Page 202 of 400 FirstFirst ... 102152192200201202203204212252302 ... LastLast
Results 2,011 to 2,020 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #2011
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Jugalbandi 42

    Chemmeen Lehren is the Hindi dubbed version of Chemmeen (1965) (Malayalam).

    Here is a song I liked most.

    Pyasa hai main kya karoon... (sung by Hariharan)



    From the original (already posted)

    Maanasa maine varoo... (sung by Manna De)




    Same tune used by Salil Chodhuri in the Bengali movie, Srikante Will

    Naam Sokuntola taar... (sung by Jesudas and Sabita)




    RD: I could not locate the video clips of songs from Circar Express. Probably due to spelling change in transliteration or copyright issues. I will keep trying. Was Chemmeen dubbed in other Indian languages? It was dubbed in English as
    'Anger of the sea'.
    Last edited by rajraj; 20th July 2015 at 11:51 AM. Reason: angel changed to anger
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2012
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    Thank you Raj! I am not aware of the movie Chemmeen being dubbed into any other languages other than Hindi and English even though the novel was translated into more than 30 languages. By the way, it was "The Anger of the Sea" in English. I have re-mixed youtube copies of the other songs from the Hindi version that I will post at another time. For anyone more interested in the movie, here is a well-written review: http://madhulikaliddle.com/2013/04/09/chemmeen-1965/ . Too much Chemmeen for one day; I am not going to talk about it anymore!

  4. #2013
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    OLD TAMIL MOVIES ADVT.

  5. Thanks vasudevan31355 thanked for this post
    Likes RAGHAVENDRA, vasudevan31355 liked this post
  6. #2014
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  7. Thanks vasudevan31355 thanked for this post
  8. #2015
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் குட்மார்னிங்க் ஆல்

    ஹும் வேக வேகமா ஐ.என்.எஸ். எழுதிட்டு நைட் ஷோ பாகுபலி பத்து மணிக்குப் போய் ஒரு மணிக்கு முடிந்து வீடுவர ஒன்றரை.. படம் நீளம்..ஆற அமர யோசித்து வெகு பிரம்மாண்டமாய் எடுத்திருக்கிறார்கள் இருந்தாலும் என்ன சொல்ல.. பச்சக் கென மனதில் ஒட்டிக் கொண்டது யாராக்கும்.. வேறு யார் தமன்னாவாக்கும்..

    காலை எழுந்தவுடன் ஹேய் ஹேய் என்னை ப் பற்றி எழுதப் படாதோ என தமன்னா கண்ணுக்குள் வந்து மயிலிறகால் டபக் டபக் என வருடிவிட..எழுதிவிட்டேன்.,.
    *

    வெண்பனியின் மூட்டமதும் வேடிக்கை கொண்டங்கே
    பின்னலெனக் கொள்ளாமல் பேரழகைக் காட்டத்தான்
    மின்னல்போல் வேகமாய் மேவி விலகிவிட
    கண்ணுள் விழுந்தாளே காண்..
    *

    காண்பதென்ன தேவதையா காட்டிலுள்ள மோகினியா
    வான்நிலவு தானுதிர்த்த வண்ணநிறைக் கீற்றதுவா
    தூண்டிவிடும் இளமையதைத்\ தூக்கிவிடும் மோகத்தை
    பூண்டிருக்க கண்டமனம் புண்..
    *
    புண்ணாகும் என்றாலோ பூவையவள் கண்களதும்
    என்னவிது என்றே எழுச்சியுடன் கேட்டுவிடும்
    கன்னியவள் மெல்லங்கே காட்டிய நல்லெழிலை
    எண்ண இனிக்குமே ஆம்..

    *
    பச்சைத் தீயே எனத் தமிழில் ஆரம்பிக்கும் பாடல் தெலுகில் பச்சை பொட்டேசினா



    *
    பின்ன வாரேன்
    Last edited by chinnakkannan; 20th July 2015 at 10:35 AM.

  9. Thanks eehaiupehazij thanked for this post
  10. #2016
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    மாற்றார் தோட்ட மெல்லிசை மதுரம்
    பார்ட் 11 : The Spy Who Loved Me (1977) starring Roger Moore as James Bond OO7!

    The lukewarm response to the first two outings of Bond with Moore created a sort of rift between Broccoli and his longstanding partner Harry Saltzman and resulted in a break up of partnership. Then Broccoli settled the dues for him and started producing on his own from this 1977 venture!! Rest is a success story continuing till date irrespective of which actor dons the Bond role!!

    இப்படத்தின் மூலம் காமெடி கலந்த கடமை வீரராக ஜேம்ஸ் பாண்டிற்கு புது உருவம் கொடுப்பதில் வெற்றி கண்டார் ரோஜர் மூர்!
    ஷான் கானரியின் தவிர்க்க முடியாத நிழல் படிவத்திலிருந்த குணாதிசயங்களை விட்டுக் கொடுக்காமல் நகைச்சுவை கலந்து ஆக்ஷனையும் பரிமாறினார் !!

    மூரின் படங்களிலேயே பிரம்மாண்டமான படம் இதுவே , சற்று தண்டர்பால், யு ஒன்லி லிவ் டுவைஸ் படங்களை நினைவு படுத்தினாலும்!!

    டைட்டிலுக்கு முன்னால் வரும் மெய்சிலிர்க்க வைக்கும் பனிச் சறுக்கு துரத்தல் காட்சி கின்னஸ் சாதனையாகும். ஜான் பேரியின் தீம் இசை சூழலின் வேகத்தை கூட்டும் வண்ணம் அபாரமாகக் கோர்க்கப் பட்டிருக்கும் !! வில்லனின் கடலடி மாளிகை, இரும்புப்பல் வில்லன் ஜாஸ், கடலுக்குள் நீர்மூழ்கி கப்பலாக மாறும் கார், ....மறக்க முடியாத அனுபவம்!!

    இந்த ஒரு படத்தில் காட்டிய சுறுசுறுப்பான ஆளுமையை ஏனோ ரோஜர் மூரால் தொடர இயலவில்லை.!! டைட்டில் இசைப்பாடலும் மிகவும் பொருத்தமான வரிகளில் ஜேம்ஸ் பாண்ட் புகழ் பாடும் !!

    கதாநாயகி பார்பரா பேக் ஒரு ஸ்பை பெண்ணை நன்கு சித்தரித்துள்ளார் ஜேம்ஸ் பாண்டுக்கு இணையாக துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் வில்லன்
    தன்னை கோல்டுபிங்கராக எண்ணிக்கொண்டு கொஞ்சம் சொதப்பியிருக்கிறார் !


    Grand Gala Pre-titile adventure by Moore/Bond!! Most of the scenes Moore manages with his body double and back projection aided close-ups!!



    Excellent titile music, theme song mix with graphics!!
    Nobody does ... sung by Carly Simon; Music by Marvin Kamlich! No more John Barry BGM but his theme music is just sprinkled in the critical action scenes to build up the tempo!!



    Enjoy the enchantic BGM in the Pyramids' light and sound show with thrills infused in the presence of Bond/Moore alongside Jaws/Kiel!!





    James Bond's Spy Technology improvised Lotus Espirit Car!!
    No Auston Martin...but Roger Moore fulfilled his desire to drive Sean Connery/Bond's Goldfinger car Auston Martin in a spoof Bond role in Cannon Ball Run starring alongside Burt Reynolds!!Enjoy the exotic visuals and one liner quips by Moore in dispatching baddies one by one!!



    James Bond Vs Jaws! The 7feet tall Richard Kiel reached the pinnacle of his fame after his Jaws characterization in this Bond flick!! Roger Moore looks quite handsome in this black dress with his comical winkling at Jaws before dragging him underneath the giant magnet!!



    The train fight is not so grand compared to that in Sean Connery starrer From Russia with Love's terrific duel with Robert Shaw! Moore does a light movement even as Jaws looks awesome with his projecting steel teeth that is a larger than life depiction!!



    The thrill filled end of villain! Roger Moore's suave and stylish Bond movements are impressive!!

    ரோஜர் மூரின் ஜேம்ஸ் பாண்ட் இவ்வளவு க்ளோஸ் ரேஞ்சில் வில்லனை புல்லட்டடிப்பது சற்று அதிர்ச்சியே!!

    Last edited by sivajisenthil; 20th July 2015 at 10:12 PM.

  11. #2017
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    21/07

    நினைவில் நிலைத்த நடிகர்திலகம் ....
    அவரது நினைவு நாள் மன அஞ்சலி ...









    நடிகர்திலகத்தின் நினைவஞ்சலியை ஒட்டி எனது மதுர கான திரி பதிவுகளை 22.07 முதல் தொடர்கின்றேன்.
    செந்தில்
    Last edited by sivajisenthil; 20th July 2015 at 06:44 PM.

