-
7th June 2015, 01:44 AM
#4
Senior Member
Senior Hubber
அன்பான ராகவேந்திராசார்
புதிய திரி துவக்கியதற்கு முதற்கண் என்னிடமிருந்து ஒரு ஓ!
திக்குத்தெரியாத காட்டில் குளிரடிக்குதே கிட்ட வா கிட்டவா தெரிந்த பாடலென்றாலும் என் நினைவில் இருக்கும்பாடல் பூப்பூவாப்பறந்து போகும்பட்டுப் பூச்சியக்கா நீ பளபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா பாட்டு..
அல்லது இது பிள்ளைச் செல்வம் பாட்டா தெரியவில்லை..
6வது கண்டிஷனை தளர்த்திக் கொண்டால் சில பல படங்கள் கிடைக்கும் டைட்டில் படம் உள்பட
குரு.
சினேகிதனின் ஊருக்கு வருகிறான் கதானாயகன்.. அவன் பார்த்தறியாத கிராமம் அது..அவன் பாம்பேயைட் பம்பாய் வாசி..மும்பாய் என மாறாத பம்பாய்..வந்தவன் ட்ராவல் செல்லும் மாட்டுவண்டியை நிறுத்தி சினேகிதனிடம் சொல்கிறான்..
இவனே இங்கிருந்து கொஞ்சம் நடந்தால் ஒரு ஆலம்ரம் அதற்குப் பின் ஒரு ஏரி
நண்பனுக்கோ ஆச்சர்யம்..எப்ப்டிடா சரி போய்ப் பார்ப்போம்
பார்த்தால் உண்மை. ஆலமரமதன் பின்னால் ஏரி
எப்படிடா
தெரியலை குரு..இந்த கிராமம் அதன் சூழல் எனக்கு ஏற்கெனவே பழகினாற்போல்
ஏய்.. நீ பாம்பேக் காரன் தானே.. நிறைய இந்தி சினிமா பார்த்திருப்ப .. அதான்..சரி சரி வா வீட்டிற்குப் போலாம்
சொய்ங்க் என்று வீட்டில் போய் ஹீரோவை மாடியறையில் விட்டு..”இவனே நீ தூங்கு சமர்த்தா .. நாளைக்காலை கிராமம் சுற்றலாம்..”
காலை வருவதற்குத் தான் ஒரு முழு நீண்ட இரவு இருக்கிறதே
கதானாயகனோ இளைஞன் வாலிபன்
கனவுகளைத் தீட்டி கலைகளாய்க் கண்டே
நனவில் மிதந்துதான் நாளும் - கணப்பொழுதும்
துள்ளும் இளமை தூண்டிவிடும் தன்மையில்
அள்ளும் அழகாய் அவன்
(நல்லா இருக்கில்லை குரு (யொசிக்காமல் கரெக்*ஷன் பன்ணாமல் எழுதிய வெண்பா இது..கண்ணா நீ எங்கேயோ போறடா ..இல்லை இல்லை பழைய காலத்துக்கு)
இரவில் உறங்கலாம் என்றால் ஹீரோவிற்கோ உறங்க இயலவில்லை..காரணம் சிரிப்பு..சிரித்ததுபெண்
கேட்டான்..பின் அதேவீட்டினொரு அறையில் பார்த்தும் விட்டான்
தூரிகை தீட்டாத துன்பங்கள் பேசிடும்
காரிகை கண்ணென்றால் ஆமென்பேன் - வேறிடத்தில்
எங்கெங்கோ பார்த்த எழிலாய்த் தெரிகிறதே
சங்குக் கழுத்தழகும் தான்..
ஒரு அறையின் பின்னால் ஜன்ன்லைனூடே இரு கண்கள்..பின் அழகிய முகம் துடிக்கும் உதடுகள்..விலகிய தாவணி..ததும்பும் இளமை
யார் நீ எனக்கேட்க கண்கள் விலகின..அவளும் அறையினுள் காணாமல் போக பின் வந்து கதானாயகன் கண்ணை இறுக்க மூடி
வராத தூக்கத்தைகஷ்டப்பட்டு வரவழைத்து ப் பின்..கொர்ர்ர்.. இளைஞன்ர் தான் என்ன செய்ய..களைப்பு வந்தால் குறட்டை தானே வரும்..ஆன்றோர் வாக்கு (இல்லையா வாசு சார்)
மறு நாள் காலை நண்பனுடன் கிராமத்தை அறியப்புறப்பட கிராமத்தின் கோடியில் ஒரு பங்களா.
அதில் வசித்து உறவாடியது போல ஒருபிரமை
பின்
நாளின் முடிவில் என்ன வரும்
வழக்கம் போல் இரவு தான்
இரவு
இளமைப் பருவத்தில் ஏதும் சொலாமல்
கலகம் செய்யுமே காண்
ஆமங்க ஆண்ட்ரோஜன் ஈஸ்ட்ரோஜன் எனச்சொல்லப்படும் கெமிஸ்ட்ரி நார்மலா வாலிப வயசுல தூண்டித் தான் விடும்
இந்த ஹீரோ பயபுள்ள கல்யாண் நு அவன் பேர் வெச்சுக்கலாமா
கல்யாணுக்கு உறக்கம் வரவில்லை..
படுத்தான்..புறண்டான் உறக்கமில்லை..சங்க காலக் கதா நாயகிகள் போலே
பின்...
ரிக் ரிக் ரிக்னு இரவுக்கோழிகளோட கூச்சல்..இனம் புரியாத பறவைகலோட பரிபாஷை..”என்னய்யா ஒன்னோட் மாமா வந்துட்டானா பறந்து போயிருந்தானே’ ஒரு பறவை கேட்க மறு பறவை “என்ன வோய் கொஞ்சம் கூட தில்லில்லாத மனுஷனாங்காட்டியும் நீர்.. அவர் பக்கத்தூருக்குப்போயிருக்கார் அனேகமா காலைல தான் வருவார்..:
“ஏட்டி..இப்ப நா என்ன பண்ண”
‘அதையும் நாஞ்சொல்லணுமாங்காட்டியும்.. வாவேன்..” எனகிள்ளை மொழியில் அடுத்த பறவை சொல்வது அவன் காதில் விழுந்தாலும் அதையும் மீறி கேட்கும் குரல்..இல்லை இல்லை வீறிடும் குரல்
ஆஆஆஆஆ
வெளிச்சென்று பார்த்தால் முன்தினம் பார்த்த அறை பூட்டப்பட்டிருக்க நண்பணிடம் கேட்டால் மழுப்பியது நினைவுக்கு வர சரி போய் த்தூங்கலாம் எனக் கல்யாண் திகைத்தப்டி கட்டிலுக்குச் செல்ல அந்த கானம்...
ஆஆஆ...
நெஞ்சம் மறப்பதில்லை.. அது நினைவை இழப்பதில்லை
அது பாட்டா என்ன..எனக்கென்ன ஆகிறது என் நரம்புகளில் உட்புகுந்து ரத்த நாளங்களில் பாய்ந்து
என் உணர்வுகளைச் சூடேற்றி என்னவோ செய்கிறதே.. என் கண் நரம்புகள் துடிக்கிறது..என் உதடும்
என் இதயம் அதன் துடிப்பை ப் பலமடங்கு அதிகரிக்கிறது..
இது என்ன பாடல்.. என் உள்ளம், ஊன், உயிர் எல்லாவற்றையும் கொள்ளை கொள்கிறதே
பாடல் நேர்ந்த திசையில் செல்லலாமா
கல்யாண்முடிவெஉத்து நண்பனின் வீட்டிலிருந்து கீழிறங்கி,
கதவைத் திறந்து,
வெட்ட வெளியில் கலந்து,
நடுச் சாலையில்
பித்துப்பிடித்தவன் மாதிரித் தொடர
அந்த்க் குரல் அவனைக் கொஞ்சிக் கொஞ்சிப் பின் கெஞ்சிக் கெஞ்சி
அவன் இளமனது ப்ளஸ் வயதைத் தூண்டித்தூண்டி அவனை நடக்கவைத்துக்
கூட்டிச் செல்வது ஒருபாஆஆஆழடைந்தபஙகளா
அவனும் அங்குச் எல்ல அங்கே தான் புகையாய் ஒரு காரிகை அவளைப் பார்க்கிறான்..பாடியவாறே
அந்தப் புகை நங்கை அவனை அந்தப் பாழடைந்த சிலந்திக்கூடுகள் அடர்ந்த பங்களாவுக்குக்கூட்டிச் சென்று
ஓரிடத்தில் நிற்க
நம் கதானாயகன் கல்யாண் “ஹேய் பொம்பள..யார் நீ”
அந்தப் பெண் திரும்புகிறாள்..இல்லை இல்லை..
அவளது பலப்பலவான கதை சொல்லும் கண்கள் திரும்புகிறது..
இவள் இவள்..
வீலென்று கத்தியவண்ணம் நண்பன் வீட்டில்பார்த்த நங்கையின் கண்..
கல்யாணின் மனம் குழம்ப ஆரம்பிக்க
மேலும் பாடல் தொடர
அந்த புகை உருவம் அந்தப் பங்களாவின் மாடிப்படிமேல் ஏறி
ஒரு சமமான இடத்தில் நிற்க
அவனும் சென்றுபார்த்தால்..ஆச்சர்யம் தான்
அங்கு தென்படுவது அவனின் புகைப்படம்..
அதைப்பார்க்கப்பார்க்க
குளத்தில் கல்லெறிந்தால் குழம்பி
குட்டிக் குட்டி வட்டங்களாய் ஆரம்பித்துபெரிதாவது போல நினைவு
முன் ஜென்மத்தில் பண்ணையார் மகன் அவன்..அவள் கணக்கப்பிள்ளையின் மகள் நிறைவேறாக்காதல் பண்ணையார் எதிர்க்க பின் அவரால் காதல் ஜோடி மரணித்ததும்
ஒரு மணி நேரத் திரைப்படமாய்க் கண் முன் விரிய
பண்ணையார் மகன் தான் அவன் இந்த ஜென்மத்தில்.. நண்பனின் தங்கை தான் அவனது பூர்வ ஜென்ம மனைவி
சரி சரி என ந்ண்பனிடம் கதை சொல்லி நம்பாவிட்டாலும்
அவனது பைத்தியத் தங்கையைக் காட்டுக்குள் கூட்டிச் செல்லுகையில்ல்
அருவருப்பு என்பது இதுவா
ஒரு கிழ உருவம்..கூனல் நடை..
தாத்தா..
என்ன
இதுஎன் மனைவியாகப் போகிறவள்
ஓ
பார்த்துக்கொள்ளுங்கள் இதோ வருகிறேன் எனச் சொல்லி எதற்கோ பிரிந்து செல்ல
அந்தக் கிழம் வேறு யாருமல்ல கல்யாணின் முன் ஜென்மத் தந்தை
சிரிக்கிறது
என்றோசொன்ன வார்த்தைகள் அதன் காதில் அலைமோதுகின்றன
இந்த ஜென்மமில்லை எத்தனை ஜென்மமெடுத்தாலும் உங்கள் காதலை நிறைவேற்ற விடமாட்டேன் எனச் சொன்னது
அதே போல இந்த ஜென்மத்திலும் போன ஜன்மக் கதானாயகனின் தந்தையான தன்னிடம்
அடைக்கலம் வந்திருக்கும் யுவதியைக் கொல்ல ஆவல் மிகக் கொண்டு கிழம் தூக்கிச் செல்ல முற்படுகையில்
கதானாயகனுக்குப் புரிய கிழத்துடன் சண்டை
முடிவில் புதைகுழியில் அவனது போன ஜன்மத்து அப்பா பண்ணையார் இறக்க இந்த ஜென்மத்தில் நண்பனின் தங்கைக்கு
சுய நினைவு திரும்பி வர
என்னாச்சு நீங்கள் யார்..
நானா நான் உன் அண்ணனின் நண்பன்
கல்யாண்..அவள் உதடுகளில் மென் முறுவல்..மனம் நெகிழ்ந்ததைக் சேலை காட்ட கொஞ்சம் இறுக்கிக் கொண்டு
என்ன ஆச்சுங்க எனக்கு..உங்களைப்பற்றி அண்ணா சொன்னதுபுகையாய்
கவலைப்படாதீர்கள்.. நாம் உங்கள் வீட்டிற்குப் போவோம் ..பின் அங்கிருந்த் நம் வீட்டிற்கு..
புதிராய் முதலில் புருவம் உயர்ந்தாலும் பின் புரிந்ததால் பருவம் உந்த அவன் மார்பில் சாய்கிறாள் அவள்
*
இது நெ.ம படத்தின் சுருக்க்கம்
கல்யாண் குமார் தேவிகா நம்பியார் நாகேஷ் என நட்சத்திரப்பட்டாளம்
த்ரில்லரில் முன்னோடி என்பேன் நான்..முதன் முதலில் சாந்தி தியேட்டர் (மதுரை) யில் பார்த்த போது
அந்தக் கிழ நம்பியார் தோன்றும் காட்சி என்னைத் திடுக்கிட வைத்தது.. மற்றவர்களையும் திடுக்கிட வைக்காமல் இருந்திருக்காது
கண்ணதாசன் எம்.எஸ்வி கூட்டணியில் இசையமைக்க வெகு நாள் எடுத்துக்கொண்ட பாடல் நெஞ்சம் மறப்பதில்லை எனக் கேள்விப் பட்டிருக்கிறேன்
தேனடி மீனடி, காடுமலை மேடுகண்ட மாட்டுப் பெண்ணெ, அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை, முந்தானை பந்தாட அம்மானை ஆடுங்கடி எனப் பாடல்கள் ஃபேமஸ் தான்..
அதன் பின் இதுவரை த்ரில்லர் என்பது தமிழ் சினிமாவில் வாராதது ஒருவித சோகம் தான் (சமீபத்திய டிமாண்டி காலனி த்ரில்லராம்.. நான் இன்னும் பார்க்கவில்லை)
ஸாரி ராகவேந்தர் சார்..எனக்கு த் தெரியாத பரிச்சயமில்லாத படங்களை நான்பார்த்ததில்லை..மன்னிக்கவும்..
Last edited by chinnakkannan; 7th June 2015 at 11:06 AM.
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
Bookmarks