Page 208 of 401 FirstFirst ... 108158198206207208209210218258308 ... LastLast
Results 2,071 to 2,080 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #2071
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சுந்தர்ராஜன்
    எமனுக்கு எமனாகிய நம் நடிகர் திலகத்திடம் மோத முடியுமா... சும்மா பின்னி எடுத்து விடமாட்டாரா என்ன...

    அன்புள்ள அப்பா என்று திரையுலகில் பலர் உரிமையோடு பழகி சொந்தம் கொண்டாடும் அந்த நல்ல உள்ளத்தை மீண்டும் விமர்சிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்..

    பொறுங்கள்.. இது மாற்று முகாம் நண்பர்கள் அல்ல..

    உத்தம புத்திரனை விமர்சிப்பது நம் நண்பர்களே தான்... வில்லன் கூட சொல்ல யோசிக்கும் விமர்சனங்களை ஆசை தீர வைத்து சந்தோஷமடைகிறார்கள்...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2072
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    சுந்தர்ராஜன்



    உத்தம புத்திரனை விமர்சிப்பது நம் நண்பர்களே தான்... வில்லன் கூட சொல்ல யோசிக்கும் விமர்சனங்களை ஆசை தீர வைத்து சந்தோஷமடைகிறார்கள்...


    உத்தம புத்திரன்-1958

    எதிர்மறையான கதாபாத்திரங்கள், திரையுலகம் தோன்றிய போதே கூடவே தோன்றி விட்டது. எக்க சக்க வில்லன் பாத்திரங்கள். (ஒரு ஹீரோவிற்கே நான்கைந்து உண்டு). ஆனால் எவ்வளவு பாத்திரங்கள் மனதில் நிலைத்து வென்றுள்ளன? பிறக்கும் போதே (திரையுலகில்) கதாநாயகனாகவே பிறந்த ஒரு நாயகன், எதிர்மறை (கெட்டவன் ) கதாபாத்திரத்தை ஏற்று இன்றளவும் அதை ஒரு cult status என்று சொல்லும் அளவில் வைத்திருப்பது (நடிகர்திலகம், கமல்,ரஜினி உள்ளிட்டு இந்த பாத்திரத்தை சிலாகிக்காத திரையுலக பிரபலங்களே இல்லை), அந்த மேதையின் நடிப்பு திறன் என்று ஒரே வார்த்தையில் அடக்க, கங்கையை கமண்டலத்தில் அடைத்த அகத்தியனே உயிரோடு வந்தாலும் முடியாது. அந்த மகா பாத்திரத்தின் இமாலய வெற்றிக்கு ஒரே காரணம் அது உளவியல் பூர்வமாக படைப்பு பெற்று (நன்றி ஸ்ரீதர்), chekhov பாணியில் உளவியல் பூர்வமாக நடிகர்திலகத்தால் அணுக பட்டு, ஒவ்வொரு அணுவிலும் அதனை உள்வாங்கி அந்த மேதை புரிந்த விந்தையே அந்த விக்ரமன் என்னும் பாத்திரம்.(உத்தம புத்திரன்.)

    முதலில் விக்ரமனை மிக மிக நுண்ணியமாக ஆராய்வோம். அவன் எப்படி பட்டவன்?சிறு வயதிலேயே தந்தையை இழந்து, பாதுகாப்பு என்ற போர்வையில் அன்னையின் நிழலில் இருந்தே அகற்ற பட்டவன்.சிறு வயதில் இருந்தே சுய சிந்தை மழுங்கடிக்க பட்டு,ராஜ வாழ்வு என்ற நிழலில் மது,மாது என்பதை அடிப்படை ஆக்கியே வளர்க்க பட்டவன்.அவனுக்கு ராஜ வாழ்வு என்ற ஒரே குறிக்கோள் மற்றவர் பற்றிய சிந்தனையின்றி அவனுடைய சுயநலம் சார்ந்த ego ஊட்டி, மாமா என்ற ஒரே நண்பன்,ஒரே வழிகாட்டி, ஒரே ஆசிரியர்,ஒரே சேவகன் என்ற முறையில் சுயநல கயவன் மாமாவின் தீ வழிதான் ஒரே வழி. தான், தன் ஆசை, தன் வாழ்வு ,தன் அகந்தை என்ற ஒரே வட்டம். ஆனால் மன்னனுக்குரிய சில பண்புகள் (சவால் ஏற்கும் வீரம், போர் பயிற்சி) பெற்றவன். ஆனால் பிற மாண்புகள் எதுவுமே இல்லாத மூர்க்கன். தன்னை தானே ஆசை படும் narcist . மற்றோரை துன்புறுத்தி மகிழும் vicarious sadist .

