-
30th June 2015, 08:05 PM
#3731
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
puratchi nadigar mgr
நக்கீரன் - 27/06/2015- சீக்ரட் சினிமா செய்திகள்

நக்கீரன் பத்திரிகையில் திரைப்பட தயாரிப்பாளர் திரு.கலைஞானம் சினிமா சீக்ரெட் என்ற தொடரை எழுதி வருகிறார். தலைவரின் விசுவாசியான சத்யா ஸ்டூடியோ திரு.பத்மநாபன் குறித்து அவர் எழுதியிருந்ததை சமீபத்தில் திரு.லோகநாதன் பதிவிட்டிருந்தார். அது அனைவரையும் கண்கலங்க வைத்தது.
கட்டுரையை படித்து விட்டு திரு.பத்மநாபனின் இரண்டு மகள்களே திரு.கலைஞானத்தின் வீட்டுக்கு வந்து, அழுதிருக்கிறார்கள் என்றால் இது ஒரு முக்கியமான ஆவணம்.
மேலும், தலைவர் மறைந்தபிறகு, திரு.பத்மநாபனின் நிலை குறித்து அவரது மகள்கள் திரு.கலைஞானத்திடம் பகிர்ந்து கொண்ட தகவல்கள் கல் மனதையும் கரைய வைக்கும். ஆண்டவனுக்கு கூட இப்படிப்பட்ட பக்தர்கள் உண்டோ? என்னவோ? தமிழகத்தை ஆண்டவருக்கு எப்படிப்பட்ட பக்தர்கள் இருக்கிறார்கள்?
பதிவுக்கு நன்றி. திரு. லோகநாதன் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
30th June 2015 08:05 PM
# ADS
Circuit advertisement
-
30th June 2015, 08:12 PM
#3732
Junior Member
Seasoned Hubber

ஆண்டவரே வாழ்க! ஆள்பவரே வாழ்க!!
1977-ம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் தலைவர் தலைமையிலான அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. உலகிலேயே ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சரான முதல் நடிகர் என்ற பெருமையை தலைவர் பெற்றார்.
அந்த வகையில் முதல்வரானவர், தமிழகத்தின் முதல்வராகவும் 1977-ம் ஆண்டு இதே நாளில்தான் (ஜூன் 30) பதவியேற்றார். 38 ஆண்டுகள் கழித்து இதே நாளில், தனது அன்புக்குரிய தலைவர் பேரறிஞர் அண்ணாவின் பெயரால் அவர் தோற்றுவித்த மக்கள் இயக்கமான அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் மகத்தான வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 27-ம் தேதி ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:
பதிவான மொத்த வாக்குகள் : 1,81,032
முதல்வர் செல்வி. ஜெயலலிதா (அதிமுக) : 1,60,432
திரு.மகேந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்) : 9,710
அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட முதல்வர் செல்வி. ஜெயலலிதா, 1,50,722 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திரு.மகேந்திரன் அவர்கள் உட்பட அவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர். செல்வி. ஜெயலலிதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
கடந்த அக்டோபர் மாதம் புரட்சித் தலைவர் அதிமுகவை தோற்றுவித்த நாளான 17ம் தேதியன்று செல்வி. ஜெயலலிதா அவர்களுக்கு ஜாமீன் கிடைத்தது.
கடந்த மே மாதம் 11ம் தேதி, பல்வேறு தடைகளையும் சதிகளையும் தகர்த்து, தமிழ் திரைப்பட வரலாற்றில் அதுவரை வெளியான படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்ததுடன், தலைவர் திரைப்படத்துறையில் இருக்கும் வரை அந்த சாதனை முறியடிக்கப்படாமல் திகழ்ந்து பெருவெற்றி கண்ட திரைப்படமான உலகம் சுற்றும் வாலிபன் வெளியான அதே நாளில்தான், வழக்கில் இருந்து செல்வி. ஜெயலலிதா அவர்கள் விடுதலையானார்.
தமிழகத்தின் முதல்வராக தலைவர் முதன்முதலில் பதவியேற்று சாதனை படைத்த ஜூன் 30-ம் தேதியான அதே நாளில்தான் இடைத்தேர்தலில் செல்வி. ஜெயலலிதா அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்.
தலைவருக்கு மட்டுமல்ல, தலைவர் பெயரை உச்சரித்தாலே வெற்றிகள் தொடர்ந்து வரும் என்பதற்கு இன்றைய இடைத்தேர்தல் முடிவும் ஒரு உதாரணம்.
தலைவர் முதல்வராக பதவியேற்று சரியாக 38 ஆண்டுகள் கழிந்தும் கூட, ஏன்? அவர் உடலால் மறைந்து 28 ஆண்டுகள் ஆனாலும் கூட, அவர் தோற்றுவித்த இயக்கத்துக்கு இன்றும் மக்களிடம் அமோக ஆதரவும் செல்வாக்கும் உள்ளதென்றால் அதற்கு, மக்களின் இதய சிம்மாசனத்தில் மன்னாதி மன்னனாக வீற்றிருக்கும் தலைவருக்கு உள்ள செல்வாக்குதான் காரணம்.
தலைவர் தமிழகத்தை ஆண்டவர் மட்டுமல்ல, மக்களின் மனங்களை இ(எ)ன்றும் ஆள்பவர்.
ஆண்டவரே! ஆள்பவரே! வாழ்க நின்புகழ்!
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th June 2015, 08:43 PM
#3733
Junior Member
Diamond Hubber

Originally Posted by
KALAIVENTHAN
ஆண்டவரே வாழ்க! ஆள்பவரே வாழ்க!!
1977-ம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் தலைவர் தலைமையிலான அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. உலகிலேயே ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சரான முதல் நடிகர் என்ற பெருமையை தலைவர் பெற்றார்.
அந்த வகையில் முதல்வரானவர், தமிழகத்தின் முதல்வராகவும் 1977-ம் ஆண்டு இதே நாளில்தான் (ஜூன் 30) பதவியேற்றார். 38 ஆண்டுகள் கழித்து இதே நாளில், தனது அன்புக்குரிய தலைவர் பேரறிஞர் அண்ணாவின் பெயரால் அவர் தோற்றுவித்த மக்கள் இயக்கமான அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் மகத்தான வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 27-ம் தேதி ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:
பதிவான மொத்த வாக்குகள் : 1,81,032
முதல்வர் செல்வி. ஜெயலலிதா (அதிமுக) : 1,60,432
திரு.மகேந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்) : 9,710
அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட முதல்வர் செல்வி. ஜெயலலிதா, 1,50,722 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திரு.மகேந்திரன் அவர்கள் உட்பட அவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர். செல்வி. ஜெயலலிதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
கடந்த அக்டோபர் மாதம் புரட்சித் தலைவர் அதிமுகவை தோற்றுவித்த நாளான 17ம் தேதியன்று செல்வி. ஜெயலலிதா அவர்களுக்கு ஜாமீன் கிடைத்தது.
கடந்த மே மாதம் 11ம் தேதி, பல்வேறு தடைகளையும் சதிகளையும் தகர்த்து, தமிழ் திரைப்பட வரலாற்றில் அதுவரை வெளியான படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்ததுடன், தலைவர் திரைப்படத்துறையில் இருக்கும் வரை அந்த சாதனை முறியடிக்கப்படாமல் திகழ்ந்து பெருவெற்றி கண்ட திரைப்படமான உலகம் சுற்றும் வாலிபன் வெளியான அதே நாளில்தான், வழக்கில் இருந்து செல்வி. ஜெயலலிதா அவர்கள் விடுதலையானார்.
தமிழகத்தின் முதல்வராக தலைவர் முதன்முதலில் பதவியேற்று சாதனை படைத்த ஜூன் 30-ம் தேதியான அதே நாளில்தான் இடைத்தேர்தலில் செல்வி. ஜெயலலிதா அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்.
தலைவருக்கு மட்டுமல்ல, தலைவர் பெயரை உச்சரித்தாலே வெற்றிகள் தொடர்ந்து வரும் என்பதற்கு இன்றைய இடைத்தேர்தல் முடிவும் ஒரு உதாரணம்.
தலைவர் முதல்வராக பதவியேற்று சரியாக 38 ஆண்டுகள் கழிந்தும் கூட, ஏன்? அவர் உடலால் மறைந்து 28 ஆண்டுகள் ஆனாலும் கூட, அவர் தோற்றுவித்த இயக்கத்துக்கு இன்றும் மக்களிடம் அமோக ஆதரவும் செல்வாக்கும் உள்ளதென்றால் அதற்கு, மக்களின் இதய சிம்மாசனத்தில் மன்னாதி மன்னனாக வீற்றிருக்கும் தலைவருக்கு உள்ள செல்வாக்குதான் காரணம்.
தலைவர் தமிழகத்தை ஆண்டவர் மட்டுமல்ல, மக்களின் மனங்களை இ(எ)ன்றும் ஆள்பவர்.
ஆண்டவரே! ஆள்பவரே! வாழ்க நின்புகழ்!
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Thank you Mr.Kalaiventhan sir
-
30th June 2015, 08:46 PM
#3734
Junior Member
Diamond Hubber
Last edited by ravichandrran; 30th June 2015 at 08:51 PM.
-
30th June 2015, 09:20 PM
#3735
Junior Member
Diamond Hubber
-
30th June 2015, 09:51 PM
#3736
Junior Member
Diamond Hubber
சுமார் 35 ஆண்டுகளுக்கு முன், சட்டசபை:
அமைச்சர் குழந்தைவேலு, எதிர்கட்சித் தலைவர் கருணாநிதி தேனிக்கு அருகில் தன மகன் அழகிரி பெயரில் சொத்துகளை அபகரித்துள்ளதாக புகார் வாசித்தார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ,அரசியலை விட்டே விலகத் தயார் என்று சவால் விட்டார் கருணாநிதி.
சபாநாயகர் ராசாராம், ஆட்களை அனுப்பி விவரத்தை சேகரித்து சட்டசபையில் அறிக்கை ஒன்றை வாசித்தார்....
"எதிர்கட்சித் தலைவர் அவர்களின் மீது, அமைச்சர் குழந்தைவேலு கூறிய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை "
சபை முடிந்ததும், சபாநாயகரை தழுவிய எம்.ஜி.ஆர் "நடுநிலை தவறாமல் ஜனநாயகத்தை காப்பாற்றியுள்ளீர்கள்" ராசாராமுக்கு நன்றி கூறினார்.
அதுதான் மக்கள்திலகம்.
காலங்கள் கடந்தாலும் எதிர்தரப்பு மக்களாலும் போற்றக்கூடியவர் எம்.ஜி.ஆர் என்றால் அது மிகையல்ல.
-
30th June 2015, 10:03 PM
#3737
Junior Member
Diamond Hubber
-
30th June 2015, 10:05 PM
#3738
Junior Member
Diamond Hubber
அண்ணாவுடன் மக்கள் திலகம்
-
30th June 2015, 10:07 PM
#3739
Junior Member
Diamond Hubber
-
30th June 2015, 10:15 PM
#3740
Junior Member
Diamond Hubber
எம்.ஜி.ஆரை நெகிழ வைத்த சாண்டோ சின்னப்ப தேவர்! ( நூற்றாண்டு விழா சிறப்பு பதிவு)
நடிகர்கள் சம்பளப் பிரச்னை, வெளியீட்டில் தாமதம், நடிகர்கள் ஆதிக்கம் என பற்பல பிரச்னைகளில் திரையுலகம் இன்று தத்தளித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் ஒரு தயாரிப்பாளர் 4 முழ வேட்டியுடனும், சட்டை போடாத வெற்று உடம்போடும் இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார்களை வைத்து படம் எடுத்தார் என்பதும், பரபரப்பான அந்த கதாநாயகர்கள் அவருடைய படங்களில் நடிக்கும்போது பெட்டிப்பாம்பாய் நடந்து கொண்டார்கள் என்பதும் இப்போது வியப்புக்குரிய ஒன்றாக உள்ளது.
அரைகுறை ஆங்கிலத்தோடும் அடித்துவீசும் வார்த்தைகளோடும் அத்தனை நடிகர்களையும் கையாண்ட அவர் - சாண்டோ சின்னப்ப தேவர்.
சாண்டோ சின்னப்பா தேவருக்கு நூற்றாண்டு விழா துவக்கம் இன்று.பெரும் முதலாளிகள் கோலோச்சி வந்த அக்கால திரையுலகில், அரைகுறை ஆங்கிலமும் கொச்சைத் தமிழுமாக திரையுலகில் வெற்றிகரமான தயாரிப்பாளராக விளங்கியவர் சின்னப்பா தேவர்.
ஜுபிடர் படங்களில் சிறுசிறுவேடங்களில் நடித்துக்கொண்டிருந்தபோதுதான் சின்னப்பா தேவருக்கு எம்.ஜி. ஆருடன் தொடர்பு ஏற்பட்டது. எம்.ஜி. ஆருக்கும் அவருக்கும் இருந்த நட்பு திரையுலகில் அலாதியானது. இயல்பிலேயே உடற்பயிற்சி மற்றும் வீர தீர சாகசங்களில் ஆர்வமுடைய எம்.ஜி.ஆருக்கு, அதில் தேர்ச்சி பெற்றவரான சின்னப்பா தேவரை பிடித்துப்போனதில் ஆச்சர்யம் இல்லை.
திரைத்துறையில் ஓரளவு வளர்ந்திருந்த எம்.ஜி.ஆரை அணுகி, தன் விருப்பத்தை சொல்ல அவரும் சம்மதித் தார். "தேவர் பிலிம்ஸ்" படக் கம்பெனி உருவானது. 4-9-1956-ல் வெளிவந்த "தாய்க்குப்பின் தாரம்" பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
தொடர்ந்து எம்.ஜி.ஆரை வைத்து குறுகிய காலத்தில் 16 வெற்றிப் படங்களை எடுத்தார். எம்.ஜி. ஆர் கால்ஷீட்டுகளில் சொதப்புவார் என்ற சினிமா உலக கற்பிதத்தை, தேவர் படங்கள் உடைத்தெறிந்தன. தேவர் தயாரிப்பில் எம்.ஜி. ஆர் நடித்த தேர்த்திருவிழா 16 நாட்களில் எடுக்கப்பட்ட தகவல் திரையுலகை ஆச்சர் யத்தின் உச்சிக்கே அழைத்துச்சென்றது. அதனால்தான் அவர் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமானவரானார். எம்.ஜி. ஆரை தேவர், 'ஆண்டவனே..!' என்றும், எம்.ஜி. ஆர் தேவரை, 'முதலாளி...!' என்றும் அழைத்துக்கொள்வர்.
1967 ல் எம்.ஜி.ஆர் சுடப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது அவரது எதிர்காலம் குறித்து திரையுலகில் வெவ்வேறு விதமாக பேசப்பட்டது. அந்த நேரத்தில் தேவர் செய்த ஒரு செயல் எம்.ஜி.ஆர் உட்பட திரையுலகில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
மருத்துவமனையில் எம்.ஜி. ஆரை சந்தித்த தேவர், மருதமலை முருகன் கோவிலில் பூஜை செய்த பிரசாதத்தை தந்து, அவரது நெற்றியில் விபூதி இட்டதோடு, கணிசமான ஒரு தொகையை எம்.ஜி.ஆர் கைகளில் கொடுத்தார். “இது என் அடுத்த படத்திற்கான அட்வான்ஸ் முருகா... சும்மா படுத்துக்கிடக்காம சீக்கிரம் வந்து நடிச்சிக்கொடுங்க!” என்றபோது எம்.ஜி.ஆர் கண்களில் கண்ணீர் வழிந்தது.
காரணம் அந்த வார்த்தைகள், அவரது மனநிலையில் ஏற்படுத்திய நம்பிக்கை. மீண்டு(ம்) வருவாரா, வந்தா லும் முன்போல இயங்க முடியுமா, வருவார் என்றால் அது எப்போது? என திரையுலகம் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்த சூழலில் தேவரின் செயல் எம்.ஜி. ஆரை நெகிழ வைத்தது.
அவரது இறுதிக்காலம் வரை எம்.ஜி.ஆர், அவர் மீது அளவற்ற அன்பு கொள்ள இதுவே காரணமானது. எம்.ஜி. ஆர் - ஜானகி திருமணத்தில் சாட்சி கையெழுத்திட்ட ஒரே நபர், சாண்டோ சின்னப்பா தேவர் என்பதிலிருந்தே இருவருக்குமான நட்பை புரிந்துகொள்ளலாம்.
சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் உழைப்பால் உயர்ந்து பிறர் வாழ உழைத்து, அந்த கடுமையான உழைப்பினாலேயே நம்மை விட்டு மறைந்து இருக்கிறார். எங்கெங்கு இயலுமோ அங்கெல்லாம் அள்ளி அள்ளிக் கொடுத்த ஒரு நல்லவர். நம்பிக்கைக்கு உரியவர்; நாணயமானவர்; அவருடைய வார்த்தையில் சொல்லப்போனால், அவர் நம்பிய முருகனோடு இரண்டறக் கலந்துவிட்டு இருக்கிறார் என்றே சொல்லலாம். எப்படி இருப்பினும் திரைப்படத்துறையில் ஒரு ஈடு செய்யமுடியாத, இனி எதிர்பார்க்க முடியாத உழைப்பிற்கு சொந்தக்காரரை, தனது உழைப்பால் உயர்ந்தவரை, சின்னப்பா தேவரைப் போல் ஒருவரை இனி காணப்போவதில்லை - கிடைக்கப்போவதும் இல்லை”-சின்னப்பா தேவர் மறைவின்போது எம்.ஜி. ஆர் பதிவு செய்தவை இவை.
திரைப்படங்களில் நடித்திராத கிருபானந்த வாரியாருக்கு மேக் அப் போட்டவர் தேவர். மொழி தெரியாத போதும் இந்தித் திரையுலகில் நடிகர் ராஜேஷ் கன்னாவை வைத்து ’ஹாத்தி மேரே சாத்தி’’ என்ற படத்தை எடுத்து இந்தி திரையுலகிலும் தேவர் பிரபலமானார்.
புகழ்பெற்ற முருகன் கோவில்களில், சிறப்பு நாட்களில் முருகனுக்கு கட்டும் கோவணம், பூஜை முடிந்ததும் தேவரை தேடி வரும். லட்ச லட்சமாய் சம்பாதித்தாலும் தேவர் வீட்டு பீரோவை அலங்கரித்தவை அவர் சேமித்த இந்த கோவணங்கள்தான். நாத்திக கொள்கை கொண்ட திமுகவில் இருந்த எம்.ஜி.ஆரை மருதமலைக்கு, தான் அமைத்திருந்த எலக்ட்ரிக் விளக்கு துவக்க விழாவிற்கு வரழைத்ததும் அவரது சாதனைதான்.
விடா முயற்சி, கடும் உழைப்பு, மற்றவர்களுக்கு உதவும் குணம் என்ற குணங்களோடு சாதனை மனிதராக திரையுலகில் உலாவந்த சின்னப்பா தேவர் என்ற மனிதரின் புகழ், திரையுலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்!
விகடன் தொகுப்பிலிருந்து
Bookmarks