-
13th August 2015, 08:38 PM
#19
Junior Member
Devoted Hubber
மந்திரவாதி !
மறைந்தான் மந்திரவாதி மாயமாய்
தெரிந்தான் மீண்டும் தந்திரமாய் அவன்
தேர்ந்த செயல்திறனை தெரிந்து கொள்ள
தைரியமாக எழுந்து கேட்டான் ஒருவன்
பறைவாய் இம்மன்றத்தில் தெளிவாய்
மறைந்த முறை மறைக்காது பகர்வாய்
சிந்தித்தான் மந்திரவாதி சிறிது நேரம்
செப்புவேன் ஆயின் சிக்கல் உண்டு
செத்து விடுவாய் நீ கேட்டால் ! சம்மதமா ?
சலசலப்பு மன்றமதில் : சளைத்தானா நம் ஆள்?
சிரித்தான் அச்சமின்றி : சரி சொல்
சீக்கிரமாய் ! என் மனைவியிடம் மட்டும் !
அமர்ந்தோரின் ஆர்பரிப்பு அமர்க்களம்!
ஆயிரம் குரல் அங்கே ! அதிர்ந்தது அரங்கம்!
என் சதிக்கு சொல் ! என் பதிக்கும் சொல் !
அடடா ! என்ன ஒரு அவசரம் ! எல்லோருக்கும்!
அவை நடுவே அந்த அவை நடுவே
அழுகைக் குரல் சிறுமியின் குரல்
அங்கிள் ! என் அம்மாவுக்கும் சொல்
அரங்கம் அடங்கியது! ஆச்சரியம் அங்கே!
அது ஏன்! அங்கலாயித்தான் மந்திரவாதி
"அம்மா செத்துவிடுவாள் அதுவா வேண்டும் ?"
அழுகை நிறுத்தி சொன்னது அக்குழந்தை
அம்மா தான் செத்து மறைந்தாளே!
அவள் உன் போல் மீண்டும் தெரியனும்
அங்கிள் ! ப்ளீஸ் என் அம்மாவுக்கும் சொல் !
/Inspired by a joke read in Web/
Last edited by Muralidharan S; 13th August 2015 at 08:40 PM.
Posting Permissions
- You may not post new threads
- You may not post replies
- You may not post attachments
- You may not edit your posts
-
Forum Rules
Bookmarks