-
6th July 2015, 09:10 PM
#1
Junior Member
Seasoned Hubber
Makkal Thilagam MGR -PART 16
ஸ்ரீ எம்.ஜி.ஆர் துணை


பசிக்கு விருந்தாக
நோயிக்கு மருந்தாக
இருப்பவர் தெய்வமடி
தன் பசியைக் கருதாது
பிறருக்குத் தருவோர்கள்
தெய்வத்தின் தெய்வமடி !!!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவை கொண்டாட இருக்கும் இந்த பொன்னான தருணத்தில், இதய தெய்வம், பொன்மான செம்மல், புரட்சித்தலைவர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் மையம் திரி - பாகம் 16 யை - நாம் தெய்வத்தின் (எம்.ஜி.ஆர்) நல்லாசியோடு துவக்கி வைப்பதில் மட்டிலா மகிழ்ச்சி அடைகிறேன். மற்றும் எனக்கு இந்த பொன்னான வாய்ப்பினை வழங்கிய மையம் நிறுவனர்களுக்கும், மூத்த உறுப்பினர்களாகிய திரு. வினோத், திரு. ரவிச்சந்திரன், திரு. ஜெய்ஷங்கர், திரு. கலியபெருமாள், திரு. வேலூர் ராமமூர்த்தி, திரு. ரூப் குமார், பேராசிரியர் திரு. செல்வகுமார், திரு. லோகநாதன், திரு. யுகேஷ் பாபு, திரு. கலைவேந்தன், திரு. முத்தையன், திரு. தெனாலி ராஜன், திரு. வரதகுமார் சுந்தராமன், திரு. சைலேஷ் பாபு அவர்களுக்கும் எனது பணிவான வணக்கத்தையும், நன்றினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
காலத்தை வென்ற மாமனிதர்கள் பலர். அவர்களில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் புகழுக்கும், பெருமைக்கும் ஈடுஇணை அவர் மட்டுமே ! நாடக நடிகராக அறிமுகமாகி, சினிமாவில் பல சாதனைகள் படைத்தது, அரசியலில் அசைக்க முடியாத சகாப்தமாக விளங்கியவர் நாம் புரட்சி தலைவர். அவரை தெய்வமாக வணங்குபவர்கள், வழிகாட்டியாக கருதுபவர்கள், உயிராக நேசிப்பவர்கள் நாம்மை போன்று ஏராளம்... ஏராளம். மறைந்தும் மறையாத மாமனிதராக, தெய்வமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பற்றிய அறிய செய்திகளையும், புகைப்படங்களையும் தொடர்ந்து பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
வேண்டுகோள் : எம்.ஜி.ஆர் அவர்களின் திரைப்படங்கள் பாதுகாக்க பட வேண்டும். அவரது புகழையும், பெருமையையும், சிறப்பையும் இனி வரும் தலைமுறைகளுக்கு எடுத்து சொல்லவது நமது தலையாய கடமையாக்கும்.
வாழ்க வளமுடன்
வீ. பொ.சத்யா.
Last edited by Sathya VP; 6th July 2015 at 09:24 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
6th July 2015 09:10 PM
# ADS
Circuit advertisement
-
6th July 2015, 09:14 PM
#2
Junior Member
Veteran Hubber
Congrats V.P.Sathya Sir for the opening of Makkal Thilagam Thread. Senior fans and Devotees will surely support this thread as usual.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
6th July 2015, 09:18 PM
#3
Junior Member
Seasoned Hubber
Thanks to C.S Kumar sir for successfully completing Makkal Thilagam MGR - Part 15
-
6th July 2015, 09:34 PM
#4
Junior Member
Platinum Hubber

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியின் 15 வது பாகத்தை தொடங்கி வெற்றிகரமாக
முடித்த திரு. சி.எஸ். குமார் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியின் 16 வது பாகத்தை , அழகுக்கு
பெயர் போன முருகக் கடவுளின் அவதாரமாக, நமது இதய தெய்வத்தை அதற்கு
இணையாக சித்தரித்து , இனிதே துவக்கி வைத்த
இனிய நண்பர் திரு. வி.பி.சத்யா அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.
இந்த பாகத்தில், தங்களின் பங்களிப்பு முக்கிய இடம் பெறும் என்கிற எதிர்பார்ப்போடு , தங்களின் வேண்டுகோளின்படி, வழக்கம் போல என்னுடைய
பங்களிப்பும் இருக்கும் என்கிற நம்பிக்கையோடு, மீண்டும் நல்வாழ்த்துக்கள்
தெரிவித்து வரவேற்கிறேன்.
ஆர். லோகநாதன்.
Last edited by puratchi nadigar mgr; 6th July 2015 at 09:37 PM.
-
6th July 2015, 09:36 PM
#5
Junior Member
Seasoned Hubber
Makkal Thilagam MGR Horoscope - Courtesy net

புரட்சிதலைவர் எம் ஜி ராமச்சந்திரன் ஜாதகம் - -
திரு MGR அவர்கள் 17 சனவரி 1917 இல் மணி 9:15 AM க்கு பிறந்து உள்ளார்.
இவர் தமிழகத்தை முதல் மந்திரியாக மிக நல்ல முறையில் ஆண்டார் என்பதை பலர் உணர்வார். மதிய உணவு திட்டம் இதில் மிக சிறந்தது.
லக்னாதிபதி சனி 6- ம் வீட்டில் இருந்தான் - வாழ்க்கையின் முற்பகுதிதியில் போராட்டத்தையும் ஏழ்மையையும் சந்திக்க வைத்தான்.
2 - ம் அதிபதி குரு மூன்றாம் வீட்டில் இருந்து லாப வீட்டில் இருக்கும் கலைக்குரிய காரகன் சுக்கிரனை பார்த்தான் கலைத்துறையில் லாபங்களை கொடுத்தான்.
3 - ம் அதிபதி 12 - ல் உச்சம் பெற்றான் . வீரம் கொடுத்தான். 4 - ம் அதிபதி சுக்கிரன் 11 - ம் வீட்டில் அமர்ந்தான் நல்ல தாயை கொடுத்தான். மற்றும் அறிவும் நிரம்ப கொடுத்தான்.
4 - ம் அதிபதி சுக்கிரன் ராகு என்ற பாவியுடன் கூடி நிற்பதாலும் 6 - ம் அதிபதி சந்திரன் 9 - ம் வீட்டில் நிற்பதாலும் இவரின் தந்தை சிறு வயதில் காலமானார்.
கடுமையான புத்திர தோஷம் :
5 - ம் வீட்டில் கேது அமர்ந்தான் , 5- ம் அதிபதி புதன் 12- ல் மறைந்தான். ( நவம்சதிலும் புதன் நீச்சம் ). ஒரு குழந்தைகூட இல்லாத நிலை கொடுத்தான்.
ஐந்தாம் வீட்டில் கேது இருந்ததால் புத்திர பாக்கியத்தில் கெடுதல் கொடுத்தாலும் யோககாரன் சுக்கிரனின் பார்வை பெற்று பலம் பெற்று இருப்பதால் சாம்ராஜ்யத்தை உருவாக்குமாறு செய்தது. தன்னால் பிள்ளை பெறமுடியாமல் போனாலும் யோககாரன் சுக்கிரன் பார்வை இருந்ததால் பல பிள்ளைகளை தத்து எடுத்து கொண்டார். ஜானகியின் உறவினர் குழந்தைகளையும் தத்து எடுத்தார்.
6 - ல் சனி பகவான் நின்றான் . எதிரிகளை வெற்றி கண்டார்.
கடுமையான களத்திரதோஷம்:
7 - ம் அதிபதி சூரியன் 12 - ல் மறைந்தான் மேலும் உச்சம் பெற்ற செவ்வாயுடன் கூடினான் இரண்டு மனைவியை மணம் முடித்து இருவரும் இறந்தார்கள். 7 - ம் அதிபதி விரைய ஸ்தானத்தில் மறைந்ததின் விளைவும் சனியின் பார்வை கடகத்தில் இருந்து ஏழாம் அதிபதி சூரியன் மீது விழுந்ததும் இந்த அமைப்பை கொடுத்தது.
ஏழாம் வீட்டை பார்க்கும் குரு மூன்றாவது மனைவியை அமைத்து கொடுத்தான் .
இப்படி மண வாழ்வில் சோதனைகளை சந்திக்க காரணம் சுக்கிரனுடன் கூடி ராகு ராசியில் நிற்கிறான். நவம்சதில் சுக்கிரனுடன் கேது கூடி நிற்கிறான். இந்த அமைப்பால் பல சோதனை கொடுத்தது.
விபரீத ராஜயோகம் :
8 - ம் அதிபதி 12 - ல் உச்சம் பெற்ற செவ்வாயுடன் சேர்ந்தான். விபரீத ராஜயோகம் கொடுத்தான். ஏழை வீட்டில் பிறந்த மனிதனை முதலமைச்சராக்கி பார்த்தான் இந்த புதனும் செவ்வாயும்.
9 - ம் அதிபதி சுக்கிரன் ராகுவுடன் கூடினான் , 9- ம் வீட்டில் ஆறாம் அதிபதி சந்திரன் அமர்ந்தான் , ஆகையால் தந்தையால் உபயோகம் இல்லாமல் போனது.
10 ம் அதிபதி 12 - ல் உச்சம் பெற்றான். பிறந்த நாட்டை விட்டு வெளியே வந்து யோகம் பெறுமாறு செய்தான்.( நாவலபிடியா என்ற இலங்கை யில் உள்ள ஊரில் பிறந்து தமிழ்நாட்டில் புகழோடு வாழ்ந்தார். )
10 ம் அதிபதி உச்சம் பெற்று 8 - ம் அதிபதி புதனுடன் சேர்ந்து 12 -இல் நின்றான். ஆகையால் அண்ணாதுரை இறந்த உடன் இவர் அரசியலில் வெற்றி பெற்றார்.
பொதுவாக 10- ம் அதிபதி பலம் பெற்று 8 - ம் அதிபதியுடன் கூடினால் ஒருவரின் மறைவுக்கு பின்னால் முன்னேற்றம் கொடுக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
11- ம் அதிபதி குரு மூன்றாம் வீட்டில் அமர்ந்தான். மூன்றாம் வீடு கலையையும் இசையையும் குறிக்கும். ஆகையால் சினிமா துறையில் சீமானாக விளங்க செய்தான் இந்த குரு பகவான்.
12 - ம் அதிபதி சனி 6 - ல் அமர்ந்தான் , எதிரிகளை வெற்றிகொள்ளுமாறு செய்தான். இவர் வாழும் வரை இவரை எதிர்த்து யாராலும் வெற்றி காண முடியவில்லை.
குரு திசை - சுக்கிரபுத்தி : சினிமா துறையில் புகுந்தார். குரு 2, 11 - க்கு அதிபதி கலைக்குரிய இடமாகிய 3 - ம் வீட்டில் இருக்கிறார். மேலும் லாப வீட்டில் நிற்கும் சுக்கிரனை பார்வை செய்கிறார். தொழில் காரகன் செவ்வாய் உச்சம் பெற்று குரு பார்வை செய்கிறார். இப்படி பலமான அமைப்பு மூன்றாம் இடத்திற்கும் சுக்கிரனுகும் உண்டானதால் கலை துறையில் நீங்கா புகழ் பெற்றார்.
புதன் திசை - சுக்கிர புத்தி : 1967 சட்டசபை தேர்தல் வெற்றி :
8 - ம் அதிபதி என்ற மறைவு கிரகமும் தொழில்காருகன் என்று சொல்லப்படும் 10 - ம் அதிபதியும் இணைந்து பலம் பெற்றால் ஒருவரின் மறைவுக்கு பின்னால் பெரிய பதவி கிடைக்கும்.
இவரின் ஜாதகத்திலும் 8 - ம் அதிபதியும் புதன் மற்றும் 10 - ம் அதிபதி செவ்வாய் உச்சம் பெற்று பலம் பெற்றதால் அண்ணாதுரை இறந்த பின்னால் இவர் சட்டசபை தேர்தலில் மிக பெரிய வெற்றி பெற்றார்.
8- ம் அதிபதி புதன் 12 - ல் இருந்தான் , ராஜயோகம் கொடுத்தான். யோககாரன் சுக்கிரன் லாபத்தில் இருந்து தனது புத்தியை நடத்தும் பொது இவரை பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தான்.
புதன் திசை - செவ்வாய் புத்தி :
1972 - ல் கருணாநிதியால் தி மு க - விலிருந்து வெளிஎற்றபட்டார் .
புதன் 8 - ம் அதிபதி 12 - ல் இருந்தான் , ராஜ யோகத்தை கொடுக்கவேண்டும். செவ்வாய் 10- ம் அதிபதி 12- ல் இருந்தான் , தொழில் ரீதியில் இட மாற்றம் கொடுக்க வேண்டும் . இந்த கிரகநிலையின் போது தான் தி மு க விலிருந்து வெளியே வந்து தனி கட்சி உருவாக்கினார்.
செவ்வாய் 12 -ல் இருந்ததால் இட மாற்றமும் 12 - ல் உச்சம் பெற்றதால் தனி கட்சியை ஆரம்பிக்கும் சக்தியையும் கொடுத்தது.
புதன் திசை குரு புத்தி : 1977 : முதலமைச்சர் ADMK
புதன் விபரீத ராஜயோகம் பெற்று உள்ளான். குரு லாபாதிபதி உச்சம் பெற்ற செவ்வாய் பார்வை பெற்று புத்தியை நடத்தினான். முதலமைச்சர் பதவியில் அமர்த்தினான்.
புதனை அடுத்து வந்த கேது திசை : கேது ஐந்தில் இருந்து பலம் பெற்றால் ஒன்று சாம்ராஜ்யம் அல்லது சன்னியாசம் கொடுப்பான். இவருக்கு சாம்ராஜ்யத்தையே உருவாக்கி கொடுத்தான்.
கேது திசை முடியும் வரை பலமாக இருந்தார்.
கேது திசை குரு புத்தி :
குரு பகவான் ஆறாம் வீட்டில் சந்திரனின் பார்வையை பெற்று தனது புத்தியை நடத்தும் போது சிறு நீராக கோளாறு கண்டு பிடிக்கப்பட்டது.
சனி புத்தியும் ஆறாம் வீட்டில் இருந்து நடந்ததால் சிறுநீரக கோளாறு அதிகபட்டது.
சனி புத்தியை தொடர்ந்து எட்டாம் அதிபதி புதன் மறைவு வீடான 12 - ல் இருந்து நடந்த போதும் உடல்நிலை படுத்த படுக்கை ஆனது.
சுக்கிர திசை சுக்கிர புத்தி : மரணம்
சந்திரனுக்கு 8- ம் அதிபதி சுக்கிரன் 3 -ம் வீட்டில் இருந்து ராகு வுடன் கூடியதால் சிறுநீரக கோளாறு சம்பந்தமாக உயிர் பிரியும் நிலையும் ஏற்பட்டது .
24-12-1987 - மரணம் சம்பவித்தது.
வாழ்க வளமுடன்
வீ. பொ.சத்யா.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
6th July 2015, 09:37 PM
#6
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
puratchi nadigar mgr
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியின் 15 வது பாகத்தை தொடங்கி வெற்றிகரமாக
முடித்த திரு. சி.எஸ். குமார் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியின் 16 வது பாகத்தை , அழகுக்கு
பெயர் போன முருகக் கடவுளின் அவதாரமாக, நமது இதய தெய்வத்தை அதற்கு
இணையாக சித்தரித்து , இனிதே துவக்கி வைத்த
இனிய நண்பர் திரு. வி.பி.சத்யா அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.
இந்த பாகத்தில், தங்களின் பங்களிப்பு முக்கிய இடம் பெறும் என்கிற எதிர்பார்ப்போடு , தங்களின் வேண்டுகோளின்படி, வழக்கம் போல என்னுடைய
பங்களிப்பும் இருக்கும் என்கிற நம்பிக்கையோடு, மீண்டும் நல்வாழ்த்துக்கள்
தெரிவித்து வரவேற்கிறேன்.
ஆர். லோகநாதன்.
Thank you so much sir !
-
6th July 2015, 09:43 PM
#7
Junior Member
Seasoned Hubber
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்(எம்.ஜி.ஆர்)
சான்றோன் எனக்கேட்ட தாய் (அன்னை சத்தியபாமா).
-
6th July 2015, 09:47 PM
#8
Junior Member
Diamond Hubber
congratulations sir for start our god thread no 16 ( kootuthogai 7 ) u are lucky

Originally Posted by
Sathya VP
ஸ்ரீ எம்.ஜி.ஆர் துணை


பசிக்கு விருந்தாக
நோயிக்கு மருந்தாக
இருப்பவர் தெய்வமடி
தன் பசியைக் கருதாது
பிறருக்குத் தருவோர்கள்
தெய்வத்தின் தெய்வமடி !!!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவை கொண்டாட இருக்கும் இந்த பொன்னான தருணத்தில், இதய தெய்வம், பொன்மான செம்மல், புரட்சித்தலைவர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் மையம் திரி - பாகம் 16 யை - நாம் தெய்வத்தின் (எம்.ஜி.ஆர்) நல்லாசியோடு துவக்கி வைப்பதில் மட்டிலா மகிழ்ச்சி அடைகிறேன். மற்றும் எனக்கு இந்த பொன்னான வாய்ப்பினை வழங்கிய மையம் நிறுவனர்களுக்கும், மூத்த உறுப்பினர்களாகிய திரு. வினோத், திரு. ரவிச்சந்திரன், திரு. ஜெய்ஷங்கர், திரு. கலியபெருமாள், திரு. வேலூர் ராமமூர்த்தி, திரு. ரூப் குமார், பேராசிரியர் திரு. செல்வகுமார், திரு. லோகநாதன், திரு. யுகேஷ் பாபு, திரு. கலைவேந்தன், திரு. முத்தையன், திரு. தெனாலி ராஜன், திரு. வரதகுமார் சுந்தராமன், திரு. சைலேஷ் பாபு அவர்களுக்கும் எனது பணிவான வணக்கத்தையும், நன்றினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
காலத்தை வென்ற மாமனிதர்கள் பலர். அவர்களில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் புகழுக்கும், பெருமைக்கும் ஈடுஇணை அவர் மட்டுமே ! நாடக நடிகராக அறிமுகமாகி, சினிமாவில் பல சாதனைகள் படைத்தது, அரசியலில் அசைக்க முடியாத சகாப்தமாக விளங்கியவர் நாம் புரட்சி தலைவர். அவரை தெய்வமாக வணங்குபவர்கள், வழிகாட்டியாக கருதுபவர்கள், உயிராக நேசிப்பவர்கள் நாம்மை போன்று ஏராளம்... ஏராளம். மறைந்தும் மறையாத மாமனிதராக, தெய்வமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பற்றிய அறிய செய்திகளையும், புகைப்படங்களையும் தொடர்ந்து பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
வேண்டுகோள் : எம்.ஜி.ஆர் அவர்களின் திரைப்படங்கள் பாதுகாக்க பட வேண்டும். அவரது புகழையும், பெருமையையும், சிறப்பையும் இனி வரும் தலைமுறைகளுக்கு எடுத்து சொல்லவது நமது தலையாய கடமையாக்கும்.
வாழ்க வளமுடன்
வீ. பொ.சத்யா.
-
6th July 2015, 09:49 PM
#9
Junior Member
Diamond Hubber
என் இளமையின் ரகசியம்!
என்னை பொறுத்தவரையில் சொல்கிறேன்,உடலை பாதுகாப்பது என்பது மனதை பொருத்ததாகும்.ஒன்றை திடமாக சொல்கிறேன்-நமக்கு வயசாகி போச்சு,-இந்த எண்ணத்தை ஒழித்து :-*எனக்கு எங்கடா வயசாச்சு?-இந்த கேள்வியை எழுப்புகிறவர்களை வயோதிகம் நெருங்காது.
தோள் இருக்கிறதா? தட்டி பாருங்கள். அது இல்லாமல்::-*என்னடா...என்று சலிப்பதில் பிரயோஐனம் இல்லை.
இதை நான் ஏன் இவ்வளவு அழுத்தமாக கூறுகிறேன் என்றால்.
எனக்கு இன்னும் என்ன வயது என்று என்ன தயாராக இல்லை.
மற்றவர்கள்தான் அதை எண்ணிக் கொண்டிருக்கிறார்களே தவிர,
நான் அதை எண்ணுவதும் இல்லை!
எண்ணிப் பார்ப்பதும் இல்லை!!
- சென்னை ஆணழகன் விழாவில்
எங்கள் கடவுள் பேசியது..
-
6th July 2015, 09:49 PM
#10
Junior Member
Platinum Hubber
Bookmarks