  12. Thanks vasudevan31355 thanked for this post
  13. #2018
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like

    நான் மறக்கவே முயலும் நினைவு நாள் காணும் எங்கள் தென்னவர் திலகமே,திராவிட ஆண்மையின் மன்மத திலகமே ,நடிகர் திலகமே , இந்த தூசு கவி உனக்களிக்கும் மாசு காணா ஆசை கவி மழை. உன் ஆசிகளின் துளியை எனக்களி பிரதியாய் .


    அன்னை தமிழின் அருந்தவ புதல்வனே நல்லூழ் கண்டோர் நாங்கள்
    உன்னை தொழுதே அளப்பரிய களிப்புடன் அடிதன்னில் வீழ்வோம்

    போற்றி உன்னை எனை மறந்து புகழ்ந்தே கவிபாடும் திறன்
    ஆற்றல் எமக்கே அளித்தோனே ஆக்கமுடன் மருளாது

    ஏற்றமிகு வாணியின் பிணக்கா செல்வம் கணக்கிலா இணக்கமுற
    பெற்ற நீ இம்மண்ணுதித்ததோ ஆயிரத்தொன் இருபத்து எட்டில்

    தோப்புகரண துதி செய்து தெளிதேனுடன் இடுவேன் இந்நினைவுநாள்
    காப்பு நீயென வேண்டி தொழுவேன் எங்கள் கணேசமூர்த்தியே

    தேவ பெற்றோருக்கு தேவமைந்தனாய் வந்துதித்த தேவனே
    நாவன்மை பேறு நான் பெற காவன்மை குவித்த காருண்யனே

    காரிருள் களைந்து களைத்துநின்ற தமிழுக்கு பேரொளி தந்தாய்
    சூரிய செம்மை நிகர் ஒப்பரிய காரிய செம்மை வீரியம் கண்டோய்

    கொஞ்சும் தமிழால் அஞ்சுக செல்வன் அருந்தமிழை விருந்தமைவாய்
    தஞ்சையின் தங்கமே நல்லதோர் வீணையாய் விந்தையுறு விசையுறு

    வேகமொடு வேந்துவின் வீச்சோடு வற்றியிருந்த மண்ணுக்கு வெற்றிவாகை
    தாகமொடு தாங்கொணா தகிப்புடன் தவித்த தத்தைகளுக்கு தமிழமுத தாயமுது

    தரணியே இருள் இற்று அடைநதது அளப்பெரும் பேறு அருந்தவன் பேரு
    முரணியே தேங்கிடா காட்டாற்று வெள்ளம் கலையின் தலைமகன் கொடைநூறு

    கண்டோர் கேட்டோர் களித்து கடைந்தெடுத்த பார்க்கடலமுதாய் நடிப்பமுது
    வேண்டார் வேண்டார் நல்லோர் அல்லார் சிந்தையில் கண்டார் சிவாஜி வென்றதை

    வசதி வேண்டி மெய்வருத்தம் காணா தடை தகர்த்து படைபுடை கண்டு
    அசதி இன்றி ஈந்தாயே இன்னுயிர் இன்னுடல் கலைபணிக்கே

    சந்தையில் நிலை உயர நேசம் மறவா நன்நெஞ்ச நற்றமிழர் நயந்தே
    சிந்துபாடி சிறப்புற ஊக்கம் உகந்தனர் உணர்ந்தே உகந்தே

    அந்தவரை தன்னை அணுவும் மறக்காமல் ,நிலை துறக்காமல்
    தந்தவரை தலையில் தூக்கி போற்றினான் தன்னுள் பின்னாள் வரை

    விந்தையுற தந்தான் உடன் உடன்பிறந்த கற்ற பெற்ற வித்தைகளை
    தங்கு தடையின்றி ஓங்கு புகழ் சேர்த்தான் தன் பால் தமிழ்மண்ணுக்குமாய்

    காசினியில் கண்டோர் விண்டொரெல்லாம் பூசித்து போற்றும்
    மாசிலா புகழை எகிப்து ஆசிய ஆப்பிரிக்க பட விழாவில்

    நேசித்து ஈந்தனர் உலகின் சிறந்த கலைஞர் உயர்ந்த சிறப்பை
    யோசித்த நாசரோ நம் நடிகரல்ல உலக தலைவர் நேருவினும் நேரானவர்.

    நாணிய அமெரிக்கனோ வா வா எனவே சிவப்பு கம்பளம் விரிக்க
    வாணியின் வையக மைந்தனை சிறப்பு மேயராக்கி சிறக்க வைத்தான்

    நெப்போலிய பூமிக்கோ அளப்பிலா அசூயை கலையின் ஊற்றிடம் அன்றோ
    இப்புவியின் ஒப்பிலா வீரன் துவக்கிய அசுத்தம் கலக்கா புனித விருதை

    எப்புவிக்கும் ஒப்புவிக்கும் ஒப்ப வைக்கும் ஓய்வு காணா கலை விந்தைக்கு
    ஒப்புவித்தே தப்புவித்தது தன் கலை புகழை தன் தேச தகைமையை

    நடிப்பு வீரம் போற்றி துடிப்பு மிகு விழா கண்டு பெருமை மீட்டது ஓங்கியும்
    இடித்தே இகழ்ந்தது இந்திய துணை கண்டத்தின் இழிவு நிலை அரசு அரசியலை

    வேகமற்ற இந்திய அரசோ அரசை கலையாக்க கலையை அரசியலாக்க
    விவேகமுற்ற வேகத்தில் விருது ஒன்றிற்கு பெருமை தந்து தாதாவை காத்தது

    உலக வல்லரசே உன் முறை மீண்டும் இம்முறை தங்க சாவியல்ல
    கலகம் கண்டே கலக்கமின்றி உரைப்போம்,வாழ்நாள் ஆஸ்கார் பூட்டு

    ஓர்ந்து பதில் சொல் விருதுகளுக்கு கேள்விகளும் கேலிகளும் கூடுமுன்
    தேர்ந்தெடுப்பாய் தெளிவாக உலக உன்னத உயரத்தை பதிலாக

    தூயவனே தேட படுகிறாய் உலக மனிதம் காக்கும் காவலர்களால்
    மாயவனே மனித அடிமை விலங்கொழித்து துடைத்தெறிந்த வழக்கை

    ஓயாமல் காத்துள்ளாயாமே பெரும் வாழ்நாள் அடிமை கூட்டம் சுமந்து
    மாயாமல் மாய்ந்ததாய் கதைத்து விடுவிக்கும் மனமும் அற்று சோதிக்கிராயாமே

    தேயாமல் புகழ் தாங்கும் கூட்டமோ நிலை பெற்ற விலையிலா பிடிப்புடன்
    காயாமல் காக்கும் கதிர்களாய் கர்ணன் கண்ட புத்திளம் புது கூட்டம் கூடுதல்

    வித்தகம் உன் நினைவை விழைவுடன் மனமேந்தி மெய்யுணர்வு தூண்ட பகிர்ந்து
    இத்துடன் முடிக்கின்றேன் கவிதையை மட்டும் சித்தமதில் உணர்வை என் முடிவில் .
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  14. Thanks sss, vasudevan31355 thanked for this post
    Likes RAGHAVENDRA, sss, vasudevan31355 liked this post
  15. #2019
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ந.தி நினைவு நாளில் மீள் பதிவாக...


    ***
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அந்தாதி..
    *
    என்றென்றும் எண்ணவும் ஏட்டில் எழுதவும்
    தண்ணொளி பெற்றுவிட்ட தங்கமாய் – மின்னி
    துடிப்பாய் இருந்திடும் தூய்மையாய்த் தோன்றும்
    நடிகர் திலகம் நடிப்பு
    *
    நடிப்பென்று சொன்னாலும் இல்லையவர் நெஞ்சம்
    வடிக்கின்ற ஆற்றல் அறிவீrரே – விடியாத
    வெண் திரைக்கு நன்றாக வித்தியாசம் கொண்டுவந்த
    மின்னலாம் ஆவார் அவர்..
    *
    அவர்தான் நடிப்பென்று ஆய்ந்தவர்கள் சொல்ல
    கவர்ந்திடும் கண்களால் பேசி – தவறென்று
    தக்கபடி சொல்லியே சிரிக்கும் அடக்கத்தைப்
    பக்குவமாய்ப் பெற்றவர் பார்..
    *
    பாரில் இவர்க்குநிகர் பார்த்தாலும் எந்தவொரு
    ஊரிலு மிவர்போலே யாருமிலை – நேரிலோ
    மென்சிரிப்பு நல்லாற்றல் மேன்மைக் குணமென்று
    தன்னிறைவு பெற்றவர் தான்..
    *
    தானாட விட்டாலும் தாமாய்த் தசையாடக்
    காணாத பேருக்குக் காட்டியவர் – வீணாய்ப்
    புறம்பேசிப் பின்பக்கம் துற்றியவர் தம்மைத்தான்
    புறந்தள்ளி விட்டவர் தாம்..
    *
    தாம்தூமாய்த் தம்நடிப்பே மேலென்று தாவியவர்
    ஆமென்று சொல்வார் இவர்நடிப்பை மேம்பட்டு
    பண்பட்டு மின்னிடும் பட்டென மக்களின்
    கண்ணைக் கவர்ந்தவர் காண்..
    *
    காண்பதைக் கைப்படுத்தி காட்சியிலே நன்றாக்கித்
    தூண்டி நடிப்பினைத் துல்லியமாய் -வேண்டுதற்போல்
    மீண்டும் விழிபார்க்க மேலும் மெருகேற்றித்
    தீண்டினார் நம்நெஞ்சில் தேன்..
    *
    தேனென்றும் பாலென்றும் தேவதையாய்ப் பாவையர்முன்
    தூணென்றே காதலினைத் தூக்கியவர் – மீண்டுமே
    கண்டிப்பாய்க் காதல் கவித்துவம் மேலேற்றித்
    திண்ணமாய்ச் செய்தவர் தான்..
    *
    தான்தான் குழம்பெனில் தக்க ரசமாக்க
    வீண் எண்ணம் என்றுமே விட்டவர் – மேன்மேலும்
    தீட்டி நடிப்பைத் தெளிவாக வெண் திரையில்
    காட்டியவர் நம்மிடம் ஆம்..
    *
    ஆமென்று சொல்லி அழகாய் மறுதலித்துப்
    போமென்கும் பொய்கொண்ட வெண் திரையில் - நாமென்றும்
    விந்தையாய்ப் பார்க்கும் வியப்பாம் நடிப்பினால்
    சிந்தை நிறைந்தவர் தான்


    *
    Last edited by chinnakkannan; 21st July 2015 at 11:07 AM.

  16. Thanks eehaiupehazij thanked for this post
  17. #2020
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அடியேன் போடும் கோனார் நோட்ஸ்.





    பாடல்

    அன்னை தமிழின் அருந்தவ புதல்வனே நல்லூழ் கண்டோர் நாங்கள்
    உன்னை தொழுதே அளப்பரிய களிப்புடன் அடிதன்னில் வீழ்வோம்

    உரை

    தமிழ் மொழிக்கு மகனை போன்றவரே. நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்.

    உன் காலில் மிக மகிழ்ச்சியுடன் விழுந்து வணங்குகிறோம்.




    பாடல்
    போற்றி உன்னை எனை மறந்து புகழ்ந்தே கவிபாடும் திறன்
    ஆற்றல் எமக்கே அளித்தோனே ஆக்கமுடன் மருளாது



    உரை

    எங்களையே மறந்து உன்னை புகழ்ந்து பயமின்றி கவிதை பாடும்

    ஆற்றலை எங்களுக்கு அளித்தவன் நீயே.




    பாடல்
    ஏற்றமிகு வாணியின் பிணக்கா செல்வம் கணக்கிலா இணக்கமுற
    பெற்ற நீ இம்மண்ணுதித்ததோ ஆயிரத்தொன் இருபத்து எட்டில்



    உரை

    சரஸ்வதியின் அருள் நிறைய பெற்ற நீ ,இந்த பூமியில் பிறந்தது

    ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபத்தி எட்டாம் வருடம்.


    பாடல்
    தோப்புகரண துதி செய்து தெளிதேனுடன் இடுவேன் இந்நினைவுநாள்
    காப்பு நீயென வேண்டி தொழுவேன் எங்கள் கணேசமூர்த்தியே




    உரை.

    இந்த நினைவு நாளில் உனக்கு தோப்பு கரணம் போட்டு, பல வகை படையல்கள் இட்டு

    கணேச மூர்த்தி என்ற பெயர் கொண்ட உன்னை நீயே துணை என கும்பிடுவோம்.



    பாடல்
    தேவ பெற்றோருக்கு தேவமைந்தனாய் வந்துதித்த தேவனே
    நாவன்மை பேறு நான் பெற காவன்மை குவித்த காருண்யனே



    உரை.

    தேவர் குலம் சார்ந்த குடும்பத்தில் (உயர்ந்த தேவர் என்ற வானுறை குலம் என்ற உயர்வு பொருள்)

    பிள்ளையாய் வந்த தெய்வம் போன்றவனே.எனக்கு நல்ல பேச்சு திறமை தந்து காத்த கருணை மனம் கொண்டவனே.




    பாடல்
    காரிருள் களைந்து களைத்துநின்ற தமிழுக்கு பேரொளி தந்தாய்
    சூரிய செம்மை நிகர் ஒப்பரிய காரிய செம்மை வீரியம் கண்டோய்



    உரை

    சோர்ந்து போயிருந்த தமிழ் மொழிக்கு சூரியனை போல ஒளி கொடுத்து

    செயல் பட்டு இருளில் இருந்து வெளிச்சத்தை காட்டினாய்.

    பாடல்

    கொஞ்சும் தமிழால் அஞ்சுக செல்வன் அருந்தமிழை விருந்தமைவாய்
    தஞ்சையின் தங்கமே நல்லதோர் வீணையாய் விந்தையுறு விசையுறு
    வேகமொடு வேந்துவின் வீச்சோடு வற்றியிருந்த மண்ணுக்கு வெற்றிவாகை
    தாகமொடு தாங்கொணா தகிப்புடன் தவித்த தத்தைகளுக்கு தமிழமுத தாயமுது



    உரை.

    தஞ்சை மண்ணின் மைந்தனே , கலைஞர் அவர்களின் தமிழை விருந்து போல

    நல்ல ஒரு வீணையின் கொஞ்சும் நாதம் போல ,ஒரு உதைக்க பட்ட பந்தின் வேகத்தோடு

    ஒரு மன்னனின் கம்பீரத்தோடு,வற்றி போயிருந்த தமிழகத்தை வெற்றி காண செய்தாய்.

    தாகத்துடன் குழந்தை போல தவித்து நின்ற எங்களுக்கு தாய் பாலூட்டுவது போல தமிழ் என்ற அமுதத்தை கொடுத்தாய்.



    பாடல்.
    தரணியே இருள் இற்று அடைநதது அளப்பெரும் பேறு அருந்தவன் பேரு
    முரணியே தேங்கிடா காட்டாற்று வெள்ளம் கலையின் தலைமகன் கொடைநூறு
    கண்டோர் கேட்டோர் களித்து கடைந்தெடுத்த பார்க்கடலமுதாய் நடிப்பமுது
    வேண்டோர் வேண்டார் நல்லோர் அல்லார் சிந்தையில் கண்டார் சிவாஜி வென்றதை



    உரை

    பூமி இருள் நீங்கி சொல்ல முடியாத உயர்வை அடைந்தது. உன் ஒருவனின் பெயரால்.

    காட்டில் ஆற்றின் வேகம் போல ஓடி கொண்டே இருந்த நடிப்பு கலை எங்களுக்கு மிக மிக தனமாய் கிடைத்தது.

    பார்த்தவர்கள் கேட்டவர்கள் எல்லோரும் சந்தோசம் கொள்ள பார்க்கடலில் கிடைத்த அமுதம் போன்ற நடிப்பு.

    வேண்டியவர் வேண்டாதவர் நல்லவர் கெட்டவர் எல்லாருமே சிவாஜி ஜெயித்ததை பாகுபாடு இல்லாமல் உணர்ந்தனர்.



    பாடல்
    வசதி வேண்டி மெய்வருத்தம் காணா தடை தகர்த்து படைபுடை கண்டு
    அசதி இன்றி ஈந்தாயே இன்னுயிர் இன்னுடல் கலைபணிக்கே
    சந்தையில் நிலை உயர நேசம் மறவா நன்நெஞ்ச நற்றமிழர் நயந்தே
    சிந்துபாடி சிறப்புற ஊக்கம் உகந்தனர் உணர்ந்தே உகந்தே



    உரை

    தனக்கு வசதி செய்து கொள்ள எண்ணாமல் ,தன்னுடைய உடல் கஷ்டங்களை பொருட்படுத்தாது

    ஓய்வு எடுத்து கொள்ளாமல் ,உடலையும் உயிரையும் நடிப்புக்கு கொடுத்து , இடைஞ்சல் செய்தோரை வெற்றி கண்டு

    பலரை தன் பால் கவர்ந்து உன்னுடைய மார்க்கெட் value மேலே போக தமிழர்கள் உன்னை புகழ்ந்து

    உன்னுடைய திறமை தெரிந்து உன்னை மதித்து உனக்கு ஊக்கம் தந்தனர்.




    பாடல்
    அந்தவரை தன்னை அணுவும் மறக்காமல் ,நிலை துறக்காமல்
    தந்தவரை தலையில் தூக்கி போற்றினான் தன்னுள் பின்னாள் வரை
    விந்தையுற தந்தான் உடன் உடன்பிறந்த கற்ற பெற்ற வித்தைகளை
    தங்கு தடையின்றி ஓங்கு புகழ் சேர்த்தான் தன் பால் தமிழ்மண்ணுக்குமாய்



    உரை

    தன்னுடைய நிலையில் இருந்து உயர்ந்தும் கர்வம் கொள்ளாமல் ,தனக்கு ஆதரவு கொடுத்தவர்களை

    மதித்தே போற்றினார் கடைசி நாட்கள் வரையில் .

    தனக்கு பிறவியிலேயே கிடைத்த நடிப்பு, அனுபவத்தால் கிடைத்த,பிறரிடம் கற்றறிந்த நடிப்பு திறமை

    இவற்றை கொடுத்து தனக்கும் புகழ் சேர்த்து,தமிழகத்திற்கும் புகழை கொடுத்தார்.

    பாடல்

    காசினியில் கண்டோர் விண்டொரெல்லாம் பூசித்து போற்றும்
    மாசிலா புகழை எகிப்து ஆசிய ஆப்பிரிக்க பட விழாவில்
    நேசித்து ஈந்தனர் உலகின் சிறந்த கலைஞர் உயர்ந்த சிறப்பை
    யோசித்த நாசரோ நம் நடிகரல்ல உலக தலைவர் நேருவினும் நேரானவர்.



    உரை

    உலகத்தில் அந்த நடிப்பை கண்டு,அதை ஆராய்ந்த உலகத்தினர் பாராட்டி

    அவருக்கு ஆசிய ஆப்பிரிக்க பட விழாவில் சிறந்த நடிகர் பட்டம் வழங்கி

    உலகத்திலேயே சிறந்த நடிகர் என்று கொண்டாடினார்கள்.சிவாஜியை பற்றி தெரிந்து

    மதித்த எகிப்தின் ஜனாதிபதி நாசர் . நமது நேருவை விட சிறப்பான நேர்மையான உலக தலைவர்.




    பாடல்


    நாணிய அமெரிக்கனோ வா வா எனவே சிவப்பு கம்பளம் விரிக்க


    வாணியின் வையக மைந்தனை சிறப்பு மேயராக்கி சிறக்க வைத்தான்


    நெப்போலிய பூமிக்கோ அளப்பிலா அசூயை கலையின் ஊற்றிடம் அன்றோ


    இப்புவியின் ஒப்பிலா வீரன் துவக்கிய அசுத்தம் கலக்கா புனித விருதை



    உரை

    ஆப்பிக்கா முந்தி கவுரவித்ததால் அமெரிக்கா வெட்க பட்டு(தான் இதை முன்னமே செய்யாததை எண்ணி)அவரை சிறப்பு விருந்தினர் ஆக அழைத்து ,சிறப்பு மேயர் என்ற கவுரவம் அளித்தது இந்த சரஸ்வதியின் அருள் பெற்ற உலகம் ஒப்பு கொண்ட நடிகர்திலகத்தை. பல கலைகளின் பிறப்பிடம் ஆன பிரெஞ்சு நாட்டு அரசு இவர்களை பார்த்து பொறாமை பட்டு (அடடா நம்மை முந்தி கொண்டார்களே என்று )நெப்போலியன்
    என்ற வீரனால் உருவாக்க பட்ட செவாலியே என்ற உன்னதமான விருதை



    பாடல்


    எப்புவிக்கும் ஒப்புவிக்கும் ஒப்ப வைக்கும் ஓய்வு காணா கலை விந்தைக்கு


    ஒப்புவித்தே தப்புவித்தது தன் கலை புகழை தன் தேச தகைமையை


    நடிப்பு வீரம் போற்றி துடிப்பு மிகு விழா கண்டு பெருமை மீட்டது ஓங்கியும்


    இடித்தே இகழ்ந்தது இந்திய துணை கண்டத்தின் இழிவு நிலை அரசு அரசியலை



    உரை

    எந்த உலகத்திற்கும் பொதுவான ஒப்பு கொள்ளும் விதத்தில் ,ஓய்வின்றி நடிக்கும் திறமை மதித்து , விருது கொடுத்து தன்னுடைய கலையின் மதிப்பை பிரெஞ்சு காப்பாற்றி கொண்டது.இதற்காக பெருமையாக விழா எடுத்தது.இந்தியாவின் இழிவான ,அரசியல் சார்பு கொண்ட ,கலையை மதிக்க தெரியாத இழிவை குத்தி காட்டுவது போல அமைந்தது.


    பாடல்


    வேகமற்ற இந்திய அரசோ அரசை கலையாக்க கலையை அரசியலாக்க


    விவேகமுற்ற வேகத்தில் விருது ஒன்றிற்கு பெருமை தந்து தாதாவை காத்தது


    உலக வல்லரசே உன் முறை மீண்டும் இம்முறை தங்க சாவியல்ல


    கலகம் கண்டே கலக்கமின்றி உரைப்போம்,வாழ்நாள் ஆஸ்கார் பூட்டு



    உரை

    எதிலும் வேகம் காட்டாமல் அரசியலை நடிப்பு போல எண்ணி, நடிப்பை அரசியலாக்கிய இந்திய அரசு , முழித்து கொண்டு சிறிதே விவேகத்துடன் அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது தந்து ,அந்த விருதின் பெருமையை காத்தது.இப்போது அமெரிக்காவின் முறை மீண்டும்.மேயராக தங்க சாவி தந்தவர்கள் ,நாங்கள் உரத்த குரலில் சொல்லுவதை கேட்டு அவருக்கு வாழ்நாள் சாதனை ஆஸ்கார் கவுரவம் தர வேண்டும்.




    பாடல்


    ஓர்ந்து பதில் சொல் விருதுகளுக்கு கேள்விகளும் கேலிகளும் கூடுமுன்


    தேர்ந்தெடுப்பாய் தெளிவாக உலக உன்னத உயரத்தை பதிலாக



    உரை

    ஆஸ்கார் விருதுகளை பற்றி நிறைய கேள்விகளும் ,கேலிகளும் அதிகம் எழாமலிருக்க ,சிவாஜி போன்ற மிக உயர்ந்த நடிகருக்கு வழங்குவதன் மூலம் ,பதில் சொல்ல முடியும் .



    பாடல்


    தூயவனே தேட படுகிறாய் உலக மனிதம் காக்கும் காவலர்களால்


    மாயவனே மனித அடிமை விலங்கொழித்து துடைத்தெறிந்த வழக்கை


    ஓயாமல் காத்துள்ளாயாமே பெரும் வாழ்நாள் அடிமை கூட்டம் சுமந்து


    மாயாமல் மாய்ந்ததாய் கதைத்து விடுவிக்கும் மனமும் அற்று சோதிக்கிராயாமே



    உரை

    human rights organisations உன்னை விசாரிக்க தேடுகிறது .ஏனென்றால் உலகத்தில்

    அடிமைகளை ஒழித்து விட்டதாய் சொல்ல படும் நிலையை மாற்றி ஒரு பெரிய அடிமை கூட்டத்தை சிவாஜி என்ற நீ வைத்துள்ளாயாமே . நீ இறக்காமலே ,இறந்து விட்டதாய் உலகத்தை நம்ப வைத்து ,இந்த அடிமை கூட்டத்தை உன் பிடியில் இருந்து விடாமல் உலகத்தை சோதித்து கொண்டிருக்கிறாயாமே..




    பாடல்


    தேயாமல் புகழ் தாங்கும் கூட்டமோ நிலை பெற்ற விலையிலா பிடிப்புடன்


    காயாமல் காக்கும் கதிர்களாய் கர்ணன் கண்ட புத்திளம் புது கூட்டம் கூடுதல்


    வித்தகம் உன் நினைவை விழைவுடன் மனமேந்தி மெய்யுணர்வு தூண்ட பகிர்ந்து


    இத்துடன் முடிக்கின்றேன் கவிதையை மட்டும் சித்தமதில் உணர்வை என் முடிவில் .



    உரை.

    உன் புகழை சிறிதும் குறையாமல் காத்து கொண்டிருக்கும் இந்த அடிமை கூட்டம் யாரும் விலை கொடுத்து வாங்க முடியாதது. சூரியனின் கதிர்கள் போல உன் புகழுக்கு ஒளி கொடுத்து கொண்டே இருப்பதுடன் ,கர்ணன் மறு வெளியீட்டினால் நிறைய இளைஞர்களும் உன் அடிமை கூட்டத்தில் கூடுதலாக சேர்ந்து விட்டனர்

    உணர்வில் தூண்ட பட்ட ,உன்னுடைய மிக பெரும் நடிப்பு வித்தகத்தை ,எங்கள் மனமெங்கும் உண்மை உணர்வுடன் தேக்கி இந்த கவிதைக்கு முடிவு கண்டாலும் ,

    எனக்கு முடிவு நேரும் வரை உன்னையே நினைத்திருப்பேன்.
    Last edited by Gopal.s; 20th July 2015 at 08:22 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  18. Thanks vasudevan31355 thanked for this post
    Likes RAGHAVENDRA, sss liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •