Page 275 of 400 FirstFirst ... 175225265273274275276277285325375 ... LastLast
Results 2,741 to 2,750 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #2741
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Jugalbandi 48 - paappaa songs

    You listened to paatti songs. Here are two paappaa songs:

    From Samsaaram

    ammaa pasikkudhe thaaye pasikkudhe.....



    From the Hindi version Sansaar

    ammaa roti de baabaa roti de.....

    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  2. Thanks eehaiupehazij thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2742
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajraj View Post
    You listened to paatti songs. Here are two paappaa songs:

    From Samsaaram

    ammaa pasikkudhe thaaye pasikkudhe.....

    [url]http://www.youtube.com/watch?v=EbYEdoN9PNo

    From the Hindi version Sansaar

    ammaa roti de baabaa roti de.....

    [url]http://www.youtube.com/watch?v=cijAc1zW3w8
    Excellent recollection rajraj sir
    Children are deemed as Pattoos (silkys)! After Paattees Paattoos it is enjoyable to have Pattoos Paattoos! Thanks for the churning!!
    senthil

  5. #2743
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Rajraj sir
    we can add Kuzhandhaiyum dheivamum song with the excellent twin performance by Kutti Padmini !! For your jugal bandhi collection...!




    In Do Kalyan...Neethu Singh's entry as child artiste?..

    Last edited by sivajisenthil; 19th August 2015 at 08:13 AM.

  6. Likes Russellmai liked this post
  7. #2744
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    Thanks Senthil. Some songs you never forget. Samsaram was a popular movie in the 50s. The songs were popular too.
    'ammaa pasikkudhe' was used by children to tease their mothers if their food was late ! Thanks for the kuzhandhaiyum dheivamum song. I like children. Now I have two grandchildren in California. We are visiting them in September. It is fun to be with them !


    Quote Originally Posted by sivajisenthil View Post
    Excellent recollection rajraj sir
    Children are deemed as Pattoos (silkys)! After Paattees Paattoos it is enjoyable to have Pattoos Paattoos! Thanks for the churning!!
    senthil
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  8. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij, madhu liked this post
  9. #2745
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    As the proud father of two daughters, I would like to post this song...
    This song refers to both my daughters!

    ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ஐயா
    ஒரே ஒரு அய்யாவுக்கு ஒரே ஒரு அம்மா
    ஒரே ஒரு அம்மா பெத்த ஒரே ஒரு பொண்ணு
    அவள் பொண்ணு இல்லை பொண்ணு இல்லை
    கடவுளோட கண்ணு...


  10. #2746
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு - நடிகர் திலகம் திரை உலக "ராஜா " என்றால் நீங்களும் எங்களுக்கு முடிசூடா மன்னர்தான் - அருமையாக பதிவுகள் போடுவதிலும் , ஆழமாக போடும் கருத்துக்களில் ஒரு இனிமையை கொண்டுவருவதிலும் . பல பிரச்சனைகள் உங்களை வேதனைப்படுத்தும் இந்த நேரத்திலும் , அதை சற்றும் பொருட்படுத்தாமல் , அந்த சோகம் பதிவிகளில் வரவிடாமல் மிகவும் தெளிவாக அலசி உள்ளீர்கள் . பதிவுகள் போட்டு அதில் அடையும் சுகத்தை விட , தூர நின்று உங்கள் பதிவுகளைபிடிக்கும் போது வரும் சுகம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை . உங்கள் பிரச்சைனகள் எல்லாவற்றிற்கும் சீக்கிரமே ஒரு நல்ல , எதிர்ப்பார்க்கும் தீர்வு கிடைக்க எங்களுடைய வேண்டுதல்களை பலப்படுதிக்கொள்கிறோம் .

  11. #2747
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்



    (நெடுந்தொடர்)

    28

    'வெள்ளி முத்துக்கள் நடனமாடும் வெள்ளம்'

    'மீண்டும் வாழ்வேன்'



    இன்று தொடரில் எழுதப் போகும் பாலா பாடலை நினைத்தாலே கடல் அலைகளில் மிதப்பது போல உள்ளம் குளிருகிறது. 'மீண்டும் மீண்டும்' பாலா பாடல்களுக்காவே 'வாழ்வேன்' என்று கூட கத்தத் தோணுகிறது.



    'ராணி புரடக்ஷன்ஸ்' அளிக்கும் 'மீண்டும் வாழ்வேன்' என்ற படத்தில் வரும் இந்த பாலாவின் பாடல் என் நெஞ்சில் நிலையாக நின்றுவிட்ட பாடல்.

    'மீண்டும் வாழ்வேன்' படத்தின் நாயகன் ரவிச்சந்திரன். இதிலும் கலர்ப்பட நாயகன். வழக்கமான காதல், அடிதடி, மோதல், மாறுவேஷம், ('பலே பாண்டியா" நடிகர் திலகத்தின் விஞ்ஞானி பாத்திரத்தை இதில் ரவி டாக்டராக செய்ய முயன்றிருப்பார்) சென்டிமெண்ட் என்று எல்லாமே இதிலும் உண்டு.



    பாரதி நாயகி. எல்லோருக்கும் பிடித்தமானவர்.

    மனோகர் , நாகேஷ், மேஜர், தேங்காய், 'அஞ்சல் பெட்டி' முத்தையா, ஜெயகுமாரி, விஜயலலிதா, எஸ்.வரலஷ்மி என்று நிறைய நடிக நடிகையர்.

    பாடல்கள் கண்ணதாசன். ஒளிப்பதிவு எம்.ஏ.தாரா. ஒளிப்பதிவு டைரெக்டர் கே.எஸ்.பிரசாத். இசை 'மெல்லிசை மன்னர்'. ஆனால் ஆர்ப்பாட்டம். உதவி கோவர்தனம், ஜோசப் கிருஷ்ணா. தயாரிப்பு வி.சி. ஜெயின், ஜி.சி.லால்வாணி. கதை, வசனம், இயக்கம் டி.என்.பாலு. ராமண்ணா பட்டறையிலிருந்து வந்ததால் ஃபிரேம் டு ஃபிரேம் ராமண்ணாவின் படம் பார்ப்பது போன்றே இருக்கும். ஆனாலும் இன்ட்ரெஸ்டிங்.


    நாயகி பாரதியை மயக்கமாக்கித் தன் இடத்திற்குக் கொண்டு வர பிளான் போடுகிறார் மனோகர். கடற்கரையில் குளித்துக் கொண்டிருக்கும் பாரதியை எப்படியாவது மயக்கிக் கொண்டு வருமாறு மனோகர் தன்னுடைய பெண் அடியாட்களிடம் ஆணையிட, ஹலம் உள்ளிட்ட பெண் ரவுடிகள் பாரதியை கடற்கரயில் டிஸ்டர்ப் செய்கிறார்கள். விஷயம் தெரியாமல் அடியாட்களை அங்கே கொண்டு வரும் டாக்ஸி டிரைவர் நாயகன் ரவி இந்த சதித் திட்டத்தைக் கேட்டு விடுகிறார். அப்புறமென்ன? கடற்கரையில் பாடி, ஆடிக் கொண்டிருக்கும் பாரதியை நாயகன் ரவி அந்த பெண் ரவுடிகளுடனேயே சேர்ந்து ஆடிப் பாடி, அவர்களை விரட்டி காப்பாற்றி விடுகிறார்.

    இதுதான் பாடலின் சிச்சுவேஷன்.

    அழகான குளுமையான படப்பிடிப்பு. எலியட்ஸ் பீச்சில் படம் பிடித்திருப்பார்கள். படம் வண்ணம் வேறா! அள்ளுகிறது. நமக்கும் கடற்கரையில் இருப்பது போன்றே 'சில்'அனுபவமும் கிடைக்கிறது.




    துள்ளித் துள்ளி வரும் அலைகளுக்கு மத்தியில் பந்து விளையாடும் கருப்பு சிவப்புக் கலரில் (டி.என்.பாலு 'அறிஞர்' அண்ணாவின் தீவிரத் தொண்டர். திமுக அபிமானி. அதனால்தான் இந்த கலரில் உடையோ? கலர் கலராய் ரிப்பன்களை இணைத்து ஒரு குட்டை கவுன் தயாரித்திருப்பார்கள் போல) குட்டை கவுன் அணிந்த குதூகல புள்ளிமானாய் பாரதி. எழில் கொஞ்சுகிறது. ஸ்லிம்மான உடல் ஆதலால் அந்த கவுன் 'நச்'சென்று பொருந்துகிறது. பல இளைஞர்களின் தூக்கம் கலைந்திருக்கலாம் அந்த நாட்களில். இளமை பூத்துக் குலுங்குகிறது. 'ம்....கொடுத்து வைத்த விஷ்ணுவர்த்தன்' என்று மஸ்கட்டில் ஒருவர் புலம்புவதும் காதில் விழுகிறது. பாரதி கடலில் குளிக்க குளிக்க பார்ப்பவருக்கு உஷ்ணம் ஏறாமல் என்ன பண்ணுமாம்?

    4 ரவுடிப் பெண்களும் (இவர்களுக்கும் அரைகுறை நீச்சல் உடை ஆடைகள்) பாரதியை எப்படியாவது மயக்கிவிட பார்க்க, இது புரியாமல் பாரதி திண்டாட, தூர இருந்து கவனிக்கும் ரவி நடுவில் புகுந்து 4 வில்லிகளையும் வலைப் போட்டு மாட்டி, பாரதியிடமும் உண்மையை சொல்லி அவரைக் காப்பாற்றுவார். இதில் ஒரு ஆள் நமக்குத் தெரிந்த முகம். ஹலம். ஒல்லியாக இருப்பார். பிளாக் கலர் உடை அணிந்திருப்பார்.

    பாரதி வேறு பாடலில்,

    'நீராடும் வேகத்தில் மேலாடை மேகங்கள் நீரோடு ஓடட்டுமே!'

    என்று இன்னும் நம் ஹார்ட்டைத் துடிக்க வைப்பார். இந்த வரிகளில் மிக அழகான மூவ்மெண்ட்ஸ் கொடுப்பார் பாரதி. இடையோ அது இல்லையோ என்னும் அளவிற்கு கொடி இடை அழகியாய் அப்போதைய அபூர்வ ஒரே ஒரு அழகி இவர். மத்ததெல்லாம் பேரல்தான். ஜோதியை வேணுமினா சேர்த்துக்கலாம்.


    முதல் சரணம் பாரதி ஈஸ்வரி குரலில் பாடி முடித்ததும் 4 வில்லிகளும் பாரதியை ஒன்றாக இழுத்து தண்ணீரில் மூழ்க வைக்க முயற்சி செய்ய, அதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ரவி ஷர்ட்டைக் கழற்றிப் போட்டுவிட்டு நெக் பனியன், பேண்டோடு ஓடிவந்து (ஹோம் கார்ட் தொப்பி வேறு)

    'லா.... லல்ல லல்ல லல்ல லல்ல லல்ல லல்லா'

    என்று பாலாவின் குரலில் பாடியபடி ஓடிவந்து, பாரதியை அவர்களிடமிருந்து காப்பாற்றி, பின் அவர்களை இம்சை செய்து, பாடலைத் தொடருவார். ரவி நன்றாக சதை போட்டிருப்பார். ஆனால் சுறுசுறுப்பு அப்படியேதான். ஆட்டமும் ரகளைதான். அப்புறம் மீன் வலை போட்டு வில்லிகளைப் பிடித்து ஒருவழி பண்ணுவார். ரவிக்கே உரித்தான கலாய்ப்புகள் வழக்கமாக உண்டு. ஆனால் மூச்சைப் பிடித்து தண்ணீரில் மூழ்கி கரையிலேயே, கால் அளவு தண்ணியிலேயே, தரையிலேயே எழுந்திருப்பது செம காமெடி.

    காட்சிக்குத் தகுந்த அருமையான பாடல். 'மெல்லிசை மன்னர்' மிரட்டியிருப்பார்.

    பாலா பிஞ்சுக் குரலில் நெஞ்சை அள்ளுவார். வாழைத்தண்டு போல குரல் 'வழுவழு'வென்று அவ்வளவு அழகாக இருக்கும். அதுவும்,

    'லா... லல்ல லல்ல லல்ல லல்ல லல்ல லல்லா'

    எடுத்து அவர் போர்ஷனைத் தொடங்கும் போது நம்மையே ஒரு கணம் மறக்கச் செய்து விடுவார்.

    ஈஸ்வரி ராட்சஸி ஜாடிக்குத் தகுந்த மூடியாக பாலாவுக்கு செம பொருத்தம். ரெண்டுமே ரகளை பண்ணி ரெண்டு படுத்தக்கூடிய ஜென்மங்கள். கேட்கவா வேண்டும்?


    பாடலின் நடுவில்,

    'ஆஷாஷாஷாஷா' 'ஹாஹஹாங்', 'ஹே ஹே ஹே' ' என்றெல்லாம் ரகளை சப்தங்கள் கொடுக்க ராட்சஸி தவிர வேறு யார்? இந்தியில் ஓரளவிற்கு ஆஷா.

    பாடலின் துவக்க இசை 'அவளுக்கென்று ஒர் மனம்' படத்தின் 'மலர் எது' பாடலின் துவக்க இசையை ஞாபகப்படுத்தும். உச்சி வெயிலில் நிழல் மிகக் குறுகித் தெரிய, பாரதி ஜாலியாகக் குளிப்பார். பல்லவி முடிந்ததும் வரும் அந்த உற்சாக

    'டன் டன் டான் டன் டட ...
    டன் டன் டான் டன் டட ...
    டன் டன் டான் டன் டட'...

    ஃபாஸ்ட் பீட்டை மறக்கவே முடியாது. ஆர்கனும், புல்லாங்குழலும், கிளாரினெட்டும், தபேலாவும் சும்மா இணைந்து அமர்க்களம். அது முடிந்து அப்படியே சற்று வேகம் குறைந்து வயலின் ஓசை இனிமையாக பேசும். ஈஸ்வரி பாடப் பாட தொடரும் கோரஸ் குரல்களில் ஒலிக்கும் அந்த 'ஹாஹா' செமையாக மேட்ச் ஆகும்.


    இந்தப் பாடலை முழுமையாகக் கூர்ந்து கவனித்து நோக்கினால் மதியம் தொடங்கி ஈவ்னிங்கிற்குள் ஷூட்டிங் முடித்திருப்பார்கள் என்று தெரிகிறது. பாடல் முடியும்போது பாரதி, ரவி இவர்களின் நிழல் நீண்டிருக்கும். பாடலின் துவக்கத்திலிருந்து இறுதிவரை நடிகர்களின் நிழல்கள் உருவம் கொஞ்சம் கொஞ்சமாக நீளும்.

    ஸ்டுடியோ வாசனையே இல்லாமல் இப்பாடல் முழுதுமே எலியட்ஸ் பீச்சில் வெளிப்புறப் படப்பிடிப்பாக கடலில் படமாக்கப்பட்டிருப்பது இன்னொரு சிறப்பான விசேஷம். அதனாலேயே பாடல் நம்மை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது.

    'பாடட்டுமே... ஆடட்டுமே... மோதட்டுமே... நீந்தட்டுமே...பேசட்டுமே... ஆகட்டுமே... கூடட்டுமே... காணட்டுமே'...

    என்று பாடலில் நிறைய 'மே'க்கள். ஒவ்வொரு முறையும் பாலாவும், ஈஸ்வரியும் இந்த 'மே' விற்குக் கொடுக்கும் அதிர்வலைகளை எளிதில் மறந்து விட முடியாது நம்மால்.

    நடிகர்கள், அம்சமான இசை, ஒளிப்பதிவு, சிறப்பான பாடகர்கள், ஜாலியான நடனம், அளவான கிளாமர், கடல் குளுமை, ஸ்லிம் கதாநாயகி, கவர்ச்சிக் கன்னியர், கவரும் வண்ணம் என்று அத்தனை அம்சங்களும் நிறைந்து என்றும் நம் மனதில் இளமையாய் வாழும் பாடல். பாலா என்ற கடலில் கிடைத்த இன்னொரு கோமேதகம் என் ராட்சஸியின் துணையோடு.

    என் வரையில் மிக மிக கவர்ந்த பாலாவின் பாடல். உற்சாக டானிக் பாடல்.




    வெள்ளி முத்துக்கள் நடனமாடும் வெள்ளம்
    இளம் காற்று

    ம்ம்ம்ம்......ம்

    தாலாட்ட

    ம்ம்ம்ம்......ம்

    பொன்மேனி

    ம்ம்ம்ம்......ம்

    நீராட

    ம்ம்ம்ம்......ம்

    வெள்ளி முத்துக்கள் நடனமாடும் வெள்ளம்

    இளம் காற்று

    ஆஷாஷாஷாஷா

    தாலாட்ட

    ஹா ஹா ஹா

    பொன்மேனி

    ஹாங் ஹாங்

    நீராட

    செவ்வானம் பூப்பந்தல் செம்மீன்கள் அன்னங்கள்
    தென்பாங்கு பாடட்டுமே

    ஹாஹா

    செவ்வானம் பூப்பந்தல் செம்மீன்கள் அன்னங்கள்
    தென்பாங்கு பாடட்டுமே
    சிந்தாத தேன்கிண்ணம் சிங்கார பூ வண்ணம்
    பந்தாட்டம் ஆடட்டுமே

    ஹா ஹா

    நீராடும் வேகத்தில் மேலாடை மேகங்கள்
    நீரோடு ஓடட்டுமே.... ஹேஹேஹேஹே


    ('ஹேஹேஹேஹே' முடிந்தவுடன் ஒரு கிடார் பிட் 'டங்டங் டங் டங்டங்' என்று கொஞ்சம் கொஞ்சமாக ரெயிஸ் ஆகும் பாருங்கள். அடடா! நிச்சயம் இதை அனுபவித்துக் கேட்டுப் பாருங்கள். அவ்வளவு இனிமை)

    வெள்ளி முத்துக்கள் நடனமாடும் வெள்ளம்
    இளம் காற்று

    ம்ம்ம்ம்......ம்

    தாலாட்ட

    ம்ம்ம்ம்......ம்

    பொன்மேனி

    ம்ம்ம்ம்......ம்

    நீராட

    ம்ம்ம்ம்

    லா.... லல்ல லல்ல லல்ல லல்ல லல்ல லல்லா

    ம்ம்ம்ம்......ம் ம்ம்ம்ம்......ம் ம்ம்ம்ம்......ம் ம்ம்ம்ம்.

    லா.... லல்ல லல்ல லல்ல லல்ல லல்ல லல்லா

    எல்லோரும் வாருங்கள் என்னோடு ஆடுங்கள்
    இன்பங்கள் மோதட்டுமே
    எல்லோரும் வாருங்கள் என்னோடு ஆடுங்கள்
    இன்பங்கள் மோதட்டுமே
    எட்டாத கொம்பல்ல ஒட்டாத உறவல்ல
    எண்ணங்கள் நீந்தட்டுமே

    ஹா ஹா

    கோபாலன் நானுண்டு
    கோபியர்கள் தானுண்டு
    லீலைகள் ஆகட்டுமே.... ஹேஹே

    (கிடார் பிட்)

    வெள்ளி முத்துக்கள் நடனமாடும் வெள்ளம்

    ஹா ஹா ஹாங்

    இளம் காற்று

    ஆஷாஷாஷாஷா

    தாலாட்ட

    ஹா.. ம்

    பொன்மேனி

    ஹா ஹா ஹா

    நீராட

    பெண் பார்க்கப் பெண் வந்தால்
    கண் பார்க்கக் கண் உண்டு
    பேசாமல் பேசட்டுமே

    ஆஹா

    தூதொன்றும் இல்லாமல்
    ஏதொன்றும் சொல்லாமல்
    உள்ளங்கள் கூடட்டுமே

    ஆஹா

    நேராக நீ உண்டு
    நெஞ்சத்தில் நானுண்டு
    லாபங்கள் காணட்டுமே... ஹேஹேஹேஹே

    (கிடார் பிட்)


    Last edited by vasudevan31355; 19th August 2015 at 02:48 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  12. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai, madhu, eehaiupehazij liked this post
  13. #2748
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Rajraj Sir and Ragadevan Sir.
    Thank you for the interactions keeping daughters and grand daughters/children as the center of gravity of our situation songs! It is quite natural that they are our binding forces and they remain the catalysts for our continued life activities !When we are with them, listening to their incessant speeches...observing their immaculate innocence ....we forget everything around us!! In line with you two , I too feel proud of my daughter and grand daughter who make the rest of my existence meaningful!!
    Children always have flexible moods with false anger!
    That is best exemplified by this Shammi Kapoor song in his ace movie Andaaz!



    Last edited by sivajisenthil; 19th August 2015 at 12:20 PM.

  14. Thanks raagadevan thanked for this post
    Likes Russellmai liked this post
  15. #2749
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு -

    "இன்று தொடரில் எழுதப் போகும் பாலா பாடலை நினைத்தாலே கடல் அலைகளில் மிதப்பது போல உள்ளம் குளிருகிறது. 'மீண்டும் மீண்டும்' பாலா பாடல்களுக்காவே 'வாழ்வேன்' என்று கூட கத்தத் தோணுகிறது."

    எங்களுக்கும் தான் இன்னும் அதிகமாக கத்தத் தோணுகிறது - இப்படியெல்லாம் எழுதி வெளுத்து வாங்கக்கூடிய ஒருவரின் பதிவுகளை மீண்டும் மீண்டும் படிக்க , சுவைக்க நாங்கள் இன்னும் "வாழ்வோம் " என்று !!- என் வரும் பதிவை உங்களுக்கு ஒரு பரிசாக வழங்குகிறேன்.

  16. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  17. #2750
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    இந்த மதுர கானத்தில் , தேனை சம்பந்தப்படுத்தி ஒரு பதிவும் வரவில்லையே என்று எனக்குள் ஓரி சின்ன ஏக்கம் - அனைவர்களுடைய பதிவுகளும் தேனாக இனித்தாலும் , தேனுக்காக , தேனை சம்பந்தப்படுத்தி ஒரு சிறிய தொகுப்பை வழங்கினால் என்ன என்று மனதில் ஒரு ஆசை எழுந்தது - அதன் விளைவுதான் இந்த பதிவு . நாரதர் , பாட்டிகள் இந்த வரிசையில் இந்த தொக்குப்பையும் சேர்த்துக்கொள்ளலாம் .

    தேன் இசையை கேட்பதற்கு முன் , தேனைப்பற்றிய தெரிந்த உண்மைகளை சற்றே அசை போடுவோம் .



    பகுதி 1

    தேனும் மருந்தும் :


    தேனீயின் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (அல்குர்ஆன் 16:69)

    தேனின் மருத்துவ குணங்கள் அனைவரும் அறிந்ததே. பின்வரும் தேன் கலவைகள் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவும்.

    கண் பார்வைக்கு

    தேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும்.

    இருமலுக்கு

    சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்

    ஆஸ்துமா

    அரை கிராம் கருப்பு மிளகை பொடி செய்து சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்த ஆஸ்துமா குணமாகும்

    இரத்த கொதிப்பு

    ஒரு தேக்கரண்டி அளவு பூண்டு சாறுடன் இரண்டு டீ கரண்டி தேன் சேர்த்து தினமும் இரு வேளை (காலை & மாலை) சாப்பிடுவது இரத்த கொதிப்புக்கு சிறந்த மருந்தாகும்.

    இரத்த சுத்திகரிப்பு/கொழுப்பு குறைப்பு

    ஒரு குவளை மிதமான சூடுள்ள நீரில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேனும், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறும் கலந்து தினமும் காலைக்கடன்களுக்கு முன் பருகவும். இது இரத்த சுத்திகரிப்பிற்கும், உடல் கொழுப்பை குறைப்பதற்கும், மற்றும் வயிற்றை சுத்தமாக்கவும் உதவும்.

    இதயத்திற்கு டானிக்

    அனைஸ் பொடியுடன் (Anise Powder/Yansoun Powder) ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து அருந்தினால் இதயம் பலப்பட்டு இயங்குசக்தி அதிகரிக்கும்.

    தேனை உட்கொள்ளும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

    1. தேனை சூடான உணவு பொருட்களுடன் கலக்கக் கூடாது.

    2. தேனை சூடாக்குவதை தவிர்க்க வேண்டும்.

    3. வெப்ப நிலை அதிகமாக உள்ள இடங்களில் வேலை செய்பவர்கள் தேன் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

    4. தேனை மழை நீர், கடுகு, நெய் மற்றும் காரமான உணவு வகைகளுடன் ஒருபோதும் கலக்கக் கூடாது.

    தேன் பல மலர்களின் மதுரம் கலந்த ஒரு கலவையே. அதில் நச்சு தன்மை வாய்ந்த மலர்களும் அடங்கும். நஞ்சு பொதுவாக கார மற்றும் உஷ்ண குணங்களையே கொண்டிருக்கும். ஆகவே தேனை கார மற்றும் சூடான உணவு பொருட்களுடன் கலக்கும் போது இந்த நச்சு தன்மைகள் மேலோங்கும் சாத்தியக்கூறு உள்ளது.



    பகுதி 2







    தேன் நிலா வரும் சொல்லித்தான் தரும் சுகம்



    மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா
    பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா...
    ...
    எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டதேன்
    அதை சொல்வாய் வெண்ணிலா..

    வாசுவின் , சாரி பாலாவின் அருமையான குரலில் காலத்தை வென்று நிற்கும் இந்த பாடல், நம் மொழிவின் பறைசாற்றும் மற்றொரு தலைசிறந்த சான்று.


  18. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355, Russellmai, madhu liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •