-
28th May 2015, 10:51 AM
#361
Senior Member
Senior Hubber
வாசுதேவன் ஜி,
ஒரு சின்ன தப்பு நடந்து போச்சி. நான் தங்கத்தின் தங்கம் படத்தில் நடித்த ராகசுதாவைப் பற்றி கேட்கவில்லை. அந்த படத்தைப் பற்றிய கூடுதல் விவரங்கள் கேட்டிருந்தேன். நடிகை ராகசுதா கே. ஆர். விஜயாவின் உறவு என்றும், நித்த்யானந்தாவின் சிஷ்யை, நடிகர் ரஞ்சித்தை இரண்டாம் மணம் முடித்தார் என்றும் அறிவேன். ஆனால் நீங்கள் கூடுதல் விவரம்தான் கொடுத்துள்ளீர்கள். அதுதான் விவாஹரத்து போன்ற மேற்படி விவரங்கள்தான். அவர்தான் 'பார்வதி என்னைப் பாரடி' என்ற படத்தில் நடித்தார் என்று நமது சி.க. தப்பாக எடுத்துக் கொண்டு விட்டார். 'பார்வதி என்னைப் பாரடி' படத்தை நான் இரண்டு முறை பார்க்க நேர்ந்தது. 1993-ல் வெளிவந்தது. அதில் சித்தப்பா சரவணன் நாயகனாக நடித்திருந்தார். பாடல்கள் எல்லாமே அருமை. நம்ம ராசாதான் இசை. நாயகியாக நடித்தது ஒரு கன்னட நடிகை. அந்தப் படத்தில் பார்வதி என்று பெயர் கொடுத்திருந்தார்கள். சில பத்திரிகைகளில் ஸ்ரீ பார்வதி என்று குறிப்பிட்டார்கள். அந்த படத்தின் தோல்விக்கு பின்னர் அந்த நடிகை தமிழில் வந்தாரா இல்லையா என்று தெரியவில்லை.
மற்றபடி நான் கேட்ட நடிகை 'செங்கமலத் தீவு' படத்தில் 'பாடுவோம், பூமாலை சூடுவோம்' பாடலின் ராணியாக வரும் நடிகையைத்தான்.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
28th May 2015 10:51 AM
# ADS
Circuit advertisement
-
28th May 2015, 10:57 AM
#362
Senior Member
Diamond Hubber
//ஒரு சின்ன தப்பு நடந்து போச்சி//
right.
-
28th May 2015, 11:06 AM
#363
Senior Member
Senior Hubber
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..
//நாயகியாக நடித்தது ஒரு கன்னட நடிகை. அந்தப் படத்தில் பார்வதி என்று பெயர் கொடுத்திருந்தார்கள். சில பத்திரிகைகளில் ஸ்ரீ பார்வதி என்று குறிப்பிட்டார்கள். அந்த படத்தின் தோல்விக்கு பின்னர் அந்த நடிகை தமிழில் வந்தாரா இல்லையா என்று தெரியவில்லை// அதானே.. சின்னக்கண்ணனை எப்படில்லாம் ஏமாத்தறாங்க பாருங்க கல் நாயக்.. 
//பார்வதி என்னைப் பாரடி' படத்தை நான் இரண்டு முறை பார்க்க நேர்ந்தது. 1993-ல் வெளிவந்தது. அதில் சித்தப்பா சரவணன் நாயகனாக நடித்திருந்தார். பாடல்கள் எல்லாமே அருமை.// ஆமாம் கல் நாயக்.. நானும் கேட்டேன்..இங்கே போட முடியாத ஒரு மழைப்பாட்டு கூட ஒன்று உண்டு..(மிட் நைட் மசாலா ஆகிவிடும்) நன்னாயிட்டு இருந்தன..ஆமாம் என்னவாக்கும் கதை..
.
-
28th May 2015, 11:29 AM
#364
Senior Member
Senior Hubber
என்ன பார்த்து எப்பிடி இப்பிடியெல்லாம் நீங்க கதை கேட்கலாம் சி.க?
எனக்கு அவ்வளவு முழுசா நியாபகம் இருக்கா தெரியலையே. எதோ எனக்கு தெரிஞ்சதை வச்சி சொல்றேன். நம்ம நாயகன் அன்பான அம்மா அப்பா உள்ள ஆனால் ஒரு வேலைக்கும் போகாத (அதாவது வேலை-வெட்டிக்குப் போகாத ஆளில்லை - வேலைக்குப் போகாம, வெட்டியா திரியிற) ஆள். ஸ்கூல் போற ஊர்லையே பெரிய பணக்கார நாயகிக்கு நம்ம நாயகன் மேல 'அது' வந்துடுறது. ரெண்டுபேரும் அவங்க அவங்க தொழில மட்டம் போட்டு ஊரை சுத்துறாங்க. நாயகனுக்கு அவரைப் போலவே வெட்டியா திரியிற சில நண்பர்கள். நாயகியின் அப்பாதான் வில்லன். இதுக்கு மேல கதையை நான் சொன்னால் எல்லாரும் அடிக்க வந்துடுவாங்க. நீங்களே நிரப்பி முடிச்சிகோங்க. இதை சொல்ல வேணாம்தான், இருந்தாலும் எதுக்கு ஒரு சஸ்பென்ஸ் வச்சிக்கிட்டுன்னுதான்: கடைசியிலே வழக்கம்போல காதலர்கள் ஒண்ணா சேர்ந்துடுவாங்க.
Last edited by kalnayak; 28th May 2015 at 12:57 PM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
28th May 2015, 11:36 AM
#365
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
28th May 2015, 11:40 AM
#366
Senior Member
Senior Hubber
வாசு நன்றி.
சிறிது சந்தேகம் இருந்தது. இருந்தாலும் பிரிண்ட் சரியில்லையா. ராஜஸ்ரீ என்று உறுதியாக சொல்ல முடியாமல்தான் யாரென்று கேட்டேன். முழுமைப் படுத்திவிட்டீர்கள். வாசுன்னா வாசுதான்.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
28th May 2015, 11:40 AM
#367
Senior Member
Diamond Hubber
இங்க என்னடான்னா போட்டோ பக்கெட் கேக்குறாக
வீட்டுல என்னடான்னா தண்ணி பக்கெட் கேக்குறாக
வேலையிலே என்னடான்னா நிலக்கரி பக்கெட் வீலை பழுது பார்க்க சொல்றாக.
என்ன நம்ம பொழப்பு பக்கெட்டாவே ஆகிப் போச்சு.
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
28th May 2015, 11:59 AM
#368
Senior Member
Senior Hubber
பூவின் பாடல் 17: ஓ….. ஆயியே ஆயியே ஆயியே ஆயி தூவும் பூ மழை நெஞ்சிலே
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~~~~~
இங்க பாருங்க அயன் படத்திலே பூமழை நெஞ்சிலே-ன்னு ஆடிப் பாடறதை. இன்னா ஆட்டம் ஆடறாங்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையில யப்பா.
ஆண்:
ஓ….. ஆயியே ஆயியே ஆயியே ஆயி
தூவும் பூ மழை நெஞ்சிலே
ஓ…..வசமே சுவாசமே வாசமே வந்து
மையல் கொண்டது என்னிலே
நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து
கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ
என் கையில் வளைந்து என் மீது மிதந்து
சாலையில் நடக்கிற நிலவு நீ
தீயில் தீயில் விழ தித்திக்கின்றேன் நான் தானா
ஓ….. ஆயியே ஆயியே ஆயியே ஆயி
தூவும் பூ மழை நெஞ்சிலே
ஓ…..வசமே சுவாசமே வாசமே வந்து
மையல் கொண்டது என்னிலே
பெண்:
என் கையில் வளைந்த என் மீது மிதந்த
மாலையில் நடக்கின்ற நினைவு நீ
ஆண்:
ஒரு கண்ணில் ஒரு கண்ணில் அமுதமும்
மறு கண்ணில் மறு கண்ணில் மதுரமும்
சுமக்கின்ற சுமக்கின்ற அழகிலே
பெண்:
ஒரு கையில் ஒரு கையில் நகங்களும்
மறு கையில் மறு கையில் சுகங்களும்
எனக்குள்ளே கொடுக்கின்ற இனியவனே
ஆண்:
இதழ் பூவென்றால் அதில்
தேன் எங்கே இங்கு பூவேதான்
தேன் தேன் தேன் தேன் தேன்
ஓ….. ஆயியே ஆயியே ஆயியே ஆயி
தூவும் பூ மழை நெஞ்சிலே
ஓ…..வசமே சுவாசமே வாசமே வந்து
மையல் கொண்டது என்னிலே
பெண்:
இமைக்காத இமைக்காத கண்களும்
எனக்காக எனக்காக வேண்டினேன்
உனைக் கண்டு உனைக் கண்டு இரசித்தேன்
ஆண்:
முதல் முத்தம் முதல் முத்தம் தந்ததும்
இதழ் மொத்தம் இதழ் மொத்தம் வெந்ததும்
அதை எண்ணி அதை எண்ணி இனித்தேனே
பெண்:
சுடும் பூங்காற்றே சுட்டுப் போகாதே
இனி நானிங்கே மழைச் சாரல் பூவாய்
ஆண்:
ஓ….. ஆயியே ஆயியே ஆயியே ஆயி
தூவும் பூ மழை நெஞ்சிலே
ஓ…..வசமே சுவாசமே வாசமே வந்து
மையல் கொண்டது என்னிலே
நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து
கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ
என் கையில் வளைந்து என் மீது மிதந்து
சாலையில் நடக்கிற நிலவு நீ
தீயில் தீயில் விழ தித்திக்கின்றேன் நான் தானா
ஓ….. ஆயியே ஆயியே ஆயியே ஆயி
தூவும் பூ மழை நெஞ்சிலே
ஓ…..வசமே சுவாசமே வாசமே வந்து
மையல் கொண்டது என்னிலே
ஆமா அயனுக்கும் இந்த படத்துக்கும் இன்னா சம்பந்தம் பேரா வைக்கிறதுக்கு?
Last edited by kalnayak; 28th May 2015 at 12:41 PM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
28th May 2015, 12:35 PM
#369
Senior Member
Senior Hubber
வாசு ஜி..உங்க நிலைமையைப் பார்த்தா எனக்கு பக்கெட் பக்கெட்டா கண்ணீர் வருது.. இந்தப் பாட்டில உங்களப் பத்தியே சொல்லியிருக்காக..
நாங்க ஏதாவது கேட்டா நீங்க உடனே கொடுத்துடுவீங்க (ஸ்ரீபாரதி அல்லது பார்வதி கிடைக்கலைன்னா என்ன செய்வீங்க..ஒரு ஆல்ட்ர்னேட் கொடுத்துடுவீங்க
) தானே..
மலர்கள் கேட்டேன்
வானமே தந்தனை
தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை
எதை நான் கேட்பின்
உனையே தருவாய் (பயந்துடாதீங்க..பாட்டு லைன்ஸ்.. நாங்க கேக்கல்லாம் மாட்டோம் உங்க் வீ.காரமமா கோச்சுக்குவாங்க)
ஓ.கே கண்மணி.. பார்த்திருக்க மாட்டீங்கன்னு தெரியும் நித்து மேனன், துல்கர் சல்மான்..பாட்டு ந்ல்லாயிருக்கும்

Originally Posted by
vasudevan31355
இங்க என்னடான்னா போட்டோ பக்கெட் கேக்குறாக
வீட்டுல என்னடான்னா தண்ணி பக்கெட் கேக்குறாக
வேலையிலே என்னடான்னா நிலக்கரி பக்கெட் வீலை பழுது பார்க்க சொல்றாக.
என்ன நம்ம பொழப்பு பக்கெட்டாவே ஆகிப் போச்சு.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
28th May 2015, 07:06 PM
#370
மிகை நடிப்பு
ஆனந்த விகடன் பொக்கிஷம்
'தேவர்மகன்' ஷூட்டிங்... அப்ப நான் சினிமாவுக்கு வந்த புதுசுங்கறதால, சூப்பரா நடிக்க ணுங்கற நினைப்புல ஓவர் ஆக்ஷன் பண்ணிடுவேன். அந்தப் படத்தில், கமல்ஹாசனோட அப்பா சிவாஜி சார் இறந்து போகிற ஸீன்! சிவாஜி இறந்து கிடப்பார். பக்கத்தில் குழந்தைகள்... கால்மாட்டில் நானும் சங்கிலி முருகனும். கமல் சார் கொஞ்சம் தூரத்திலிருந்து ஓடி வருவார். எல்லோரும் சேர்ந்து அழணும். கமல் சார் என்னிடம், 'தத்ரூபமா அழணும்பா' என்றிருந்தார். 'ஷாட் ரெடி!' என்று குரல் கேட்டதுமே... 'ஐயோ! எங்களை விட்டுப் போயிட்டீங்களேய்யா... ஐயா!' என்று எட்டுப்பட்டிக்கும் கேட்கிற மாதிரி குய்யோ முறையோ என ஓலமிட்டு அழ ஆரம்பித்தேன். பத்து செகண்ட்கூட ஆகியிருக்காது. 'கட், கட்' என்றபடி பிணம் எழுந்துவிட்டது. சிவாஜி சார் தான்! என்னைப் பார்த்து, 'இங்க வாடா' என்றார் முறைத்தபடி. நான் பயந்துகொண்டே நெருங்கினேன். 'நீ ஒருத்தன் அழுதா போதுமா... மத்தவன் யாரும் அழ வேண்டாமா? என் மகனா வர்ற கதாநாயகனே மெதுவா அழறான். நீ ஏண்டா இந்தக் கத்துக் கத்தற? நீ கத்தற கத்தில் உன் உசுரும் போயிடப்போகுது! துண்டை வாயில் வெச்சுக்கிட்டு கமுக்காம விசும்பி அழு, போதும். ஓவர் ஆக்ஷன் பண்ணா உதைபடுவே படுவா!' என்றார். சிவாஜி சாரைக் கோபப்பட வைத்த எனது அந்த ஓவர் ஆக்ஷனை நினைத்தால், இப்போதும் சிரிப்பு வரும் எனக்கு!"
- வடிவேலு (9.3.97)
Bookmarks