    இதை உள்வாங்கிய நடிகர்திலகத்தின் நடிப்பை நன்றாக விவரமாக chekhov பள்ளியின் துணை கொண்டு ஆராய்வோம்.

    முதல் முழு தேவை not to imitate but to interpret . சும்மா பொத்தாம் பொதுவான வில்லன் தன்மையில் நடிக்காமல்,கதாபாத்திரத்தின் பின்னணி,தேவை, மனநிலை,வெளியீட்டு தன்மை, சமய சந்தர்ப்பந்திற்கு தகுந்த உள் -வெளி ,அக-புற வெளியீடுகள் என்று நுண்ணியமாக ஆராய்ந்து,தன் வய படுத்தி, தன் திறமையால் perfect execution என்று சொல்லத்தக்க சாதனையை நிகழ்த்தினார் அந்த ஒப்புயர்வில்லா ஒரே மேதை.

    இனி இந்த பாத்திரத்திற்கு ஏற்ற உடல் மொழியை நடிகர்திலகம் தேர்ந்தெடுத்திருக்கும் அதிசயத்தை பார்ப்போம். அதிக மனோதத்துவ கவனிப்பு,அவதானம் கொண்ட,கற்பனை வளம் மிகுந்த , அந்த பாத்திரத்தின் தேவை என்ன,ஆசை என்ன, முதல் நோக்கம் என்ன,அதற்கு தேவையான sensitivity ,atmosphere ,quality ,sensation எல்லாம் கொண்டு,strong but not tense , hand and arm movement radiated into the entire body movement with definite &Archetypal என்னும் அம்சங்களை விவரிக்க போகிறேன்.

    நடை- விக்ரமன் ஒரு வளர்ச்சி பெற்ற அடம் பிடிக்கும் பிடிவாத குழந்தை(impulsive ).இன்றே,இப்போவே ரகம். அந்த நடையில் ஒரு ராஜாவின் திமிர் மட்டுமல்ல, உதைத்து உதைத்து நடப்பதில், ஒரு அடம்,எதிரில் வருவதை உதைத்து தள்ளும் பிடிவாதம்,நடையில் ஒரு definite அழுத்தம் வேறு கொடுப்பார்.மிக மிக வேகமான ஒரு குழந்தையின் energy level கொடுப்பார்.

    கை அசைவுகள்- மிக மிக restless ஆன ஒரு jerky வேகம். நடையோடு ஒத்திசைவு கொண்டு தன் நோக்கம்,ஆசை இவைகளை வெளிப்படுத்திய வண்ணமே இருக்கும்.ஆசை ,காமம் இவற்றில் அடைய வேண்டியவற்றில் ஒரு பரபரப்பு, இரையை அடையும் ஒரு புலியின் பசி கொண்ட ஒரு வேகம், தனக்கு பிடிக்காதவற்றை உடனே நிறுத்த விரும்பும் braking sudden stop movement , கால்கள் மிதிக்க கைகள் முன்னுக்கு சுழன்று வரும் ஒரு impulsive அவசரம், எதுவுமே பொருட்டில்லை விடு என்ற விரல்களின் அலட்சிய உதாசீனம்,டென்ஷன் மிகுந்த தருணங்களில் இலக்கில்லாமல் சுழலும் வேகம் ,முடிவெடுக்க முடியாத போது தவிக்கும் உதவி தேடும் விழைவு என்று கை அசைவுகளில் இந்த பாத்திரத்திற்கே ஒரு புது பரிமாணம் கிடைக்க செய்வார்.

    கண்கள்- விக்ரமனின் இலக்கில்லாமல் அலை பாயும் கண்கள், காம வேட்கை,அகந்தை, அலட்சியம்,யாருக்காவது கெடுதல் நினைக்கும் போது ஒரு sadism நிறைந்த spark ,ஆபத்து வரும் போது நிலையாத தவிப்பு, முடிவெடுக்க நேரும் தருணங்களில் ஒரு குழப்பம் ,கிடைத்தது நிறைவேறும் போது ஒரு குழந்தைத்தனமான சந்தோஷ மின்னல், கிடைக்காத போது temper tantrum பாய்ச்சும் கண்கள்.

