Page 142 of 400 FirstFirst ... 4292132140141142143144152192242 ... LastLast
Results 1,411 to 1,420 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #1411
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தாய் தந்தை தவறு செய்தால் தங்கமே நீ மாற்றி விடு...

    இப்படி பெற்றோரே பிள்ளைய அறிவுறுத்தி நல்வழிப் படுத்தும் அற்புதமான பாடல்..

    பிள்ளையின் கடன் என்ன.. பெற்றோரின் கடன் என்ன...

    இதோ தந்தை தாய் இருவருமே இணைந்து பிள்ளைக்கு அறிவுறுத்தும் அபூர்வமான பாடல்..

    வள்ளி தெய்வானை படத்தில் மலர்களின் ராஜா பாடலை அளித்த அதே டீமின் இன்னோர் அருமையான பாடல்..

    சமர்ப்பணம் படத்திலிருந்து தனசேகரன் மல்லிகா பாட என்.எஸ்.தியாகராஜன் இசையில்...

    தந்தைக்கு ஒரு பிறவி, தாயாருக்கோ மறுபிறவி,

    ரவி, மேலே நீங்கள் சொன்ன சீனு கதையைப் படித்தவுடன் மனதில் தோன்றிய பாட்டு இது.

    http://www.inbaminge.com/t/s/Samarppanam/

    பாடலின் வரி ஒவ்வொன்றும் சிந்தனையைத் தூண்டும் அர்த்தமுள்ள வரிகள்.

    விஜயகுமார் நடிகர் திலகத்தைப் போலவே ஒப்பனையும் செய்து கொண்டு அதே பாணியைக் கடைப்பிடித்து நடித்த படம்.

    1974ல் வெளியான போது பார்த்தது. அதற்குப் பிறகு இதுவரை சந்தர்ப்பம் கிட்டவில்லை.
    Last edited by RAGHAVENDRA; 26th June 2015 at 08:18 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Likes Russellmai, uvausan, vasudevan31355 liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1412
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - 115

    பாகம் 2 - தந்தை


    தாயை நவரத்தினங்களால் அலங்கரித்தோம் - தந்தையை எந்த நகையால் அலங்கரிப்பது - மற்றவர்களை அலங்கரிக்கும் அவனை ஒரு சின்ன புகழ்மாலைக்குள் அடக்கமுடியுமா - முடியும் மேற்கில் சூரியன் உதிக்கும் என்றால் -- ஒரு சிறிய முயற்சி - புதிய கண்ணோட்டத்தில் .

    அவனுடைய பாசத்தை கூறு போடவில்லை - இரண்டு /மூன்று பாகங்களில் அலசலாம் என்று ஒரு சின்ன ஆசை .

    1. தந்தையும் மகளும்
    2. தந்தையும் மகனும் - பல பரிமாணங்கள்

    முதலில் தந்தையும் மகளும் :

    இந்த பந்தத்தை விளக்க தனி வேதம் வேண்டும் - ஒரு மனிதன் ரிலையன்ஸ் இன் " complete man " ஆவது தனக்கு மகள் பிறந்தபோது தான் - இது மிகை அல்ல - இதனால் மகன்கள் மட்டுமே இருப்பவர்கள் தயவு செய்து கோபிக்க வேண்டாம் ( எனக்கும் ஒரு மகன் உண்டு )- கடைசி வரை பாசத்தின் அளவுகோல் அப்படியே இருப்பது மகளிடம் மட்டும் தான் - பல உண்மை சம்பவங்களை இதற்க்கு சார்பாக என்னால் கூற முடியும் - அதானால் தான் சொல்கிறேன் - இந்த பந்தத்தை விளக்க முடியாது - அனுபவிக்க வேண்டும் . மீண்டும் இந்த பதிவை தொடருவோம் சில பாடல்களை ரசித்தபின் ---- ரசிக்க வைப்பவர் - ?? வேறு யார் - எதற்குமே பொருத்தமான நபர் அவர் ஒருவர் தானே !

  5. Likes kalnayak liked this post
  6. #1413
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    Quote Originally Posted by g94127302 View Post

    இந்த பாடல் திரு ராஜ் ராஜ் அவர்களுக்கும் ராஜேஷ் அவர்களுக்கும் பிடிக்கும் பாடல் என்று நினைக்கிறேன்


    Thanks. I like all MKT songs. This is also from Haridas in the raga Chenchurutti.
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  7. #1414
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - 116

    பாகம் 2 - தந்தை


    மகள் தன்னுடன் இன்னும் கொஞ்ச நாட்கள் இருக்க மாட்டாளா என்று நெஞ்சார ஏங்குபவன் -- அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்தபின் அவனை விட அதிகமாக சந்தோஷம் அடைபவர்கள் யாருமே இருக்க முடியாது .....


  8. Likes adiram, Russellmai, kalnayak liked this post
  9. #1415
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ரவி சார்!

    தந்தை கருவின் கரு தொடரில் அம்சமாக நடிகர் திலகத்தின் 'இரு மலர்கள்' படப் பாடலான 'மகராஜா' பாடலைப் போட்டு தூக்கத்தைக் கெடுத்ததற்கு உங்களுக்கு என்ன தண்டனை அளிப்பது?



    எனக்கும், முரளி சாருக்கும் உயிரோடு கலந்த பாட்டு. நிச்சயம் ரசிக வேந்தர் சண்டைக்கு வருவார். அவருக்கும் இது உயிர்தான். அப்புறம் கோ வருவார். இப்படிப் போய்க் கொண்டேதான் இருக்கும்.

    எவ்வளவு அழகு நடிகர் திலகம்! மன்மதனுக்கெல்லாம் மன்மதன் அவர்.

    'ஓடிப் பிடித்து விளையாட ஒரு தம்பிப் பாப்பா' வை

    மகள் ரோஜாரமணி இவரிடம் கேட்டு கோரிக்கை வைக்க,

    வாயைப் பிளந்தவாறே 'டக்'கென்று மனைவி பக்கம் திரும்பி 'அதான் சொல்றாளே...அப்புறம் என்ன? ரெடியாகிறது'....என்று ராணியம்மாவை மனது வைக்க கைஜாடை காட்டி அழைத்து,

    'ஆகட்டும் தாயே! அது போல் நீங்கள் நினைத்தை முடிப்பேன் மனம் போல'

    என்று மகளின் கட்டளைக்கு மகிழ்ச்சியுடன் அடிபணிந்து,

    அப்படியே மனைவியை அணைத்து, ஓரக்கண்களால் 'தன்னம்பிக்கை'யை கண்களில் காட்டி, பெருமிதம் பொங்க, ஆண்மை நிறைந்த சிங்கமாய் கட்டிலுக்கு உள்ளுக்குள் ரெடியாவதை, அடுத்த தொட்டிலுக்கு மனைவியை ரெடியாகச் சொல்வதை மறைமுகமாக இவர் காட்டும் தோரணை இருக்கிறதே! ஒரு சில வினாடிகளே! அந்தக் கண்கள்தான் எப்படியெல்லாம் விரிந்து சுருங்கி ஜாலங்கள் புரிகின்றன! அந்த புருவங்கள்தான் என்ன மாதிரி ஏறி இறங்குகின்றன!

    ரவி! அப்படியே உங்களை.... ஆ....நற... நற.
    Last edited by vasudevan31355; 26th June 2015 at 08:39 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. Likes adiram, Russellmai, kalnayak, uvausan liked this post
  11. #1416
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - 117

    பாகம் 2 - தந்தை


    மகளை தாயாக நினைப்பவன் தந்தை - இப்படிப்பட்ட உயர்ந்த மதிப்பு எந்த நவரத்தின கற்களுக்கும் கிடையாது ------


  12. Likes kalnayak liked this post
  13. #1417
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - 118

    பாகம் 2 - தந்தை


    மகள் மட்டுமே அதிகமாக உரிமை எடுத்துக்கொள்ளுவது தந்தையிடம் மட்டும் தான் - உயிரின் உயிராய் , கருவின் கருவாய் இருப்பவள் அவள் மட்டும் தானே !


  14. Likes Russellmai, kalnayak liked this post
  15. #1418
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - 119

    பாகம் 2 - தந்தை


    கண்களில் கண்ணீரைத்தேக்கி , நெஞ்சில் பாசத்தைத் தேக்கி , வார்த்தைகளில் வாழ்த்துக்களைத் தேக்கி , வசதிகளில் கடன்களைத்தேக்கி , உடம்பில் வியாதிகளைத்தேக்கி , மெழுகுவர்த்தியில் ஒளியைத்தேக்கி வாழும் ஒரு அப்பாவியின் பெயர் " அப்பா " !!!


  16. Likes Russellmai, kalnayak liked this post
  17. #1419
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by Varadakumar Sundaraman View Post
    தந்தை - மகன் பாசம் பற்றிய உங்கள் பதிவில் இடம் பெற்ற தாய்க்கு பின் தாரம் படப்பாடல்நல்ல தேர்வு . தாங்கள் விளக்கிய விதமும் அருமை .பாராட்டுக்கள வாசுதேவன் சார் .
    நன்றி குமார் சார்.
    நடிகர் திலகமே தெய்வம்

  18. #1420
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    தாய் தந்தை தவறு செய்தால் தங்கமே நீ மாற்றி விடு...

    இப்படி பெற்றோரே பிள்ளைய அறிவுறுத்தி நல்வழிப் படுத்தும் அற்புதமான பாடல்..

    பிள்ளையின் கடன் என்ன.. பெற்றோரின் கடன் என்ன...

    இதோ தந்தை தாய் இருவருமே இணைந்து பிள்ளைக்கு அறிவுறுத்தும் அபூர்வமான பாடல்..

    வள்ளி தெய்வானை படத்தில் மலர்களின் ராஜா பாடலை அளித்த அதே டீமின் இன்னோர் அருமையான பாடல்..

    சமர்ப்பணம் படத்திலிருந்து தனசேகரன் மல்லிகா பாட என்.எஸ்.தியாகராஜன் இசையில்...

    தந்தைக்கு ஒரு பிறவி, தாயாருக்கோ மறுபிறவி,

    ரவி, மேலே நீங்கள் சொன்ன சீனு கதையைப் படித்தவுடன் மனதில் தோன்றிய பாட்டு இது.

    http://www.inbaminge.com/t/s/Samarppanam/

    பாடலின் வரி ஒவ்வொன்றும் சிந்தனையைத் தூண்டும் அர்த்தமுள்ள வரிகள்.

    .
    மிகவும் நன்றி சார் - நீங்களும் , வாசுவும் இந்த தலைப்புக்கு மிகவும் சிரமப்பட்டு பாடல்களை கொண்டு வந்து தருகிண்டீர்கள் - எல்லாமே அபூர்வ பாடல்கள் - பொக்கிஷங்கள் - மிகவும் நன்றி மீண்டும்

  19. Likes kalnayak liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •