின்னால் 'ஞானப்பறவை' படத்தில் நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்திருந்தார்.
படத்தின் பாடல்கள் இனிமை.
குறிப்பாக,
'கதிரவனைப் பார்த்து காலை விடும் தூது
வண்டுகளைப் பார்த்து பூக்கள் விடும் தூது'
'மூங்கில் காட்டோரம்....குழலின் நாதம் நான் கேட்கிறேன்'. (பாடல் ஆரம்பிக்கும் போதே ராஜேந்தரின் இசையை பரிபூரணமாக உணர ஆரம்பிக்கலாம்.பாலா மிக அருமையாகப் பாடிய பாடல் இது.)
பாடல்கள்.
கதை,வசனம், பாடல்கள், இசை ராஜேந்தர். இயக்கம் ஸ்ரீதர் ராஜன்.
Last edited by vasudevan31355; 30th April 2015 at 07:12 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
30th April 2015, 07:49 PM
#3424
Senior Member
Seasoned Hubber
வாசு சார்
மதுர கானம் மனதை மயக்க மட்டுமல்ல, இணைக்கவும் உதவும் இனிய பாலம் என்பதை தங்களுடைய இந்தத் திரியின் வெற்றி மிகவும் ஆழமாய் ருசுப்படுச்சியுள்ளது. தங்களுடைய எழுத்துக்கள் இல்லாமல் ஒரு vaccum இருந்தது அது இப்போது நிறைந்து விட்டது.
தொடர்ந்து தங்கள் பங்களிப்பைத் தாருங்கள்..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
30th April 2015, 08:28 PM
#3425
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பான வணக்கங்கள்.
பல சொந்த அலுவல்கள் காரணமாகவும், ஆபிஸ் வேலைகள் நிமித்தமாகவும் திரிக்கு வர இயலவில்லை. மன்னிக்கவும். தங்கள் எல்லோருடைய அன்பான அழைப்புக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
சின்னக் கண்ணன், கல்நாயக், ஸ்டெல்லா மேடம், கலை வேந்தன் சார், எனதருமை ராஜேஷ் அனைவர்க்கும் என் உளமார்ந்த நன்றிகள்.
கலைவேந்தன் சார்,
ஒரு எழுத்து விடாமல் திரியை தொடர்ந்து படித்து வருகிறேன். தங்கள் பங்களிப்புகளையும் படித்து மனம் மகிழ்ந்தேன். மிக்க நன்றி!
கல்நாயக், சின்னக்கண்ணன்,
அற்புதமான பங்களிப்புகளோடு திரியை கொஞ்சமும் தொய்வில்லாமல் அருமையாக நடத்தி வருகிறீர்கள். மிகவும் பெருமிதமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. உங்கள் பதிவுகள் அனைத்தையும் படித்து விட்டேன்.
உங்கள் இருவரின் சரமாரியான உழைப்போடு, ராஜேஷ், கலை சார், ராஜ்ராஜ் சார், மது அண்ணா இன்னும் பலரின் பங்களிப்போடு, திரி அமர்க்களமாகப் பயணிப்பதைப் பார்த்து நிஜமாகவே மனம் சந்தோஷப்படுகிறது. அனைவருக்கும் என் இதயபூர்வமான வாழ்த்துக்களும் நன்றிகளும்.
கல்நாயக்,
நிலாப் பாடல்களின் தொகுப்பு நில்லாப் பாடல்களாக வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகள் போல் மனதிற்குள் இன்பக்கணை தொடுக்கிறது. இதற்காக தாங்கள் எவ்வளவு சிரமம் எடுத்துக் கொண்டுள்ளீர்கள் என்பதும் தெளிவாகப் புரிகிறது. நன்றி என்பது சம்பிரதாய வார்த்தை. விரைவில் நூறைத் தொட வாழ்த்துக்கள்.
தங்களின் 'ஞானஒளி' பாடல் என்னை இங்கே இழுத்து வந்து விட்டது என்றால் மிகையில்லை. சொன்னால் நம்புவீர்களோ இல்லையோ தெரியாது. நேற்றுதான்... உங்கள் பதிவு வருவதற்கு சற்று நேரத்திற்கு முன்தான் தலைவரின் இறுதிக் கட்ட உச்ச நடிப்புகளை 'ஞானஒளி' யில் பல நூறாவது தடவையாக பிரம்மித்து போய் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். சற்று நாழிகைக்கெல்லாம் பார்த்தால் உங்கள் 'மண மேடை' பாடல் பதிவு. கடவுள் அனுகிரஹம் இல்லாமல் வேறு என்ன? ஐ மீன் நான் வணங்கும் 'ஆண்டனி' தெய்வம் ஆசி இல்லாமல் வேறு என்ன?
அதுவும் அவர் மாதா சிலையின் முன் நின்று,
"மாதாவே! என் மகளை தெருவில நிக்க வச்சுட்டியே! எனக்கேன் இந்த வாழ்வு மாதாவே!"
என்று புலம்பி 'டக்'கென்று திரும்பி, இரு கைகளையும் வயிற்றின் குறுக்கே கிராஸ் போல வைத்து, பின் உடனே படுகம்பீரத்துடன் கைகளை பின்கட்டி நடந்தபடி ,
"லாரன்ஸ்! Is a combination of cobra and the wounded tiger?"
என்று கர்ஜிப்பாரே!
(இந்த 'tiger' என்ற வார்த்தையை உச்சரித்து முடித்தவுடன் அந்த தெய்வத்தின் வாயை கவனியுங்கள். வலதுபுற உதடுகள் சற்றே மேலேறி, அதே சமயம் இடதுபுற உதடுகள் கீழறங்கி, இரு உதடுகளும் ஒட்டிய நிலையில், மேஜர் தனக்கு விடுத்திருக்கும் சவாலை அந்த முகம் எப்படி வெறித்தனமாக, ஆங்காரமாக, அதே சமயம் முரட்டுத்தனமாக எதிர்கொள்கிறது. (அந்த மீசையின் ஏறி இறங்கிய அம்சத்தை என்னவென்று எழுத!?) சற்றே மேல்நோக்கி பார்க்கும் அந்த முகத்தில்தான் எத்துணை வேதனை கலந்த வெறி? ("உன்னலதாண்டா நான் பெத்த மகளை அணுகக்கூட முடியவில்லை... இருடா! உன்னை வச்சுக்கிறேன்...) அதே சமயம் தன் இயலாமையையும் வெளிபடுத்தத் தயங்காது. அந்தக் கண்களில்தான் என்ன ஒரு ஆங்கார வெறி! கண்களை மூடிக் கொண்டு அந்த குரலைக் கேட்டால் மிரண்டு போவீர்கள். அந்த மீசைக்கும், பார்வைக்கும் ஒரு சிங்கமாகவே காட்சியளிப்பார். கோப சிங்கம், பாச சிங்கம் என்று இரண்டு குணங்களையும் மாற்றி மாற்றி காட்டுவார். எப்படியானாலும் சிங்கம் சிங்கம்தானே!
வேண்டாம் கல்நாயக். என் கண்களிலிருந்து கண்ணீர் பெருக ஆரம்பிக்கிறது. இதற்கு மேல் சத்தியமாக முடியாது.
தலைவரின் இன்னொரு அருமையான ஸ்டைல் பாடலோடு விரைவில் மீண்டும் வருகிறேன்.
அதுவரை உங்கள் அனைவரது அன்பையும் எண்ணியபடி,
உங்கள் அனைவரின் பதிவுகளை ரசித்தபடி
உங்கள் அனைவரின்
வாசுதேவன்.
(சி.க,
அடுத்த பாகத்தைத் தொடங்க இப்போதே ரெடியாகுங்கள்)
ஆஹா ... வந்தாரய்யா வந்தாரய்யா எங்கள் வாசுதேவர் ஐயா வந்தாரய்யா
தந்தாரய்யா அள்ளித்தந்தாரய்யா தமிழை அள்ளி அள்ளி தந்தாரய்யா
வாங்க ஜி, அப்பாட நடிகர் திலகம் பற்றிய ஒரு பாடல் தான் உம்மை இங்கே இழுத்து வந்துள்ளது. ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் எவ்வளவு அழைத்தும் வாராதிருப்பாரோ வண்ண மலர் வாசு அவர் என்ற எண்ணம் நிறைவேறியது..
வாழ்த்துக்கள் கல்நாயக்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
30th April 2015, 08:39 PM
#3426
Senior Member
Seasoned Hubber
ragahav ji, vanakkam
neenga kooda Vasu ji vandhathan vaareenga .... hmmmmmmm enna seyya ellathukkum oru kaLai venum
-
30th April 2015, 09:21 PM
#3427
Senior Member
Senior Hubber
-
30th April 2015, 09:25 PM
#3428
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
chinnakkannan
//கதை,வசனம், பாடல்கள், இசை ராஜேந்தர். இயக்கம் ஸ்ரீதர் ராஜன். // இந்த ஸ்ரீதர் ராஜன் தானே டாக்டர் ஜிஜியைக்கல்யாணம் கட்டிக்கினார்..பாருங்க வாசு..இப்படி வம்பெல்லாம் பேசி நாளாச்சு
ராகவேந்தர் வாங்க வாங்க..

ந.திடாட்காம் எப்படி இருக்கு..//தங்களுடைய எழுத்துக்கள் இல்லாமல் ஒரு vaccum இருந்தது அது இப்போது நிறைந்து விட்டது.// வாசுவைப் பாராட்டியது ஓ.கே..அதுக்காக இந்த 102 கிலோவை (ஹி ஹி நான் தான்) வேக்கம் சொல்லி நோகடிச்சுட்டீங்களே..!
//oru kaLai venum // ஆங்கிலத்துல கலைன்னு டைப் பண்ணனும்னா kalai ந்னு பண்ணனும்..kaLai அப்படின்னா களைஆகிடும்..

yes KaLai thaan naan sonnadhu .. அந்த முகக்களை அதைத்தான் நான் சொன்னேன் சி.க
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
30th April 2015, 09:45 PM
#3429
Senior Member
Senior Hubber
//முகக்களை// ஆகா எங்கிட்டோ போய்ட்டீங்க ராஜேஷ்..ஆனா நம்மூர் வழக்கம் முகராசின்னு சொல்வாங்க....
-
30th April 2015, 10:09 PM
#3430
Senior Member
Seasoned Hubber
டியர் சி.கே., ராஜேஷ்,
அதெல்லாம் ஒண்ணுமில்லே... ந.தி.யைப் பற்றியே முழுக்க முழுக்க மைண்ட்லே ஓடிட்டிருக்கு... வேறெ ஏதாவது பக்கம் போனால் கூட சுத்தி சுத்தி அங்கே தான் செக்கு மாடாய் வந்து நிக்குது.. என்ன செய்ய... ந.தி.டாட் காம்... பேஷா போய்க்கொண்டிருக்கு...
ஒரு பார்ட்டி நடக்குது... சுமார் 20 அல்லது 25 பேர் காபி சாப்பிடணும்....இருக்கிறது 4 அல்லது 5 ஃப்ளாஸ்க் தான்.. அதில் ஒரு சிலர் ஓவல் அல்லது போர்ன்வீடா கேட்பார்கள் என எதிர்பார்த்து அதற்காக ஒரு ஃப்ளாஸ்கை ஒதுக்கி வைத்து மத்த ஃப்ளாஸ்கில் காபி ஊற்றி வைக்கிறார்கள். ஆனால் யாருமே வேறு பானம் கேட்கவில்லை.. எல்லோருமே காபியைத்தான் லைக் பண்ணுகிறார்கள்... காபி ... போதவில்லை... ஆனால் ஃப்ளாஸ்க் காலியாக உள்ளது... அந்த நேரத்தில் காபியைக் கொண்டு வர எல்லோரும் பறக்கும் போது ஆபத்பாந்தவனாய் அந்த ஃப்ளாஸ்க் பயன்படுகிறது... இதனால் அந்த vaccum நிரப்பப் படுகிறது.
ஆனால்... உண்மையில் அந்த முக்கியமான ஃப்ளாஸ்க் நிரம்பிய பிறகு தான் எல்லோரும் காபி குடித்த பிறகுதான் அந்த பார்ட்டி முழுமையடைகிறது.
ஸ்....ஹப்பாடா... ஒரு VACCUM சொல்லி விட்டு எவ்வளோ பெரிய சமாதானம் சொல்ல வேண்டியிருக்கு...
சி.க. சார்... உங்க கூட சேர்ந்து நானும் எழுத்தாளனாயிட்டேனாக்கும்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks