Page 279 of 402 FirstFirst ... 179229269277278279280281289329379 ... LastLast
Results 2,781 to 2,790 of 4013

Thread: Makkal Thilakam MGR -PART 15

  1. #2781
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சி தலைவரின் 'விவசாயி' திரைப்பட பாடலிருந்து சில வரிகள்...

    'கன்னியர்க்கும் காளையர்க்கும்
    கட்டுப்பாட்டை விதைத்து
    ...
    அன்னை தந்தை ஆனவர்க்கு
    தம் பொறுப்பை விதைத்து

    பின் வரும் சந்ததியை
    பேணும் முறை வளர்த்து
    ...
    நல்ல நல்ல நிலம் பார்த்து
    நாமும் விதை விதைக்கணும்'

    இப்பாடலின் வரிகளை மட்டுமே கொண்டு, நாளிற்கு ஒரு பதிவு என்று ஒரு வருடம் முழுவதும், 365 நாட்கள், எழுவதற்கு வேண்டிய கருத்துக்கள் அடங்கியுள்ளது.

    அத்தனை விஷயங்கள் இவ்வொரு பாடலில் மட்டுமேயுள்ளது.

    'கன்னியர்க்கும் காளையர்க்கும்
    கட்டுப்பாட்டை விதைத்து'

    வாழ்வை சீராக அமைத்துக் கொள்ள 'கட்டுப்பாடு' எவ்வளவு அவசியம் என்ற உண்மையை சொல்லாமல் சொல்கிறது இப்பாடலின் வரிகள்.

    'கட்டுப்பாடு' எனும் பொழுது, 'சுய' கட்டுப்பாட்டை குறிக்கிறது, பிறரால் கட்டாயப்படுத்தப்படும் கட்டுப்பாட்டையல்ல, அத்தகைய கட்டுப்பாடு நிலைக்காது.

    குறிப்பாக, 'கன்னியற்க்கும், காளையற்கும்' எனும் பொழுது, அந்த பருவத்தில்தான் அறிவு முதிற்ச்சி பெற பக்குவமடையும் தொடக்க நிலையை அடைய தொடங்குகிறது.

    அதே சமயம், சூழ்நிலைக்கு எளிதில் வயப்படும் நிலையையும் எதிர் கொள்கிறது.

    சுய கட்டுபாட்டை வேறூன்றி நட்டுவிட்டால் கவலையில்லை.

    கன்னி மற்றும் காளைப்பருவம் வருவதற்கு முன்னரே, அதாவது பிள்ளைப் பருவத்திலே வேறூன்றி நடுவது மிகவும் அவசியம், 'ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது' என்கிற பழமொழிக்கேற்ப.

    வேறூன்றி நடுவதன் பொறுப்பு, அன்னை தந்தையினறது, என்பதை அடுத்த வரிகள் அழகாக எடுத்துரைக்கிறது.

    'அன்னை தந்தை ஆனவர்க்கு
    தம் பொறுப்பை விதைத்து

    பின் வரும் சந்ததியை
    பேணும் முறை வளர்த்து'

    பெற்றோர்கள், 'இதை செய்யாதே', 'இப்படித்தான் இருக்க வேண்டும்' என்று வற்புருத்தத் தேவையில்லை, அது நிலைப்பதில்லை என்பது அனுபவத்தில் பலரறிந்த உண்மை.

    கொண்ட படிப்பினையையும், பெற்ற அனுபவத்தையும் 'பகிர்ந்து' கொண்டு பிள்ளைகளை வளர்க்கும் பொழுது, நல்லது கெட்டதை பற்றி அறிந்து முடிவெடுக்கும் திறனையும், அதற்கு தேவையான அறிவு வளர்ச்சிக்கு 'வேறூன்றி நடும்' வாய்ப்பினை பெறுகிறார்கள், பெற்றோர்கள்.

    இத்தகைய நல்வழிகளை பின்பற்றும் பொழுது, 'பின் வரும் சந்ததியினர்' ஏன் போற்றத்தக்கவர்களாக இருக்க மாட்டார்கள்?

    பாடலின் வரிகளிலிருந்து கிடைக்கும் படிப்பினை...

    பின் வரும் போற்றத்தக்க சந்ததியினரை 'சுய கட்டுப்பாடுடன்' உருவாக்குவதில் பெற்றோர்களின் பொறுப்பு பெரும்பொறுப்பு.

    'நெருப்பு சுட்டால், தானாக புரியும்' எனும் முறையை கையாளும் பொழுது, ஏற்கனவே பெற்ற அனுபவத்திற்கு வேலையில்லாமல் போய்விடும்.

    இத்தகைய சந்ததியினரை உருவாக்கும் பணியை, மனித வாழ்வின் தொடக்க காலகட்டத்திலிருந்தே தொடங்க வேண்டுமேயோழிய, காலம் கடந்த பின்னர் அல்ல.

    வாழ்க புரட்சி தலைவர் புகழ்.


    courtesy venkat rao fb

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2782
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



    அரசியலும் திரையுலும் ஒரே முதல்வர் எங்கள் புரட்சி தலைவரே நமது சாதனைகள் கல்வெட்டில் பதிக்கப்பட்டு வரும் தலைமுறைகள் நமது தெய்வத்தின் சாதனைகளை வரலாற்றில் படித்து தெய்வத்தின் மகத்துவத்தை தெரிந்து கொள்வார்கள் . மற்றவர்களை போல் குறிபெடுகளில் சொந்தமாக எழுதி கொள்ளும் சாதனைகள் இல்லை..

    மூன்று முறை தொடர்ந்து முதல்வர் - 1977-1987 இந்த சாதனை எந்த நடிகருக்கு அமையும் இது குறிப்பேடு சாதனை இல்லை வரலாற்று சாதனை

    படுத்து கொண்டே வெற்றி கண்ட ஒரே நடிகர் 1967,1984 இந்த சாதனை இது குறிப்பேடு சாதனை இல்லை சரித்திர சாதனை

    உலகம் சுற்றும் வாலிபன் மறு வெளியீடு சாதனைக்கு முன்னால் (1973- இன்று வரை ) எந்த ஒரு நடிகனின் மறு வெளியீடு படங்கள் தொடமுடியாத சாதனை சென்னையில் உள்ள அனைத்து திரையரங்கில் வெற்றி பவனி வந்த சாதனை யாராலும் நெருங்கமுடியாத சாதனை
    Last edited by Yukesh Babu; 9th June 2015 at 07:07 PM.

  4. #2783
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  5. #2784
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by makkal thilagam mgr View Post
    மதுரை சென்ட்ரல் அரங்கில் நம் மக்கள் திலகத்தின் வெற்றிக்காவியம் "நம் நாடு" திரையிடப்பட்டு வசூல் மழை பொழிந்து வருகிறது. குறுகிய இடைவெளியில், பல முறை திரையிடப்பட்ட இந்த காவியம் 05-06-15 வெள்ளிக்கிழமை முதல் நாள் வசூலித்த தொகை ரூபாய் 17,800/-.

    07-06-15 ஞாயிறு அன்று மாலைக்காட்சியில் 20 ரூபாய் நுழைவு சீட்டில் 360 நபர்களும், 30 ரூபாய் நுழைவு சீட்டில் 260 நபர்களும், கண்டு களித்தனர்.


    இதே ரீதியில், சென்றால், மதுரை மாநகரில் சமீபத்தில் வெளியிடப்பட்ட தமிழ் திரை காவியங்களில் " அடிமைப்பெண்" நிகழ்த்திய சாதனையை "நம் நாடு" காவியமும் எட்டலாம். என்று கருதப்படுகிறது.

    மதுரை மாநகர் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும், வசூல் சாதனை என்றால், அது நம் பொன்மனச்செம்மல் நடித்த காவியங்களால் மட்டுமே முடியும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. !
    மதுரையில் ஏழைகளின் ‘துரை’ வசூலை வாரிக்குவிக்கும் தகவலை பதிவிட்ட பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  6. #2785
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    முடிசூடிய மன்னன்

    எஸ்.வி. சார்,

    நேற்று நீங்கள் 1980-ம் ஆண்டு தேர்தலில் மதுரை மேற்கு சட்டப் பேரவை தொகுதியில் தலைவர் வெற்றி பெற்றார் என்றும் மதுரை மக்களுக்கு நன்றி என்றும் கூறியிருந்த பதிவை சற்று முன்னர்தான் பார்த்தேன். இதையடுத்து, மதுரைக்கும் தலைவருக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு பற்றி வரலாற்றில் கல்வெட்டாய் பதிந்து விட்ட சில சரித்திர நிகழ்வுகள் மனதில் தோன்றின. அதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

    புரட்சித் தலைவர் கதாநாயகனாக நடித்து வெள்ளி விழா கண்ட முதல் படம் (அதற்கு முன் சில படங்கள் வெள்ளி விழா கண்டவை என்றாலும் அவற்றில் அவர் கதாநாயகனாக நடிக்கவில்லை) என்ற பெருமையை பெற்றது மதுரை வீரன். அந்தப் படத்தின் பெயரிலேயே மதுரை அமைந்திருப்பது சிறப்பு. பல ஊர்களில் மதுரை வீரன் 100 நாட்கள் ஓடினாலும் மதுரை சென்ட்ரல் அரங்கில் வெள்ளி விழா கொண்டாடியது.

    1958ம் ஆண்டு தமிழ் திரையுலகமே பெருமை கொள்ளத்தக்க நாடோடி மன்னனின் அசுர வெற்றி. கதாநாயகனாக இரட்டை வேடங்களில் நடித்ததோடு அல்லாமல், படத்தை தயாரித்து இயக்கிய தலைவருக்கு பாராட்டு விழா நடந்த இடம் மதுரை. 16-10-1958ம் ஆண்டு 4 குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியிலே மதுரை ரயில் நிலையத்தில் இருந்து தமுக்கம் மைதானம் வரை லட்சக்கணக்கான மக்களின் வாழ்த்தொலிகளுக்கும் வரவேற்புகளுக்கும் இடையே ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார் தலைவர். விழா மேடையில் தலைவருக்கு தங்க வாள் பரிசளிக்கப்பட்டது. பலருக்கும் தெரிந்திருக்கும், 110 சவரனில் ஆனது அந்த தங்க வாள். இன்றைய மதிப்பின்படி ஏறத்தாழ ரூ.22 லட்சம்.

    மதுரையில் சினிப்ரியா தியேட்டர் திறக்கப்பட்டு முதன்முதலில் வெளியிடப்பட்ட படம் தலைவரின் உரிமைக்குரல். 200 நாட்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடி வசூலில் ருத்ரதாண்டவம் ஆடிய படம். தலைவர் திரையுலகில் இருக்கும் வரை இந்த வசூல் சாதனை முறியடிக்கப்படவில்லை.

    தலைவரின் நினைத்ததை முடிப்பவன், சிரித்து வாழ வேண்டும் ஆகிய இரண்டு படங்களும் 100 நாள் படங்கள் என்ற சிறப்பை (முறையே மீனாட்சி, நியூ சினிமா) கொடுத்தது மதுரை.

    அதிமுகவை தொடங்கிய பின் அப்போதைய திமுக ஆட்சிக்கு எதிராக பிரதமர் இந்திரா காந்தியிடம் புகார் மனு கொடுக்க மதுரை சென்ற தலைவரின் ரயில், மக்கள் ஆங்காங்கே அளித்த வரவேற்பால் 16 மணி நேரம் தாமதமானது வரலாற்றுச் சாதனை.

