-
30th June 2015, 08:12 PM
#11
Junior Member
Seasoned Hubber

ஆண்டவரே வாழ்க! ஆள்பவரே வாழ்க!!
1977-ம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் தலைவர் தலைமையிலான அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. உலகிலேயே ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சரான முதல் நடிகர் என்ற பெருமையை தலைவர் பெற்றார்.
அந்த வகையில் முதல்வரானவர், தமிழகத்தின் முதல்வராகவும் 1977-ம் ஆண்டு இதே நாளில்தான் (ஜூன் 30) பதவியேற்றார். 38 ஆண்டுகள் கழித்து இதே நாளில், தனது அன்புக்குரிய தலைவர் பேரறிஞர் அண்ணாவின் பெயரால் அவர் தோற்றுவித்த மக்கள் இயக்கமான அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் மகத்தான வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 27-ம் தேதி ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:
பதிவான மொத்த வாக்குகள் : 1,81,032
முதல்வர் செல்வி. ஜெயலலிதா (அதிமுக) : 1,60,432
திரு.மகேந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்) : 9,710
அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட முதல்வர் செல்வி. ஜெயலலிதா, 1,50,722 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திரு.மகேந்திரன் அவர்கள் உட்பட அவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர். செல்வி. ஜெயலலிதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
கடந்த அக்டோபர் மாதம் புரட்சித் தலைவர் அதிமுகவை தோற்றுவித்த நாளான 17ம் தேதியன்று செல்வி. ஜெயலலிதா அவர்களுக்கு ஜாமீன் கிடைத்தது.
கடந்த மே மாதம் 11ம் தேதி, பல்வேறு தடைகளையும் சதிகளையும் தகர்த்து, தமிழ் திரைப்பட வரலாற்றில் அதுவரை வெளியான படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்ததுடன், தலைவர் திரைப்படத்துறையில் இருக்கும் வரை அந்த சாதனை முறியடிக்கப்படாமல் திகழ்ந்து பெருவெற்றி கண்ட திரைப்படமான உலகம் சுற்றும் வாலிபன் வெளியான அதே நாளில்தான், வழக்கில் இருந்து செல்வி. ஜெயலலிதா அவர்கள் விடுதலையானார்.
தமிழகத்தின் முதல்வராக தலைவர் முதன்முதலில் பதவியேற்று சாதனை படைத்த ஜூன் 30-ம் தேதியான அதே நாளில்தான் இடைத்தேர்தலில் செல்வி. ஜெயலலிதா அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்.
தலைவருக்கு மட்டுமல்ல, தலைவர் பெயரை உச்சரித்தாலே வெற்றிகள் தொடர்ந்து வரும் என்பதற்கு இன்றைய இடைத்தேர்தல் முடிவும் ஒரு உதாரணம்.
தலைவர் முதல்வராக பதவியேற்று சரியாக 38 ஆண்டுகள் கழிந்தும் கூட, ஏன்? அவர் உடலால் மறைந்து 28 ஆண்டுகள் ஆனாலும் கூட, அவர் தோற்றுவித்த இயக்கத்துக்கு இன்றும் மக்களிடம் அமோக ஆதரவும் செல்வாக்கும் உள்ளதென்றால் அதற்கு, மக்களின் இதய சிம்மாசனத்தில் மன்னாதி மன்னனாக வீற்றிருக்கும் தலைவருக்கு உள்ள செல்வாக்குதான் காரணம்.
தலைவர் தமிழகத்தை ஆண்டவர் மட்டுமல்ல, மக்களின் மனங்களை இ(எ)ன்றும் ஆள்பவர்.
ஆண்டவரே! ஆள்பவரே! வாழ்க நின்புகழ்!
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th June 2015 08:12 PM
# ADS
Circuit advertisement
Bookmarks