-
9th July 2015, 11:20 PM
#381
Junior Member
Diamond Hubber
ராஜ்குமார் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல்ஹாசன், கௌதமி உள்ளிட்டோர் நடித்து வெளியான "பாபநாசம்' படம் அனைத்துத் தரப்பினரிடமும் பரவலான பாராட்டுக்களை பெற்றுள்ளது. இதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் கமல்ஹாசன் பேசியதாவது:
ஒரு நல்ல படத்தை மிகப் பெரும் வெற்றிப் படமாக்கிய தமிழ் ரசிகர்களுக்கு நன்றி. இதை ரசிகர்களிடம் எடுத்துச் சென்ற ஊடகங்களுக்கும் நன்றி. அடுத்து வரும் ஒரு நல்ல படத்துக்கும் இதைச் செய்ய வேண்டும் என்பதற்கான அச்சாரம்தான் இந்த நிகழ்ச்சி. அது என் படமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. திறமை மிகுந்த எந்தவொரு கலைஞனின் படமாகவும் அது இருக்கலாம்.
மோகன்லால் பரிந்துரை: நல்ல படங்களை ரசிகர்கள் இப்படி தூக்கிப் பிடிப்பது தொடருமானால், மீண்டும் மீண்டும் நல்ல படங்கள் தமிழில் வந்துகொண்டே இருக்கும். இந்த நேரத்தில் இன்னொரு நபருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அவர் நடிகர் மோகன்லால். அவர்தான் இந்தப் படத்தில் கமல் நடித்தால் நன்றாக இருக்கும் என சொல்லியிருக்கிறார். அந்த பெருந்தன்மைக்காகவும், பரிந்துரைக்காகவும் அவருக்கு நன்றி.
பட வாய்ப்புகள் குறைந்து விட்டதன் காரணமாகத்தான் எல்லோருக்கும் நன்றி சொல்கிறேன் என நினைக்க வேண்டாம். இது போன்ற கதையம்சம் கொண்ட பட வாய்ப்புகள் எல்லோருக்கும் குறைவுதான். அதனால்தான் இந்த நன்றி.
காலம் கடந்து சில படங்கள் கொண்டாடப்படும். அதனால் யாருக்கும் பயன் இல்லை. காலத்தால் செய்த நல்ல விஷயங்கள் என்னைப் போன்ற கலைஞர்களையும், தமிழ் சினிமாவையும் வாழ வைக்கும் என நினைக்கிறேன்.
சினிமாவுக்கு மொழி கிடையாது: இந்தப் படத்தில் நாங்கள் கொடுத்த அளப்பறிய உழைப்புக்கு, வியர்வைக்கு தமிழ் ரசிகர்கள் சரியான சன்மானம் கொடுத்திருக்கிறார்கள். மீண்டும் அவர்களுக்கு நன்றி. சினிமாவுக்கு மொழி கிடையாது.
அப்படிப் பார்த்திருந்தால் எம்.ஜி.ஆர். கிடைத்திருக்க மாட்டார். மொழி என்பதெல்லாம் வெறும் முகவரிதான். திறமையாகாது. கலைக்கு மட்டும்தான் ஜாதி, மதம் எதுவும் கிடையாது. எளிய மனிதர்களின் கதையை எடுத்துதான் என்னை முன் நிறுத்தினார் என் குரு கே.பாலசந்தர்.
"தசாவதாரம்', "விஸ்வரூபம்' போன்ற படங்களில் நான் முன் நிறுத்தப்படவில்லை. என்னை நான் குழந்தையாகப் பார்த்தவன். எனக்கு பெரிய அடையாளங்கள் இல்லை.
என்னுடைய பெயர் நடிகன் அவ்வளவுதான். கமல் என்று சொல்லும்போது ஏதோ வேறு ஒரு நபரை சொல்லுவது போல இருக்கும். நல்ல நடிகன் என்று சொல்லும்போதும், நல்ல கலைஞன் என்று சொல்லும் போதும்தான் எனக்குப் பெருமையாக இருக்கிறது.
"பாபநாசம்' படத்துக்கு ஏன் வரி விலக்கு கொடுக்கவில்லை என்பதற்கான காரணங்கள் சொல்லப்பட்டு விட்டன. அந்த விளக்கங்கள் எல்லாம் நியாயமானதாகத் தெரிகிறது என்றார் கமல்ஹாசன்.
-
9th July 2015 11:20 PM
# ADS
Circuit advertisement
-
9th July 2015, 11:25 PM
#382
Junior Member
Platinum Hubber
-
9th July 2015, 11:28 PM
#383
Junior Member
Platinum Hubber
-
9th July 2015, 11:29 PM
#384
Junior Member
Diamond Hubber

Originally Posted by
Yukesh Babu
ராஜ்குமார் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல்ஹாசன், கௌதமி உள்ளிட்டோர் நடித்து வெளியான "பாபநாசம்' படம் அனைத்துத் தரப்பினரிடமும் பரவலான பாராட்டுக்களை பெற்றுள்ளது. இதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் கமல்ஹாசன் பேசியதாவது:
ஒரு நல்ல படத்தை மிகப் பெரும் வெற்றிப் படமாக்கிய தமிழ் ரசிகர்களுக்கு நன்றி. இதை ரசிகர்களிடம் எடுத்துச் சென்ற ஊடகங்களுக்கும் நன்றி. அடுத்து வரும் ஒரு நல்ல படத்துக்கும் இதைச் செய்ய வேண்டும் என்பதற்கான அச்சாரம்தான் இந்த நிகழ்ச்சி. அது என் படமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. திறமை மிகுந்த எந்தவொரு கலைஞனின் படமாகவும் அது இருக்கலாம்.
மோகன்லால் பரிந்துரை: நல்ல படங்களை ரசிகர்கள் இப்படி தூக்கிப் பிடிப்பது தொடருமானால், மீண்டும் மீண்டும் நல்ல படங்கள் தமிழில் வந்துகொண்டே இருக்கும். இந்த நேரத்தில் இன்னொரு நபருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அவர் நடிகர் மோகன்லால். அவர்தான் இந்தப் படத்தில் கமல் நடித்தால் நன்றாக இருக்கும் என சொல்லியிருக்கிறார். அந்த பெருந்தன்மைக்காகவும், பரிந்துரைக்காகவும் அவருக்கு நன்றி.
பட வாய்ப்புகள் குறைந்து விட்டதன் காரணமாகத்தான் எல்லோருக்கும் நன்றி சொல்கிறேன் என நினைக்க வேண்டாம். இது போன்ற கதையம்சம் கொண்ட பட வாய்ப்புகள் எல்லோருக்கும் குறைவுதான். அதனால்தான் இந்த நன்றி.
காலம் கடந்து சில படங்கள் கொண்டாடப்படும். அதனால் யாருக்கும் பயன் இல்லை. காலத்தால் செய்த நல்ல விஷயங்கள் என்னைப் போன்ற கலைஞர்களையும், தமிழ் சினிமாவையும் வாழ வைக்கும் என நினைக்கிறேன்.
சினிமாவுக்கு மொழி கிடையாது: இந்தப் படத்தில் நாங்கள் கொடுத்த அளப்பறிய உழைப்புக்கு, வியர்வைக்கு தமிழ் ரசிகர்கள் சரியான சன்மானம் கொடுத்திருக்கிறார்கள். மீண்டும் அவர்களுக்கு நன்றி. சினிமாவுக்கு மொழி கிடையாது.
அப்படிப் பார்த்திருந்தால் எம்.ஜி.ஆர். கிடைத்திருக்க மாட்டார். மொழி என்பதெல்லாம் வெறும் முகவரிதான். திறமையாகாது. கலைக்கு மட்டும்தான் ஜாதி, மதம் எதுவும் கிடையாது. எளிய மனிதர்களின் கதையை எடுத்துதான் என்னை முன் நிறுத்தினார் என் குரு கே.பாலசந்தர்.
"தசாவதாரம்', "விஸ்வரூபம்' போன்ற படங்களில் நான் முன் நிறுத்தப்படவில்லை. என்னை நான் குழந்தையாகப் பார்த்தவன். எனக்கு பெரிய அடையாளங்கள் இல்லை.
என்னுடைய பெயர் நடிகன் அவ்வளவுதான். கமல் என்று சொல்லும்போது ஏதோ வேறு ஒரு நபரை சொல்லுவது போல இருக்கும். நல்ல நடிகன் என்று சொல்லும்போதும், நல்ல கலைஞன் என்று சொல்லும் போதும்தான் எனக்குப் பெருமையாக இருக்கிறது.
"பாபநாசம்' படத்துக்கு ஏன் வரி விலக்கு கொடுக்கவில்லை என்பதற்கான காரணங்கள் சொல்லப்பட்டு விட்டன. அந்த விளக்கங்கள் எல்லாம் நியாயமானதாகத் தெரிகிறது என்றார் கமல்ஹாசன்.
முன்பு ஹரிதாஸ் காலத்தில் இரண்டு வருடம் படம் ஓடினால் வெற்றி விழா கொண்டாடினார்கள்..பின்னர் மக்கள் திலகம், நடிகர் திலகம் காலத்தில் சில்வர் சூப்ளி..25 வாரம் ஓடினால் வெற்றி..அப்பால..100 நாள் வெற்றி...இப்போ இன்னாடான்னா மூணு நாள் ஓட்னா வெற்றி விழாவாமே..இன்னா ஸார் இதானா உங்க டக்கு...
So what KH wants to say Thalaivar is not a Tamilian? So Papanasam is a Hit? Good if it is a Hit, I am not sure if his performance was better than Mohanlal's Drishyam since I have not watched PAPANASAM or many of KH movies, because of many reasons mainly because I am a feminist!
Last edited by saileshbasu; 10th July 2015 at 12:38 AM.
-
9th July 2015, 11:31 PM
#385
Junior Member
Diamond Hubber
நான் நடிகனான பிறகு, என் மீது தனி அக்கறை கொண்டிருந்தவர் அண்ணன் எம்.ஜி.ஆர். தனியாக கட்சி ஆரம்பித்த அவர், ஆட்சி அரியணையில் ஏறிய 2 வாரம் கழித்து அவரது தோட்டத்துக்கு போயிருந்தேன். என்னுடன் காலை டிபன் முடித்தவர், "முதல்-அமைச்சர் பதவி என்பது எத்தனை பெரிய பொறுப்பு தெரியுமா? வேலையும் அதிகம். அதே நேரத்தில், பவரும் அதிகம்'' என்றார்.
இப்படிச் சொன்னதோடு நின்றுவிடாமல், தனது பிரத்தியேக அறை ஒன்றை திறக்கச் செய்தார். அந்த அறை முழுக்க பைல்கள் நிரம்பியிருந்தன. "இத்தனை பைல்களையும் நான் இரவு பகலாக படித்துப் பார்த்து கையெழுத்து போடவேண்டும். எல்லாமே என்னை இந்த ஆட்சி பீடத்தில் அமர வைத்த மக்களின் நல்வாழ்வு சம்பந்தப்பட்டவை. எனவே, நிதானமாக படித்துப் பார்த்து அதற்கான துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கம் பெற்ற பிறகே ஓ.கே. செய்கிறேன்'' என்றார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு சில நாள் கழித்து சிவாஜி சாரை பார்க்க அவர் வீட்டுக்குப் போயிருந்தேன். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் சிவாஜி சார் வீட்டுக்கு போவதுண்டு. அதுமாதிரி அன்றும் போனபோது, சிவாஜி சார் முகத்தில் விவரிக்க முடியாத ஒரு சோகம்.
"அண்ணே! ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?'' என்று கேட்டேன்.
"வேறொன்றுமில்ல விஜயா! நம்ம சாந்தியின் (சிவாஜியின் மகள்) நாகப்பட்டின வீட்டில் ஒருத்தன் வாடகைக்கு இருந்தான். அவனோட நடவடிக்கை பிடிக்காமல் வீட்டை காலி பண்ணச் சொன்னப்போ, பேருக்கு இரண்டொரு தலையணை, பாயை மட்டும் வெச்சிட்டு வீட்டை பூட்டிவிட்டு, சாவியுடன் போய்விட்டான். இப்போது, கேஸ் போடுவேன்னு சொல்லி டென்ஷன் பண்றானாம்'' என்றார், சிவாஜி.
"அண்ணன் (எம்.ஜி.ஆர்.) கிட்ட இதுபற்றி எதுவும் சொன்னீங்களா?'' என்று கேட்டேன்.
"அண்ணன் இப்ப முதல்-அமைச்சர். எவ்வளவோ வேலை இருக்கும். அவரை எதுக்கு தொந்தரவு பண்ணணும்?'' என்றார்.
"இல்லண்ணே! இதையெல்லாம் உரிமையோட அவர்கிட்ட சொல்லலாம்'' என்றேன். அதோடு நில்லாமல் நானே எம்.ஜி.ஆர். அண்ணனின் பர்சனல் போனில் அவருடன் தொடர்பு கொண்டேன். அவரே போனை எடுத்துப் பேசினார். சிவாஜி சாரின் கவலையை சொன்னேன்.
என்னிடம் முழு விஷயமும் கேட்டுத் தெரிந்து கொண்டவர், "தம்பி (சிவாஜி) பக்கத்துல இருக்காரா?'' என்றார். "ஆமாண்ணே'' என்றேன். கொடுக்கச் சொன்னார். "ஏன் தம்பி! இவ்வளவு நடந்திருக்கு. என்கிட்ட சொல்றதுக்கென்ன?'' என்றவர், "சரி! ஒரு 20 நிமிஷத்தில திரும்பவும் போன்ல வரேன்'' என்று சொல்லி வைத்து விட்டார்.
சரியாக 15 நிமிடத்தில் மறுபடியும் அண்ணனே பேசினார். "அந்த வீட்டில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்தி விட்டு, புது பூட்டு போட்டு பூட்டியாகிவிட்டது. இனி பிரச்சினை இருக்காது'' என்றார். சிவாஜி சாரும் மனமுருக நன்றி சொன்னார்.
இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
Courtesy malaimalar cine varalaru portion
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
9th July 2015, 11:32 PM
#386
Junior Member
Platinum Hubber
-
9th July 2015, 11:33 PM
#387
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th July 2015, 11:34 PM
#388
Junior Member
Platinum Hubber
-
9th July 2015, 11:35 PM
#389
Junior Member
Platinum Hubber
-
9th July 2015, 11:36 PM
#390
Junior Member
Platinum Hubber
Bookmarks