-
12th July 2015, 08:20 PM
#1781
Senior Member
Diamond Hubber

Originally Posted by
g94127302
திரு ஆதிராம் - நன்றாக எழுதுபவர்கள் எவ்வளவு முக்கியமோ , அவ்வளவு முக்கியம் அவர்கள் போடும் பதிவுகளை ரசனையோடு படிப்பவர்கள் , படித்து மனமார பாராட்டுபவர்கள் - இவர்கள் இல்லையென்றால் எழுதும் எழுத்துக்கள் செடிகள் போல பூத்துக்கொண்டே இருக்காது , வெறும் பூக்கள் போல பூத்து வாடிவிடும் - எழுதுபவர்களுக்குக் கூட அவ்வளவு பெரிய மனம் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை - ஆனால் , படித்து , அதற்குப்பின்னால் இருக்கும் உழைப்பை உணர்ந்து அவர்களை ஓர் இரண்டு வார்த்தைகளாவது சொல்லிப்பாராட்டுவதர்க்கு பரந்த மனம் தேவை -
இந்த திரியில் யாருமே எதையுமே எதிர்ப்பார்க்காமல் சேர்ந்து இருக்க வேண்டும் என்ற ஒரே நினைப்பில் பதிவுகளை போட்டுக்கொண்டே இருக்கிறோம் - இந்த உழைப்பை , dedication யை வேறு எங்காவது காண்பித்து இருந்தால் பல லட்சம் சம்பாதித்து இருக்கலாம் - இங்கு கிடைப்பது விலை மதிக்க முடியாத ஆத்ம திருப்தி - இது ஒன்றுதான் வாசு போன்றவர்களுக்கு உங்கள் மூலமும் , கொஞ்சம் என் மூலமும் கிடைக்கிறது - சிலர் எதையுமே கண்டு கொள்ளாமல் அவர்கள் வழியில் , அவர்களுக்குப்பிடித்ததை மட்டுமே பதிவிட்டு மற்றவர்களின் ஈடுபாட்டை கண்டுக்கொள்ளாமல் இருப்பது - எழுதுபவர்களுக்கு ஒன்றும் இல்லை ஆனால் அந்த போக்கு நமக்குள் இருக்கும் சகோதரத்தன்மையை எடுத்துக்காட்டுவதாய் அமைவதில்லை .
மற்றவர்களுடைய நல்ல பதிவுகளை எவ்வளவு பழைய பதிவுகளையும் மனதில் கொண்டு அதையும் சம்பந்தப்படுத்தி அவர்களைப்பாராட்டுவது என்பது உங்களது பரந்த மனம் - இறைவன் கொடுத்த வரம் . வாசுவின் பதிவுகளை விட நீங்கள் அவரை நெஞ்சார பாராட்டும் பதிவுகளை நான் மிகவும் ரசிக்கிறேன் - நம்மால் வாசுவிற்கு திருப்பி செய்யும் நன்றிக்கடன் இது ஒன்றுதான் - என்னால் உங்களைப்போல எழுத வராது , அதனால் ஒரு பெரிய நன்றி மீண்டும் உங்களுக்கு !!
ரவி சார்,
மிக்க நன்றி! தாங்கள் என் மீது வைத்திருக்கும் அபரிமிதமான அன்பிற்குத் தலை வணங்குகிறேன்.
//வாசுவின் பதிவுகளை விட நீங்கள் அவரை நெஞ்சார பாராட்டும் பதிவுகளை நான் மிகவும் ரசிக்கிறேன்//
நூறு சதவீதம் உண்மை ரவி சார். எழுதினால் மட்டும் போதாது. அதை ரசித்து இடும் பதிவுகளே (நிச்சயம் பாராட்டுதல்களை இல்லை) பதிவாளர்களுக்கு உத்வேகத்தைத் தரும். உற்சாகத்தையும் அளிக்கும். திரிக்கென்றெ தினமும் பலமணி நேரம் செலவாகின்றது. ஒரு பதிவை முழுமையாக அளிக்க குறைந்தது ஐந்து மணி நேரங்களாவது பிடிக்கிறது. இது நாமாக விரும்பி ஏற்றுக் கொண்டதுதான். நமக்குத் தெரிந்தது இன்னும் நாலு பேருக்குத் தெரியட்டும் என்றுதானே கொடுக்கிறோம். (இதில் சுயநலமோ, வருமானங்களோ மற்ற எதுவுமே இல்லை), ஆனால் அதை பார்வையாளர்கள் படித்தார்கள் என்று தெரியும்போது பட்ட களைப்பெல்லாம் நீங்கி விடுகிறது. அதைத் தான் பதிவாளர்கள் விரும்புவது. பாராட்டையல்ல.
ஆதிராம் சார், ராகவேந்திரன் சார், சின்னக் கண்ணன் சார், நீங்கள், நண்பர் கல்நாயக், கிருஷ்ணா எல்லாம் அதைப் படித்து விட்டு பதிலிடும் போது பதிவுகளுக்கு இருக்கும் மரியாதை கூடுகிறது. பாராட்டுவது ஒரு புறம் கிடக்கட்டும். பதிவைப் படித்து நல்லதோ கெட்டதோ நாலு வார்த்தை அதைப் பற்றி பகிர்ந்து கொண்டால் அதில்தான் ஆத்ம திருப்தியே.
உங்களுடைய இந்தப் பதிவு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பதிவு. மிகவும் நன்றி ரவி சார்.
Last edited by vasudevan31355; 12th July 2015 at 08:23 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
12th July 2015 08:20 PM
# ADS
Circuit advertisement
-
12th July 2015, 08:26 PM
#1782
Senior Member
Diamond Hubber

Originally Posted by
g94127302
வாசு , மீண்டும் வார்த்தைகள் கிடைக்கவில்லை - ஒரே ஒரு மொழியில் மட்டும் சில வார்த்தைகள் கிடைத்தன - அவற்றின் தமிழாக்கத்தை எனக்குத் தெரிந்தவரை எழுதுகிறேன் .
இரிஸ் : "தொப்பாக்கோ தோன்டோ , டமால் மாண்டோ - அபுள்ளே கஷ்ட்டம் சபோக்கோ ஜாக்கோ "
தமிழாக்கம் : தொப்பாக்கோ தோன்டோ : உண்மையான உழைப்பு ; டமால் மாண்டோ : என்றுமே வீண் போகாது ; அபுள்ளே - அப்படி இல்லாமல் ; கஷ்ட்டம் : ஏனோதானோ என்று ; சபோக்கோ ஜாக்கோ : எழுதினால் ஒருவரும் மிஞ்ச மாட்டார்கள் ....
சுருக்கம்மாக சொன்னால் , திரு ஆதிராமின் வார்த்தைகளை அப்படியே ஆமோதிக்கிறேன் ...
ரவி சார்,
உங்களை....ஆ...நற நற
-
12th July 2015, 10:44 PM
#1783
Senior Member
Seasoned Hubber
வாசு சார்
ஆயிரம் நினைவு பாடலைப் பற்றி என் மனதில் உள்ளதை அப்படியே எழுதி விட்டீர்கள். இதற்கு மேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்ல என்ற வாலியின் வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகிறது.
சென்னை மிட்லண்டில் முதல் வெளியீட்டில் பார்த்த போதே மனதில் தோன்றி விட்டது. என்னடா இவ்வளவு வெயில் அடிக்கும் போது மழையும் வருகிறதே. சுட்டெரிப்பது போன்ற வெயில் அடிக்கும் போது எப்படி மழை அடிக்கும் எனத்தோன்றும். அப்புறம் நாளடைவில் ஒளிப்பதிவு பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்ட போதே புரிந்தது. ஸ்ரீதரைப் பொறுத்தவரையில் கன்டின்யூடி பெரும்பாலும் தவறாது. இருந்தாலும் யானைக்கும் அடி சறுக்கும் என்பதற்கேற்ப அவ்வப்போது இது மாதிரி நிகழ்வதுண்டு. இருந்தாலும் இதையெல்லாம் மீறி மெல்லிசை மன்னரின் இசையும் பாலாவின் குரலும் நம்மை இப்பாடலோடு ஒன்றி விடச் செய்து விடும். மிட்லண்டில் படம் ஓடிய அந்த கொஞ்ச நாட்களுக்குள்ளேயே இந்த பாடலுக்காக நான் மூன்று முறை பார்த்தேன். இடைவேளைக்குப் பிறகு படம் பொறுமையை சோதிக்கும். இருந்தாலும் பாரதியின் நடிப்பு நம்மைக் கட்டிப்போட்டு விடும்.
படத்தின் முடிவில் நம்மை படத்தில் மூழ்கவைத்து அதன் ஹேங்கோவர் ரொம்ப நேரம் இருக்கும் படி செய்து விடும்.
அருமையான பதிவிற்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
12th July 2015, 11:54 PM
#1784
Junior Member
Diamond Hubber
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான பல தமிழ்த் திரைப்படங்கள், கதாபாத்திரங்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதைக் கொண்டாட்டமாகச் சித்தரித்தவை. வெளிநாட்டு மண்ணில் விமானம் தரையிறங்குவது தொடங்கி ஒவ்வொரு காட்சியிலும் அந்நிய மண்ணை வியந்து ரசிக்கும் இந்திய மனது வெளிப்படும்.
அந்த வரிசையில் இடம்பெறும் படம் ‘உல்லாசப் பறவைகள்’(1980). கமல்ஹாஸன், ரதி, தீபா பிரதான பாத்திரங்களில் நடித்த இப்படத்தை சி.வி. ராஜேந்திரன் இயக்கியிருந்தார். ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் படமாக்கப்பட்ட இப்படத்தில் மேற்கத்திய இசையில் தனக்கு இருக்கும் மேதமையை முழு வீச்சில் வெளிப்படுத்தினார் இளையராஜா. நுட்பங்கள் நிறைந்த விரிவான இசைக்கோவை கொண்ட பாடல்களும் பின்னணி இசையும் நிறைந்த படம் இது.
மாமா மியா
‘அம்மாடி’ எனும் வியப்புச் சொல்லின் இத்தாலி மொழி வடிவமான ‘மாமா மியா’ எனும் வார்த்தையைப் பயன்படுத்தி இளையராஜா உருவாக்கிய பாடல், ‘அழகு ஆயிரம் உலகம் முழுவதும்’. முகப்பு இசையிலேயே ஜாலங்களை நிகழ்த்தியிருப்பார் இளையராஜா. மெலிதாக ஒலிக்கத் தொடங்கும் பியானோவுடன், வெவ்வேறு இசைக் கருவிகள் ஒவ்வொன்றாக இணைந்துகொண்டே வரும்.
பல்லவி தொடங்குவதற்குச் சற்று முன்னர் வரும் அந்த பிரம்மாண்டமான வயலின் இசைக் கோவை நம்மைக் காற்றில் தூக்கிச் செல்லும். ஆண் தன்மை கொண்ட குரலுடன் ‘பபபப்பா..’ என்று ஜானகி ஹம்மிங் செய்யும் பாடல்களில் இதுவும் ஒன்று. மெல்லிய குளிர் காற்று வீசும் ஐரோப்பிய நகரங்களின் பின்னணியில் துள்ளலாக ஒலிக்கும் பாடல் இது.
பரிவின் இசை
மனநோயால் பாதிக்கப்பட்டி ருக்கும் கமலுக்கு ஆறுதல் தரும் மனதுடன் ரதி பாடும் ‘நான் உந்தன் தாயாக வேண்டும்’ பாடல், ஒரு வித்தியாசமான தாலாட்டு. வேகமான தாளக்கட்டின் மேல் விரிந்து செல்லும் இசைக்கோவைகளுக்கு நடுவில் தாயின் பரிவுடன் காதலி பாடும் பாடல் இது. நுட்பமான பாவங்களுக்குப் புகழ்பெற்ற ஜானகி இப்பாடலுக்கு மேலும் மேன்மை சேர்த்திருப்பார். விரிந்திருக்கும் கடலின் மீது ஒவ்வொன்றாக விழும் தூறல் போல், மிக மென்மையான இசையுடன் தொடங்கும் இப்பாடல் முழுவதும் அன்பின் சாரல் நிறைந்த இசையைத் தந்திருப்பார் இளையராஜா.
சுகந்தத்தின் மணம்
மற்ற பாடல்களாவது ஐரோப்பாவின் எந்த நகரத்தின் கட்டிடங்கள், பாலங்கள், சாலைகளின் பின்னணியில் பொருந்திவிடும். ஆனால், ‘அழகிய மலர்களின் புதுவித ஊர்வலமே’ பாடல் ஐரோப்பிய நகரம் ஒன்றில் (ஆம்ஸ்டர்டாம் இணையக் குறிப்பு ஒன்று) நடக்கும் மலர்க் காட்சியின் பின்னணியில் பிரத்யேகமாகப் படமாக்கப்பட்டிருக்கும். இந்த மலர்க்காட்சிக்குப் பொருத்தமானதாக இப்பாடலை இளையராஜாவிடம் கேட்டு வாங்கியிருக்க வேண்டும்.
மலர்க் காட்சியின் ஊர்வலத்தில் இசைக்கப்படும் தாள வாத்தியங்களுடன் தொடங்கும் பாடலில் மலர்களின் சுகந்தமும் குளுமையும் நிரம்பித் ததும்பும். முதலாவது நிரவல் இசையில் புல்லாங்குழல் ஊர்வலத்தின் பின்னே தொடரும் ‘லலலல்லால லாலா’ எனும் சங்கமக் குரல்கள் நிஜ வாழ்வில் தேவதைகளின் இருப்பை நம்பச் செய்யும்.
தேவதைகளின் பாடல்
படத்தின் ஒரேயொரு ‘உள்ளூர்ப் பாட’லான ‘தெய்வீக ராகம் தெவிட்டாத’ பாடலைக் குரலுலகின் தேவதை ஜென்ஸி பாடியிருப்பார். ‘ஓஓஓ..ஏஏஏ’ என்று தொடங்கும் ஜென்ஸியின் ஹம்மிங்குக்குப் பின்னர் ஒலிக்கும் இசை நம் உணர்வுகளை மீட்டிச் சிலிர்க்க வைக்கும். காதலை ரகசியமாக உணர்த்தும் புல்லாங்குழல் இசையைத் தொடர்ந்து ‘செந்தாழம் பூவைக் கொண்டு’ என்று சரணத்தைத் தொடரும் ஜென்ஸியின் குரல், தனிமையின் வலியை மென்மையாகப் பதிவுசெய்யும்.
இயற்கையின் நுட்பமான கூறுகளை உள்வாங்கி அதை இசை வடிவமாகத் தரும் இளையராஜாவின் மேதமைக்குச் சான்று இப்பாடல். பாடல்களில் பால் வித்தியாசம் உண்டா தெரியாது. ஆனால், இது ஒரு பெண்பால் பாடல் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். ரதிக்கு இப்பாடலைக் கமல் பாடிக்காட்டும் காட்சியில் அத்தனை உணர்வுடன் இப்பாடலை ஒரு ஆண் பாடவே முடியாது என்று தோன்றும்.
செந்தேன் மலர்
பெண் குரல்களின் தனிப்பாடல்கள் நிறைந்த இப்படத்தின் ஒரேயொரு டூயட் பாடல் ‘ஜெர்மனியின் செந்தேன் மலரே’. தமிழ்த் திரையிசையின் இணையற்ற ஜோடியான எஸ்.பி.பி.- ஜானகி பாடிய இப்பாடல் இளைய ராஜாவின் மிகப் புகழ்பெற்ற பாடல்களில் ஒன்று. ‘ஜெர்மனியின் செந்தேன் மலர்’ எனும் பதமே, மனதுக்குள் பரந்த மேற்கத்திய நிலத்தின் வசீகரச் சித்திரத்தை விரிக்கும்.
ஆர்ப்பாட்டமான சாக்ஸபோன் இசையுடன் தொடங்கும் இப்பாடல் முழுவதும் இனிமையின் கொண்டாட்டம் தான். ஜெர்மனி என்று பாடல் வரி சொன்னாலும் பிரான்ஸ், நெதர்லாந்து என்று வெவ்வேறு நாடுகளின் நகரங்களில் படமாக்கியிருப் பார்கள். இரண்டாவது நிரவல் இசையில் துள்ளும் கிட்டார் இசையைத் தொடர்ந்து குளிர் காற்றில் பரவும் வயலின் இசைக் கோவை தமிழ்த் திரை யிசையின் மகத்தான சாதனை
courtesy the hindu tamil
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
13th July 2015, 02:31 AM
#1785
Senior Member
Devoted Hubber

Originally Posted by
Varadakumar Sundaraman
, ''சிவாஜி ''பத்திரிகையில் 11.4.1947 அன்று வந்த விளம்பர ஆவணத்தையும் மிக மகிழ்ச்சியுடன் இங்கு பதிவிடுகிறேன் .

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
1956ல் வெளிவந்த அலிபாபாவும் 40 திருடர்களும்தான்
முதல் தமிழ் கலர் படம் என அனைவரும் அறிந்த விடயம்.
ஹரிதாஸ் கலர் படம் என மேலே உள்ள
விளம்பரம் சொல்கிறது .
ஹரிதாஸ் கலர் படமா?
அல்லது தவறான விளம்பரமா?
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
13th July 2015, 03:28 AM
#1786
Senior Member
Veteran Hubber

Originally Posted by
sivaa
ஹரிதாஸ் கலர் படம் என மேலே உள்ள
விளம்பரம் சொல்கிறது .
ஹரிதாஸ் கலர் படமா?
அல்லது தவறான விளம்பரமா?
I think some scenes were color painted by hand. The entire movie was not in color.
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
13th July 2015, 05:55 AM
#1787
Junior Member
Seasoned Hubber
Good Morning
-
13th July 2015, 05:59 AM
#1788
Junior Member
Seasoned Hubber
-
13th July 2015, 06:08 AM
#1789
Junior Member
Seasoned Hubber
கருவின் கரு - 186
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்
மாணவ /வாலிப / திருமண பருவம்
போர் முடிந்து அயோத்தி திரும்பிய ராமன் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொண்ட பின்னர் அசுவமேத யாகத்திற்கு தயாராகிக் கொண்டிருந்த நேரம் அது!. இராமனின் அரசவையை வசிட்டர், விசுவாமித்திரர் போன்றவர்கள் அலங்கரித்திருந்தனர். அந்த சமயத்தில் அரசன் ஒருவன் அரசவை வந்து ராமரை வணங்கிச் சென்றான். அங்கிருந்த நாரதர் கலகம் மூட்டும் நோக்கத்துடன் விசுவாமித்திரரிடம் அந்த அரசன் உங்களை வணங்காமல் அவமதித்து விட்டான் என விசுவாமித்திரரை கோபம் கொள்ள செய்தார்.
வெகுண்டெழுந்த விசுவாமித்திரர், இராமரிடம் இன்று மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன்னதாக அந்த அரசனின் தலையை என் காலில் கொண்டு வந்து போடவேண்டுமென ஆணையிட்டார். குருவின் கட்டளையை சிரமேற் கொண்ட ராமனும் போருக்கு கிளம்பி விட்டான். இதற்கிடையில் நாரதர் அந்த அரசனையும் சந்தித்து விசுவாமித்திரரின் கோபத்தையும் அதன் விளைவையும் கூறிவிட, அந்த அரசன் பயந்து நாரதரின் காலில் விழுந்து காப்பாற்ற வேண்டினான்.
இராம பாணத்திற்கு முன்னால் ஏதும் செய்ய இயலாதென கூறிய நாரதர், இந்த உலகில் உன்னை காப்பாற்றும் வல்லமை ஒரே பெண்ணுக்குத்தான் இருக்கிறது. அவள் பாதங்களை சரணடைந்து விடு, அவள் உணக்கு அபயமளித்தேன் என சொல்லும் வரை அவள் பாதத்தில் வீழ்ந்து கிட என்று கூறினார்.
அவள் அனுமனின் தாயாரான அஞ்சன தேவி...
அஞ்சன தேவியில் காலில் வீழ்ந்து கதறியழுத மன்னனை காப்பாற்றுவதாக கூறிய அஞ்சன தேவி, தனது மகன் அனுமனை அழைத்து இவனை காப்பாற்று என கூறினாள். தாயின் கட்டளையை மீற இயலாத அனுமன் தன் வாலை சுருட்டி மலை போல அமைத்து அதன் நடுவில் அந்த அரசனை உட்கார வைத்து விட்டு, மேலே அமர்ந்த் ராம நாமம் ஜெபிக்க ஆரம்பித்தார்.
போருக்கு வந்த ராமன், அனுமனிடம் அரசனை வெளியே அனுப்புமாறு கூற, அனுமன் தாயின் கட்டளையைக் கூறி தனது இயலாமையை கூறினார். கோபமுற்ற ராமன் உன் மீது பாணம் தொடுக்க வேண்டி இருக்கும் என எச்சரித்ததையும் அனுமன் ஏற்காமல் ராமநாம ஜெபத்தில் ஈடுபட்டார்.
ராமனும் ஆவேசமாக அம்புகளைத் தொடுக்க அவை அனுமனை தாக்காது அவர் காலடியில் விழத் துவங்கின....தொடரும் ராமனின் அம்பு மழையின் உக்கிரத்தால் உலகமெல்லாம் நடுங்கத் துவங்கியது. தேவர்கள் சிவபெருமானை அணுகி இந்த யுத்தத்தினை நிறுத்திட வேண்டினர். அவரோ இதை முடிக்க விசுவாமித்திரனால் மட்டுமே முடியும் என கூறிவிட்டார்.
தேவர்கள் விசுவாமித்திரரை சரணடைய, அவர் மனமிறங்கி போர்களம் வந்தார், அவருடன் நாரதரும் வந்தார். விசுவாமித்திரரின் வார்த்தையை ஏற்று ராமரும் போரை நிறுத்தினார். நாரதல் அனுமனின் வாலுக்குள் மறைந்திருந்த அரசனை அழைத்து விசுவாமித்திரரில் காலில் விழச்செய்தார். அப்போது விசுவாமித்திரரிடம் இவன் தலை இப்போது உங்கள் காலடியில் விழுந்துவிட்டது. இவனை மன்னித்து விடுங்கள் என கோரிக்கை வைக்க, விசுவாமித்திரும் மனமிறங்கி மன்னித்தார்.
அப்போது அங்கு வந்த ராமன், நாரதரிடம் எப்படி என் பாணங்கள் வலுவிழந்தன என கேட்டதற்கு....நாரதர், ராமா!, உன் பாணங்களை விட உன் நாம ஜெபம் சக்தி வாய்ந்தது என்பதை புரிய வைக்கவே இத்தனையும் நடத்தினேன் என்றார்.. ராமருக்கு இன்னும் சந்தேகம் தீரவில்லை - என்னை விட என் நாமத்திற்கு எங்கிருந்து சக்தி வந்தது ? - குல குருவான வஷிஷ்டரையே கேட்டு விடலாம் என்று எண்ணி அவரிடம் தன் சந்தேகத்தை கேட்க்கிறார் .. " ராமா - எவன் ஒருவன் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று வாழ்கிறானோ , எவன் ஒருவன் தந்தைய விட வேறு தெய்வம் இல்லை என்று நினைக்கிறானோ அவனுடைய நாமம் அவனை விட சக்தி வாயிந்ததாக ஆகிவிடுகிறது - அவன் பெயரை சொல்லும் எவருக்குமே அவன் அருளால் , அவனையே வெல்லும் பலம் வந்துவிடுகிறது " என்றார்
எவ்வளவு உண்மை !!
-
13th July 2015, 07:28 AM
#1790
Junior Member
Seasoned Hubber
கருவின் கரு - 187
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்
மாணவ /வாலிப / திருமண பருவம்
Following is a letter to his son from a renowned Hong Kong TV broadcaster/Child Psychologist. The words are actually applicable to all of us, young or old, children or parents! This applies to daughters too.
Dear son,
I am writing this to you because of 3 reasons
1. Life, fortune and mishaps are unpredictable; nobody knows how long one lives. Some words are better said early.
2. I am your father, and if I don't tell you these, no one else will.
3. What is written is my own personal bitter experiences that perhaps could save you a lot of unnecessary heartaches.
Remember the following as you go through life
1. Do not bear grudge towards those who are not good to you. No one has the responsibility of treating you well, except your mother and I. To those who are good to you, you have to treasure it and be thankful, and ALSO you have to be cautious, because, everyone has a motive for every move. When a person is good to you, it does not mean he really likes you. You have to be careful, don't hastily regard him as a real friend.
2. No one is indispensable, nothing in the world that you must possess. Once you understand this idea, it would be easier for you to go through life when people around you don't want you anymore, or when you lose what/who you love most.
3. Life is short. When you waste your life today, tomorrow you would find that life is leaving you. The earlier you treasure your life, the better you enjoy life.
4. Love is but a transient feeling, and this feeling would fade with time and with one's mood. If your so called loved one leaves you, be patient, time will wash away your aches and sadness. Don't over exaggerate the beauty and sweetness of love, and don't over exaggerate the sadness of falling out of love.
5. A lot of successful people did not receive a good education, that does not mean that you can be successful by not studying hard! Whatever knowledge you gain is your weapon in life. One can go from rags to riches, but one has to start from some rags!
6. I do not expect you to financially support me when I am old, neither would I financially support your whole life. My responsibility as a supporter ends when you are grown up. After that, you decide whether you want to travel in a public transport or in your limousine, whether rich or poor.
7. You honor your words, but don't expect others to be so. You can be good to people, but don't expect people to be good to you. If you don't understand this, you would end up with unnecessary troubles.
8. I have bought lotteries for umpteen years, but I never strike any prize. That shows if you want to be rich, you have to work hard! There is no free lunch!
9. No matter how much time I have with you, let's treasure the time we have together. We do not know if we would meet again in our next life.
Love,
Your Dad
Bookmarks