-
28th July 2015, 08:22 PM
#111
Junior Member
Veteran Hubber
Elastic NT Vs Plastic NT! இளகி / நெகிழி நடிகர்திலகம் !!
Part 2 : Karnan / கர்ணன்
கர்ணன் திரைக் காவியத்தில் தனது தாயாரை இனம் கண்டு கொண்டதும் மனம் இளகினாலும் தாய் வந்த நோக்கமறிந்ததும் ஏற்படும் அதிர்வலைகளை கட்டுக்குள் கொணர்ந்து கட்டுப்பாடும் கண்ணியமும் மிக்க வசனப் பொழிவில் அவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் எலாஸ்டிக்கின் குணாதிசயமே!
ஆதரவற்ற பாலகனை கல்வி பயில அனுப்பும் காட்சி ...வந்திருப்பவர் விண்ணுலக மன்னவர் இந்திரன் என்று தந்தை கதிரவனால் எச்சரிக்கப் பட்டும் முதிர்வடைந்த தனது தர்ம சிந்தனையிலிருந்து பின் வாங்காது உயிர்க்கவசமான குண்டலங்களை அறுத்து தாரை வார்த்திட முனையும் கட்டத்தில் அவர் போதிக்கும் வழிகாட்டி நடிப்புப் பாடம் பிளாஸ்டிக்கின் நெகிழவே!!
சாதாரண துணைப் பாத்திரங்களிலும் பிரதான வில்லனின் அடி வாங்கும் அடியாளாகவும் வந்து போய்க் கொண்டிருந்த திரு எஸ்(பாஸ்!)வி ராமதாஸ் அவர்களை cloud 9 சந்தோஷ மேக அடுக்குக்கு கொண்டு சென்று அமர்த்திய அவரது வாழ்நாள் குணசித்திர நடிப்பு....ஒரு பாடலும் கூட!!
Last edited by sivajisenthil; 29th July 2015 at 07:45 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
28th July 2015 08:22 PM
# ADS
Circuit advertisement
-
28th July 2015, 08:33 PM
#112
Junior Member
Diamond Hubber

Originally Posted by
RAGHAVENDRA
செந்தில்வேல்
என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
தங்களின் மனங்கனிந்த வாழ்த்துகளுக்குஎன் நன்றிகள்
-
28th July 2015, 10:08 PM
#113
Junior Member
Regular Hubber
ஒரே பெருந்தலைவர் திரு காமராஜர்.
ஒரே நடிகர்திலகம் திரு சிவாஜிகணேசன்.
ஒரே விஞ்ஞானி ஜனாதிபதி ஆனாது திரு அப்துல்கலாம்.
இவர்களுக்குள்ள ஒற்றுமையை பாருங்கள்.
பிறந்தமாதம் -அக்டோபர்
பிரிந்தது -ஜூலை
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
28th July 2015, 10:29 PM
#114
Junior Member
Regular Hubber
திரு முரளி அவர்களே
நான் திரையில் அதிகமுறை பார்த்த ஒரே திரைப்படம் வசந்தமாளிகை.சுமார்100 முறைகளுக்கும் மேல்.அதில் 90 முறைகளாவது மழை பெய்திருக்கும்.தலைவர
மழையில் யாருக்காக பாடும் போது வெளியிலும் ஜோவென்று மழைகொட்டிகொண்டிருக்கும்.நனைந்து கொண்டே வீட்டுக்கு சென்ற அனுபவம் நிறைய உண்டு.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
29th July 2015, 12:38 AM
#115
Senior Member
Seasoned Hubber
நண்பர்களே,
நமது நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பில் மாதந்தோறும் நிகழ்ச்சியின் அம்சமாக, அடுத்த மாதம், ஆகஸ்ட் 2015 நிகழ்ச்சி, மெல்லிசை மன்னருக்கு அஞ்சலி நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. நடிகர் திலகத்தின் படங்களில் மெல்லிசை மன்னர் இசையில், தேர்ந்தெடுத்த சில பாடல்களும், காட்சிகளும் இடம் பெறும்.
Last edited by RAGHAVENDRA; 29th July 2015 at 12:48 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
-
29th July 2015, 11:35 AM
#116
Junior Member
Seasoned Hubber
திரு கலாமின் மறைவின் தாக்கம் குறையக்கூடியதே அல்ல - இப்பொழுது வாழும் அரசியல் வாதிகளைபார்க்கும் பொழுது இப்படி பட்ட ஒரு தன்னலம் இல்லாத ஒருவர் நம்மிடையே வாழ்ந்தார் என்று எண்ணும் பொழுது கண்களில் இருந்து பொங்கி வரும் கண்ணீரை நிறுத்த முடியவில்லை .........................
" A great Indian muslim died on Hindu holy day of Tholi Ekadasi in a christian hospital. He maintained secularism in his death also". Salute to great man.
====
The first pooja at Sri rameswaram temple is offered in Kalam sir's family name everyday which has been a practise since his great grand father's times.
There used to be a utsav wherein the utsav moorti was decorated n sailed in a boat (a saucer kind of a boat) which is called "teppotsava". When the 'teppa' sailed amidst the river, the utsav murti (idol) fell into the river 400 feet deep. Everyone was worried n confused. Immediately, kalam's great grand father dived into the river n brought the idol out from deep waters. Since then, the first pooja in the rameshwram temple is offered in/by/for their family to Lord Rameswara(one of the 12 jyotirlingas)
-
29th July 2015, 01:26 PM
#117
Junior Member
Diamond Hubber
கோவை TVS நகர் மெயின் ரோட்டில் வைக்கபட்டுள்ள ப்ளக்ஸ்பேனர்
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
29th July 2015, 03:12 PM
#118
Junior Member
Veteran Hubber
Much awaited trailer of veera pandiya kattabomman !!!!
ஒரு வழியாக நமது நடிகர் திலகத்தின் வீர பாண்டிய கட்டபொம்மன் முன்னோட்டம் எனது நண்பர் வாயிலாக கிடைத்தது. இது முன்னோட்ட விழா சத்யம் அரங்கில் நடந்தபோது எடுக்கபட்டதேன்று நினைக்கிறன். எதுவாக இருந்தாலும் ....கிடைத்ததை இங்கு தரவேற்றுகிறேன் நண்பர்களுக்காக...
இது ஒரு SAMPLE மட்டுமே ! ORIGINAL கோப்பு கிடைத்தவுடன் அதனை தரவேற்றுகிறேன் !
இப்போதைக்கு இந்த வடிவம் உங்கள் பார்வைக்கு !
I COULD MANAGE ONLY THIS MY DEAR FRIENDS.....
RKS !
Last edited by RavikiranSurya; 29th July 2015 at 03:44 PM.
-
Post Thanks / Like - 5 Thanks, 4 Likes
-
29th July 2015, 05:23 PM
#119
Junior Member
Diamond Hubber
ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றுத்தண்ணீரை பார்த்தலில் ஒரு சுகம் உண்டு.
நில்லாமல் சலசலத்து ஓடும் அதன்அழகில்மனம் லயிக்கும்.
கடல் நீரைப்பார்த்துக்கொண்டிருப்பதிலும் ஒரு சுகம் உண்டு.
நுரைநுரையாய்பொங்கிவந்து ஆக்ரோஷமாய் பாறைகளைதாக்கி தாக்கி சப்தத்தை உண்டு பண்ணும் அந்த அலைகளை பார்த்துக்கொண்டிருப்பதிலும் சுகம் உண்டு.
இயற்கையை ரசிப்பதில் மனித மனங்கள் மாறுபாடு கொள்வதில்லை.
இயற்கைகக்கு நிகராக இது போன்ற சுகங்களை ஒரு பாடல் முலம் கிடைக்கச் செய்ய முடியுமா?
ஆற்று நீரையும்,கடல் நீரையும் தனித்தனியாக பார்த்துத்தான் அதன் இன்பங்களை அனுபவிக்க முடியும்.
ஆனால்,
இரண்டும் சேர்ந்த மாதிரியான இன்பத்தை இந்த பாடல் கொடுக்கிறது.
பல்லவி முடிந்து சரணம் வந்ததும்
அதை உணரலாம்.
அந்த பாடல்:
சற்று வித்தியாசமும் புதுமையும் கலந்த இசை..,
பாடலுக்கு முன்ஆரம்பிக்கும் அந்த இசை
அலைகளைமமுதலில் காட்டும் காமிரா
பின் கடற்பாறைகளைக் காட்டி நகரும்.சற்று நகர்ந்த காமிரா இப்போது நிற்கும்.நடிகர்திலகத்தையும் ஜெயதாவையும் சேர்ந்ததது போல் இப்போது காட்டும். அந்த நடிகை நகர்வதையும் நகர்ந்து பின் நிற்பதையும் காட்டும் காமிரா சட்டென்று க்ளோசப் காட்டும்.
தூள்
தூள்
தூள்.
எதை எவ்வளவு நேரம் காட்டினால் என்ன?காமிராவுக்கு புண்ணியம் அந்த முகத்தை காட்டுவதில்தானே.அந்த சின்ன ஷாட்டிலும் மின்னலாய்க் காட்டப்பட்ட ரியாக்ஷன் fantastic.
எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கேதான் கண்டேன் பொன்வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில் நிலாவே ..நிலாவே
பெ:ஆஆஆநான் காண்பது உன் கோலமே
அங்கும் இங்கும் எங்கும்
ஆ:ஆஆஆஎன் நெஞ்சிலே உன் எண்ணமே
அன்றும் இன்றும் என்றும்
பெ:உள்ளத்தில் தேவன் உள்ளே என் ஜீவன்,..நீ...நீ...நீ...
நான் காண்பது உன் கோலமேஎன்பதுஆற்று நீரை பார்த்து அனுபவிப்பது போல.
அடுத்து வரும்
அங்கும்...இங்கும்...எங்கும்...
அலையடித்து தாக்குவது போல.
இதே உணர்வு பாடல் முழுவதும் எதிரொலிக்கும்.
எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கேதான் கண்டேன் பொன்வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில் நிலாவே ..நிலாவே...
ஆ:ஆஆஆகல்லானவன் பூவாகினேன்
கண்ணே...உன்னை...எண்ணி...
பெ:பூவாசமும்...பொன் மஞ்சமும்,..
எங்கோ...எங்கோ...ராஜா...
ஆ:இதற்காக வாழ்ந்தேன்உனக்காக வாழ்வேன்
நான்...நீ...நாம்...
எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கேதான் கண்டேன் பொன்வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில் நிலாவே ..நிலாவே
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
29th July 2015, 05:32 PM
#120
Junior Member
Diamond Hubber

Originally Posted by
RavikiranSurya
Much awaited trailer of veera pandiya kattabomman !!!!
ஒரு வழியாக நமது நடிகர் திலகத்தின் வீர பாண்டிய கட்டபொம்மன் முன்னோட்டம் எனது நண்பர் வாயிலாக கிடைத்தது. இது முன்னோட்ட விழா சத்யம் அரங்கில் நடந்தபோது எடுக்கபட்டதேன்று நினைக்கிறன். எதுவாக இருந்தாலும் ....கிடைத்ததை இங்கு தரவேற்றுகிறேன் நண்பர்களுக்காக...
இது ஒரு SAMPLE மட்டுமே ! ORIGINAL கோப்பு கிடைத்தவுடன் அதனை தரவேற்றுகிறேன் !
இப்போதைக்கு இந்த வடிவம் உங்கள் பார்வைக்கு !
I COULD MANAGE ONLY THIS MY DEAR FRIENDS.....
RKS !
உங்களுக்கு
மிக்க நன்றியும்
வாழ்த்துகளும்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks