-
14th May 2015, 08:32 AM
#1731
Junior Member
Newbie Hubber
வாழ்க்கை சுமக்கா வேட்கை
வழக்கை சுமக்கா மாட்சி
கிழக்கை காணா உறக்கம்
கிழத்தை சுமக்கா மனம்
வேட்கை காணா விவேகம்
மாட்சி வேண்டா சுழற்சி
காட்சி மாறா வேர்கள்
கட்சி மாறா மனத்தூய்மை
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th May 2015 08:32 AM
# ADS
Circuit advertisement
-
14th May 2015, 10:27 AM
#1732
Senior Member
Senior Hubber
மனத்தூய்மை கிடைப்பதற்கு என்ன வேண்டும்
..மாறாத நல்லெண்ணம் கொள்ள வேண்டும்
கணப்பொழுதும் களங்கமிலாக் கண்கள் கொண்டு
..க்லகலப்பாய் நெஞ்சுகொளத் தெரிய வேண்டும்
பணவரவு அதிகரிக்கப் பக்கு வங்கள்
..ப்லவாறாய்ச் செலவுவரின் கலங்காத் தன்மை
சுணங்காமல் சிரித்தமுகம் அன்பாய் உள்ளம்
..துவளாமல் இருந்தாலே கிடைக்கும் தானே..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th May 2015, 09:56 AM
#1733
Senior Member
Diamond Hubber
தானே முன்வந்து தளராமல் முன்னெடுத்து
தயக்கம் காட்டி பின்தங்கிய கூட்டத்திற்கு
தலைமை தாங்கும் தன்னலமில்லா மனிதன்
தலைமுறை தாண்டியும் போற்றப் படுவான்
வெட்டி வியாக்கியானம் வெளியில் பேசி
வீணே பொழுதுகளை நித்தமும் கழித்து
வெறுமையாய் வாழ்வை நகர்த்தும் மனிதன்
விட்டில் பூச்சாய் வீழ்ந்து மறைவான்
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
15th May 2015, 01:42 PM
#1734
Junior Member
Devoted Hubber
மறைவான் மந்திரவாதி மாயமாய்
தெரிவான் மீண்டும் அந்திரமாய் – அவன்
தேர்ந்த செயல்திறனை தந்திரமாய்
தெரிந்து கொள்ள கேட்டான் ஒருவன்
பறைவாய் இம்மன்றத்தில் தெளிவாய்
மறைந்த முறை மறைக்காது பகர்வாய்
சிந்தித்தான் மந்திரவாதி சிறிது நேரம்
செப்புவேன் ஆயின் அதில் சிக்கல் உண்டு
செத்து விடுவாய் நீ அதை கேட்டால் !
சிரித்தது கூட்டம் : சளைத்தானா நம் ஆள்?
சிரித்தான் அச்சமின்றி : சரி சொல்
சீக்கிரமாய் என் மனைவியிடம் மட்டும் !
அமர்ந்தோரின் ஆர்பரிப்பு அமர்க்களம்!
ஆயிரம் குரல் அங்கே அதிர்ந்தது அரங்கம்
என் மனைவிக்கும் ! என் மனைவிக்கும்!
அடாடாடா ! என்ன ஒரு அவசரம் ?
Last edited by Muralidharan S; 16th May 2015 at 08:07 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
15th May 2015, 04:12 PM
#1735
Senior Member
Senior Hubber
அவசரமாய்ச் சாயம் வாங்கி
மீசை தலையில் பூசி
காய வைத்துச்
சமர்த்தாய்க் குளித்து
தலை துவட்டி
கண்ணாடி பார்த்தால்
சிரித்தது
கண்களின் கீழிருந்த சுருக்கம்..
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
16th May 2015, 05:38 AM
#1736
Junior Member
Newbie Hubber
கீழே சுருக்கம் மேலே பொலிவிழப்பு அழகு பெண்ணவள்
தாழே போட்ட கட்டில் துறந்து தொட்டிலின் தாதியானாள்
சூற் சுமந்து தானகன்ற இருள் நிறைந்த கருவறை
பாற் சுமந்து தானளிக்கும் பம்மி நின்ற திருமுலை
அணைப்பாலும் முத்தாடியும் திணறும் மூச்சு
பிணைப்பால் அன்னை ஒருத்தி உருவமே உண்ண உறங்க
தளிர் நடை பயின்று தத்தி தத்தி சம்ஹாரம் பொருட்களை
வெளிர் முக காரியோ சும்மா இருக்காயா என்று செல்ல கடிதல்
பேச்சு என்ற ஒன்று பிக்கா பிக்கா என்று இணையில்லா அமிர்து
காச்சு மூச்சென்ற நவீன கானங்களின் முன்னோடி நினைத்த
நேரம் கழிக்கும் உரிமை உலக சிறார்களுக்கு இந்தியர்களுக்கோ
தாரம் வந்தும் பேரன் கண்டும் பிரத்யேக உரிமை தனியுரிமை
பகுத்தறிந்தேன் பள்ளி கண்டு பல்பங்களில் பண்ட மாற்று
மிகுவியாபார உத்தி ஐஸ்வண்டி ஆளுடன் கடன் வாங்கி
திருப்பாத பிற்கால பாடம் விமலா மீரா கலா என்ற கனவுகள்
கருப்பாக எண்ணங்கள் சக மாணவர்களை அடுத்து கெடுத்து
ஆசானிடன் நற்பெயர் பிற்கால வேலைக்கு இன்றே அடித்தளம்
காசா பணமா வக்கிரங்களுக்கு சிறுநீர் கழிவிடங்களில் சிந்தை
தூண்டும் படம் வரைந்து பாகம் குறித்து பால பார்கலவி கல்வி
வேண்டும் அளவு கிசு கிசு சக மாணவ,மாணவி,ஆசிரிய ஆசிரியை
பிற்கால பத்திரிகையானாய் பரிணமிக்க காப்பி அடிக்கும் கலை
தற்கால உன்னதங்களின் உயர்வுக்கு உதவும் அடிப்படை வலை
மாங்காய் திருடி பெற்றோரின் பையில் களவாடி அரசியல் பயிற்சி
பாங்காய் பயிற்சி பெற்று பலரின் தயவில் வேலை பின்னென்ன
நானும் மணந்தேன் நானும் புணர்ந்தேன் நானும் பெற்றேன்
நானும் வளர்த்தேன் நானும் கண்டேன் வீடுவாசல் நானும் கண்டேன்
பெயரன் பெயர்த்தி நானும் கண்டேன் நாணும் உதாசீனம் முதியோர்
பெயரும் குடில் சாணத்துடன் தகனம் புரியா மொழியில் சொர்க்க விடை
வரும் பிறவியில் இறைவா இதயத்துக்கு எலும்பு கொடு மூளைக்கு
இரும்பில் வலிவு கொடு விசையுறு பந்தாக உளம் வேண்டிய உரம் கொடு
அலைவுகளை விட்டு செல்வேன் சுவடற்று மறையாமல் கனவின்
கலைவுகளை மீட்டு எடுப்பேன் தொலை வாழ்விலும் தொலையாமல்
Last edited by Gopal.s; 16th May 2015 at 09:12 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
16th May 2015, 09:16 AM
#1737
Senior Member
Senior Hubber
தொலையாமல் இருந்திட்ட காலம் எப்போ
….தொக்கிநிற்கும் வாழ்வினிலே பிறக்கும் கேள்வி
கலைகின்ற கனவுகளும் காட்சி யுந்தான்
…காட்டியதே கூட்டியதே மாயை தன்னை
நிலையான நல்வாழ்வு ஈதா னென்றே
.. நித்தநித்தம் நின்றதுவும் போயே போச்சு
வலையாக வட்டமென இருக்கும் வாழ்வில்
…வாகாக முதுமையது வந்த தன்றோ
இனியொரு பிறவி வேண்டும்
..இறைவனே நானுங் கேட்பேன்
தனியிலை நானு மிங்கு
…தரம்பெறப் பலபேர் உண்டு
பணிவுடன் கனிவை ஏந்தி
…பாரிலே மேலும் நல்ல
பணிகளைச் செய்ய வேண்டும்
…பற்றினேன் உந்தன் பாதம்..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th May 2015, 05:02 PM
#1738
Junior Member
Devoted Hubber
பாதம் பற்றினேன் நின் சரண் புகுந்தேன்
பாமரன் பாவி நான் பவித்திரம் அறியேன்
கருமம் அறியேன் ஞானம் அறியேன்
கருணை இல்லேன் பக்தி இல்லேன்
எதுவுமற்றேன் நீயன்றி எவருமற்றேன்
என் கதி நீயே இறைவா !
Last edited by Muralidharan S; 17th May 2015 at 06:30 AM.
-
17th May 2015, 04:51 AM
#1739
Junior Member
Newbie Hubber
இறைவா
மனிதன் படைப்பிலேயே அதிஉன்னத படைப்பு நீ
நிச்சயமற்ற வசீகர வாழ்வில் மன அழுத்த மருந்து நீ
பயமற்றவனையும் அச்சமுற வைக்கும் அற உன்னத காவலன் நீ
பணக்கார வீட்டின் தலைமை காவலன் சேவகனும் நீயே
உன்னத இலக்கியங்கள் சிற்பங்கள் கட்டிடங்கள் உருவாக காரணகர்த்தா நீ
மனிதனை விலங்குகளை அடிமை கொள்ள மனிதனுக்கு நற்றுணை நீ.
மூட பழக்க வழக்கங்களில் நேரத்தை பொழுதாக்கிட போதை பாதை நீ
பாவங்களுக்கு பரிகாரம் எனும் அற மீறல்களுக்கு தலைவன் நீ
நீ படைத்ததாக சொல்லும் சொல்லில் உண்மையிருந்தால் குறை படைப்பாளி நீ
நான் படைத்தவைகளை எனக்கு அந்நியமாக்கும் அபின் நீ
உன்னை நம்புவதே நீ இருப்பினும் இல்லாதிருப்பினும் காப்பானது.
-
17th May 2015, 08:07 PM
#1740
Senior Member
Senior Hubber
காப்பானது என்றேவொரு கவிதைபடித் தீரா
பூப்போலவே பொலிந்தேவிழும் சிரிப்பூவுடன் கேட்க
பேச்சானது புரியும்விதம் பெண்ணேஅறி வாயே
கேட்கும்படி அவரைச்செய வைத்ததும்நான் அறிவாய்
உண்டென்றால் உண்டென்பேன் பெண்ணே என்மேல்
..உளமில்லை என்றாலும் பேத மில்லை
கண்களிலே காண்பதுவும் உண்மை யல்ல
…காதுகளில் விழுவதுவும் உண்மையல்ல
எண்ணத்தில் மலர்வதுவும் உண்மை யல்ல
…ஏதேனும் அனுபவமும் உண்மை யல்ல
விண்ணுக்குள் மண்ணுக்குள் கரையும் வாழ்க்கை
..விசையதுவும் திசையதுவும் தெரியா தன்றோ
மாந்தரின் நெஞ்சி னுள்ளே
.. மாசினை நீக்க அங்கே
வேந்தரோ பிறரோ கொஞ்சம்
..வேட்கையும் கொண்டு என்னை
சேர்ந்துதான் படைத்தா ரென்றே
..தீர்க்கமாய் சிலர்சொல் லட்டும்
நேசமாய் நம்பிக் கைதான்
.. நிஜத்தினில் கடவு ளாகும்..
Bookmarks