-
2nd July 2015, 05:29 PM
#1571
டியர் வாசு சார்,
'ஏன்' படக்கதை விளக்கத்துக்கும், தொடர்ந்து வந்த பாலாவின் பாடலுக்கும் நன்றி.
படம் குப்பை என்கிறீர்கள். ஆனால் கதைச்சுருக்கத்தை படிக்கும்போது பரவாயில்லை ரகமாக தெரிகிறது. ஒருவேளை படமாக்கத்தில் சொதப்பி விட்டார்களோ.
டியர் ராகவேந்தர் சார்,
'ஏன்' பட பாட்டுப்புத்த்கத்துக்கு நன்றி.
ஒவ்வொரு பாடலையும் படிக்கும்போது 'அட, இது இந்தப் படத்தில்தானா' என்ற ஆச்சரியம் ஏற்படுகிறது.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
2nd July 2015 05:29 PM
# ADS
Circuit advertisement
-
3rd July 2015, 03:09 PM
#1572
Senior Member
Senior Hubber
வாசு,
'ஏன்' படத்தைப் பற்றி ஏன் இப்படி எழுதினீர்கள் என்று யோசித்தேன். அதுவும் எங்க மாமா, மாட்டுக்கார வேலன் என்று ஜாம்பவான்களின் படங்களோடு போட்டியிட்டது என்று சொல்லிவிட்டீர்களா. நல்ல படம் போல என்று நினைத்தேன். நன்றாக காய்த்து எடுத்து விட்டீர்கள். நல்லவேளை நான் பார்க்கவில்லை எங்கேயும். பின்னர் நீங்கள் பாலா தொடரில் பாடல் போட்டதும் 'ஏன்' என்ற காரணம் புரிந்தது. 'இறைவன் என்றொரு கவிஞன்' என்ற பாடலையும் கேட்டதில்லை. உங்களால் கேட்டுப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நீங்கள் சொன்னது போல பாலா தமிழை தெளிவாக உச்சரித்து பாடியிருக்கிறார். பின்னர் வந்த பாலாவின் குரலுக்கும், இந்த பாடலில் உள்ள குரலுக்கும் வித்தியாசம் அவ்வளவு அதிகம். நல்ல பாடல். நன்றி. அடிக்கடி கேட்கலாம்.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
3rd July 2015, 03:15 PM
#1573
Senior Member
Senior Hubber
ரவி,
உங்களின் எல்லா கருவின் கரு பதிவுகளையும் படிக்கிறேன். ஆனால் என்னால் பதில் எழுதத்தான் முடியவில்லை. மிக அருமையான பதிவுகள். அவசியமான பதிவுகள். ஆத்மார்த்தமான பதிவுகள். நல்ல பதிவுகள். சும்மா கலந்து வச்சி அடிக்கறீங்க. பிரமாதம்.
அப்புறம் நம்ம வாசு சொன்ன யோசனை நன்றாக இருந்தது. அதையே நீங்கள் ஏற்றுக் கொண்டிருந்திருக்கலாம். அதாவது முன்பு தாயைப் பற்றி எழுதினீர்கள். பின்னர் தந்தை பற்றி எழுகிறீர்கள். அதையே தொடர்ந்து ஒரே வயிற்றில் உருவாகும் அண்ணன்-தங்கை, அக்கா-தங்கை, அண்ணன்-தம்பி மற்றும் அக்கா-தம்பி பாசத்தைப் பற்றியும் தொடர்ந்திருக்கலாம். நீங்கள் எழுதியதை அண்ணன்-தங்கை தொடராக புதியதாக வழங்கி இருக்கலாம். சரி பரவாயில்லை. நீங்கள் ஏதாவது திட்டம் வைத்திருப்பீர்கள். பார்க்கலாம்.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
3rd July 2015, 08:59 PM
#1574
Senior Member
Seasoned Hubber
அபூர்வ கானங்கள்
ஜெயா நீ ஜெயிச்சுட்டே... உடனேயே கற்பனையை எங்கோ கொண்டு போகாதீங்க.. இப்படி ஒரு படம் வந்தது. அதிலிருந்து அருமையான கவ்வாலி பாடலை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவுதான்..
பாடல் காட்சியில் வி.எஸ்.ராகவன், அசோகன் மற்றும் எல்.காஞ்சனா
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
3rd July 2015, 09:02 PM
#1575
Senior Member
Seasoned Hubber
அபூர்வ கானங்கள்
மிக மிக நீண்ட நாட்களுக்குப் பின் பார்வைக்கு..
வாழ்க்கை என்பதே ஜாலி .. வாழ்ந்து பார்ப்பதே ஜோலி...
தரவேற்றிய நண்பருக்கு மிக்க நன்றி
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
3rd July 2015, 09:23 PM
#1576
Senior Member
Diamond Hubber
அபூர்வ கானங்கள் ஒவ்வொன்றும் அருமை ராகவேந்திரன் சார். நன்றி!
'கண் கண்ட தெய்வ'த்தின் 'வாழ்க்கை என்பதே ஜாலி' பாடல் சூப்பர். கலக்கல்.
'கண் கண்ட தெய்வம்' படத்தின் ஜெராக்ஸ் படமான 'படிக்காத பண்ணையாரி'ல் அதே சூழ்நிலை, அதே காட்சி அமைப்பில் அதே மாதிரி ஜாலிப் பாடல். (ஒய்.ஜி.எம், அரவிந்த், திலீப்)
சவாரி காரு சவாரி
இது சந்துல பொந்துல இந்து இடுக்குல
விட்டாலும் நிக்காது சவாரி
Last edited by vasudevan31355; 3rd July 2015 at 09:41 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
3rd July 2015, 09:25 PM
#1577
Junior Member
Seasoned Hubber
கல்நாயக் சார் - நன்றி உங்கள் பாராட்டுக்களுக்கு . வாசு அவர்களின் யோசனையை நான் புறகணிக்கவில்லை - அப்படி செய்யவும் எனக்கு தயிரியம் வராது . நான் எல்லா உறவுகளையும் தாய் தந்தையின் வடிவத்தில் பார்க்கிறேன் - அவர் ரத்த உறவுகளாகப் பார்கிறார் - பார்வைகள் ஒன்று - கோணங்கள் வேறு ... கண்டிப்பாக சில பதிவுகள் மூலம் நீங்கள் சொன்ன அனைத்து உறவுகளின் பெருமைகளையும் எழுத முயற்ச்சிக்கிறேன் .. மீண்டும் என் நன்றி - உங்கள் பூக்களின் நறுமணம் எங்களுக்கு தொடர்ந்து கிடைக்காதது எங்களின் துரதிஷ்ட்டம் என்று நினைக்கிறேன் .
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
3rd July 2015, 09:32 PM
#1578
Senior Member
Diamond Hubber
ராகவேந்திரன் சார்,
'வாழ்க்கை என்பது ஜாலி' பாடலில் நகைச்சுவை நடிகர் ஏ.வீரப்பன்,'கள்ளபார்ட்' நடராஜன் நன்றாகத் தெரிகிறது. இன்னொருவர் யார்? மஹரன்!?
-
3rd July 2015, 09:40 PM
#1579
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
ராகவேந்திரன் சார்,
'வாழ்க்கை என்பது ஜாலி' பாடலில் நகைச்சுவை நடிகர் ஏ.வீரப்பன்,'கள்ளபார்ட்' நடராஜன் நன்றாகத் தெரிகிறது. இன்னொருவர் யார்? மஹரன்!?
மஹரனே தான்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
3rd July 2015, 09:42 PM
#1580
Senior Member
Diamond Hubber

Originally Posted by
RAGHAVENDRA
மஹரனே தான்...
அப்பாடி! பிழைச்சேன்.
Bookmarks