-
17th May 2015, 12:46 PM
#2141
Junior Member
Newbie Hubber
Nadigar thilagam- Thirai isai Thilagam.
Courtesy- B.G.S.Manian(Edited version from his original writings )
"படிக்காத மேதை" - நடிப்பில் புதிய பரிமாணத்தை காட்டிய நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் படம்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் "ரங்கன்" என்ற ஒரு கள்ளம் கபடம் இல்லாத வெள்ளை உள்ளம் கொண்ட மனிதனாக நடித்த - அல்ல - வாழ்ந்து காட்டிய படம். அவருடன் எஸ்.வி. ரங்காராவ், கண்ணாம்பா, சௌகார் ஜானகி, முத்துராமன், அசோகன், சந்தியா, ஈ.வி. சரோஜா ஆகியோரும் நடித்திருந்தனர்.
பீம்சிங்கும் கே.வி. மகாதேவனும் இணைந்த முதல் படம் இது.
கண்ணதாசன், மருதகாசி ஆகியோர் பாடல்களை எழுதி இருந்தனர். மகாகவி சுப்ரமணிய பாரதியின் பாடலும் படத்தின் ஒரு முக்கிய திருப்புமுனைக் காட்சிக்கு பயன்படுத்தப் பட்டிருந்தது.
படத்தின் பாடல்களிலும் பின்னணி இசையிலும் மகாதேவனின் முழுத் திறமையும் தெரிந்தது.
இந்தப் படத்தில் இடம் பெற்ற மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை பத்து.
படம் வெளிவந்த அறுபதில் டி.எம். சௌந்தரராஜனும், பி. சுசீலாவும் மற்ற பாடகர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னேறிக்கொண்டிருந்தனர். பெரும்பாலான தயாரிப்பாளர்களும், நடிகர்களும் அவர்கள் இருவரையுமே பிரதானப் படுத்திக் கொண்டிருந்த நேரம் அது.
ஆனால் கே.வி, மகாதேவனோ "படிக்காத மேதை" படத்துக்காக அவர்கள் இருவரை மட்டும் அல்லாமல் எம்.எஸ். ராஜேஸ்வரி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, பி. லீலா, சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எல். ராகவன் என்று பலரையும் பாடவைத்தார்.
கதாநாயகனின் குணாதிசயத்தை அப்படியே படம் பிடித்துக்காட்டும் பாடல்
"உள்ளதைச் சொல்வேன் சொன்னதைச் செய்வேன் வேறொன்றும் தெரியாது.
உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் கபடம் தெரியாது." என்ற பாடல்.
தனக்கு மற்றவர்களைப் போல கல்வி அறிவு இல்லையே என்று வருந்தும் கணவனை மனைவி தேற்றுவதாக அமைந்த பாடல் "படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு. பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு." - சௌகார் ஜானகிக்கு எம்.எஸ். ராஜேஸ்வரியை இந்தப் பாடலுக்கு பின்னணி பாடவைத்தார் கே.வி. மகாதேவன்.
கண்ணதாசனின் வரிகளும், ராஜேஸ்வரியின் மழலை பொங்கும் குரலும் பாடலுக்கு தனி அழகைத் தருகின்றன. கீரவாணி ராகத்தின் அடிப்படையில் இந்த பாடலை அருமையாக வடிவமைத்திருக்கிறார் கே.வி. மகாதேவன்.
"ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா" - என்ற காதுகளை சுகமாக வருடும் பாடலை டி.எம்.எஸ். - சூலமங்கலம் ராஜலக்ஷ்மி இருவரையும் பாடவைத்து தாலாட்டு வகையில் அமைந்த இந்தப் பாடலை இரவில் கேட்கவேண்டும். அதிலும் "சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமும் இல்லை" என்று துவங்கும் கடைசி சரண வரிகளின் போது நம் கண்கள் தானாகவே சொக்கத் தொடங்கி விடும். அவ்வளவு அருமையாக இந்த சரணம் அமைந்திருக்கிறது. டி.எம். எஸ். ஸும் மிகவும் நயமாக பாடி இருக்கிறார்.
"ஆடிப் பிழைத்தாலும் பாடிப் பிழைத்தாலும்" - பி.லீலா.
"இன்ப மலர்கள் பூத்துக்குலுங்கும் சிங்காரத்தோட்டம்" - பி. சுசீலா - எல், ஆர். ஈஸ்வரியின் குரல்களில் ஒலிக்கும் பாடல்.
"பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு
கண்பார்வை போடுதே துடுப்பு" - ஏ.எல். ராகவன்- ஜமுனாராணி.
"சீவி முடிச்சு சிங்காரிச்சு" - டி.எம்.சௌந்தரராஜன்.
என்று இப்படி பல பாடகள் இருந்தாலும் கே.வி. மகாதேவன் மிகவும் சிரத்தை எடுத்துக்கொண்டு ரசித்து ஒவ்வொரு வரியாக அனுபவித்து அமைத்த பாடல் என்றால் அது "எங்கிருந்தோ வந்தான். இடைச்சாதி நானென்றான்" - என்ற மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பாடல்தான்.
கண்ணனைத் தன் சேவகனாக வரித்து பாரதியார் அமைத்திருக்கும் பாடல் இது.
ஏற்கெனவே இந்தப் பாடலை இசைச் சக்ரவர்த்தி ஜி. ராமநாதன் "கூலி மிகக் கேட்பார்" என்று துவங்கி அருமையாகப் பாடி தனது சொத்தாகவே மாற்றிக்கொண்டிருந்தார்.
"பெரியவரோட (ஜி. ராமநாதன்) பாட்டு இது. அவர் அளவுக்கு இல்லாவிட்டாலும் நம்மாலே முடிஞ்ச அளவுக்கு பாட்டைக் கெடுக்காம கவனமா பண்ணனும்" என்று புகழேந்தியிடம் சொல்லிக்கொண்டே சிரத்தை எடுத்துக்கொண்டு மகாதேவன் இசை அமைத்து சீர்காழி கோவிந்தராஜனைப் பாடவைத்தார். சுத்த தன்யாசி ராகத்தில் அமைந்த பாடல் இன்றளவும் உயிரோட்டத்துடன் அமைந்திருக்கிறது.
இன்று ஜி. ராமனாதனின் "கூலி மிகக் கேட்பார்" பாட்டு மறைந்துவிட்டது.
ஆனால் அவரைத் தன் குருவின் ஸ்தானத்தில் வைத்துக்கொண்டு மிகுந்த மரியாதையுடன் பக்தி சிரத்தையுடன் கே.வி. மகாதேவன் உருவாக்கிய "எங்கிருந்தோ வந்தான்" பாடல் காலத்தை வென்று அமரத்துவம் எய்திய பாடலாக காற்றலைகளில் வலம் வந்துகொண்டிருக்கிறது.
*******************
“அகிலன்" - தமிழ் எழுத்தாளர்களில் இந்தப் பெயருக்கு ஒரு தனிச் சிறப்பும், மரியாதையும், பெருமையும் உண்டு.
புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள "பெருங்கலூர் " என்ற ஒரு சின்னஞ்சிறிய கிராமத்தில் பிறந்தவர் அகிலன்.
அமரர் கல்கி அவர்களின் பெரும்புகழ் பெற்ற சரித்திர நாவலான "பொன்னியின் செல்வ"னின் தொடர்ச்சியாக அகிலன் எழுதிய நாவல்தான் "வேங்கையின் மைந்தன்".
ராஜேந்திர சோழனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட இந்த நாவல் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிவாஜி நாடக மன்றத்தால் மேடை நாடகமாக உருமாறி பெருவெற்றி பெற்றது.
"சித்திரப்பாவை" - ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து மகத்தான வெற்றிபெற்ற நாவல். "ஞான பீடம்" - என்ற மிக உயர்ந்த இலக்கியத்துக்கான விருதை தமிழுக்குப் பெற்றுத்தந்த நாவலும் இதுதான்.
இத்தனைச் சிறப்புகளுக்கெல்லாம் சொந்தக்காரரான அகிலனின் நாவலான "பாவை விளக்கு"க்கு திரைக்கதை அமைத்து வசனம் எழுதினார் ஏ.பி. நாகராஜன்.
கே.சோமு அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் குமாரி கமலா, சௌகார் ஜானகி, எம்.என். ராஜம் ஆகியோர் நடித்திருந்தனர்.
படத்துக்கான அனைத்துப் பாடல்களையும் - ஒரே ஒரு பாரதியார் பாடலைத் தவிர - கவிஞர் மருதகாசி எழுதி இருந்தார்.
ஏ.பி.நாகராஜன் - கே.சோமு - மருதகாசி கூட்டணி என்றால் சொல்லவே வேண்டாம். இசை அமைப்பு கே.வி. மகாதேவனைத்தவிர வேறு யாராக இருக்க முடியும்?
அருமையான பாடல்களை அற்புதமாக எழுதித் தள்ளியிருந்தார் மருதகாசி.
அவற்றுக்கு மகாதேவன் அமைத்திருந்த மெட்டுக்களோ?
பாடல்களுக்கான மெட்டுக்களா இல்லை மெட்டுக்களுக்கான பாடல்களா என்று கேட்போர் வியக்கும் அளவுக்கு மருதகாசியின் பாடல்வரிகளும் மகாதேவனின் இசையும் போட்டி போட்டுக்கொண்டு கனகச்சிதமாக வெகு சிறப்பாக அமைந்த படம் இது.
இன்னும் சொல்லப்போனால் "பாவை விளக்கு" படத்துக்கு பலமே அதன் பாடல்கள் தான்.
பாடல்கள் தான் இந்தப் படத்தை ஓரளவுக்காவது தூக்கி நிறுத்தின.
அந்த வகையில் "பாவை விளக்கு" படத்தின் பாடல்கள் ஐம்பது வருடங்களைக் கடந்த பிறகும் உயிர்ப்புடன் காற்றலைகளில் நிலைத்து நிற்பது பிரமிக்க வைக்கும் சாதனைதான்.
படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கான அனைத்துப் பாடல்களையும் சி. எஸ். ஜெயராமனைப் பாடவைத்திருந்தார் கே.வி. மகாதேவன்.
தனது முதல் படமான "பராசக்தி"யில் தனக்குப் பாடிய சி.எஸ். ஜெயராமனின் குரலின் மீது நடிகர் திலகத்துக்கு ஒரு தனி மோகமே உண்டு. ஆரம்பத்தில் "தூக்கு தூக்கி" படத்தில் தனக்காக டி.எம். சௌந்தரராஜனைப் பாடவைக்க முடிவெடுத்தபோது அவர் "ஜெயராம பிள்ளையை எனக்காக பாடவைக்காம வேற யாரையோ பாடவைக்கனும்னு சொல்லறீங்களே" என்று குறைப்பட்டுக்கொண்டது கூட உண்டு.
அப்படிப்பட்ட சி.எஸ். ஜெயராமனின் குரலில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே பிரபலமான பாடல்களாக அமைந்துவிட்டன.
குற்றாலத்தின் அழகையும், சிறப்புகளையும் தெரிந்துகொள்ள வேண்டுமா? அதனைப் பார்த்து ரசிக்க இரண்டு கண்கள் போதாதாம். ஆயிரம் கண்கள் வேண்டுமாம். இல்லை இல்லை. ஆயிரம் கண்களும் போதாதாம்! அப்படித்தான் மருதகாசி சொல்கிறார்.
"ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே
குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே"
"மாண்ட்" - ராகத்தில் கே.வி. மகாதேவன் பாடலை அமைத்திருக்கும் விதமோ ஆயிரம் முறைகள் கேட்டாலும் சலிக்கவே சலிக்காத பாடல்.
இந்தப் பாடல் ஏ.பி. நாகராஜனின் மனதில் ஒரு அழுத்தமான இடத்திப் பிடித்து விட்டது.. அதனால் தானோ என்னவோ பின்னாளில் தான் இயக்கிய "தில்லானா மோகனாம்பாள்" படத்தில் இந்தப் பாடலை அப்படியே நாதஸ்வரத்தில் வாசிக்கவைத்து பயன்படுத்திக்கொண்டுவிட்டார் அவர்.
அடுத்து "வண்ணத் தமிழ்ப் பெண்ணொருத்தி என் எதிரில் வந்தாள்" - என்ற பாடல்..
வசன நடையில் ஆரம்பித்து ஒவ்வொரு வார்த்தைகளாக கூட்டிக்கொண்டே ஆரம்பிக்கும் பல்லவி. ஒவ்வொருக்கு அடிக்கு பிறகும் பாடலாக உருமாறுகிறது.
பெண்ணொருத்தி என் எதிரில் வந்தாள்
தமிழ்ப் பெண்ணொருத்தி என் எதிரில் வந்தாள்.
வண்ணத் தமிழ்ப் பெண்ணொருத்தி என் எதிரில் வந்தாள். - என்று என்று படிப்படியாக வார்த்தைகளைக் கூட்டிக்கொண்டே போகும்போது மகாதேவனின் கற்பனைத் திறனும் இசை ஆளுமையும் பிரமிக்கவைக்கிறது. சி.எஸ். ஜெயராமனுடன் ஹம்மிங்காக எல்.ஆர்.ஈஸ்வரி இணையும் பாடல் இது. சங்கராபரண ராகத்தை வெகு அற்புதமாக மகாதேவன் கையாண்டு பாடலை கொடுத்திருக்கிறார்.
"நீ சிரித்தால் நான் சிரிப்பேன் சிங்காரக்கண்ணே" - சூலமங்கலம் ராஜலக்ஷ்மியின் குரலில் அருமையான ஒரு குழந்தையைக் கொஞ்சிச் சீராட்டும் பாடல்.
இப்படி இத்தனைப் பாடல்கள் இருந்தாலும் "பாவை விளக்கு" என்றதுமே நம் உதடுகள் தாமாகவே உச்சரிக்கும் பாடல் ஒன்று உண்டு என்றால் அது "காவியமா நெஞ்சின் ஓவியமா அதன் ஜீவியமா தெய்வீகக் காதல் சின்னமா" பாடல்தான்.
காதலுக்கும் முகலாயர்களின் கட்டிடக்கலைக்கும் காலத்தால் அழிக்க முடியாத அற்புதச் சின்னமாக விளங்கும் தாஜ் மஹாலின் அழகை வருணிக்கும் பாடல்.
இந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் கே.வி. மகாதேவனின் திறமை - அவரது இசை ஆளுமை எல்லாமே உலக அதிசயமான தாஜ் மகாலுக்கு நிகராக நம்மை பிரமிக்க வைக்கிறது.
பல்லவியை சங்கராபரண ராகத்தின் அடிப்படையில் அமைத்தவர்.. பல்லவி முடிந்தபிறகு வரும் சரணங்களுக்கு இடையிலான இணைப்பிசையிலும் தொடரும் சரண வரிகளிலும் அரேபிய இசைப் பிரயோகங்களை அற்புதமாக இணைத்திருக்கிறார். அதற்கு அவருக்கு கை கொடுத்த ராகம் "சரசாங்கி".
கர்நாடக இசையில் 27வது மேளகர்த்தா ராகமான சரசாங்கி ஒரு சம்பூரணமான சுத்த மத்யம ராகம்.
முழுக்க முழுக்க இந்த மேளகர்த்தா ராகத்தை அரேபிய இசைக்கான ராகமாகப் பயன்படுத்தி மகாதேவன் பாடலை அமைத்திருக்கும் விதமும், அதனை சி.எஸ். ஜெயராமனும், பி. சுசீலாவும் பாடியிருக்கும் விதமும் .. வருணிக்க வார்த்தைகளே இல்லை.
அதுவும் "முகலாய சாம்ராஜ்ய கீதமே" என்று சுசீலா ஆரம்பிக்கும் அழகும், சரணத்தின் கடைசி வரிகளில் "என்றும் இன்பமே பொங்கும் வண்ணமே என்னைச் சொந்தம் கொண்ட தெய்வமே" - என்றும், "கனியில் ஊறிடும் சுவையை மீறிடும் இனிமை தருவது உண்மைக்காதலே" என்றும் பாடும் போது அவரது குரலில் வெளிப்படும் இனிமையும் உண்மையிலேயே காதுகளில் தேன் பாய்வது என்பார்களே அது இதைத்தானா என்று கேட்கத் தோன்றுகிறது.
கே.வி. மகாதேவனின் இசையில் சங்கராபரணமும், சரசாங்கியும் தான் எப்படி எல்லாம் மருதகாசியின் வரிகளுக்கு ஜீவன் தருகின்றன!
உண்மையிலேயே இது ஒரு காவியப்பாடல் தான்.
1963ஆம் வருடத்தில் மொத்தம் வெளிவந்த 45 தமிழ்ப் படங்களில் கே.வி. மகாதேவனின் இசையில் மட்டுமே இருபத்து மூன்று படங்கள் வெளிவந்தன.
அவற்றில் பெரும்பாலான பாடல்கள் பெரு வெற்றி பெற்ற பாடல்கள்.
எழுத்தாளர் அகிலனின் "வாழ்வு எங்கே" என்ற புகழ் பெற்ற நாவல் ஏ.பி.நாகராஜனின் திரைக்கதை வசனம் இயக்கத்தில் சிவாஜி கணேசன் - சரோஜாதேவி - தேவிகா நடிக்க "குலமகள் ராதை" படமாக வெளிவந்தது.
கே.வி.மகாதேவனின் இசையில் மருதகாசி, கண்ணதாசன் இருவரின் பாடல்கள் அனைத்துமே இன்றளவும் மறையாத பாடல்கள்.
"உலகம் இதிலே அடங்குது" - டி.எம்.எஸ். பாடும் இந்த விறுவிறுப்பான பாடலுடன்தான் படமே தொடங்குகிறது.
"ராதே உனக்கு கோபம் ஆகாதடி" - எம்.கே. தியாகராஜா பாகவதர் பாடிப் பிரபலமான ஒரு பாடல். அதே மெட்டில் டி.எம். சௌந்தரராஜனின் கம்பீரக்குரலில் அப்படியே வார்த்தெடுத்திருந்தார் கே.வி. மகாதேவன்.
"சந்திரனைக் காணாமல் அல்லிமுகம் மலருமா" - டி.எம்.எஸ் - பி.சுசீலா பாடும் இந்தப் பாடலில் முதல் சரணம் முடிந்ததும் நடைபேதம் செய்து அடுத்த சரணத்தை அமைத்து கடைசியில் மீண்டும் பல்லவிக்கேற்ற நடைக்குத் திரும்பிவந்து .. என்று நகாசு வேலை காட்டி இருக்கிறார் கே.வி.மகாதேவன்.
"உன்னைச் சொல்லிக் குற்றமில்லை" - படத்திலேயே டி.எம்.எஸ். குரலில் மிகவும் பிரபலமான இந்தப் பாடலை மகாதேவன் அமைத்திருக்கும் விதம் - வித்யாசமான மெட்டு மனதை வருடுகிறது.
"பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன்" - பி.சுசீலாவின் குரலில் ஒரு சோகப் பாடல்.
"கள்ளமலர்ச் சிரிப்பிலே" - பி.சுசீலாவின் குரலில் செந்தேனாக இனிக்கும் பாடல்.
டி.எம்.எஸ். அவர்களுக்கு என்று பிரபலமான பாடலைக் கொடுத்த மகாதேவன் படத்தின் பெயர் சொன்னாலே நினைவில் நிற்கும் அளவுக்கு பி.சுசீலாவின் குரலில் கொடுத்த பாடல் "இரவுக்கு ஆயிரம் கண்கள்".
பாடல் வரிகளும், இணைப்பிசையும், பாடலை அமைத்த விதமும் படத்திலேயே முதல் இடம் பெற்ற பாடலாக இந்தப் பாடலை நிற்க வைத்துவிட்டது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சொந்தமாக "சிவாஜி பிலிம்ஸ்" பானரில் தயாரித்த முதல் படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பு கே.வி.மகாதேவனுக்கே கிடைத்தது. படம் "அன்னை இல்லம்". பி. மாதவன் இயக்கிய முதல் சிவாஜி படம் இது.
இந்தப் படத்தில் மகாதேவனின் இசையில் பாடல்கள் வெற்றிபெற்று படத்தின் வெற்றிக்கு கைகொடுத்தன.
"நடையா இது நடையா" - டி.எம்.எஸ். - குரலில் ஒரு ஈவ் டீசிங் பாடல்.
"மடிமீது தலைவைத்து" - இன்றளவும் அனைத்து தொலைக்காட்சிச் சானல்களாலும் தவறாமல் ஒளிபரப்பப் படும் பாடல். டி.எம்.எஸ். - சுசீலாவின் குரல்களில் அருமையான ஒரு மெலடி.
"எண்ணிரண்டு பதினாறு வயது" - டி.எம்.எஸ்ஸுடன் "ஹம்மிங்கில்" எல்.ஆர். ஈஸ்வரி இணையும் பாடல்.
"பாசமலர்" தயாரித்த மோகன் தனது "ராஜாமணி பிக்சர்ஸ்" பானரில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் தயாரித்த "குங்குமம்" படத்தின் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்கள்தான்.
சிவாஜிக்கு ஜோடியாக விஜயகுமாரி நடித்த முதல் படம் இது. இவர்களுடன் எஸ்.எஸ். ஆர்., சாரதா, எஸ்.வி. ரங்கராவ், எம்.வி.ராஜம்மா, நாகேஷ், மனோரமா - ஆகியோரும் நடித்திருந்தனர்.
பாடல்களில் ஒரு இசைச் சாம்ராஜ்யமே நடத்தி இருந்தார் கே.வி.மகாதேவன்.
"குங்குமம் மங்கள மங்கையர் குங்குமம்" - சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, பி.சுசீலா இணைந்து பாடும் இந்தப் பாடலை முழுக்க முழுக்க கர்நாடக ராகமான "ஆபேரி"யில் அற்புதமாக அமைத்திருந்தார் அவர்.
"பூந்தோட்டக் காவல்காரா" - பி.சுசீலாவில் குரலில் துள்ளலாகவும் டி.எம்.எஸ். குரலில் விருத்தமாகவும் ஒலிக்கும் பாடல் இது.
.
"இசைச் சக்ரவர்த்தி" ஜி.ராமநாதன் பிரபலப்படுத்திய ராகம் சாருகேசி.
இந்த ராகத்தில் ஒரு அருமையான ஜோடிப்பாடலை வெகு சிறப்பாக அமைத்துக் கொடுத்திருக்கிறார் கே.வி. மகாதேவன்.
"தூங்காத கண்ணின்று ஒன்று" - டி.எம். எஸ். - சுசீலா பாடும் இந்தப் பாடலை மறக்கத்தான் முடியுமா?
இதே போல "தர்பாரி கானடாவில்" டி.எம்.எஸ். - எஸ். ஜானகியின் குரல்களில் ஒலிக்கும் - பிரபலமான "சின்னஞ்சிறிய வண்ணப் பறவை" இசை இன்றளவும் இசை வானில் சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கிறதே.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனை முற்றிலும் மாறுபட்ட வேடங்களில் நடிக்க வைப்பதற்காக தனது அடுத்த கதையை தயார் செய்தார் இயக்குனர் ஏ.பி. நாகராஜன்.
அதுவே நடிகர் திலகத்தின் நூறாவது படமாகவும் அமைந்தது.
ஒன்பது மாறுபட்ட வேடங்களில் நடிகர் திலகம் அசத்திய "நவராத்திரி" படம் கே.வி. மகாதேவனின் இசையில் வெளிவந்தது.
நடிகர் திலகத்துடன் நடிகையர் திலகம் இணைந்து நடித்த இந்தப் படத்தில் மகாதேவன் இசையில் பாடல்கள் கேட்கும்படி அமைந்தன.
"நவராத்திரி சுபராத்திரி" - பி.சுசீலா பாடும் இந்தப் பாடலை பீம்ப்ளாஸ் ராகத்தைப் பயன்படுத்தி இசை அமைத்திருந்தார் கே.வி.மகாதேவன்.
இன்றுவரை ஒவ்வொரு நவராத்திரி பண்டிகைக்கும் தவறாமல் ஒளிபரப்பாகும் பாடல் இது.
"சொல்லவா கதை சொல்லவா" - பி.சுசீலா.
"இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்" - டி.எம். எஸ். பாடும் பாடல்.
மனநோய் மருத்துவமனையில் ஒரு கதம்பப் பாட்டு - பி.சுசீலா, எல்.ஆர். ஈஸ்வரி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி குழுவினருடன் பாடும் பாட்டு.
"போட்டது மொளைச்சுதடி கண்ணம்மா" - டி.எம்.எஸ்.
நாடகத்தந்தை தவத்திரு சங்கரதாஸ் ஸ்வாமிகளில் சத்தியவான்-சாவித்திரி நாடகப் பாடல்களை தொகுத்து அமைத்த தெருக்கூத்துக்கான பாட்டு. டி.எம்.எஸ். - பி.சுசீலா - எஸ்.சி. கிருஷ்ணன் ஆகியோருடன் வசனப் பகுத்திக்கு நடிகர் திலகமும், நடிகையர் திலகமும். இந்தப் பாடல் முழுக்க ஹார்மோனியத்தையும் தபேலாவையும் மட்டுமே பயன்படுத்தி அமைத்திருக்கிறார் கே.வி. மகாதேவன்.
"நவராத்திரி" படத்தை விமர்சனம் செய்த ஆனந்த விகடன் "நடிப்பிலும், கதையிலும் செலுத்திய கவனத்தை பாடல்களிலும் சற்று செலுத்தி இருக்கலாம்" - என்று விமர்சனம் செய்திருந்தது.
ஆனால் "நவராத்திரி" பாடல்கள் அப்படி ஒன்று சோடை போகவில்லை என்பது இன்றளவும் உண்மை.
படமும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதற்கு பாடல்களும் உறுதுணையாக இருந்தாலும் ஆக்கிரமித்ததென்னவோ நடிகர் திலகத்தின் நடிப்புத்தான்.
-
Post Thanks / Like - 3 Thanks, 5 Likes
-
17th May 2015 12:46 PM
# ADS
Circuit advertisement
-
17th May 2015, 06:35 PM
#2142
Junior Member
Veteran Hubber
நீயுமா ..யூ டூ.... you too Brutus : குறுந்தொடர் பகுதி 11 : சிவந்த மண்
திலகத்தை திகைக்க வைத்தவர் : காஞ்சனா
நடிகர்திலகம் காவியங்களில் புதுமையான தொழில்நுட்பங்கள் முதல்தரமான வெளிநாட்டுக் காட்சிகள் விறுவிறுப்பான கதைக்களம் இனிய பாடல்கள் காமெரா கோணங்கள் ...அவரது லட்சிய நடிப்புடன் கூடிய பிரம்மாண்டத்தின் உச்சமான சிறந்த படம் ஸ்ரீதரின் சிவந்தமண்!!
புரட்சி வளையத்தில் தனி மனித ஆசாபாசங்களுக்கு இடமில்லை. ரயிலில் பயணிப்பது blood is thicker than water தந்தையேயாயினும் சலனமின்றி தனது ரயில் தகர்ப்பு திட்டத்தை செயல்படுத்தும் முக்கிய கணத்தில் வெண்ணை திரண்ட தாழியை உடைத்த நம்பிக்கை துரோகி தனது புரூடஸ்ஸி மனைவியே என்றறியும் போது நடிகர்திலகத்தின் அதிர்ச்சி பாவங்கள் நடிக மழலைகளுக்கு அரிச்சுவடிப் பாடங்களே !
Last edited by sivajisenthil; 17th May 2015 at 06:41 PM.
-
Post Thanks / Like - 2 Thanks, 4 Likes
-
17th May 2015, 06:44 PM
#2143
Junior Member
Newbie Hubber
எங்கள் தங்க ராஜா- 1973.
நடிகர்திலகம் படங்களில் வெளி வந்ததிலேயே ,பொழுது போக்கு படங்களில் எனது பிடித்தங்களில் ஒன்று "எங்கள் தங்க ராஜா".அப்போதிருந்த அரசியல் சூழல்கள்,பாமர மக்களை அரவணைக்க படங்களில் நேரடி போதனைகள்,நாயகன் தன்னை அவர்களின் காவலனாக முன்னிறுத்துவது,love teasing ,செண்டிமெண்ட் ,விறுவிறுப்பு, சரியான விகிதத்தில் காதல்,சண்டை காட்சிகள்,நடிகர்திலகத்தின் மறக்க முடியாத வில்லன் பாத்திரங்களில் ஒன்றான பைரவனின் துடிப்பான ஸ்டைல் நடிப்பு ,என்று எல்லா அம்சங்களிலும் எல்லா தரப்பு ரசிகர்களையும் அரவணைத்து A ,B ,C அனைத்து சென்டர்களிலும் பிய்த்து கொண்டு ஓடிய மெகா வெற்றி படம்.
இப்போதைய சூழ்நிலையில் வெளியாகி இருந்தால், ராஜாவின் பைரவன் வேஷத்தை split personality என்று நிறுவி ,இந்த படத்திற்கு புதிய பரிமாணம் சேர்த்திருக்கலாம்.(அந்நியன் போல).புரிதல் இல்லாத அந்த காலத்தில் ,இருவரும் ஒருவரே என்பதோடு நிறுத்தி கொள்ள வேண்டி வந்தது.
ஒரு formula கதைதான். ஆனால் ஒரு புதுமையான வில்லன் பாத்திரம் ,படத்திற்கு ஒரு புத்தொளி பாய்ச்சியது.சீதா என்ற உழைத்து வாழும் ஏழை பெண் ,தன் நோயாளி விதவை தாய் ,மற்றும் ராஜா,ராமு என்ற தம்பிகளுடன் கஷ்ட ஜீவனம். ராஜா அமைதி.ராமு புயல் .வேதாசலம் என்பவன் சீதாவை கடத்தி,கெடுத்து ,கனகா விடுதி என்ற விபசார விடுதியில் சேர்த்து விடுகிறான்.அம்மா மரணமடைய,வேதாசலத்தை தொடரும் ராமு என்ன ஆனான் என்பது தெரியாமல் குடும்பம் சிதைய,ராஜா, தாதா என்ற இஸ்லாமிய குடும்ப நண்பரின் அரவணைப்பில் ,காமராஜ் நகர் என்ற வறிய குடியிருப்பில் இருந்து மருத்துவம் படிக்கிறான்.அந்த குடியிருப்பு மக்களின் அன்புக்கு பாத்திரம் ஆனவனாக திகழ்கிறான்.இந்த நிலையில்,பணக்கார பெண்ணான வசந்தி ,ராஜாவை கவர வம்பு செய்து,தன் காதலை வெளியிட ,ராஜா ஏற்க மறுக்கிறான்.படிப்பு முடிக்கும் ராஜா,தனக்கு வந்த அமெரிக்க வாய்ப்பை மறுத்து, காமராஜ் குடியிருப்பில் மருத்துவ மனை தொடங்கி ஏழைகளுக்கு பணி புரிகிறான்.இவனோடு கோபி என்ற நண்பன்,வசந்தி இணைகின்றனர்.ஒரு கட்டத்தில் வசந்தி,வேதாசலத்தின் பெண் என்றறிந்து,பழி நோக்கோடு ராஜா வசந்தியை காதலிக்க தொடங்குகிறான்.கோபி ஒரு நாள் ,பத்திரிகை பார்த்து விட்டு,பட்டாகத்தி பைரவன் என்ற ரௌடி,விடுதலை ஆனதுடன்,தன் போலிஸ் தந்தையால் கைது செய்ய பட்டதால் ,தன்னை பழி வாங்க வருவான் என்று நடுங்குகிறான்.இப்போது பைரவன் அறிமுகம். கோபியை மிரட்டி தன்னோடு இரவு பொழுதுகளை கழிக்க சொல்கிறான்.ஒரு பொழுது போக்கு விடுதியில் நடக்கும் சண்டையில்,பைரவனால் கவர பட்ட வேதாசலம்,பைரவனை தனக்கு வேலை பார்க்க சொல்கிறான்.அவனை வைத்து ,மோகன் லால் சேட் என்பவனை கொலை செய்ய,பைரவன் அதற்கு பிரதியாக கனகா விடுதியை கேட்டு வாங்கி,விடுதியிலுள்ளோரை விடுவித்து, பணம் கொடுத்து ஊருக்கோ அல்லது அங்கேயே வேலையோ கொடுக்கிறான்.சீதா ,கோபியின் தயவால் டாக்டர் ராஜாவிடம் உதவிக்கு சேருகிறாள்.வசந்தி தன் அப்பாவிடம் கோபித்து ,ராஜாவிடமே வந்து விட,கோபம் கொண்ட வேதாசலம் ராஜாவை கொலை செய்ய பைரவனை அனுப்புகிறான்.ராஜா இறந்து விட்டதாக அனைவரும் துக்க படுகிறார்கள்.பைரவன் ,ராஜாவை கொன்றதற்கு பிரதியாக ,வேதாசலம் மகளை கேட்க ,மறுக்கும் வேதாசலத்தின் முன் மகளை பலவந்தம் செய்ய முற்பட,சீதா வந்து தடுக்கிறாள்.போலிஸ் வந்து விட, மோகன் லால் சேட் உயிரோடு இருப்பதை நிருபித்து,தானே பைரவனாக நடித்த ராஜா என்ற உண்மையை வெளியிட,வேதாசலம் சிறைக்கு செல்லுமுன் ராமு தன்னால் இறந்த உண்மையை வெளியிடுகிறான். ராஜா-வசந்தி திருமணம்.சுபம்.
இந்த படத்தில் மிக மிக highlight என்று சொல்லத்தக்க அம்சங்கள்.(பைரவனை தவிர. அவரை பின்னால் கவனிப்போம்)
ஹீராலால் மாஸ்டர் நடன காட்சிகள் choreography .உத்தம புத்திரன் விக்கிரத்திற்கு யாரடி போல,பைரவனுக்கு முத்தங்கள் நூறு.அதே ஹீராலால்.
ஏ.டீ .வெங்கடேசன் ,நிறைய பிடிகள், டைவ் நிறைந்த சுறுசுறுப்பான சண்டை காட்சிகள்.பெரும்பாலும் டூப் இன்றி நடிகர்திலகமே ரிஸ்க் எடுத்து பண்ணியிருப்பார்.
உடையமைப்பு(கொஞ்சம் பெல் பாட்டம் கீழிறக்கி இருக்கலாம்), மேக் அப் ,சிகையலங்காரம் எல்லாமே தூள் கிளப்பும்..
வீடு செட், ஒரு விலையுயர்ந்த கார் ,மாடியில் படுக்கையறை வரை நுழையும்.
அழகான,ஒல்லியான,இளமையான மஞ்சுளா, திராவிட மன்மதனுக்கு ஏற்ற இணை.
வீ.பீ.ராஜேந்திர பிரசாத் -பால முருகன் இணைவு படத்தை நன்கு நிறுத்தும்.
கே.வீ .மகாதேவன்,தன்னால் action படத்துக்கும் வித்யாசமான இசை தர முடியும் என்று நிரூபித்தார்.நிறைய மௌனம்,விசில் ஒலி ,குறைந்த வாத்தியங்களுடன் அற்புதமான மூட் கொடுக்கும் பின்னணி இசை.நல்ல பாடல்கள்.
கண்ணதாசனின் திறமைக்கு ,scope கொடுத்த கற்பாம்,மானமாம்.
சுசீலாவையே ,சாமியிலும், முத்தங்கள் நூறு பாடல்களை பாட வைத்து, அவரிடம் இருந்த ராட்ஷச திறமைகளையும் வெளி கொண்டு வந்தனர்.
முதல் முறையாக (பராசக்தி நாட்களுக்கு பிறகு), அரசியல்,சமூகம் என்று நேரடியாக இறங்கிய சிவாஜி படம்.
சரியான அளவில் கதை,செண்டிமெண்ட்,love tease ,love ,விறுவிறுப்பு என்று அழகான mixing .படம் போவது தெரியாது.
எடிட்டிங் ,காமெரா ,திரைக்கதை எல்லாமே அருமை. இந்த மாதிரி Genre படத்துக்கு ஏற்ற வகையில்.
இனி நடிகர்திலகம்.
அமைதியான ராஜாவாக , அரைக்கை சட்டை(பெரும் பாலும் வெள்ளை,நீலம் என்ற sober நிறங்கள்.ஒரே ஒரு காட்சி பிரவுன் செக் சட்டை)இன் பண்ணாமல்(Some scenes in-shirted) ,படிய வாரிய தலையுடன் , சிறிதே பெண்மை கலந்த அமைதி நடை.எனக்கு ஆச்சரியம் தந்தது கல்யாண ஆசை வந்த,இரவுக்கும் பகலுக்கும் பாடல்களில் பாத்திரத்தை ஒட்டிய mannerism மற்றும் நடன அசைவுகள்.சிவாஜியும் ஒவ்வொரு காதல் காட்சிகளும் வித்தியாச பட்டு தெரிய இந்த பாத்திரத்தை ஒட்டிய ரசவாத நடிப்பே காரணம்.கல்யாண ஆசை வந்த பாடலில் ஸ்கார்ப் வைத்து கொடுக்கும் ஆரம்ப போஸ் (மஞ்சுளாவுடன்)அழகான ஸ்டில்.( கல்யாண ஆசை வந்த பாட்டின் இறுதியில் மஞ்சுளாவை தொப்பென போட்டு விடுவார். உன்னை நடிப்புக்காக,பழிக்காகவே காதலிக்கிறேன் ரீதியில்.)ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ,புடவை வழியே தெரியும் side shot அவ்வளவு அழகு. மஞ்சுளாவும் குட்டை கை fluffy blouse ,அழகிய புடவைகளில் ஜொலிப்பார்.(என்ன கலர்ஸ்!!!).தான் வாழ்ந்த காலத்திலேயே சிலையாகும் பாக்கியம் வேறு.(கோடியில் ஒருவன் பிறந்து வந்தான்)
பைரவன் பாத்திரம் , உத்தம புத்திரன் விக்ரம்,நவராத்திரி D.S .P கலந்த ஒன்று. அவ்வளவு அழகு.துருதுரு. இளமை.ஸ்டைல்.rogue looks .தலைவர் நடிப்பில் மட்டுமல்ல. உருவத்திலும் உயரமாக தெரிவார் பைரவன் பாத்திரத்தில்.