    இன்றுவரை தொடரும் அதிமுகவின் வெற்றிக்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டது திண்டுக்கல் மக்களவை தேர்தல் வெற்றி. அப்போது திண்டுக்கல் தனி மாவட்டமாக பிரிக்கப்படவில்லை. மதுரை மாவட்டத்தில்தான் இருந்தது. எனவே, புரட்சித் தலைவர் தலைமையில் நம்பிக்கை வைத்து அதிமுகவின் முதல் எம்.பி.யை மக்கள் தேர்ந்தெடுத்த பெருமையும் மதுரைக்கே.

    உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளியானால் புடவை கட்டிக் கொள்கிறேன் என்று கூறிய மதுரை முத்துவை மன்னித்து ஏற்றுக் கொண்டார் தலைவர். அவரை மேயராக்கி சிறப்பித்தார் எதிரிகளையும் மன்னிக்கும் அந்த மனித தெய்வம். அதிமுகவுக்கு முதல் மேயரை கொடுத்த பெருமை மதுரை மண்ணுக்கே.

    சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் 1980-ம் ஆண்டு தேர்தல் முடிந்த 6 மாதங்களில் (1981 ஜனவரியில்) உலகத் தமிழ் மாநாட்டை முதல்வராக இருந்த தலைவர் நடத்தினார்.

    ‘அதிமுக உடல் என்றால் எம்ஜிஆர் மன்றம் உயிர்’ என்று தலைவரே கூறியுள்ளார். அப்படி உயிரான எம்ஜிஆர் மன்றத்தின் மாநாடு ‘பார் சிறுத்ததோ படை பெருத்ததோ’ என்று பாரே வியக்கும் வகையில் 1986-ம் ஆண்டு நடந்த இடம் மதுரை.

    இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல ஒன்று உண்டு. 1980-ம் ஆண்டு புரட்சித் தலைவரின் அரசு எந்தக் காரணமும் இன்றி அநியாயமாக கலைக்கப்பட்டது. அதற்கு சில மாதங்களுக்கு முன் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 2 இடங்களை மட்டுமே (கோபிச்செட்டிபாளையம், சிவகாசி) பெற்றதால் இதோடு தலைவரின் அரசியல் வாழ்வு முடிந்தது என்று பத்திரிகைகள் ஆரூடம் கூறின. அப்படிப்பட்ட நிலையிலும் தமிழகத்தின் 234 தொகுதிகளில், தான் போட்டியிடுவதற்காக தலைவர் தேர்ந்தெடுத்த தொகுதி மதுரை மேற்கு. அந்த அளவுக்கு மதுரை மீது அவர் நம்பிக்கை வைத்திருந்தார். அவருக்கு வெற்றியை பரிசளித்ததன் மூலம் மக்களும் அவர் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.

    இதில் ஒரு சிறப்பை கவனித்தீர்களா நண்பர்களே? தனது கணவன் பாண்டிய மன்னனால் அநியாயமாக கொல்லப்பட்டதற்காக கண்ணகி நீதி கேட்ட மண் மதுரை. அதனால்தானோ என்னவோ? தனது ஆட்சி ஜனநாயக படுகொலைக்கு பலியானதற்காக தலைவரும் மதுரையிலே நின்று நீதி கேட்டார்.

    நேற்று கூட நான் குறிப்பிட்டதைப் போல, ஆயிரத்தில் ஒருவன் படத்தில் , ‘உங்கள் அதிகாரம் என்ன சிலப்பதிகாரமா? என்றென்றும் நிலைத்து நிற்பதற்கு?’ என்று தலைவர் கேட்பாரே? அந்த நீதி கேட்ட கண்ணகி காவியத்தை கூறும் சிலப்பதிகார காதையை மனதில் கொண்டு, தலைவர் திட்டமிட்டே மதுரையில் நின்றாரா? எதேச்சையாக நடந்ததா? என்று தெரியவில்லை. அந்த தேர்தலில் அதிமுக மெஜாரிட்டி இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும், தலைவர் முதல்வர் ஆவதற்காக அவரை எம்எல்ஏவாக தேர்ந்தெடுத்து மகுடம் சூட்டி அழகு பார்த்தது மதுரை.

    அந்த வகையில், 80-ம் ஆண்டு தேர்தலில் மதுரை வீரனாக வெற்றி பெற்ற தலைவர் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்று, முதல்வராக முடிசூடி பதவியேற்று சரித்திரம் படைத்த நாள் இன்று .

    இந்த நாளில் தலைவருக்கும் மதுரைக்கும் உள்ள தொடர்பு குறித்த ஆனந்த நினைவுகளை அசைபோட வைத்ததற்கு காரணமாக இருந்த எஸ்.வி.சாருக்கு நன்றி.

    சொல்ல விட்டுவிட்டேன், 1980-ம் ஆண்டு மதுரை மேற்கு தொகுதியில் வெற்றி பெற்று, இழந்த ஆட்சியை மீட்டு தமிழகத்தை மீண்டும் ஆள வந்த தலைவர், கடைசியாக நடித்த திரைப்படம்... ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்








    Last edited by KALAIVENTHAN; 9th June 2015 at 07:51 PM.

  7. Likes ainefal liked this post
  8. #2786
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    super posting kalai sir



    Quote Originally Posted by kalaiventhan View Post


    முடிசூடிய மன்னன்

    எஸ்.வி. சார்,

    நேற்று நீங்கள் 1980-ம் ஆண்டு தேர்தலில் மதுரை மேற்கு சட்டப் பேரவை தொகுதியில் தலைவர் வெற்றி பெற்றார் என்றும் மதுரை மக்களுக்கு நன்றி என்றும் கூறியிருந்த பதிவை சற்று முன்னர்தான் பார்த்தேன். இதையடுத்து, மதுரைக்கும் தலைவருக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு பற்றி வரலாற்றில் கல்வெட்டாய் பதிந்து விட்ட சில சரித்திர நிகழ்வுகள் மனதில் தோன்றின. அதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

    புரட்சித் தலைவர் கதாநாயகனாக நடித்து வெள்ளி விழா கண்ட முதல் படம் (அதற்கு முன் சில படங்கள் வெள்ளி விழா கண்டவை என்றாலும் அவற்றில் அவர் கதாநாயகனாக நடிக்கவில்லை) என்ற பெருமையை பெற்றது மதுரை வீரன். அந்தப் படத்தின் பெயரிலேயே மதுரை அமைந்திருப்பது சிறப்பு. பல ஊர்களில் மதுரை வீரன் 100 நாட்கள் ஓடினாலும் மதுரை நியூ சினிமாவில் வெள்ளி விழா கொண்டாடியது.

    1958ம் ஆண்டு தமிழ் திரையுலகமே பெருமை கொள்ளத்தக்க நாடோடி மன்னனின் அசுர வெற்றி. கதாநாயகனாக இரட்டை வேடங்களில் நடித்ததோடு அல்லாமல், படத்தை தயாரித்து இயக்கிய தலைவருக்கு பாராட்டு விழா நடந்த இடம் மதுரை. 16-10-1958ம் ஆண்டு 4 குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியிலே மதுரை ரயில் நிலையத்தில் இருந்து தமுக்கம் மைதானம் வரை லட்சக்கணக்கான மக்களின் வாழ்த்தொலிகளுக்கும் வரவேற்புகளுக்கும் இடையே ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார் தலைவர். விழா மேடையில் தலைவருக்கு தங்க வாள் பரிசளிக்கப்பட்டது. பலருக்கும் தெரிந்திருக்கும், 110 சவரனில் ஆனது அந்த தங்க வாள். இன்றைய மதிப்பின்படி ஏறத்தாழ ரூ.22 லட்சம்.

    மதுரையில் சினிப்ரியா தியேட்டர் திறக்கப்பட்டு முதன்முதலில் வெளியிடப்பட்ட படம் தலைவரின் உரிமைக்குரல். 200 நாட்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடி வசூலில் ருத்ரதாண்டவம் ஆடிய படம். தலைவர் திரையுலகில் இருக்கும் வரை இந்த வசூல் சாதனை முறியடிக்கப்படவில்லை.

    தலைவரின் நினைத்ததை முடிப்பவன், சிரித்து வாழ வேண்டும் ஆகிய இரண்டு படங்களும் 100 நாள் படங்கள் என்ற சிறப்பை (முறையே மீனாட்சி, நியூ சினிமா) கொடுத்தது மதுரை.

    அதிமுகவை தொடங்கிய பின் அப்போதைய திமுக ஆட்சிக்கு எதிராக பிரதமர் இந்திரா காந்தியிடம் புகார் மனு கொடுக்க மதுரை சென்ற தலைவரின் ரயில், மக்கள் ஆங்காங்கே அளித்த வரவேற்பால் 16 மணி நேரம் தாமதமானது வரலாற்றுச் சாதனை.

    இன்றுவரை தொடரும் அதிமுகவின் வெற்றிக்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டது திண்டுக்கல் மக்களவை தேர்தல் வெற்றி. அப்போது திண்டுக்கல் தனி மாவட்டமாக பிரிக்கப்படவில்லை. மதுரை மாவட்டத்தில்தான் இருந்தது. எனவே, புரட்சித் தலைவர் தலைமையில் நம்பிக்கை வைத்து அதிமுகவின் முதல் எம்.பி.யை மக்கள் தேர்ந்தெடுத்த பெருமையும் மதுரைக்கே.

    உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளியானால் புடவை கட்டிக் கொள்கிறேன் என்று கூறிய மதுரை முத்துவை மன்னித்து ஏற்றுக் கொண்டார் தலைவர். அவரை மேயராக்கி சிறப்பித்தார் எதிரிகளையும் மன்னிக்கும் அந்த மனித தெய்வம். அதிமுகவுக்கு முதல் மேயரை கொடுத்த பெருமை மதுரை மண்ணுக்கே.

    சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் 1980-ம் ஆண்டு தேர்தல் முடிந்த 6 மாதங்களில் (1981 ஜனவரியில்) உலகத் தமிழ் மாநாட்டை முதல்வராக இருந்த தலைவர் நடத்தினார்.

    ‘அதிமுக உடல் என்றால் எம்ஜிஆர் மன்றம் உயிர்’ என்று தலைவரே கூறியுள்ளார். அப்படி உயிரான எம்ஜிஆர் மன்றத்தின் மாநாடு ‘பார் சிறுத்ததோ படை பெருத்ததோ’ என்று பாரே வியக்கும் வகையில் 1986-ம் ஆண்டு நடந்த இடம் மதுரை.

    இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல ஒன்று உண்டு. 1980-ம் ஆண்டு புரட்சித் தலைவரின் அரசு எந்தக் காரணமும் இன்றி அநியாயமாக கலைக்கப்பட்டது. அதற்கு சில மாதங்களுக்கு முன் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 2 இடங்களை மட்டுமே (கோபிச்செட்டிபாளையம், சிவகாசி) பெற்றதால் இதோடு தலைவரின் அரசியல் வாழ்வு முடிந்தது என்று பத்திரிகைகள் ஆரூடம் கூறின. அப்படிப்பட்ட நிலையிலும் தமிழகத்தின் 234 தொகுதிகளில், தான் போட்டியிடுவதற்காக தலைவர் தேர்ந்தெடுத்த தொகுதி மதுரை மேற்கு. அந்த அளவுக்கு மதுரை மீது அவர் நம்பிக்கை வைத்திருந்தார். அவருக்கு வெற்றியை பரிசளித்ததன் மூலம் மக்களும் அவர் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.

    இதில் ஒரு சிறப்பை கவனித்தீர்களா நண்பர்களே? தனது கணவன் பாண்டிய மன்னனால் அநியாயமாக கொல்லப்பட்டதற்காக கண்ணகி நீதி கேட்ட மண் மதுரை. அதனால்தானோ என்னவோ? தனது ஆட்சி ஜனநாயக படுகொலைக்கு பலியானதற்காக தலைவரும் மதுரையிலே நின்று நீதி கேட்டார்.

    நேற்று கூட நான் குறிப்பிட்டதைப் போல, ஆயிரத்தில் ஒருவன் படத்தில் , ‘உங்கள் அதிகாரம் என்ன சிலப்பதிகாரமா? என்றென்றும் நிலைத்து நிற்பதற்கு?’ என்று தலைவர் கேட்பாரே? அந்த நீதி கேட்ட கண்ணகி காவியத்தை கூறும் சிலப்பதிகார காதையை மனதில் கொண்டு, தலைவர் திட்டமிட்டே மதுரையில் நின்றாரா? எதேச்சையாக நடந்ததா? என்று தெரியவில்லை. அந்த தேர்தலில் அதிமுக மெஜாரிட்டி இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும், தலைவர் முதல்வர் ஆவதற்காக அவரை எம்எல்ஏவாக தேர்ந்தெடுத்து மகுடம் சூட்டி அழகு பார்த்தது மதுரை.

    அந்த வகையில், 80-ம் ஆண்டு தேர்தலில் மதுரை வீரனாக வெற்றி பெற்ற தலைவர் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்று, முதல்வராக முடிசூடி பதவியேற்று சரித்திரம் படைத்த நாள் இன்று .

    இந்த நாளில் தலைவருக்கும் மதுரைக்கும் உள்ள தொடர்பு குறித்த ஆனந்த நினைவுகளை அசைபோட வைத்ததற்கு காரணமாக இருந்த எஸ்.வி.சாருக்கு நன்றி.

    சொல்ல விட்டுவிட்டேன், 1980-ம் ஆண்டு மதுரை மேற்கு தொகுதியில் வெற்றி பெற்று, இழந்த ஆட்சியை மீட்டு தமிழகத்தை மீண்டும் ஆள வந்த தலைவர், கடைசியாக நடித்த திரைப்படம்... ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்









  9. Thanks Russellzlc thanked for this post
  10. #2787
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  11. Likes ainefal liked this post
  12. #2788
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Varadakumar Sundaraman View Post
    இன்று முதல் திருச்சி கெய்டியில் ஜூன் 9 திரையிடவேண்டிய இத்திரைப்படம் சில காரணங்களால் நாளை முதல் திரையிடப்படுகிறது.

  13. #2789
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நான் ஏன் பிறந்தேன் படம் நாளை முதல் திருச்சி கெயிட்டில் வெளியாகிறது என்ற தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி திரு. ராமச்சந்திரன் சார்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  14. #2790
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    இது தான் ஏன் பதில்

    என்னுடைய ஆட்சிநீக்கத்துக்கு படத்தின் முலமே பதில் சொல்ல ஔர் கதை. முதலவர் என்ற பெயர் ஆட்சியில் மட்டுமல்ல, கல்வியிலும் உண்டு, காலேஜ் தலிவரை வைத்து கதை. அது தான் இது தான் ஏன் பதில்.

    இரண்டு பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. பாடல்கள் முத்துலிங்கம், இசை மெல்லிசை மன்னர்:

    1) வண்ண பூஞ்சோலை:




    2) அன்பர்களே ஏன் அருமை நண்பர்களே : This song shall also be posted, soon.

    இரண்டாவது முறையாக மக்கள் "எங்களுக்கு நீங்கள்" என்று முதல்வராக தேருந்து எடுத்து விட்டார்கள். பதிவி ஏற்ப்பு விழவிக்காக பல கலந்துரையாடல் நடந்தது. " இது அண்ணாவின் ஆட்சி, அவர் காலடியில் தான் பதவி ஏற்க போகிறேன்" என்று அன்ன சாலையிலே மேடை போடா சொன்னார் தலைவர்.
    Last edited by saileshbasu; 9th June 2015 at 10:47 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •