-
20th July 2015, 09:28 AM
#11
Senior Member
Platinum Hubber
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th July 2015 09:28 AM
# ADS
Circuit advertisement
-
20th July 2015, 09:38 AM
#12
Junior Member
Devoted Hubber
-
22nd July 2015, 11:30 AM
#13
Junior Member
Devoted Hubber
கொள்ளை கொண்டவன் !
காதலன் வர காத்திருந்தேன்
கண்ணிமையாமல் பூத்திருந்தேன்
கண்ணன் வந்தான் கண் பொத்தினான்
கை மங் கை பற்றினான் தொற்றினேன்
காணமல் போன கோபம் தேடினேன்
கடிந்தேன் கால தாமதம் ஏனென்றேன்
கண்ணே கடிதாய் காற்றாய் வந்தேன்
காதல் கைகூட பரிசும் கைகூட என்றான்
கள்ளனே பரிசென்ன காட்டு என்றேன்
கபடமாய் சிரித்தான் காட்டேன் என்றான்
கன்னி உன் பெற்றோருக்கு பரிசு முன்னே
கண்டிப்பாய் காதலி உனக்குண்டு பின்னே
காட்டுவேன் பரிசாய் மாப்பிள்ளை நானே
கொண்டு செல் என்னை அவரிடம் தேனே !
குறும்பாய் சிரித்தான் கொஞ்சலாய் தானே
கொள்ளை போனேன் நொடியில் நானே !
* மாமனார் மாமியார் மனங்கவர் மாப்பிள்ளை ஆவானோ இவன்?
-
25th July 2015, 03:49 PM
#14
Junior Member
Devoted Hubber
அடியவனுக்கு அடியவன் !
பச்சை வண்ணன் பவள வாய் செங்கண்
அச்சுதன் அவன் தன் அரவணைப் பாயில்
அழகாய் படுத்திருக்கிறான் அசதி போலும்
அவனுக்கும் தான் ஆயிரம் வேலைகள்
அவன் அருகே ஆழ்வார் அவன் புகழ் பாடி
அப்போது சீடன் கனி கண்ணன் அவரை தேடி
ஆசானே ! அரசன் ஆணை இது ! அவாது
அறுவது வயது மூப்பை நீர் அறுக்கணுமாம்
இருபது வயது இளமை என்றும் வேணுமாம்
அடாது கேட்கிறார் : அசையவில்லை நானும்
அன்று நீர் கிழவியை குமரியாக்கிய அதிசயம்
அவர் காதில் யாரோ போட்டனர் போலும்
அடித்துச்சொன்னேன் :ஆகாத ஆசை வேண்டாம்
ஆழ்வார் அனுமதியார் ஆண்டவனை பற்றும்!
ஆயின் விடாக்கண்டன் வெகுள்கின்றார்
ஆசை ஆணவம் அவரை விடவில்லை
அடித்தே கொல்கிறார் தொல்லை தாளவில்லை
அப்போது வந்தனர் அரண்மனை சேவகர்
அழைத்து போக வந்தோம் அரசனின் ஆணை
ஆழ்வார் வர மறுத்தார் : அவரது சீடனை
அப்போதே அடித்து துரத்தினர் நாட்டை விட்டு
ஆழ்வாருக்கு வந்ததே ஆத்திரம் அட போய்யா
அத்யந்த சீடனே போயிட்டான் எனக்கென்ன !
நானும் போறேன் நாட்டை விட்டு நமஸ்காரம்
நல்லா இருங்க நவின்றார் திரும்பினார்
நிம்மதியாக நிட்டையில் இருந்தான் இறைவன்
நல்லா தூங்கினே போ அதட்டினார் ஆழ்வார்
நானே போகிறேன் உறக்கமென்ன உனக்கு ! கிளம்பு !
நாகப்பனையும் நன்றாக சுருட்டிக்கொள் !
(திருமழிசை ஆழ்வார் சொன்னது இதுதான் :
கணிகண்ணன் போகிறான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டா துணிவுடைய
செந்நாப் புலவனும் செல்கின்றேன் நீயும் உன்றன்
பைநாகப் பாய் சுருட்டிகொள் )
பாகம் இரண்டு
ஆழ்வார் சொன்னார் ஆண்டவன் கேட்டான்
அழகிய கமலக்கண்ணன் அவனுடன் ஆதிசேஷன்
அனைவரும் காஞ்சி விட்டு அப்போதே அகன்றனர்
அத்தனை தேவரும் அவர் பின்னே சென்றனர்
அந்தகாரம் நாட்டினில் அந்தகாரன் காஞ்சியில்
அக்கணமே அத்தனை பொலிவும் காஞ்சிபோச்சி
அறிந்தான் அரசன் அடடா அறியாமல் போனோமே
அடித்து பிடித்து ஆழ்வாரை தேடினான் ஓடினான்
அவர் காலில் விழுந்து அறியாமல் செய்த பிழை
ஆழ்வாரே மன்னித்தருளுங்கள் அமைதி கோளுங்கள்
திருமழிசை ஆழ்வாரும் திருச்செவி சாய்த்து
திரும்பினார் திருவெக்கா கோவிலுக்கு : திரும்புமுன்
திருமாலை நோக்கினார் சரி! சரி !திரும்பு கண்ணா
தீர்ந்தது பிரச்னை ! போய் படுத்துக்கொள் நாகமோடு
உஸ் அப்பா என மணிவண்ணன் திரும்பவும்
உஸ்ஸ்ஸ் என்று அவன் பின்னால் அவனரவும்
உடன் அனைத்து தேவரும் ஒன்றாய் வரவும்
உயரிய காஞ்சி ஒரு வழியாய் பிழைத்தது
சொல்பவர் அன்பன் என்றால் அவர்
சொன்ன வண்ணம் செயும் பெருமாள்
என்ன ஒரு ஏற்றம் ! அடியவன் சொல்கிறான்
ஆண்டவன் அப்படியே நடக்கிறான் !
திருமழிசை ஆழ்வார் இரண்டாவதாக சொன்னது இதுதான் :
"கனிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங் காஞ்சி
மணிவண்ணா! நீ கிடக்க வேண்டும் - துணிவுடைய
செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன்;
நீயும் உன்றன் பைந்நாகப் பாய்படுத்துக் கொள்"
****முற்றும்
(சொன்ன வண்ணம் செயும் பெருமாள் - வெக்கா - காஞ்சிபுரம்)
Last edited by Muralidharan S; 27th July 2015 at 11:41 AM.
-
1st August 2015, 06:27 PM
#15
Junior Member
Devoted Hubber
தொணதொணப்பு !
கத்திரிக்காய் பொரியலும்
காரமாய் கேரட் குழம்பும்
கண்மணி சமையல் வாசம்
கணவன் அதிரடி பிரவேசம்
காந்துகிறது கத்தரி காருகிறது
கவனியாமல் காரியம் என்னதிது
காஸ் அணை அணை கண்ணில்லை
கருகுவது கூடவா தெரியவில்லை?
குழம்பை ஏன் கொதிக்க விடுகிறாய்
கொஞ்சம் சூட்டை உடனே குறை
உப்பை ஏன் இப்போதேடுக்கிறாய்
உள்ளே அப்படி என்ன தேடுகிறாய்
குழைந்தது சாதம் இறக்கு இறக்கு
குழம்பில் கொஞ்சம் பருப்பை கூட்டு
கரைசல் புளி ஏன் தண்ணியாயிருக்கு
காய்ந்த மிளகாய் வேண்டாம் ஒதுக்கு
சதிக்கு எதுவும் புரியவில்லை
சாத்தான் பதியை ஆட்டுகிறதோ
சத்தம் ஏன் சும்மா போடுகிறீர்
சம்பந்தமின்றி ஏன் உளறுகிறீர்
என்ன தெரியும் இங்கே உமக்கு
என்ன ஆயிற்று இன்றைக்கு
சாதாரண சாம்பார் வைக்க
சமைக்க எனக்கு தெரியாதா?
அவன் சொன்னான் அப்படிச் சொல்
அது எனக்கும் தெரியும் ஆனால்
அனுதினம் நான் காரோட்டுகையில்
அன்பே நீ தொணதொணத்தால்
இப்படித்தானே கடுப்பாயிருக்கும் !
*படித்த ஜோக்கின் தாக்கம்
-
1st August 2015, 09:12 PM
#16
Senior Member
Platinum Hubber
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
2nd August 2015, 07:42 AM
#17
Junior Member
Devoted Hubber
-
10th August 2015, 11:41 AM
#18
Junior Member
Devoted Hubber
பொய்-மெய் !
இவன் :
அது மேல எனக்கு ஒரு இது
அடக்க முடியாம கட்டிகிட்டேன்
ஆசையே துன்பத்திற்கு காரணமாம்
அது பொய்
அவளில்லாமல் நானில்லை
அதுவே மெய்
இவன் மவன் :
மோதியது விதி - கண்டோம்
மனதில் காதல் கொண்டோம்
மூணு வார சந்தோசம்
முட்ட முட்ட அனுபவித்தோம்
மால் என்ன பீச் என்ன - பின்
முடிவெடுத்தோம்
முடிந்தது திருமணம்
முப்பதே நாள் மோகம் -பின்
முறிந்தது இருமனம்
மகிழ்ச்சி எங்கே! காணோம் !
மீண்டும் தேடுகிறோம் தனித் தனியே !
மெய் இதுவே !
**
Last edited by Muralidharan S; 10th August 2015 at 01:39 PM.
-
13th August 2015, 08:38 PM
#19
Junior Member
Devoted Hubber
மந்திரவாதி !
மறைந்தான் மந்திரவாதி மாயமாய்
தெரிந்தான் மீண்டும் தந்திரமாய் அவன்
தேர்ந்த செயல்திறனை தெரிந்து கொள்ள
தைரியமாக எழுந்து கேட்டான் ஒருவன்
பறைவாய் இம்மன்றத்தில் தெளிவாய்
மறைந்த முறை மறைக்காது பகர்வாய்
சிந்தித்தான் மந்திரவாதி சிறிது நேரம்
செப்புவேன் ஆயின் சிக்கல் உண்டு
செத்து விடுவாய் நீ கேட்டால் ! சம்மதமா ?
சலசலப்பு மன்றமதில் : சளைத்தானா நம் ஆள்?
சிரித்தான் அச்சமின்றி : சரி சொல்
சீக்கிரமாய் ! என் மனைவியிடம் மட்டும் !
அமர்ந்தோரின் ஆர்பரிப்பு அமர்க்களம்!
ஆயிரம் குரல் அங்கே ! அதிர்ந்தது அரங்கம்!
என் சதிக்கு சொல் ! என் பதிக்கும் சொல் !
அடடா ! என்ன ஒரு அவசரம் ! எல்லோருக்கும்!
அவை நடுவே அந்த அவை நடுவே
அழுகைக் குரல் சிறுமியின் குரல்
அங்கிள் ! என் அம்மாவுக்கும் சொல்
அரங்கம் அடங்கியது! ஆச்சரியம் அங்கே!
அது ஏன்! அங்கலாயித்தான் மந்திரவாதி
"அம்மா செத்துவிடுவாள் அதுவா வேண்டும் ?"
அழுகை நிறுத்தி சொன்னது அக்குழந்தை
அம்மா தான் செத்து மறைந்தாளே!
அவள் உன் போல் மீண்டும் தெரியனும்
அங்கிள் ! ப்ளீஸ் என் அம்மாவுக்கும் சொல் !
/Inspired by a joke read in Web/
Last edited by Muralidharan S; 13th August 2015 at 08:40 PM.
-
22nd August 2015, 12:37 PM
#20
Junior Member
Devoted Hubber
ஆத்திகர்-நாத்திகர் !
பற்றினை விடு பாசத்தை விடு
பாரம் ஏன் ? ஆண்டவன் தேன் !
ஆசை கொள் : அவனிடம் மட்டும்
அடித்து சொன்னார் ஆத்திகர்
ஆசைப்படு அத்தனையும்! அறிவிலியே !
ஆண்டவனை விடு ! அவனே இல்லையே!
ஆதாரம் எங்கே ?அறிவு கொண்டு அலசு !
அனலாய் ஆணித்தரமாய் நாத்திகர்
விடிய விடிய வாக்கு வாதம்
விடை தான் தெரியவில்லை
வந்ததே ஐயம் இருவருக்கும்
விடிந்த பின் நடந்தது இது!
பற்றினை விட்டார் நாத்திகர் !
பற்றினார் பாண்டவ தூதனை !
பரமனை விட்டார் ஆத்திகர் !
பற்றினார் டாஸ்மாக் பார்தனை!
மறுநாளும் தொடர்ந்தது வாதம்
மறுபடியும் மாறியது மனங்கள்
தொடர் கதை இது தொக்கியே நிற்கும்
துவக்கமும் இல்லை தொய்வும் இல்லை !
/எங்கோ படித்த ஜோக் ! /
Last edited by Muralidharan S; 22nd August 2015 at 12:41 PM.
Bookmarks