வித விதமான jacket ,suit ,கூலிங் கிளாஸ் ,tanned make up ,அலட்சிய ஹேர் ஸ்டைல் என்று குதூகலிக்க வைப்பார்.
படத்தை high voltage energy , வேகம், ஸ்டைல், பேச்சு முறை,unpredictable acting என்று அதகளம்.
சூயிங் கம் மென்று கொண்டு, கூலிங் கிளாஸ்,fawn கலர் jacket உடன் அவர் பைக்கில் வரும் ஆரம்ப காட்சியே களை கட்டி விடும்.(அப்படியே உலுக்கி போடும் ரசிகர்களை).
தொடர்ந்த விடுதி காட்சி(Black&Orange Combination). வலது கையால் சிகரெட்டை அலட்சியத்துடன் ஒதுக்கி ,ஒரு நக்கல் சவால் சிரிப்பு. வம்புடன் ஒரு நல்ல சண்டை காட்சி(என்ன ஒரு சுறுசுறுப்பு ,swiftness &Style ).ராணி என்ற சகுந்தலாவை ஒரு பின் தட்டு. முத்தங்கள் நூறு பாடலில் ,இவரின் ஸ்டைல்,action ,நடன முறை பார்ப்பவர்கள் ,ரஜினி தான் நடித்த அத்தனை படங்களிலும் எதை பின் பற்றியுள்ளார் என்பது விளங்கும்.(ஆனால் சிவாஜி இந்த ஸ்டைல் ஒரு படத்துடன் விட்டு விட்டார்)
முக்கியமாக ஆளை அளந்து ,அவர் ஆட்டம் அளந்து வரிகளில் ,ஒரு தாவு தாவி படுக்கையில் விழுவது, கையை வேகமாக இயக்கி நடக்கும் சுறு சுறு நடை. stiff ஆன நடன அசைவுகள். (முக்கியமாக ரஜினி ரசிகர்கள் பார்த்தே ஆக வேண்டும் இந்த பாடலை).
மஞ்சுளாவை ,மனோகர் எதிரிலேயே பண்ணும் அத களம்.படுக்கையில் விழுந்து வேதாசலம் ,இதெல்லாம் உனக்கு தெரியாதுடா, இதெல்லாம் ஜாலி என்று சொல்லும் coolness .
கற்பாம் ,மானமாம் பாட்டில் ஒரு rugged ,cynical ,expressive ,explicit Actions .
போலிஸ் (ஆரஞ்ச் சட்டை,சிறிதே dark pant ) உடன் அடாவடி அடிக்கும் காட்சி அவ்வளவு ஜாலி. நடிகர்திலகம் காட்சியை தன்னை சுற்றி வளைத்து ,தன் மேலே கவனம் குவித்து ,ஆச்சர்யம் தரும் surprise கொடுப்பது ,இந்த சராசரி காட்சிக்கு கிடைக்கும் வரவேற்பே ஆதாரம்.
Grey colour striped with black collar வைத்த அந்த சூட்(மோகன் லால் சேட் கொலை காட்சி,இறுதி வேதாசலம் சம்பந்த பட்ட மீன் தொட்டி காட்சி) ,திராவிட மன்மதனுக்கு ,அப்படி ஒரு rugged manly energetic electrifying looks உடன் கூடிய மிளிரும் அழகை தரும்.(இந்த ஆண்மை நிறை அழகின் பக்கம் யாரும் நெருங்கவே முடியாது). உன் பொண்ணு வேணும் என்று கூலாக கேட்டு ,கல்யாணம் பண்ணிக்க இல்லை, ரெண்டு மூணு நாளைக்கு சும்மா ஜாலியாய், என்று மனோகரின் B .P எகிற வைத்து,நீயா கொடுக்கலை ,பிறகு என்று கழுத்தில் கோடு போட்டு,கைகளை கிராஸ் பண்ணி அவர் துள்ளல் நடை ரசிகர்களை குதிக்க வைக்கும். இறுதி காட்சியில் வரம்பு மீறாத கற்பழிப்பு முயற்சி ,இவரின் நடிப்பு நாகரிகத்தின் உதாரணம்.
எங்கள் தங்க ராஜா மாதிரி படங்களே, பாமர மக்களிடம் சிவாஜிக்கு நடிகர் என்ற முறையில் அளவில்லா செல்வாக்கை ஏற்படுத்தியது.பைரவன் மாதிரி பாத்திரங்களே ,சிவாஜியால் மட்டுமே முடிந்த வகை நடிப்பு திறமை,versatality முதலிவற்றுக்கு கட்டியம் கூறி, அறிவு தேர்ச்சி கொண்டவர்கள்,நடுதரப்பினர்,பாமரர் அனைவருடனும் ,மன இணைப்பை ஏற்படுத்தியது
-
Post Thanks / Like - 2 Thanks, 4 Likes
-
17th May 2015, 06:47 PM
#2144
Junior Member
Newbie Hubber
கெளரவம்-1973
கருணை கொலை,போர் குற்றம் என்பது போல சட்ட தர்மம் என்பதும் வினோத வழக்கு தொடராகவே எனக்கு படும்.கெளரவம் படத்தில் மேலெழுந்த வாரியாக இல்லாமல் பல அழுத்தமான விஷயங்கள் அருமையாக விவாதத்திற்குள்ளாகும் படி கதையுடன் பொருந்தி இடம் பெற்றுள்ளது இன்று வரை என்னை வியப்புக்குள்ளாக்கிறது .
ஒரு வக்கீலின் தார்மீக பொறுப்பு,தர்ம நியாயங்கள் எது வரை செல்லலாம்? அல்லது இருட்டறையில் தர்க்க வாதம் என்ற விளக்கை ஏற்றுவதுடன் அவன் பணி முடிகிறதா?அவன் கொண்ட தொழில் சட்ட அறிவையும்,தர்க்க வாத குயுக்தி திறமையை அடிப்படையாக கொண்டது மட்டுமே.மதம்,ஆன்மிகம் சார்ந்த தர்ம நியாயங்களுக்கு அவன் பொறுப்பல்ல என்றால் ,அறிஞர்கள் கூடி விவாதிக்கும் ஒரு பட்டி மன்றமாக,நீதிபதி ஒரு பட்டி மன்ற நடுவர் என்ற வகையில் சுருங்கி விடாதா?அதை மீறிய ஒரு தொழில் தர்மம் வக்கீலுக்கு உள்ளதா?
நீதிபதி ஸ்தானம் என்பது ஒருவன் விதியை தீர்மானிக்கும் கடவுளுக்கு சமமானது.அந்த பதவிக்கு அரசியல்,சிபாரிசு என்று நுழைந்து ,சட்ட வாயிலையே நீர்க்க செய்தால் ,தகுதியுள்ள திறமையாளன் என்ன மனநிலை அடைவான்?
தன் தொழில் திறமை மீது அசைக்க முடியாத இறுமாப்பு கொண்டவன் ,அதை நேர்வழி செருக்காக(Constructive Arrogance) மாற்றாமல்,தோல்வியை மரணத்துக்கு சமமாக்குவது எந்த வகை தன்னம்பிக்கையில் சேரும்?
தன்னை எடுத்து வளர்த்து போதித்து ஆளாக்கிய ஒரு தந்தை மற்றும் ஆசானுக்கு மகன் செலுத்த வேண்டிய கடன்,சமுதாய கடனுக்கு கீழே வைக்க பட வேண்டிய ஒன்றா?
திருந்தி வாழ நினைக்கும் ஒரு தடம் புரண்ட மனிதன்,தப்பித்த குற்றங்களுக்காக,நிரபராதி நிலையில் தவறான தண்டனையை பெறுதல் ஒரு கவிதை ஞாய தீர்வாகுமா?
ஒரு நேர்மையான கலை படத்துக்குரிய அம்சங்களுடன் வியாபார நுணுக்கங்களையும் நன்கு சேர்த்து செய்த படங்கள் வியட்நாம் வீடு,கெளரவம் போன்ற படங்களாகும்.நடிகர்திலகம்-சுந்தரம் இணைவு நமக்களித்த கலை கொடைகளாகும்.
இரண்டிலுமே பிராமண பாத்திரங்களானாலும்,பிரமிக்க வைக்கும் வேறுபாடு கதாபாத்திர இயல்புகள்,பிரச்சினையின் தன்மைகள் இவற்றுக்கு மேலாய் நடிகர்திலகத்தின் கூடு விட்டு கூடு மாறும் பாத்திர அணுகல்,புரிதல் என்று விரியும்.
ரஜினிகாந்த் செல்வந்தன்.பத்மநாபன் நடுத்தரன்.ரஜினிகாந்த் ஒழுக்க நெறிகளை பற்றி கவலை படாத ,உயர் ரக வெற்றியில் மிதக்கும் ஒரு தொழில் தேர்ச்சி பெற்ற நாத்திகன்.பத்மநாபன் ஒழுக்க அறநெறியில் ஊறிய ஒரு உத்தியோக மேலாளன்.ரஜினி காந்திற்கு மகனுடன் பிணக்கு கர்வம் சம்பத்த பட்டது.பத்மனாபனுக்கோ மகன்/மகள் நெறி வழுவல் சம்பத்த பட்டது.
ரஜினிகாந்தின் பிரச்சினைகள் எதிர்பார்ப்பில் கட்ட பட்டது.பத்மநாபனின் பிரச்சினைகள் அடிப்படை தேவைகளில் கட்டமைக்க பட்டது.இருவரும் ஒரே இனத்தை சார்ந்தாலும் ,இரு வேறு துருவங்கள்.நடிகர்திலகத்தின் பாத்திர வார்ப்பில் இதனை விரிவாக ஆராய்வோம்.இப்போது சிறிதே கதை களம் புகுவோம்.
ரஜினிகாந்த்(வெற்றியின் மிதப்பில் உள்ள செல்வந்த கிரிமினல் லாயர்,உல்லாச விரும்பி ),மனைவி செல்லா,வளர்ப்பு மகன் கண்ணன்(குலநெறிமுரைகளில் திளைக்கும் அம்மா பிள்ளை .பெரியப்பா பெரியம்மாவை உலகமாய் கொண்டு வளர்ந்து வரும் லாயர்) என்று பிரச்சினையே புகாத குடும்பம்.
ரஜினிகாந்த் ,தனக்குரிய அங்கீகாரம்(ஜட்ஜ் பதவி)வழங்க படாததால் கோபமுற்று ,குற்றவாளி என்று உறுதி செய்ய பட்டு தண்டனை விளிம்பில் நிற்போரை தன் வாத திறமையால் விடுவிக்கும் முறையில்,இந்த முறையற்ற அமைக்கெதிரான கோபத்தை வஞ்சமாக தீர்க்கும் முயற்சியில் கிடைத்த கருவி மோகன்தாஸ்.
மோகன்தாஸ் என்பவன் ஒரு பணக்கார மைனெர் பெண்ணை கடத்தி ,அவள் வாழ்வை சீரழித்து ,அவள் மரணத்திற்கு காரணமானவன்.ஆனாலும் ரஜினிகாந்தின் வாத திறமையால் விடுதலை பெற்று ,திருந்தி ,தான் காதலிக்கும் நடன பெண்ணை மணந்து வாழ திட்டமிடும் போது,எதிர்பாராத அவளின் தற்செயல் மரணத்திற்கு குற்றம் சாட்ட பட்டு தண்டிக்க படுபவன்.
மற்றோரின் பார்வைக்கு அதர்மமாக படும் ரஜினிகாந்த் செயலை எதிர்க்க சக வக்கீல் மற்றும் நண்பர்கள் கண்ணனை பப்ளிக் ப்ராசிகியூட்டர் ஆக்கி ,ரஜினிகாந்திற்கு எதிராக தர்மத்தின் பக்கம் நிற்க வேண்டுகிறார்கள்.கண்ணன் பெரியப்பா மனதை மாற்ற இயலாமல்,அவருக்கெதிராக நீதி மன்றத்தில் நிற்க வேண்டிய சூழலில் ,வீட்டை விட்டு வெளியேற்ற பட்டு ,வழக்கில் வென்று,பெரியப்பாவை நிரந்தரமாக தோற்கிறான்.
நடிகர்திலகத்தால் மட்டுமே இந்த பாத்திரத்தை பண்ண முடியும் என்ற வகையே இதில் வரும் ரஜினிகாந்த் பாத்திரம்.prestige பத்மநாபனுக்கு இந்தியா சிமெண்ட்ஸ் நாராயணசாமி போல இதில் வரும் ரஜினிகாந்துக்கு டி.வீ.எஸ்.கிருஷ்ணா என்ற தொழிலதிபர்,கோவிந்த் சுவாமிநாதன் என்ற வக்கீல்,மற்றும் மோகன் ராமின் தந்தை வீ.பீ ராமன் என்ற மூவர் கூட்டணியில் இந்த பாத்திரத்தை வடிவமைத்தார் நடிகர்திலகம்.
குணசித்திர ஒருங்கமைவு,பேசும் பாணி,சிறு சிறு பாத்திர இயல்புகள்,ஸ்டைல்,பாமர மக்களையும் ,படித்தவர்களையும் ஒருங்கே ஈர்த்த பாத்திரம். ஆங்கில வசனங்கள் பாத்திர படைப்புக்கேற்ப அள்ளி தெறிக்க பட்டிருந்தாலும் ,பீ,சி சென்டர்களையும் வெற்றிகரமாக ஈர்த்த பெருமை இந்த படத்துக்குண்டு.
இதில் ரஜினிகாந்த் பாத்திரம், உலவும் ரோல் மாடல்களை கொண்டு சிவாஜியின் கற்பனை திறனால் meisner முறை நடிப்பில் ,ஆஸ்கார் வைல்ட் பாணி சுதந்திர கற்பனை வளம் கொண்ட செழுமையான ஒன்று.
கண்ணன் பாத்திரமோ ,இயல்பு பாணி கொண்ட stanislavsky கூறுகள் அதிகம் கொண்டது.எப்போதுமே ஒரு பாத்திரத்தை ஓங்க வைக்க நடிகர்திலகம் கையாளும் அற்புத உத்தி இதுவாகும்.
An actor should have strange & Rare temperament to convert his own disposition on an imaginative level which was beyond the reach of hampering elements and demands of real life .
Doing justice to the character - என்பதைப் பற்றியே நாம் அதிகம் பேசுகிறோம். அதற்கும் நியாயமான காரணங்கள் உண்டு. மேம்போக்கான அபிப்ராயம் உள்ளவர்களுக்கு அதைப் புரிய வைக்க, அணுக இலகுவாக்க, பார்வை விரிவடைய சொல்லிக்கொண்டே இருக்க வேண்டிய விஷயம்.
அதே சமயத்தில், இதைத் தாண்டி 'இந்த நடிப்பை வெளிப்படுத்த வாகாக ஒரு பாத்திரம் தேவை' - என்ற வகையையும் நாம் சொல்லவேண்டும். End-product என்று பார்த்தால் 'பாத்திரத்துக்குக் கச்சிதமான நடிப்பு' என்ற சட்டகத்திலிருந்து பிரித்து சொல்லமுடியாதபடிக்கு இருக்கலாம். ஆனால் இந்த பாத்திரமே நடிப்புக்காக வார்க்கப்பட்டது என்பதை உணர்ந்து சுவைக்கும் துய்ப்பே தனி!
நடிகனின் வேலையே கவிஞன் மனதை பார்வையாளர்களிடம் பழுதில்லாமல் கொண்டு சேர்ப்பதே. ஒரு நடிப்பையோ ,நடிகனையோ,புற காரணிகளை,நடைமுறை உதாரணங்களை கொண்டு அளவிடவோ ,அடக்கவோ கூடாது.அவர்கள் எந்த ஒரு வாழும் மனிதனிலும் வேறு பட்டு மாறு பட்டவர்கள்.சமூகத்துக்கு, மகிழ்ச்சி கொடுப்பதுடன் சமூகம் செல்ல வேண்டிய திசையை தீர்மானிப்பவர்கள்.அவர்கள் யாருக்கும் எதற்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.அவர்களின் தேவைகளை,அழகியலை,வெளிப்பாட்டை அவர்களே தீர்மானித்து,கதாபாத்திரம் என்ற முகமூடி வாயிலாக தங்களை வெளி காட்டுவார்கள்.சமூகத்தின் பார்வையை(அழகியல்,இயற்கையை ரசிப்பது உட்பட)கலைதான் தீர்மானிக்கிறது.realism உம் கலையும் எந்த காலத்திலும் இணைய முடியாது.ஒரு கலைஞனின் உள்ளுணர்வு சார்ந்து அவன் பார்வையில் interpret பண்ண படுவதே அழகுணர்ச்சி மிகு கலையாகும்.
Strasberg&Stanislavsky focused on the Sense Memory technique using events in one’s past as a way of emotionalizing, Meisner developed his technique using Stanislavski’s revised method. Rather than delving exclusively into one’s past memories as a source of emotion, one could more effectively summon up the character’s thoughts and feelings through the concentrated use of the imagination and the belief in the given circumstances of the text. Meisner defined acting as doing things truthfully under imaginary circumstances and his technique is still known for its depth, reliability and balanced approach.
நாம் ஏற்கெனெவே நடிப்பு பள்ளிகளை விரிவாக இந்தியாவின் ஒரே உலக அதிசயம் தொடரில் அலசி விட்டதால் இங்கு கோடி காட்டி விட்டு , நடிகர்திலகத்தின் பாத்திர அணுகலை,அது சார்ந்த என்னுடைய ரசனை துயிப்பை இனி விரிவாக அலசுவேன்.
ரஜினிகாந்த என்ற கதாபாத்திரத்தை புரிந்தால்,நடிகர்திலகம் எந்த அளவு கவனம் செலுத்தி அதனை செதுக்கியுள்ளார் என்று புரிந்து கொள்ளலாம்.
ரஜினி காந்த் எந்த ஒரு தொடர் வெற்றி பெற்ற திறமைசாலிகளையும் போல ,கடவுளை நம்பியாக வேண்டிய அவசியமில்லாதவர். சில நடத்தை முறைகளால் ,மேலை நாகரிகமானவர் என்று காட்டி கொண்டாலும் ,கீறி பார்த்தால் அக்ரகாரம் எட்டி பார்ப்பதை புன் முறுவலுடன் தொடரலாம்.
பல சுவாரஸ்யங்கள் பட திரைகதையிலேயே உண்டு.குடிக்க ரஷ்யன் வோட்கா தேடும் மனிதன் ,கட்டி கொள்வதோ கடமுடா பட்டி பக்தையை.
மகன் அம்மா புள்ளை என்று கேலி செய்தாலும், மகனிடம் எதிர்பார்ப்பது ,கோடு தாண்டா conservative mentality யைத்தான்.மகன் காதலிக்கும் போது அவர் அடையும் அதிர்ச்சி, அடக்கி வைக்க முற்படும் அதிகாரம்,தன் கருத்தை எதிர்க்கவே உரிமையில்லை என்று அவர் பண்ணும் ஆகத்தியம் .அதே போல தன் பெருமை பற்றி மனைவியிடம் செல்லமாக அலசும் சற்றே அக்ரகார நேர்த்தி. முதல் தோல்வி(justice post )அவர் ரத்தத்தை சூடாக்கி ,எல்லை மீறி தன் திறமையை நிலை நாட்டுவதில் முடிந்தாலும் ,தாங்க முடியாத எதிர்பார்ப்பு நிறைந்த வர போகும் தோல்வி ,திலகம் வேண்டும் அளவு sentiment ஆக்கி விடுவது,மதில் மேல் பூனையான விளிம்பு நிலை மனிதரை குறிக்கிறது.
கண்ணனிடமோ ,குழப்பமே இல்லாத confimist .ஆனால் பெரியம்மாவை
புரிந்த அளவு பெரியப்பாவை புரியாதவனோ என்ற குழப்பம் அவ்வப்போது.ஆனால் தர்மம்-அதர்ம போரில் இழு படுவது ஒரு வித moral preaching தந்த குழப்ப நிலையே.
இப்போது படத்தை பார்த்தால் புரியும் ,எத்தனை ஆழமாக நடிகர்திலகத்தின் புரிதல் உள்ளது என்பது.ஒரு வக்கீலின் அதீத உடல் மொழி (கர்வம் நிறைந்த தன்னம்பிக்கை. ,தான் நினைப்பது சொல்வது மட்டுமே சரி என்று உணர்த்த அலையும் தொழில் சார்ந்த aggression )முதல்,அழுத்தி பேசி மற்றவரை ஆக்ரமிக்கும் வசன முறை.கிண்டல்,கேலி,துச்சம்,அகந்தை,என்ற எடுத்தெறிதல் என்று அவர் பண்ணும் அதகளம்,இந்த பாத்திரங்களுக்குதானே இவர் பிறந்து வந்தார் என்ற மலைப்பையே அளிக்கும்.
ரஜனி காந்த் பாத்திரத்தை விட்டு விட்டு கண்ணனை மட்டும் பார்த்தாலும்,ஒரு சாத்திர முறையில்,சட்டதிட்டங்களுடன் வளர்க்க பட்ட ஒரு ஆசார குல பிள்ளையை அவர் நடித்து காட்டும் நேர்த்தி.அப்பப்பா....
கவுரவத்தில் எதை எடுப்பது ,எதை விடுவது?
ரஜனிகாந்த் ,கண்ணனிடமும்,செல்லாவிடமும் பேசும் ஆத்திக அடாவடி காட்சியா,கண்ணன் காதல் தெரிந்து கண்டிக்கும் காட்சியா,செந்தாமரையிடம் பேசி விட்டு உன் friend மொகத்திலே ஈயாடல பாத்தொயோ காட்சியா,மைலாபுர்லே எல்லாரும் என்னடி பேசிக்கிறா என்ற வம்பு காட்சியா, மோகனதாசிடம் போடா சொல்லும் அலட்சிய காட்சியா,monotony தவிர்க்க வீட்டிலேயே அமைக்க பட்ட கோர்ட் காட்சியா,கண்ணனிடம் confront பண்ணும் காட்சியா(curt ),தன்னுடைய பழைய கோட் வாங்க வரும் கண்ணனிடம் அவர் மாடியிலிருந்து பேசும் காட்சியா,கடைசியில் நம்பிக்கை தளரும் காட்சிகளா என்று படம் முழுதும் விருந்து.
நடிகர்திலகம் படங்களில் நான் எப்போதுமே முதல் பத்துகளில் நடிப்பு,படம் இரண்டுக்குமாக நான் தேர்ந்தெடுக்கும் அதிசயம்.
Last edited by Gopal.s; 17th May 2015 at 07:10 PM.
-
Post Thanks / Like - 2 Thanks, 5 Likes
-
17th May 2015, 07:10 PM
#2145
Junior Member
Newbie Hubber
ராஜபார்ட் ரங்கதுரை -1973
ராஜபார்ட் ரங்கதுரை பற்றி நிறைய முறை எழுத நினைத்து தள்ளி சென்று கொண்டிருந்தது. இப்போது வலை பூ மற்றும் ராகவேந்தர் தயவில் ஊக்கம் கிடைத்து விட்டது.
முதலில் கதை பயணிக்கும் திசைகள்......
ரங்கதுரை இளமை பருவம் ,ஆதரவற்ற நிலை (தம்பி,தங்கை),நாடக ஆசிரியர் ஆதரவு.
ரங்கதுரை நாடக நடிகன் ஆவது, சில பல நாடக காட்சி பதிவுகள்.
ரங்கதுரை திருமண பிரச்சினை ,அதை மீறி நடக்கும் திருமணம், தங்கையின் வாழ்க்கை (திருமண) அது சார்ந்த போராட்டங்கள். தம்பியின் தகுதி மீறிய ஆசை,அது சார்ந்த பொய்மை நிறைந்த பிரச்சினைகள் (நன்றி மறத்தல்).
ரங்கதுரை எதிர்கொள்ளும் எதிர்ப்புக்கள், சில பல வில்லன்கள் (கொலை வரை செல்வது)
இதில் முன் நிற்பது நடிகர்திலகம்.
அவருடைய அமெரிக்கையான நடிப்பு முறை. தொழில் சார்ந்த நடிகர்கள் யாரையும் பகைக்கவோ, யாரிடமும் குரல் உயர்த்தவோ இயலாது. அதனால் ஆதரவு வேண்டும் குரலிலேயே அவர் பாத்திர படைப்பு கையாள படும். ஒரு இறைஞ்சும் மெல்லிய குரலில். நடையிலும் ஒரு மென்மையான பெண்மை கலந்த அமெரிக்கை வெளிப்படும். அவரே பாய்ஸ் கம்பெனி நடிகர் என்பதால் இதில் போய் நடிக்கவா வேண்டும்? வாழ்ந்திருப்பார்.
ஒரு அற்புத விந்தை, அவர் எந்த இடத்திலும் உணர்ச்சிகளை ஓங்கியே வெளிபடுத்த மாட்டார். தனக்கு வசனங்கள் தேவையேயில்லை என்று பல காட்சிகளில் உணர்த்தி அதிசயம் படைப்பார். சுருங்க சொல்ல வேண்டுமென்றால் ,தன் தங்கையின் கணவன் ,இரண்டாம் திருமண காட்சி. சுமார் நான்கு நிமிடங்கள் எந்த வசன துணையுமின்றி ,அவர் பார்க்கும் பார்வை.ஒவ்வொரு பார்வையாளருக்கும் ஒவ்வொரு அர்த்தம் கொடுக்கும். அதில் தெரிவது விரக்தியா,இறைஞ்சலா,எதிர்பார்ப்பா,மிரட்டலா,கொந ்தளிப ்பா, உதாசீனமா,தன்னிரக்கமா,தவிப்பா, ஊமை கதறலா,உண்மை பாசமா,கோழைக்கு விடுக்கும் சவாலா என்று இனம் காண முடியாத ஒரு புதிர்த்தன்மை நிறைந்த நடிப்பின் உச்ச சாதனை. ஒரு எழுத்தாளர் கூட வார்த்தை துணையுடன் ,இந்த உணர்ச்சி கொந்தளிப்பை ,குவியலை கொண்டு வருவது மகா கடினம்.
அதே போல தங்கை இறந்த செய்தி கிடைத்து, அவர் கோமாளி வேடத்தில் நடித்தே ஆக வேண்டிய இடத்தின் சிரித்தே வெளியிடும் ஊமை துயர கதறல்.
தங்கையின் கணவனை (இறந்த பிறகு)பார்த்து நீயெல்லாம் மனுஷனா ரீதியில் உதாசிக்கும் சீ போடா .
தம்பியிடம் உணர்ச்சியை வெளியிட முடியாது,தவிப்புடன் (தகிப்புடன்) பாடும் அம்மம்மா.....
நாடகம் சார்ந்த காட்சிகள் என்றால் நடிகர்திலகத்திற்கு கேட்கவா வேண்டும்? இதில் முக்கியமாக குறிக்க வேண்டியவை பகத் சிங். இதில் கைகள் கட்ட பட்ட நிலையில்,அதன் துணையின்றி நேர்காட்சி,பின் காட்சி,பக்க வாட்டு காட்சிகள் என உடல் மொழி,முகபாவம் ,நடை தாளம்(திமிறி) கொண்டு அவர் வெளியிடும் உசுப்பேற்றும் வீர சுதந்திர உணர்வு. (இதுதான் ஒரிஜினல் action hero .போலி சண்டை காட்சிகள் தேவையில்லை).
அவரின் ஹாம்லெட் நாடக காட்சி ,ஒரு ஷேக்ஸ்பியர் பள்ளிக்கு பாடமாக செல்ல வேண்டிய அதிசயம்.
ஹாம்லெட் ,தன் தந்தையை கொன்று தாயை மணந்த சதிகாரன் சித்தப்பன் கிளாடியஸ் என்பவனை பழிதீர்க்க ,தந்தையின் ஆவியின் வற்புறுத்தலால் மன சாட்சியுடன் உரையாடும் (காதலி ஒபிலியாவிடம் காதலை முறி க்குமுன்பு), காட்சி. வாழ்வதா சாவதா என்ற மன சாட்சி போராட்டம் ,வாழ்வின் அவலங்கள்,சாவுக்கு பின் என்ன எனும் கேள்விகள் என்று மனதத்துவ சிக்கல்கள் நிறைந்த Nunnery Scene என்று connoiseurs குறிக்கும் Act 3 Scene 1.முதல் வியப்பு உலகத்தின் அத்தனை விதமான பாத்திரங்களும் பொருந்தும் முக அமைப்பு.இரண்டாவது வியப்பு ஒதெல்லோ,ஹாம்லெட் பாத்திரங்களுக்கு மற்றவர் குரல் கொடுத்தாலும் அவர் உள்வாங்கி நடித்த சிறப்பு.
ஹாம்லெட் பாத்திர காட்சி சிறிதே சிக்கலான monologue .(இதே மன போராட்ட காட்சி சாந்தி படத்தில் வேறு வடிவில்),வாழ்வதா சாவதா, சாவுக்கு பின் என்ன என்ற மன போராட்டம்.வாழ்க்கை பற்றிய கேள்விகள். Odipus Complex கொண்டு தன் அன்னையிடம் வெறுப்பு கலந்த நேசம் ,இரண்டாம் தந்தையை (சித்தப்பன்)பழிவாங்கும் உணர்வு, தந்தையின் ஆவியால் துன்புற்று, காதலியை துறக்க முயலும் சிக்கல். வெறித்த விழிகளோடு , கத்தியுடன் stylised முறையில் சிந்தனை கலந்த நடையில் அவர் திரும்பும் விதம் இந்த காட்சிக்கு புத்துயிர்ப்பு கொடுக்கும்.இதற்கு குரல் கொடுத்த பேராசிரியர் சுந்தரம் இந்த பாணியில் இந்த காட்சி நடிக்க பட்டதே இல்லையென்றும் ,வசனங்களை காட்சியுடன் இணைக்க மிகவும் பிரயத்தனம் எடுத்ததாகவும் வியந்து பாராட்டி உள்ளார்.
இந்த படத்தின் பலம் சிவாஜி,சிவாஜி,சிவாஜி,சிவாஜி,சிவாஜி(எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதி கொள்ளுங்கள்).அதனை தவிர இதன் நற்தன்மை,நன்னோக்கம்,கண்ணியமான படமாக்கம். ஒன்றிரண்டு பாடல்கள் அம்மம்மா, மதன மாளிகையில்.
பலவீனம் என்றால்,
அலுப்பு தட்டும் திரைக்கதை , தட்டையான பாத்திர வார்ப்புக்கள்.இதில் வரும் பாத்திரங்கள் நல்லவர்-அல்லாதவர் என்ற பகுப்பு. வாத்தியார் வீ.கே.ஆர் பாத்திரத்தில் சுத்தமாக உண்மை தன்மை இன்றி நல்லவராக மட்டும் glorify பண்ண பட்டுள்ளார்.(சிவாஜியின் கதை படிப்போருக்கு இந்த பாத்திரம் மிக தட்டையான ஒற்றை பரிமாணம்.அந்த கால படங்களின் glorification ).எல்லா பாத்திரங்களுமே உண்மை தன்மை இல்லாதது. Plastic Characters .
இதில் கூத்து கலை பற்றி,அதில் இருக்கும் நடிகர்களின் வாழ்க்கை பற்றி எந்த ஆழமான பதிவுகளும் இல்லை.
குடும்ப பிரச்சினைகளை எடுத்தாலும், ஒரு பீம்சிங் கால படங்களை போல பிரச்சினைகளில் ஒரு புத்திசாலித் தன வித்தியாச பாத்திர சிக்கல்கள் இல்லை. வெளிப்படையான ,சுவாரஸ்யமற்ற சிக்கல்கள். வெறும் உருக்கம் மட்டுமே கொண்டது.
மற்ற பாத்திரங்கள் miscast என படும் தவறான தேர்வு. முக்கியமாக உஷாநந்தினி, ஸ்ரீகாந்த். நவராத்திரி,தில்லானா எடுபட்டதென்றால் ஏ.பீ.என் , அவருடைய troupe ,சாவித்திரி போன்ற சக நடிகர்களின் பங்களிப்பு.இதில் உஷா நந்தினி போன்ற பதுமைகளோ,மாதவன் போன்ற இயக்குனரோ அந்த மாயத்தை சாதிக்க முடியவில்லை. விஸ்வ நாதனிடம் ,கே.வீ.எம் இன் authentic period music கிடைக்கவில்லை. ஆத்மார்த்தமான நிஜமான பங்களிப்பு ஏ.பீ.என்,கே.வீ.எம் கூட்டணிக்கே சாத்தியம்.
நாடக நடிகனை பற்றிய கதை,சுவையற்ற ,ஜீவனற்ற துணுக்கு கூத்துக்களை தொகுத்தளித்தாலும் ,நாடக நடிகனின் வாழ்கை பற்றி பேசவேயில்லை. மாறாக ,இதன் கதாநாயகன் எந்த தொழில் சேர்ந்தவனாக இருந்தாலும் ,இந்த கதை சொல்ல பட்டு விடலாம் என்பது முக்கிய பலவீனம். பாலமுருகன்-மாதவன் கூட்டு ,இந்த கதைக்கு வலு சேர்க்கவே இல்லை.
ராஜபார்ட் ரங்கதுரை சிவாஜியை மட்டுமே நம்பியது. சிவாஜியால் மட்டுமே வெற்றி பெற்றது. இதற்கு உரிய கவனம் கொடுத்து செதுக்க பட்டிருந்தால் ,மகா வெற்றி பெற்றிருக்க கூடிய சாத்தியகூறுகள் கொண்ட கரு.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
17th May 2015, 07:16 PM
#2146
Junior Member
Veteran Hubber
Gap filler comedy scenes from NT starrers 1
Anjal Petti 520 : enjoy the climax from this light vein comedy movie!!
-
17th May 2015, 07:20 PM
#2147
Junior Member
Newbie Hubber
Senthil,
Pl.Give space and time to digest earlier postings.
-
17th May 2015, 07:31 PM
#2148
Junior Member
Veteran Hubber
Gap filler nostalgia on Sivandha Mann, the technically outstanding movie of NT!!
சிவந்த மண்ணில் இடம்பெற கப்பல் தகர்ப்பு திகில் நிமிடங்கள் புதுமை இயக்குனர் ஸ்ரீதர் ஒரு சுவையான சுவாரஸ்யமான மாற்றாக பாடல் ஏதுமின்றி
மேஜிக் ராதிகாவின் கப்பல் தள நடனக் காட்சியை பாலகிருஷ்ணன் ஒளிப்பதிவில் மிக வித்தியாசமான கவர்சிக் கோணங்களில் படமாக்கி பிரம்மாண்ட
கண்களுக்கு விருந்தாக படைத்தார்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th May 2015, 07:33 PM
#2149
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Gopal,S.
Senthil,
Pl.Give space and time to digest earlier postings.
oh yes Gopal. Take your time and I wait till you clear your concept without interruptions.
regards, senthil
-
17th May 2015, 09:45 PM
#2150
Senior Member
Diamond Hubber
கோ
அருமை. என்ஜாய் பண்ணி படித்துக் கொண்டிருக்கிறேன். டைம் பத்தாது. திரும்ப படிக்க வேண்டும்.
//இப்போது படத்தை பார்த்தால் புரியும் ,எத்தனை ஆழமாக நடிகர்திலகத்தின் புரிதல் உள்ளது என்பது??//.
பண்டரிபாய் பகவத் கீதை படித்துக் கொண்டிருப்பார். தலைவர் கேட்பார்.
"என்னது? பகவத் கீதை படிக்கிறியா? இதுல ஒரு கட்டம் வருமே"...
என்று கீதையைக் கையில் வாங்கியபடி தொடர்வார்.
இதில் என்ன என்று கேட்கிறீர்களா? அதிலேயே எல்லாம் முடிந்து விட்டது. அவருக்குத் தெரியாததே ஒன்றும் இல்லை என்று அந்த ஒரு வரியிலேயே முடித்து விடுவார். பகவத் கீதை மட்டுமல்ல... அனைத்தும் அவருக்கு அவருக்கு அத்துப்படி என்று அந்த டயலாக் டெலிவரியிலேயே ரொம்ப ஈஸியாக அனைவருக்கும் புரிய வைத்து விடுவார்.
'மூன்றடி மண் கேட்டான்
வாமனன் உலகிலே'
வரிகளின் போது அங்கிருக்கும் வாமனன் சிலையை படு அலட்சியமாக இடது கையால் சுட்டிக் காட்டுவார். கடவுள் என்ற மதிப்பை காட்டவே மாட்டார். கன்டின்யூட்டியில் கரெக்ட்டாக இருப்பார்.
இடையிசையில் இந்த சிங்கம் செய்வதறியாது அங்கும் இங்கும் உலாத்தும் போது தேவி சிலை முன் கீதை படிக்கும் பண்டரிபாய் கணவனை கண்காணிக்கும் ஆழத்தையையும் சொல்லித்தான் ஆக வேண்டும். பிரமாதமான ஒத்துழைப்பு.
Last edited by vasudevan31355; 17th May 2015 at 09:54 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
Bookmarks