-
26th June 2015, 02:53 PM
#1441
Senior Member
Seasoned Hubber
வாசு சார்
அந்நாட்களில் வீட்டுக்கு வீடு ஒலித்த பாடல் இன்று வீட்டுக்கு வீடு அதன் பெருமையை வாசு சார் உரைப்பதற்கு மிகவும் பேறு பெற்றுள்ளது என்றே சொல்வேன். பாடலைக் கேட்பதற்கு முன் தங்கள் பதிவைப் படிதது விட்டுக் கேட்டால் அதன் சிறப்பு இன்னும் அதிகம் தெரியும்.
மேடைகளில் திக்குத் தெரியாத வீட்டில் என்ற பெயரில் நாடகமாக நடத்தப்பட்ட போதே நான் பார்ததிருக்கிறேன். இதே நடிகர்கள் தான், நாகேஷ் உட்பட. அரங்கமே அதிரும் ஒவ்வொரு சபா மேடையிலும். அது மட்டுமின்றி விவித் பாரதி தொடங்கப்பட்ட போது, வண்ணச்சுடரில் தினமும் இரவு 9.15 மணிக்கு சில நாட்களுக்கு இந்நாடகத்தை ஒலிபரப்பினார்கள். தேன்கிண்ணம் முடிந்தவுடன் விவித்பாரதியை அணைத்து விடாமல் இந்நாடகத்தையும் கேட்பேன். படமாக்கப்பட்ட விதமும் அருமை. தொய்வின்றி இயக்கியிருப்பார் சி.வி.ஆர்.
மெல்லிசை மன்னரிடம் இசையில் தங்களுக்கென தேவையானவற்றை அருமையாக வாங்கத் தெரிந்த இயக்குநர்களில் குறிப்பிடத்தக்கவர் சி.வி.ஆர்.
பாராட்டுக்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
26th June 2015 02:53 PM
# ADS
Circuit advertisement
-
26th June 2015, 03:10 PM
#1442
Junior Member
Newbie Hubber
L 'Avventura(1960)/L'Notte(1961)/L'Eclisse(1962)- Trilogy-Italy- Michel Angelo Antonioni.
ஒரு கவிதையை, நாவலை திரையில் பார்த்து ,அதே உணர்வை காணொளி ஊடகம் மூலம் அதிசய உணர்வை அனுபவித்துள்ளீர்களா?படத்தை நகர்த்த கதை மாந்தர்களின் உள்ளுணர்வும் அவர்களது மன நிலை மட்டுமே போதும் , கதை சம்பவங்கள் தேவையே இல்லை, அப்படி நிகழ்ந்தாலும் கதையை மேலெடுத்து செல்லாமல், அவர்களே மீதி கதாபாத்திர உணர்வுகளை பார்வையிடுவது போல ,உணர்வின்,மாறும் மனநிலையின்(moods ),விரக்தி, சோர்வு,அயர்ச்சி (Boredom )இவற்றை திரையில் உணர்ந்து வாழ்க்கையோடு ஐக்கியம் கண்டிருக்கீர்களா?
நாடக முறையில் கதைசொல்லல், நடைமுறை யதார்த்தம் இவற்றை தூக்கி கடாசி விட்டு , nerration என்னும் சொல்லும் முறையை மாற்றி அமைத்த கவி இயக்கினர் நடைமுறைக்கு விளங்காத ,கடினமான mood pieces (துரித மனநிலை மாற்றங்களின் துண்டுகளை இணைத்தல்) விளக்கமாக ,விஸ்தாரமாக படங்களில் தொடுப்பார். படிமங்கள்,(images ),அமைப்பு முறை (Design )என்பதில் கவனம் செலுத்தி,கதாப்பாத்திரங்களின் விஸ்தார கதை சொல்லல் முறையை தவிர்ப்பார்.ஒரு வித்யாசமான ,மாறுபாடான அமைப்பு ,அது சார்ந்த பார்வை கோணங்கள்,பாத்திரங்களின் நடப்பு முறைகள் என்பது சினிமாவுக்கு எத்தனை சாத்தியங்கள் உள்ளது என்று நமக்கு உணர்த்தி விடும். ஒரு துரித நிகழ்தல் என்பதை தவிர்த்து சின்ன சின்ன விஷயங்களை ,கூரிய பார்வையில் ,மிக மிக விஸ்தார கவனத்துடன் செதுக்குவார்.
apu trilogy என்று சத்யஜித் ரே யின் பதேர் பாஞ்சாலி,அபராஜிதோ,அபுர் சன்சார் சொல்ல படுவது போல Adventure ,Night ,Eclipse என்று பொருள் படும் மூன்று படங்கள் trilogy என்ற வகை.
நான் சுருக்கி பின்னணி கொடுத்தாலும் ,இவை கதை கேட்டு ரசிக்க வேண்டிய படங்களல்ல. பார்த்து உணர வேண்டிய காவியங்கள்.(சன் டீவீ ,கலைஞர் டி.வீ திரைக்காவியங்கள் நினைவு வந்தால் மூளையை dry wash கொடுத்து பின் இங்கு வரவும்)
L 'Avventura அன்னா ,கிளாடியா என்று நண்பிகளையும்,அன்னாவின் ஆண் நண்பன் சாண்ட்ரா என்பரை சுற்றி சுழலும். அன்னா ஒரு அசாதாரண சூழ்நிலையில் மாயமாகி விட ,அவளை தேடியலையும் கிளாடியா,சான்டிரா ஈர்க்க பட, கிளாடியா ஒரு குற்ற உணர்வுடன் இதனை அரை மனதுடன் அணுகுகிறாள். இறுதியில் ,ஒரு நிகழ்வு ,சாண்ட்ரா ஒரு சந்தர்பத்தில் தவறி விட,கிளாடியா குற்றவுணர்வு குறைந்து ஏற்கும் மனநிலைக்கு வருகிறாள். இந்த படம் ஒரு உள்மன பயணம். காட்சியமைப்புக்கள் ,விஸ்தாரமாய் சொல்ல படும் உணர்வு நிலைகள் என்று ஒரு அற்புத படைப்பு.
L 'Notte என்பது கியோவன்னி என்ற கதாசிரியனுக்கும்,லிடியா என்ற அழகான மனைவிக்கும் இடையேயான திருமண பந்தம் சலிப்பும்,அலுப்பும் கொண்டு முறிவை நோக்கி நகரும்.கடைசியில் அவர்கள் வேகத்துடன் ,உறவில் திளைப்பதில் முடியும்.அவன் எனக்கு inspiration இல்லை நினைவுகள் மட்டுமே உள்ளன என்பதும், ஏதாவது செய்யத்தானே வேண்டும் என்று அவள் சொல்வதும்,கணவன் இன்னொரு பெண்ணிடம் அதீத நட்பு விழையும் போது பொறாமை கூட இல்லாத சலித்த மனநிலை அடைவதும்,தன்னை ஒரு காலத்தில் அடைய விரும்பிய நண்பனின் மரணம்,கணவன் தனக்கு எழுதிய பழைய காதல் (அவனுக்கே நினைவில்லாத)கடிதத்தை படிக்க கொடுப்பதும், விருந்தில் பைத்தியக்காரதனமான விரோத உணர்வில்(உப்பு பெறாத விஷயங்களில்) விருந்தினர் ஒருவரையொருவர் கலாய்ப்பதும் ,ஒருவருக்கும் வாழ்க்கையில் உந்துதலோ,நோக்கமோ அற்றிருப்பதை பல்லிளிக்க வைக்கும்.
L 'Eclisse முடிவு trilogy . விட்டோரியோ ,ரிக்கார்டோவின் விருப்பமின்றியே மண மன முறிவுடன் தாயிடம் செல்கிறாள்.அங்கு பியரோ என்ற பங்கு சந்தை தரகனை பார்த்து விருப்பம் கொள்ள ,இறுதியில் இருவருமே குறிப்பிட்ட இடத்தில் சந்திப்பதாக சொல்லி ,இருவருமே வராத முடிவு. அப்பப்பா ,ஒரு கதையில் கூட கதாசிரியர் இவ்வளவு ஆழம் கொடுக்க முடியுமா?பங்கு சந்தை காட்சிகள் (அந்த கால), அங்கு ஒருவருக்கு இரங்கல் நேரத்தின் போதும் மணியடிப்பதும்,அது முடிந்தவுடன் ,உடனே பரபரப்பு திரும்புவதும்,இறந்த மனிதனை பற்றி கவலை படாமல் பியரோ ,காரில் விழுந்த ஒடுக்கி பற்றி கவலை படுவதும்,அம்மாவும் பணம் பற்றிய சிந்தையில்,இவள் பிரச்சினைகளை காது கொடுத்து கேட்க மறுப்பதும்,இவளுக்கே தப்பிப்பே இல்லாத ஆயுள் கிரகணம் பிடித்து விட்டதை காட்டும்.
என் எழுத்தை தொடர்ந்து மற்றதை பார்க்க மனமில்லை என்றாலும், இந்த மூன்று கவிதைகளையாவது பார்த்து சுவையுங்கள்.
Last edited by Gopal.s; 26th June 2015 at 03:22 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
26th June 2015, 03:15 PM
#1443
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
26th June 2015, 03:18 PM
#1444
Senior Member
Diamond Hubber
Originally Posted by
Murali Srinivas
தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே!
கோடானு கோடி நன்றிகள் to ரவி & வாசு.
வாசு, நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை! அதிலும் " மலர்களெல்லாம் இவளுக்கென்றே மாளிகை அமைத்ததம்மா" என்ற வரிக்கு வலது கையை இடுப்பிலிருந்து ஸ்டெப் பை ஸ்டெப்பாக உயர்த்துவாரே, அந்த இடத்திலேயே நான் சரண்டர்.
வேண்டாம் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
அன்புடன்
வாசு, ஒரு விஷயம் தெரியுமா? விளையாட்டு பிள்ளை படத்தை 6 மாதங்களுக்கு முன்பு சென்னை மகாலட்சுமியில் ரிலீஸ் செய்த திரு ரகுபதி அவர்கள்தான் [ நமது ஹப்பிலும் உறுப்பினர்] இரு மலர்கள் படத்தின் rights -ஐ வைத்திருக்கிறார். அவரை பார்க்கும்போதெல்லாம் [நமது NT FAnS மாதாந்திர திரையிடலுக்கு ரெகுலராக வருவார்] நல்ல ஒரு A/c தியேட்டரில் இரு மலர்கள் படத்தை ரிலீஸ் பண்ணுங்கள் என்று சொல்லிக் கொண்டே இருப்பேன். அவரும் நிச்சயமாக என்பார். பார்க்கலாம்!
அந்த நாள் நான் அங்கிருப்பேன் முரளி சார்.
-
26th June 2015, 06:06 PM
#1445
Originally Posted by
Murali Srinivas
வாசு, ஒரு விஷயம் தெரியுமா? விளையாட்டு பிள்ளை படத்தை 6 மாதங்களுக்கு முன்பு சென்னை மகாலட்சுமியில் ரிலீஸ் செய்த திரு ரகுபதி அவர்கள்தான் [ நமது ஹப்பிலும் உறுப்பினர்] இரு மலர்கள் படத்தின் rights -ஐ வைத்திருக்கிறார். அவரை பார்க்கும்போதெல்லாம் [நமது NT FAnS மாதாந்திர திரையிடலுக்கு ரெகுலராக வருவார்] நல்ல ஒரு A/c தியேட்டரில் இரு மலர்கள் படத்தை ரிலீஸ் பண்ணுங்கள் என்று சொல்லிக் கொண்டே இருப்பேன். அவரும் நிச்சயமாக என்பார். பார்க்கலாம்!
முரளி சார்,
அதாவது, காமெடி என்ற பெயரில் ப்ரொபசர் நாகேஷ், மனோரமா, அவர்கள் குழந்தை குட்டிகளுடன் அடிக்கும் கூத்தை வெட்டி எறிந்துவிட்டுத்தானே.
-
26th June 2015, 07:30 PM
#1446
Senior Member
Senior Hubber
பாலாவின் "அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம்" பாடல் பதிவில் சுருக்கமாக வீட்டுக்கு வீடு படம் பார்க்க வைத்து விட்டீர்கள். எனக்கு நல்ல அறிமுகம். வழக்கம் போல் உங்கள் அற்புதமான பதிவு. நன்றி வாசு.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
26th June 2015, 08:40 PM
#1447
Senior Member
Diamond Hubber
நன்றி கல்ஸ். கதை வேண்டாமென்றால் மனது கேட்கவில்லை. பிடித்த படமும் கூட. அதான்! கொஞ்சம் வேலையும் நிறைய வாங்கி விட்டது. ஆனால் இந்தப் பாடல் என்றால் அப்படி ஒரு பைத்தியம்.
பூவ பூவப் பூவே பாட்டு உங்களுக்கு பிடிபட்ட பின்னணியை நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள். கல்ஸ்! எனக்கு ஜோதிகா தையா தக்கா என்று பெண்மையின் நளினம் கொஞ்சமும் இல்லாமல் குதிப்பது பிடிக்கவே பிடிக்காது. ('மணிசித்திரத்தாழு' படத்தில் ஷோபனாவைப் பார்த்துவிட்டு 'சந்திரமுகி'யில் ஜோதிகாவைப் பார்க்க கடுப்பாகவே இருந்தது. அலங்கோல அருவருப்பு. சுத்தமாக ஜோதிகாவை அறவே பிடிக்காது). அதனாலேயே இந்தப் பாட்டு எனக்கு பிடிக்காமல் போய் விட்டது.
ரெண்டாவது அது என்ன பூவ பூவப் பூவே என்றே புரியவில்லை. பூவே என்றால் சரி. பூவ பூவப் பூவே என்றால் என்ன? இந்த சினிமாக்காரர்கள் எதை வேண்டுமானாலும் எழுதி நம் தலையில் கட்டுவார்கள். ரொம்பநாள் எனக்கு இந்தப் பாடல் கூவ கூவ கூவே என்றுதான் விழுந்தது.
இன்று உங்களால்தான் அது பூவே என்று தெரிந்தது. அதற்காக உங்களுக்கு நன்றி! உங்கள் உழைப்புக்கும் நன்றி!
Last edited by vasudevan31355; 26th June 2015 at 08:43 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
26th June 2015, 10:12 PM
#1448
Senior Member
Senior Hubber
மெல்லிசை மன்னர் குணமடைந்தார். நேற்று தான் திரு முக்தா ரவி
(முக்தா ஸ்ரீனிவாசனின் மகன்) தன் தந்தையுடன் சென்று மெல்லிசை மன்னரை பார்த்துவிட்டு வந்தனர்
சிறிது உணவும் உண்டாராம். எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள்
வாசு ஜி.
என்றுமே சலிப்பு தட்டாத படம் வீட்டுக்கு வீடு. ஜேம்ஸ் பாண்ட் இமேஜ் உள்ள ஜெய் இதில் மிகவும் அழகாக சில இடங்களில் நளினமாகக்கூட நடித்திருப்பார். ஆஹா அருமை அருமை
நாகேஷ், ஜலகண்டேஸ்வரா வீ.கே.ஆர் என ஆர்பாட்டம்
பாந்தமான நிர்மலா எப்போதுமே அழகு .. லெக்*ஷ்மி மிடுக்கு
வீட்டுக்க்கு வீடு என்றுமே சலிக்காத மிகச்சிறந்த நகைச்சுவை திரைப்படம்
-
26th June 2015, 10:24 PM
#1449
Senior Member
Senior Hubber
ஜி
எனக்கு ஜோவை பிடிக்கு, தையா தக்கா என்று குதித்தாலும் ஒரு குறும்பு இருக்கும்
எல்லோரும் என்ன சிம்ரனை போல் இடுப்பை ஆட்டியே ஆட வேண்டுமா.. நின்ற இடத்திலேயே ஆடிய நடிகையர் திலகம் உண்டு .. அதுவும் அழகுதான் ....
சரி சரி .. உமக்கு பிடிக்காது எனக்கு பிடிக்கும் அவ்வளவுதேன்............
-
27th June 2015, 05:30 AM
#1450
Junior Member
Newbie Hubber
Knife in the Water -Roman Polanski -Polish -1962
ஒரே கருவில் உருவான Schindler 's List என்ற உலக புகழ் மொக்கை இயக்குனர் Steven Spielberg (உண்மை கதை)படத்தை பார்த்து விட்டு, கிட்டத்தட்ட இதே கருவில் உருவான இன்னொரு உண்மை கதை சார்ந்த (Wladyslaw Szpilman )pianist படம் பார்த்தவர்களுக்கு யார் உண்மை கலைஞன் ,எப்படி ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்பது புரிந்திருக்கும்.
ரோமன் போலன்ஸ்கி யும் இரண்டாம் உலக போரில் போலந்து நாட்டில் கிட்டத்தட்ட தப்பி பிழைத்தவர். இவர் உண்மை கதையையே யாராவது சினிமா ஆக்கலாம்.அமெரிக்கா வில் வாழ்ந்த போது இவர் மனைவி ,ஒரு குடும்பத்தால் கொலை செய்ய பட்டார். இவரே ஒரு மைனர் சிறுமியை கற்பழித்த குற்றத்தில் கிட்டத்தட்ட கைதாகும் நிலைக்கு சென்று தப்பினார்.(பின்னால் வளர்ந்த அந்த பெண்ணிடம் மன்னிப்பும் கோரினார்)பிரான்ஸ் நாட்டில் அடைக்கலமானார்.
பல கிரிக்கெட் ஆட்கள் (விஸ்வநாத்), Debut வில் century போடுவது போல ,முதல் படமே இவருடைய மிக சிறந்த படமாகி விட்டது விந்தை.உலக அளவில் கொண்டாட பட்டது.
மூன்றே பாத்திரங்கள். அந்த்றேஜ் என்ற கணவன்,கிறிஸ்டினா என்ற மனைவி,பெயர் தெரியாத அவர்களுடன் ஒட்டி கொள்ளும் வழிப்போக்கன்-இளைஞன். முழுக்க படகிலேயே நடக்கும் கதை. ஆனால் ஒன்றரை மணிநேர மனதத்துவ இயங்கு நிலை பாடம். உறவுகள்,அது சார்ந்த அசூயை(envy ),பொறாமை (jealousy ) என்று 90 நிமிட சுவாரஸ்ய பயணம்.
அன்றேஜ் தன மனைவி க்ரிஸ்டினாவுடன் உல்லாச பயணம் செல்லும் போது ,ஒரு வழிப்போக்கன் lift கேட்டு ஏறி கொள்ள அவனையும் அழைத்து செல்கிறான்.தண்ணீர் விளையாட்டுக்கள் அறியாத அவனுக்கு போதிக்கிறான் . ஆனால் போக போக கிரிஸ்டினாவுக்காக,இருவருக்கும் பொறாமையால் மோதல் போக்கு அதிகரித்து, ஆத்திரம் தூண்ட பட்டு ,கைகலப்பில் இளைஞன் தண்ணீரில் விழுந்து விடுகிறான். அவனுக்கு நீச்சல் தெரியாது என்று அவன் தெரிவித்திருந்ததால், அவனை தேடி பார்த்து இயலாமல்,கரைக்கு நீஞ்சி செல்கிறான் கணவன். காவலர்களை அழைத்து வர. ஒளிந்திருக்கும் இளைஞன் (தண்ணீரில்) படகுக்கு வந்து, நிர்வாணமாக சூரிய குளியல் செய்யும் கிரிச்டினாவுடன் ,வாக்குவாதத்துக்கு பிறகு உறவு கொண்டு விடுவான். பிறகு குதித்து தன் வழியே போய் விடுவான். கரைக்கு வந்த பின், கணவனுடன் செல்லும் கிறிஸ்டினா ,இதனை கணவனிடம் தெரிவிக்க........
ஒரு மனதத்துவ படம் ,சுவாரஸ்யமாக மூன்றே பாத்திரங்களை வைத்து ,90 நிமிடம் உலகத்தையே அதிசயிக்க வைத்து, ஒரு இயக்குனரின் மிக சிறந்த முதல் படமாக கொண்டாட பட்டது.
உலக பட ரசிகர் அனந்து ,இதிலிருந்து உருவி,பாலசந்தருக்கு மூன்று முடிச்சு போட உதவினார்.(ஆனால் கேவலமான பாலசந்தர் பாணி முடிச்சு. )
போலன்ஸ்கி யின் பார்த்து ரசிக்க வேண்டிய மற்ற படங்கள் Repulsion ,Rosemary 's Baby ,Pianist .
Last edited by Gopal.s; 27th June 2015 at 05:34 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks