-
29th June 2015, 06:53 PM
#1521
Senior Member
Seasoned Hubber
சில பாடல்கள் கேட்ட உடன் பிடித்து போய்விடும்
அப்படி ஒரு பாடல் தான் இது.
புதுமுகங்களை கொண்டு திரு ஜோசப் தலியத் சிட்டாடல் நிறுவனம் மூலம் தயாரித்த “இரவும் பகலும்”
posessiveness என்பது இயற்கை.. இங்கே நாயகி காலை நேரம் ஒருவன் வந்தான் என்று சொன்னவுடனே மிரட்டும் தொனியில் யாரவன் என்று இவர் கேட்க
மாலை நேரம் ஒருத்தி வந்தாள் என்று நாயகன் சொன்னதும் நாயகியின் முகம் கடுகடுவென மாற
அமைதியான மயக்கும் இசை டி.ஆர்.பாப்பாவினுடையது.
குரல்கள் ஏழிசை வேந்தரும் இசையரசியும்.. ஆஹா என்னமாய் பாடுகிறார்கள்
ஸ்மார்ட் ஜெய்சங்கர், அழகான வசந்தா(இவரை ராணுவ வீரன் மற்றும் நானே ராஜா நானே மந்திரியிலும் பிடிக்கும்)
பாடல் இதோ
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
29th June 2015 06:53 PM
# ADS
Circuit advertisement
-
30th June 2015, 05:20 AM
#1522
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
g94127302
கருவின் கரு - 130

பாகம் 2 - தந்தை
தந்தை - மகள் பந்தம்
என்ன ஒரு பாடல் !! " கண்ணாடி வளையலும் காகிதப் பூக்களும் கண்ணே உன் மேனியில் நிழலாடும், இல்லாத உள்ளங்கள் உறவாகும் "
Here is the Malayalam version of this song...
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
30th June 2015, 06:51 AM
#1523
Senior Member
Diamond Hubber
ஆதிராம் சார்.
நன்றி! கழுகுக் காது சார் உங்களுக்கு. நீங்கள் சொன்னதுதான் உண்மை. அது 'ஸ்வீட்டி விச்சு' தான். பாடலிலும் மாற்றிவிட்டேன். இதற்குதான் ஆதிராம் சார் வேண்டுமென்பது. மிக்க நன்றி சார். நாகேஷ் ரமாபிரபா சீன்களும் நீங்கள் சொன்னது போல்தான். அது வேண்டாமென்றுதான் பாடல் காட்சியோடு சுருக்கமாக முடித்து விட்டேன்.
நிஜமாகவே சாய்ப்பா குரல் என்றதால் அவ்வளவு பிடிக்கும். அதுவும் 'அந்தப் பக்கம் வாழ்ந்தவன்' ரோமியோ பாடல் கேட்க ஆரம்பித்தால் எந்தப் பக்கம் என்ன நடக்கிறது என்றே தெரியாது. ரஜினியின் 'வேலைக்காரன்' (ஏங்குதே மனம்..) படத்திலும் கூட பாடி இருப்பார். இவர் நடிகர் பாலையா அவர்களின் மகன் என்பதும் கூடுதல் தகவல். நல்ல கிடாரிஸ்ட். நல்ல ஆங்கிலப் புலமை உள்ளவர்.
இப்போது உங்களுக்குப் பதிவிடும் இந்த நேரத்தில் கூட சாய்பாவின் குரல் (ஹலோ மை டார்லிங்.... சின்னக் கண்ணாட்டி நீ) காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அடுத்த பாலா பாடல் வந்தால்தான் இது மாறும். பதிவுகளை வரி விடாமல் படிப்பதற்கும், மேலதிக தகவல்கள் தருவதற்கும், தவறுகள் இருந்தால் சரி செய்வதற்கும் என் நன்றிகள்.
-
30th June 2015, 06:54 AM
#1524
Senior Member
Diamond Hubber
ராஜேஷ்ஜி!
'துணை' படத்தில் வசந்தாவை விட்டுவிட்டீர்களே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th June 2015, 08:12 AM
#1525
Junior Member
Seasoned Hubber
வாசு - அருமையான அலசல் - அந்த பாடலை விட உங்கள் அலசல் அருமை . உங்களால் மட்டுமே இப்படி அலச முடியும் என்று திரும்ப திரும்ப எழுதி உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை ... இந்த பாடல் என்னைப்பொருத்த வரையும் படத்தின் வேகத்தை இழுத்து நிருத்தக்கூடியதாக அமைந்த ஒன்று - இந்த பாடலுக்குப்பதில் இன்னொமொரு சகுந்தலை துஷ்யந்தன் பாடலை சேர்த்திருக்கலாம் - சச்சு அடிக்கும் லூட்டி தாங்க முடியாது . சச்சு பேசும் ஆங்கிலோ இந்தியன் ஸ்டைல் வேறு முகம் சுளிக்க வைக்கும் - உங்கள் அலசலின் அருமையினால் மட்டுமே மீண்டும் இந்த பாடலைக்கேட்டேன் .....
-
30th June 2015, 08:15 AM
#1526
Junior Member
Seasoned Hubber
[QUOTE=raagadevan;1234767]Here is the Malayalam version of this song...
மிகவும் நன்றி சார் - உங்கள் கருத்துக்களையும் இங்கு பதிவிடலாமே - இந்த பாடல் மனதை கசக்கிப்பிழியும் பாடல்களில் ஒன்று - மொழி வேறுபாடுகள் இல்லாமல் ரசிக்ககூடிய பாடல் இது
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th June 2015, 08:18 AM
#1527
Junior Member
Seasoned Hubber
சில பாடல்கள் கேட்ட உடன் பிடித்து போய்விடும்
அப்படி ஒரு பாடல் தான் இது.
ராஜேஷ் - உண்மை - அருமையான பாடல் - பல முறை கேட்டுருக்கிறேன் - ஜெய் நடித்த முதல் படம் என்று நினைக்கிறேன் - இந்த படத்தில் பாடல்கள் எல்லாமே தத்துவ பாடல்களாக இருக்கும் - சரியா ??
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th June 2015, 08:19 AM
#1528
Junior Member
Seasoned Hubber
Good Morning
-
30th June 2015, 08:49 AM
#1529
Junior Member
Seasoned Hubber
கருவின் கரு - 135
பாகம் 2 - தந்தை
தந்தை - மகள் பந்தம்
உண்மை சம்பவம் 20
"அப்பா " பேப்பர் படிக்கும் போது யார் கூப்பிட்டாலும் அவர்களின் கதி அதோகதிதான் - ஆனால் என் மகளுக்கும் மட்டும் பல சலுகைகள் கொடுத்திருந்தேன் - 5 வருடங்கள் காத்திருந்து எங்கள் வீடு வந்த மகா லக்ஷ்மி அல்லவா அவள்
" மீண்டும் அப்பா !! - பேப்பர் யை பிடுங்கிக்கொண்டாள் - இன்று உங்களிடம் பேசியே ஆக வேண்டும் . உங்களிடம் எல்லோரும் பொறாமையும் , பெருமையும் படக்கூடிய குணங்கள் இருக்கின்றது - clinical சைகாலஜி யைப்பற்றி பொறுமையுடன் 1000 students க்கு புரியும் வண்ணம் உங்களால் மணிக்கணக்கில் எடுத்துச்சொல்ல முடியும் - ஆனால் உங்களுக்கு இருக்கும் இந்த முன் கோபத்தை விட்டு விட மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறீர்கள் - எவ்வளவு நல்ல நண்பர்கள் - உங்கள் பக்கம் வரவே பயப்படுகிறார்கள் - அம்மா அழாத நாளில்லை --- விஜிக்கு நீங்கள் என்றாலே சிம்ம சொப்பனம் ( விஜி என் கடைசி மகள் ). ..
" வரும் கோபத்தை கொஞ்சம் தடுத்துக்கொண்டேன் - லக்ஷ்மி சொல்வதில் நியாயம் இருக்கிறது - எனக்கு எல்லா வசதிகளும் ஆண்டவன் கொடுத்திருக்கிறான் - எதற்கும் யாரிடமும் கை எந்த வேண்டாம் - பின் இந்த குணம் என்னிடம் எப்படி வந்தது ?? "
" அம்மா குறையே இல்லாத மனிதன் யாரு ? " ( தில்லான மோகனாம்பாள் நேற்று பார்த்ததின் விளைவு இந்த வசனம் !) "
குறை இருக்கலாம் - ஆனால் அதையே ஒரு பெரிய சக்தியாக நினைக்கிறீர்கள் - அதுதான் தவறு ... மகளின் விவாதம் தொடர்கிறது -------
"நீங்கள் கோபம் வரும்போது கத்தி தீர்த்து விடுகிறீர்கள் மேலும் உங்கள் இயல்பு தன்மைக்கு மாறாக நடந்து கொள்கிறீர்கள் ."
இதோ உங்களிடம் இந்த சுத்தியலும் நிறைய ஆணிகளையும் கொடுக்கிறேன் .இனி மேல் கோபம் வரும் போது எல்லாம் வீட்டின் பின் சுவரில் ஆணி அடிக்குமாறு கூறினாள் ”.
முதல் நாள் 10 ஆணி,மறுநாள் 7,பின்பு 5,2 என படிப்படியாக ஆணி அடிக்க கோபம் குறைந்தது.
ஒரு நாள் ஒரே ஒரு ஆணி அடித்தேன் , மொத்தமாக 45 ஆணிகள் அடித்து உள்ளேன்.இனி கோபம் வராது என என் மகளிடம் கூறினேன் . இனிமேல் கோபம் வராத நாளில் ஒவ்வொரு ஆணியாகப் பிடுங்கி விடுங்கள் அப்பா என்றாள் என் மகள் . 45 நாளில் அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன என பெருமையுடன் மகளை அழைத்து காட்டினேன் .
“உடனே மகள் சொன்னாள் . ஆணிகளை பிடுங்கிவிட்டீர்கள் ,சுவற்றில் உள்ள ஒட்டைகளை என்ன செய்வீர்கள் ? உங்கள் கோபம் இது போல பலரை காயப்படுத்தி இருக்கும் அல்லவா? நான் வெட்கித் தலை குணிந்தேன் .
பிறரை காயப்படுத்துவதை நிறுத்தினால் வாழ்க்கை புதிய அத்தியாயம் பெறும்- என் மகள் எனக்கு சொல்லிக்கொடுத்தாள் - சின்னவள் வயதில் , அறிவில் , அனுபவத்தில் -- ஆனால் நான் அவளிடம் கற்றுக்கொண்டது மிகப்பெரிய விஷயம் ..
இப்பொழுதெல்லாம் கோபம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்க்கிறேன் ---------
Last edited by g94127302; 30th June 2015 at 11:21 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th June 2015, 08:52 AM
#1530
Junior Member
Seasoned Hubber
கருவின் கரு - 136
பாகம் 2 - தந்தை
தந்தை - மகள் பந்தம்
அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு?
சுடும் வெயில் கூட ஒரு அழகு
மலர் மட்டுமா அழகு?
விழும் இலை கூட ஒரு அழகு
புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு
நன்மைக்குச் சொல்லிடும் பொய்களும் அழகு
உண்மையில் அதுதான் மெய்யாய் அழகு
குயில் இசை அது பாடிட
ஸ்வர வரிசைகள் தேவையா
மயில் நடனங்கள் ஆடிட ஜதி ஒலிகளும் தேவையா
நதி நடந்தே சென்றிட வழித்துணை தான் தேவையா
கடல் அலை அது பேசிட மொழி இலக்கணம் தேவையா
இயற்கையோடு இணைந்தால் உலகம் முழுதும் அழகு
கவலையாவும் மறந்தால் இந்த வாழ்க்கை முழுதும் அழகு
அழகே அழகே எல்லாம் அழகே
இதயம் ஒரு ஊஞ்சலே இடம் வலம் அது ஆடிடும்
இன்பத்தில் அது தோய்ந்திடும் துன்பத்தில் அது மூழ்கிடும்
நடந்ததை நாம் நாளுமே நினைப்பது பொருள் இல்லயே
நடப்பதை நாம் எண்ணினால் அதை விட உயர்வில்லையே
பூக்கும் பூவில் வீசும் வாசம் என்ன அழகு
அதையும் தாண்டி வீசும் நம் நேசம் ரொம்ப அழகு
Bookmarks