    உடல் மொழி- ஒரு stiff ஆன உடல் மொழி ,இவன் வளையவே விரும்பாத மூர்க்கன் என்பது போல். ஒரு வட்டமிடும் கழுகு போல,இரை கிடைத்தால் பாய தயார் என்பது போன்ற முன்னோக்கியே அலையும் வேகம்,நிதானமில்லா ஒரு அலைச்சல்,ஒரு குழந்தையின் வன்மம் நிறைந்த energy மிகுந்த திரும்பல், attention seeking but rest less உடல் மொழி.

    குரல்- நடிகர்திலகத்தின் குரல் வளம், அது புரியும் மாயம் ,tonal difference , modulation ஊரறிந்த உலகறிந்த ஒன்று. ஆனால் இந்த படத்தில், ஸ்ரீதரின் மிக குறைந்த sharp வசனங்களை அவர் கையாண்டது ,அதற்கு பிறகு அவரே செய்யாதது. ஒரு mid -pitch tonal modulation கொண்டு, எள்ளல், அகந்தை, குழப்பம்,impulsive braking conclusion ,ஒரு குழந்தை தனமான குதூகலம்,energy என்று உடல் மொழியுடன் இணைந்த அற்புதமான ரசவாதம்.

    இதை வைத்து, அவர் அந்த கதாபாத்திரத்தை வார்த்த அழகு ..........

    விக்ரமனுக்கு படத்தில் சமவயது நண்பனே கிடையாது. அவன் வாழ்க்கையில் அன்னை ,தந்தை என்ற figure heads மன அளவில் கூட கிடையாது. சொன்ன படி சகலமும் மாமாதான்.

    அதனால் மாமாவுடன் விக்ரமனின் interractions மிக மிக கவனிப்பை பெற வேண்டிய ஒன்று.

    தன் பெண் நண்பிகளுடன் உல்லாசமாக வலம் வரும் மகுடாபிஷேக காட்சியில் சுயவிரும்பி(narcist ) விக்ரமன் தன் அழகை பற்றி கேட்பது கூட மாமாவிடமே. பிறகு கிளி பிள்ளை போல், சுயமாக எதுவும் பேசாமல், மறந்து விட்டேன் என கூறி, stuck ஆகி மாமா சொன்னதை (மிக முக்கிய அறிவிப்பு), போகிற போக்கில் தண்ணி குடித்தேன் என்பது போல அறிவிக்கும் பாணியில், சுய அறிவை மழுங்கடித்து வளர்க்க பட்ட குழந்தை ,ஆசிரியர் கூறியதை மனனம் செய்து போகிற போக்கில் ஒப்பிக்கும் பாணி. எனக்கு மாமா தேவை என்றதும் ஆமோதிக்காத கூட்டத்தை அதட்டும் போதே, குழந்தைக்கு மாமா ஒன்றுதான் உலகம் என்று அழுத்தம் கிடைத்து விடும்.

    தன் விருப்பத்தை மாமாவிடம் சொல்லும் போது , ஒரு நண்பனிடம் பேசும் அன்னியோன்யம் , தாயின் எதிரிலேயே ஒரு பெண்ணை(மந்திரியின் பெண்) கயமை நோக்கோடு கண்ணியமில்லாமல் பார்த்து, மாமா பெண் பிடித்து விட்டது என்று தாயிடம் சொன்னதும்,ஒரு அவசர விழைவு கலந்த ஆமோதிப்பு, கண்ணியமற்ற முறையில் மாமாவிடம் தோழன் ஸ்தானத்தில் ஒரு ஆபாச கமெண்ட் என்று யூகிக்கும் அளவில் ஒரு கிசுகிசுப்பு. முடிவெடுக்க திணறும் அத்தனை தருணங்களிலும் மாமாவிடம், சாவி நின்ற பொம்மை போல ஆலோசனை கேட்கும் எடுப்பார் கை பிள்ளை தனம்.(ஏதாவது சொல்லுங்கள் ரீதியில்).அதில் தனக்கு ஆபத்து வரும் ரீதியில் வந்தால் மட்டும் முழித்து கொண்டு யோசனயை நிராகரிக்கும் குழந்தை தனம் கொண்ட சுய நலம்.

    ஆனால் denial என்றோ, கேட்டது கிடைக்காத போதோ இந்த குழந்தை மாமாவையோ நிர்தாட்ஷன்யத்துடன் குத்தி குதறி திட்டும் ஜோர்.(நீங்கள் மீண்டும் கோட்டை விடாமலிருக்க. நானென்ன முட்டாளா. ஆமாம்.) களித்து,சிரித்து, சகலமுமான மாமாவை பணயமாக வைத்து பார்த்திபன் சவால் விடும் பொது, அப்படியும் செய்து பார்க்கலாமா என்று sadism கலந்த குரூரத்துடன் , குழந்தைத்தனமான குறு குறு ப்புடன் கேட்கும் விதம்.

    ஆனால் , பிடிபடும் நேரம் வரும் போது சுயநலத்துடன் (தண்ட- உன்னை என்ன செய்கிறேன் பார், பேத- மாமாதான் எல்லாம், தான- இந்த நாட்டை தருகிறேன், சாம- என்னை மன்னித்து விடு) குழந்தை கொஞ்ச நேரம் சுயநல அரசன் பாணியில் முயலும். ஆனால் மாமாவை போட்டு கொடுத்து தான் தப்பிக்கவும் தயங்காது.

    மாமாவிடம் நிஜமான கரிசனமோ ,மரியாதையோ இன்றி, விளையாட்டு தோழனாக,விபரீத மந்திரியாக,சொன்னதை நிறைவேற்றும் சேவகனாக என்றுதான் உறவே.

    இது மாதிரி ஒரு அற்புத மனோதத்துவ ரீதியான நடிப்பு வெளியீட்டை ,நானறிந்த எந்த உலக படத்திலும் கண்டதில்லை.

    விக்ரமன் அன்னையுடன் interract பண்ணும் காட்சிகள் நான்கே நான்குதான் ஆனாலும் , திரையுலகு நிலைத்திருக்கும் வரை ,நிலைத்திருக்க கூடிய காட்சிகள்.

    விக்ரமன் ஆட்சி முறை கண்டு கொதித்து போய் தாய் நல்லுரை (advise ) கூற வரும் காட்சியில், பாதி களியாட்டத்தில்,சீ, என்ன இது இடையூறு என்ற கோபத்துடன் ,பாதியில் மிட்டாய் பறிக்க பட்ட குழந்தையை போன்று காலை உதைத்து வேண்டா வெறுப்பாக ஊஞ்சலில் cool ஆக அமர்ந்து, ஒரு வார்த்தை பேசாமல் ,செவிடன் காதில் ஊதிய சங்கு என்பது போல்,indifference காட்டும் பாராமுகம். ஆனாலும் ,அன்னை சொல்லும் படி தவறு செய்கிறோமோ என்ற அவ்வப்போது குழந்தை குறிப்புடன் ஓர கண்ணால் ஒரு 20% குற்றவுணர்வுடன் பார்ப்பது என்று இந்த காட்சியில் ஒரு வார்த்தை கூட பேசாமல் விக்ரமன்-அன்னை உறவு நிலை பூரண பட்டு விடும். chekhov உயிரோடு இருந்திருந்தால் ,இந்த மேதையின் காலில் விழுந்து வணங்கி இருப்பான்.

    இரண்டாவது காட்சி, அமுதாவை அரண் மனைக்கு அழைத்து வந்து அறிமுக படுத்தும் காட்சி.தாய் (அதுவும் மகாராணி) அருகில் இருக்கும் விஷயமே விக்ரமனுக்கு பொருட்டில்லை.(தாய் என்ற image அவன் psyche இலேயே கிடையாது). ஒரு கண்ணியமற்ற காம பார்வை ,இரையை விழுங்கும் வெறியோடு, சம்மதத்தை கூட இங்கிதமின்றி கண்ணடித்து வெளியீடு.

    கடைசியில், சிறையில் பார்த்திபனுடன் தாயை பார்த்து விட்டு, துளி கூட ஈரமின்றி மாமாவின் கைது செய்யும் திட்டத்திற்கு மருந்திற்கு கூட மறுப்பு தெரிவிக்க மாட்டார்.ஆனால் தற்கொலை செய்ய முயலும் தாயை ,ஒரு நொடி தடுக்க பார்க்கும் கணம்,விக்ரமன் மனித தன்மை துளியே துளி எட்டி பார்த்தாலும், அடுத்த நொடி அசல் விக்ரமனாகி விடும்.பார்த்திபனை விடுதலை செய்ய மறுப்பதோடு, மரண தண்டனையை மாற்ற மன்றாடும் தாயின் குரலுக்கு செவி சாய்ப்பது போல் ,அதை விட கொடூர சித்திர வதையை தண்டனையாக்கி, இதை தடுத்தால் தாயென்றும் பார்க்க மாட்டேன் என்று சொல்லும் கொடூர தனம். mercurial swings என்று சொல்ல படும் உடல்,கை-கால் இயங்கு முறையில், அலையும் மனம்- கொடூரம்-சுயநலம்-சந்தேகம்-sadism -நிச்சயமற்ற தன்மை என்று தமிழில் வந்த காட்சிகளிலேயே நடிப்பாற்றலில் உச்சம் தொட்ட ஒன்று.

    இனி , காம விழைவு கொள்ளும் அமுதாவிடம் தொடர்பு காட்சிகள்.....(மாமாவின் அரசியல் ரீதியான வற்புரூத்தலினால்தான் மணக்கவே ஒப்புதல்).

    குதிரையில் தன்னை விக்ரமன் என்று எண்ணி mixed reaction இல் பார்க்கும் அமுதாவை ஏற இறங்க பார்த்து , மற்றோரை நிறுத்த சொல்லி ஆணையிடும் முறை. தாயின் முன் அமுதாவை பார்க்கும் பண்பற்ற முறை,மாமாவிடம் vulgar comments ஏற்கெனெவே பார்த்து விட்டோம்.

    அமுதாவிடம் பார்த்திபனாக நடிக்கும் விக்ரமன்(நடிக்க முயலுவதாக காட்டியிருப்பார் மேதை), அலை பாயும் கண்களுடன், tone down பண்ணினாலும், இயல்பை முற்றும் துறக்காமல் react பண்ணுவார். இது எந்த ரெட்டை வேடம் போட்ட ஆள் மாறாட்டம் பண்ணும் நடிகனும் செய்யாத சாதனை. பின்னால் பார்த்திபனும் விக்ரமனாக நடிக்கும் போது ,சாந்த பார்வை ,மித நடையுடன் கொஞ்சமே மற்றோருக்கு சந்தேகம் எழாதிருக்க tonal difference (சற்றே குறைபாடுள்ள) மட்டும் காட்டுவார். இந்த மேதை 1958இல் சாதித்த போது ,இதை கவனித்து சொல்ல சரியான விமரிசகர்கள் கூட இங்கில்லை.

    ஆனால் பார்த்திபன் பிடிபட்டதும், பரிந்து பேசும் அமுதாவை அடங்கு என்ற ரீதியில் முறைத்து ,மாமா இவளை மன்னித்து விடுவோம் என்றதும் ,அமுதா எதிர்த்து பேசும் போது ,காமம்-கோபம்-குரோதம் கொப்பளிக்க எனக்கு தேவை என்று சொல்லும் ஒரு நிமிட பார்வை...

    ஆனாலும் ,இந்த வளர்ந்த குழந்தைக்கு தன்னிடம் அமுதா நிஜமாகவே மயங்கி விட்டாள் என்று அசட்டு தனமான self -confidence உடன் தொடரும் இடத்தில்,சாவியை சுண்டி பார்க்கும் மூன்று முறையும் ,reaction காட்டும் முறையில் படி படியாய் reflex தேய்வதை எவ்வளவு அழகாக காட்டுவார்?இந்த அழகில் சுழன்றாடும் அமுதாவிற்கு தள்ளாட்டத்துடன் சுழன்றாடி சாயும் காட்சி...

    பார்த்திபனுடன் ,தன்னை போல ஒருவன் அரண்மனைக்குள் ஊடுருவி, அமுதாவை பார்க்க வருகிறான், தன்னை ஒரு முறை அவமான படுத்தி தப்பித்தவன் , என்ற முறையில் பிடி பட்டதும் ,சுற்றி வந்து கொடூர கோபத்துடன்,பிடிபட்டு விட்டாயே என்ற நக்கலுடன் curiosity யும் காட்டுவார்.(மேதை என்றால் சும்மாவா?). என்னை போலிருப்பது என்று குற்றம் சுமத்தி ,பார்த்திபன் பதில் சொன்னதும் ,மாமா இவன் மீது வேறு ஏதாவது குற்றம் சுமத்துங்கள் என்று அப்பாவித்தனமான இயலாமையுடன் desperation தொனிக்க கேட்பது..

    சிறை காட்சியில், பார்த்திபன் சகோதரன் என்று தெரிந்ததும் ஒரு நிமிட தடுமாற்றம் ....புரியா உணர்வு...blank feelings ... என்று ஒரு கண நேர expression .....

    இப்போது சொல்லுங்கள் ,நான் ஏன் இன்னும் விக்ரமனிடம் விரும்பியே ஆயுள் சிறை பட்டிருக்கிறேன் என்று?
    Last edited by Gopal.s; 16th May 2015 at 04:59 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  4. #2073
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நண்பர்களே,
    குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்.
    நடிகர் திலகத்தைப் பற்றி விமர்சிப்பதைத் தவிர்த்தல் நலம்.
    கோபால் சொன்னது போல் அவர் தொடாத விஷயமே நடிப்பில் இல்லை. காமிரா, எடிட்டிங், என திரைப்படத்துறையின் ஒவ்வொரு நுணுக்கமும் அறிந்த கலைஞன். அவரவருடைய சுதந்திரத்தில் அவர் தலையிட விரும்பாத காரணத்தால் தான் சில தவிர்த்திருக்க வேண்டிய படங்கள் உருவாகக் காரணமானார்.
    எங்கோ அடிமட்டத்தில் இருந்த தமிழ் சினிமா ரசனையை வலுக்கட்டாயமாக மேலே இழுத்து வந்து உச்சாணிக் கொம்பில் அவர் உட்கார வைத்ததால் தான் நம்மால் இன்று தமிழ் சினிமாவில் பல்வேறு புதிய பரிமாணங்களை பல்வேறு கால கட்டங்களில் காண முடிகிறது.
    வணிக நோக்கில் அவர் நடித்த படங்கள் வசூல் பிரளயம் ஏற்படுத்தியவை என்பதைப் பலமுறை அவர் நிரூபித்து விட்டார். என்றாலும் அவர் அதனையே கருதாமல் தமிழ் சினிமாவை மேல் நோக்கி ஏற்றிச் சென்றதால் தான் நம்மால் பீம்சிங் போன்ற உன்னத இயக்குநர்களைக் காண முடிந்தது. பின்னாளில் பல இயக்குநர்கள் இவர்களை ரோல் மாடலாகக் கொண்டதும் அதனால் தான்.
    தன்னுடைய மொத்த படங்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கை அளவிற்கு அவரை வைத்து இயக்கிய இயக்குநர்கள் பணியாற்றினார்கள். ஒரு சில இயக்குநர்களின் படங்களைத் தவிர பெரும்பாலான இயக்குநர்களின் படங்களில் அவருடைய நடிப்பில் வித்தியாசம் நிச்சயம் தென்படும். அந்த ஒரு சில இயக்குநர்களின் படங்களிலும் ரசிகர்களுக்கான சில காட்சிகள் போக பெரும்பாலான காட்சிகளில் அவர் நடிப்பில் ஒரு கோட்டுக்குள் இருக்கும்.
    உடை விஷயம், உடல் விஷயம் என சில படங்களை இங்கு ரசிகர்கள் குறிப்பிட்டிருந்தனர். அவை எண்ணிக்கையில் மிக சொற்பமே. இன்னும் சொல்லப் போனால் அவை வணிக ரீதியாக வெற்றி பெற்றவை. ஒரு கலைஞன் கலைக்கு தன்னை அர்ப்பணிப்பது மட்டுமின்றி வணிக ரீதியாகவும் அதனை எதிர்கொள்ள வேண்டும். அதைத் தான் அவர் செய்தார்.
    வயதுக்கு ஒவ்வாத இளம் நடிகையருடன் நடித்தார் என்பது அவருக்கு மட்டுமே பொருந்தக் கூடிய விஷயமல்ல. இந்த குற்றச்சாட்டுக்கு ஆளாகாத கலைஞர்களை யாராலும் கூற முடியாது.

    பாலு மகேந்திராவின் லட்சியப் படமாக நடிகர் திலகத்துடன் அவர் இணைந்து பணியாற்ற முற்பட்டதும் அவரும் அதற்கு இசைவளித்ததும் கிட்டத்தட்ட படம் துவங்கும் வரையில் போய் பின்னர் நின்று போனதும் நமக்கு துரதிருஷ்டமே. சந்தர்ப்ப வசத்தால் தன் மகளையே ஒரு விலைமாதாக அந்த விடுதியிலேயே சந்திக்க நேரிடும் ஓர் தந்தையின் கதை அப்படத்தின் கரு.

    ஒரு சில படங்களை வைத்து அவரை விமர்சிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது.

    சினிமாவுக்கு வந்த புதிதிலேயே தன் வயதிற்கு மீறி தந்தை பாட்டன் போன்று முதியவராக நடித்தவர் நடிகர் திலகம்.

    அவருடைய பங்களிப்பின்றி தமிழ்த்திரையுலகம் புதிய உச்சங்களைக் கண்டிருக்காது என்பதே உண்மை.

    பின்னாளில் பல புதிய கலைஞர்கள் புதிய பாதையில் பயணிக்க சாலை அமைத்தவர் நடிகர் திலகம். அவர் இருந்த தைரியத்தில் தான் ஸ்ரீதர் பீம்சிங் போன்ற பல இயக்குநர்கள் புதிய விஷயங்களை சினிமாவில் கொண்டு வந்தார்கள்.

    இது அன்புத் தம்பி கமல் அவர்களின் திரி என்பதால் இதற்கு மேல் இப்பதிவை நீட்டிக்க விரும்பவில்லை.

    படித்ததற்கும் வாய்ப்பிற்கும் உளமார்ந்த நன்றி.
    My response to a few posts in Kamal thread.

    நண்பர்களே,
    கமல் என்ற உன்னதக் கலைஞன் தமிழ் சினிமாவின் பொக்கிஷம். நடிகர் திலகத்திற்குப் பின் ஒரு VACCUM உருவான போது, ஓரளவிற்கு அதை ஈடு செய்ய வந்திருக்கும் சிறந்த சினிமா ரசிகன். அவரே சொல்வது போல் நடிகர் திலகத்தின் நாற்காலியில் யாரும் உட்கார முடியாது.
    ஆனால் அவருடைய ரசிகர்களில் சிலர் நடிகர் திலகத்தை விமர்சிப்பதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர்கள் வயதில் சற்று நம்மை விட சிறியவர்கள். நடிகர் திலகம் சந்தித்த விமர்சனங்களை அவர்கள் கேள்வி ஞானத்தை வைத்து அப்படியே வைக்கிறார்களே தவிர அவர்கள் மனதார அதை சொல்கிறார்கள் என என்னால் நினைக்க முடியவில்லை. அதனால் தான் இந்த விளக்கத்தை அங்கு வைத்திருக்கிறேன்.

    இங்கே இதனைக் குறிப்பிடக் காரணம், இதனை மேலும் விவாதிக்க வேண்டாம் என்று அனைவரிடமும் வேண்டுகோள் விடுக்கவே.

    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. Thanks eehaiupehazij thanked for this post
  6. #2074
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Last edited by RAGHAVENDRA; 16th May 2015 at 09:21 PM. Reason: Time of Programme corrected
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai liked this post
  8. #2075
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    உத்தம புத்திரன்-1958
    கோபால் சார்,
    அருமையான விமர்சனம். நடிகர்திலகத்தின் உடல்மொழியை ஆய்வு செய்து, பார்த்திபனையும், விக்ரமனையும் எங்கள் மனக்கண் முன் கொண்டுவந்து நிறுத்திவிட்டீர்கள். நன்றி.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  9. #2076
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நடிப்பின் பிதாமகன் வழிகாட்டிய நடிப்பு மழலையர் : குறுந்தொடர்
    பகுதி 1 : பேபி காஞ்சனா : வீரபாண்டிய கட்டபொம்மன் (1959)

    நடிகர்திலகம் என்னும் சுயம்புலிங்கம் தெருக்கூத்து மேடைநாடக சாளரங்களின் வழியே திரைத் தென்றல் ஆக நுழைந்து புயலாக மாறி ஊழித்தாண்டவமாடிய
    பராசக்தி வெளிவந்தபோது அவருக்கு வழிகாட்டிட எந்தவொரு முன்னோடி நடிகருமோ தொழில்நுட்ப வளர்ச்சிகளோ கிடையாதே!!
    ஆனால் அவரை வழிகாட்டியாக வரித்து ஏற்றமடைந்த அவரை ஏணிப்படியாக கொண்டு உச்சத்துக்கு ஏறிய எத்தனையோ நடிப்பு மழலையர் அவரை இன்றளவும் நடிப்பின் இறைவனாகத்தானே உருவகப் படுத்தி உருகி வழிபடுகிறார்கள்!!
    அண்ணாந்து பார்த்து அவர் நடிப்பின் அம்சங்களை கிரகித்து அவரின் நடிப்புப் பிம்பங்களாகவே வளர்ந்து அவர் நிழலிலே இளைப்பாறிய மழலை நட்சத்திரங்கள் அவரை நடிப்பின் பிதாமகராகக் கொண்டாடுவது இயல்பே!! அவரது ராஜசிம்மாசன நாற்காலி என்றும் காலியே!!
    மழலை நட்சத்திரத்தின் நடிப்பு அரிச்சுவடி பாடப் பதிவு அரங்கேறுவதுநடிப்பாசிரியரின் கண் முன்னே !

    Last edited by sivajisenthil; 16th May 2015 at 06:14 PM.

  10. Likes Russellmai liked this post
  11. #2077
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நடிப்பின் பிதாமகன் வழிகாட்டிய நடிப்பு மழலையர் : குறுந்தொடர்

    பகுதி 2 : மாஸ்டர் கமலஹாசன்: பார்த்தால் பசி தீரும் (1962)

    Master to Master-craftsman .... NT as the role Model!

    இன்றைய நாயகன் அன்றைய ( என்றுமே!) நடிப்புத் தந்தையின் கைகளில் ......


    It is a vicious cycle of indispensable changes that are inevitable in our mortal life, that warrants graceful ageing!
    But NT is immortal as changes do not mean anything to his name and fame engraved in our hearts and minds forever!!

    Master Kamalahaasan turns into Master Craftsman Kamalahassan in the footsteps of his Godfather NT, as far acting histrionics are concerned!!
    Last edited by sivajisenthil; 16th May 2015 at 06:18 PM.

  12. Likes Russellmai liked this post
  13. #2078
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நடிப்பின் பிதாமகன் வழிகாட்டிய நடிப்பு மழலையர் : குறுந்தொடர்
    பகுதி 3: மாஸ்டர் ஸ்ரீதர்: கர்ணன் (1964)

    குழந்தைத் தொழிலாளர்கள் கல்வியில் வஞ்சிக்கப் படக் கூடாது என்று சிறுவனை பள்ளிக்கு அனுப்பும் தான தர்மராஜா கர்ணன்!! கொடுத்து வைத்த ஸ்ரீதர்!!
    Watch Master Sreedhar's expressions of pride in the company of NT as his lifetime luck!!


  14. #2079
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் தலைவரின் வீரபாண்டிய கட்டபொம்மன் வெளியாகி இன்றோடு 56 ஆண்டுகள் நிறைவடைந்து 57 வது ஆண்டு துவக்கம்.
    படம் முதல் முறை வெளிவந்து அடுத்த வாரம் வேறு தியேட்டரில் வெளியிட முடியாத நிலையில் படம் வெளி வந்து 56 ஆண்டுகள் ஆன போதும் புதுப் படம் வெளிவருவது போல் புதுப் பொலிவுடன் வெளிவரும் கட்டபொம்மன்.
    படம் வெளியான தேதி்-16.05.1969
    கவியரசு வைரமுத்து அவர்கள் சொன்னது போல் நடிகர்களே 10 வருடம் கழித்து உங்கள் பெயர் சொல்லும் படி ஒரு படமாவாது நடியுங்கள்.














    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

  15. Likes Georgeqlj liked this post
  16. #2080
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    [IMG]https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/p180x540/10428418_815369561880983_7660885751691948009_n.jpg ?

    oh=1bbfbe9933e487779dad9e1f28a8ad35&oe=5603CA48&__ gda__=1439415214_50fb0bb9748eb45db0484c2d662df8f1[/IMG]




    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •