-
13th June 2015, 11:54 AM
#971
Junior Member
Platinum Hubber
Originally Posted by
vasudevan31355
//தாடி கார மச்சான் இவரு நாடி பிடிச்சு பாரு - பாட்டு நினைவு இருக்கா//
நினைவு இருக்காவா? இந்தப் பாட்டோடேயே வாழ்ந்த காலங்கள் உண்டு கிருஷ்ணா. கோபாலருக்கு கோகோ கோலா இந்தப் பாடல். இப்ப ஓடி வரும் பாருங்களேன்.
'எட்டடி உயரம் ரெண்டடி அகலம் ஒட்டகம் என்பது இவன்தானோ'
ரவி தாடியுடன் செம ஸ்டெப்ஸ். கூட மாந்தோப்பில் நின்றிருந்த ரத்னா.
மாடர்ன் டிரெஸ்ஸில்
இன்னா பாட்டு. 'வாடா மச்சான் போட்டா' நீர் 'சிங்கப்பூரு மச்சானை'கூப்பிடுறீர். (தலைவர் 'சவாலே சமாளி'யில் நம்பியாரிடம் தாலியைக் கையில் வைத்துக் கொண்டு சொல்வார் 'சும்மா இருடா மச்சான்' அந்த மச்சானுக்கு முன் எந்த மச்சானும் நிக்க முடியாது. )
நாம் மூவர் அல்ல. நால்வர் ... ஐவர்.. அறுவர்... ஏழ்வர். ஆனால் வீழ்வோர் அல்ல.
இன்னைக்கு முழுக்க மச்சான் பாட்டா இருக்கப் போவுது.
கிருஷ்ணா! மச்சானைப் பார்த்தீங்களா?
-
13th June 2015 11:54 AM
# ADS
Circuit advertisement
-
13th June 2015, 11:56 AM
#972
Junior Member
Platinum Hubber
-
13th June 2015, 12:08 PM
#973
Junior Member
Newbie Hubber
அப்பாடா ,நான் எழுத போகும் உன்னத விஷயங்களுக்கு ,திருஷ்டி பொட்டு வைத்து விட்ட பெங்களூர் நண்பருக்கு நன்றி.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
13th June 2015, 12:10 PM
#974
Junior Member
Platinum Hubber
Last edited by esvee; 13th June 2015 at 12:13 PM.
-
13th June 2015, 12:25 PM
#975
டியர் ரவி சார்,
எடுத்துக் கொண்ட தலைப்புக்கு தகுந்தாற்போல ஒவ்வொரு பதிவும் அருமையாக உள்ளது. ரொம்ப சிரத்தையெடுத்து பதித்து வருகிறீர்கள் பாராட்டுக்கள்.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
13th June 2015, 12:40 PM
#976
ஸ்ரீதரின் இயக்கத்தில் ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான், ஏ. பீம்சிங்கின் பட்டதாரி, எஸ். பாலசந்தரின் பெண் பாவம் பொல்லாதது, ஏ.சுப்பாராவின் நடமாடும் தெய்வம் உள்ளிட்ட சினிமாக்கள் சிவாஜி- சாவித்ரி நடித்து ஆரம்ப நிலையிலேயே நின்று விட்டன. ஒரு வேளை ஒழுங்காக அவை வெளி வந்திருந்தால் நடிகர் திலகமும் நடிகையர் திலகமும் இன்னமும் புதிய உயரங்களுக்கு நிச்சயம் சென்றிருப்பார்கள்.
இன்று காலை தினமணி ஜங்ஷன் இல் மேற்கண்ட தகவல்கள் கட்டுரையாளர் தீனதயாளன் அவர்களால் இடம் பெற்று இருந்தன . இது பற்றி மேல் தகவல்கள் பகிர்ந்து கொள்ள முடியுமா ?
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
13th June 2015, 12:42 PM
#977
டியர் கோபால் சார்,
உங்கள் வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
நீங்கள் எழுதப்போகும் உன்னத விஷயங்களுக்காக எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
-
13th June 2015, 12:48 PM
#978
Senior Member
Diamond Hubber
//எனக்கு மிக பிடித்த உலக இயக்குனர்களின் ஒரே ஒரு படம் அலச படும். எனக்கு பிடித்த வரிசையில்.//
வாங்க கோபால் சார். என்ன அது? ஆவல் அதிகரிக்கிறது.
-
13th June 2015, 12:49 PM
#979
Junior Member
Newbie Hubber
1)spring summer fall winter spring ----Korean -Kim Ki Duc
நான் கொரியா சென்றிருந்த போது அங்கு என் வியாபார நண்பியுடன் (ஜேமி ஜுங் )சுற்றி கொண்டிருந்த போது ,நான் விரும்பும் சில கொரிய இயக்குனர்களை குறிப்பிட்டேன். உடனே அப்போது சியோல் நகரில் திரையிட பட்டிருந்த இந்த படத்துக்கு அழைத்து சென்றாள் . சூழ்நிலை மறந்து ,மெய் மறந்து ,ரசித்து ,ஒரு இரண்டு மூன்று நாட்கள் எதிலும் கவனம் செல்லவில்லை. பிறகு இந்த இயக்குனரின் அத்தனை படங்களையும் ஒரு சேர வாங்கி, குறிப்பாக இந்த படத்தை தனிமையில் ஆளரவமில்லா இருட்டறையில், பிற சத்தங்கள்,தொல்லைகளற்று வெள்ளி இரவுகளில் 10 மணி தொடங்கி ,என்னை மறப்பேன்.எனக்கு பிடித்த படங்களில் முதலிடம் பெறுவது இதுவே. இதை ரசிக்க மொழி,வயது,இனம் ,ரசனை எதுவுமே தடையாக முடியாது.
பொதுவாக பொழுது போக்கு என்பதை பற்றி தவறான கருத்தாக்கங்கள் உருவாக்க பட்டு நம் கழுத்தை நெரிக்கின்றன.சில பாடல்கள், சண்டைகள்,சம்பந்தமில்லா நிகழ்வுகள்,மூளைக்கு தொல்லையில்லாமல் காணும் சலனங்கள் என்று . என்னை பொறுத்த வரை எந்த படம் ,கதாபாத்திரங்களுடன்,நிகழ்வுகளுடன் ,தோய வைத்து நம்மை கட்டி போட்டு பரவச படுத்துகிறதோ, அவைதான் பொழுது போக்கு. அவலமும் சுவையே,நகையும் சுவையே.வாழ்வின் சுவடுகளும் சுவையே.தூக்கம்தானே மிக சிறந்த பொழுது போக்கு?பின் வருவது தியானம்.
இந்த படம் ஒரு தியானமே. எனக்கு மதங்களை பிடிக்காது. லாட்சு,புத்தம் இவை பிரியமானது. இந்த படம் கொரியா சார்ந்த புத்த மதத்தின் கூறுகளை பின்னணியாக கொண்டது. நான்கு பருவங்களில் (வெவ்வேறு கட்ட நிலைகளில் 20 வருடங்கள்) நான்கு வித மனித உணர்வுகளின் பிரதிபலிப்பை , புத்தத்தின் சாரத்துடன், குறியீட்டுடன் வெளியிடும் அற்புத உணர்வு நிலை படம்.
புத்த துறவியிடம் ஒரு மாணவன் சேரும் மிதக்கும் தீவு போன்ற புத்த மடத்தில் நடக்கும் நிகழ்வுகளின் கோர்வை.தனிமையில் நிழலில்,நம் மன அழுக்குகளை, வக்கிரங்களை, ஆக்ரமிக்கும் ஆவேச உணர்வு நிலைகளை,குற்ற உணர்வுகளை,பாவ மூட்டைகளை,புனித வேள்விகளை சுமந்து திரிந்ததுண்டா? ஒரு வருடம் தனிமையில் ,ஆளரவமில்லா பூமியில் ,நம் உணர்வுகள் அலச பட்ட உணர்வு ,இரண்டரை மணிகளில்.
இது ஒரு புதிய அனுபவம். இதை புத்தகங்கள் கூட தர இயலாது.அப்படியே உங்களை வசிய படுத்தி ,உங்கள் வெவ்வேறு வகை கால பருவங்களில், மனிதர் தவிர்த்த (அவர்கள் ,சூழ்நிலை காரணகர்த்தா ஆயினும்) உங்கள் உணர்வு நிலைகளை ,ஆடை அணிவிக்காமல் தரிசித்த உணர்வு. Trans என்ற பரவச நிலை. நூறு தியானங்களுக்கு சமமான உணர்வு.
தயவு செய்து , உணவு கொறிக்காமல், தொலை அழைப்புகளுக்கு இணங்காமல்,இயற்கை உபாதைக்கு பதில் சொல்லாமல், அரை படுக்கை,இருள் அறையில் ,இந்த அனுபவம் பெறுங்கள்.
சொர்க்கத்தில் தங்கி விட்டு வந்த உணர்வு.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
13th June 2015, 12:57 PM
#980
Senior Member
Diamond Hubber
//காரணம் அவருடைய அந்தரங்க சுத்தியான உழைப்பின்மீது எனக்கிருக்கும் மரியாதை.//
ஆதிராம் சார்,
தங்கள் மரியாதைக்கு தலை வணங்கி நன்றி கூறுகிறேன். அதே சமயம் தாங்களும் தங்களுக்குப் பிடித்த பாடல்களை இங்கே எங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நல்ல ரசிகராய், சினிமா விஷயங்கள் மிகச் சரியானவற்றை அறிந்தவராய் தங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். உங்கள் அழகான நச்சென்ற பதிவுகளுக்கு அப்போதிலிருந்தே முதல் ரசிகன், முதல் விசிறி நான். உங்களுடைய புள்ளி விவரங்களில் நான் தவறே கண்டதில்லை. தொடருங்கள்.
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
Bookmarks