Page 256 of 402 FirstFirst ... 156206246254255256257258266306356 ... LastLast
Results 2,551 to 2,560 of 4018

Thread: Makkal Thilagam MGR -PART 16

  1. #2551
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    இரு திரிகளில் [ மக்கள் திலகம் மற்றும் நடிகர் திலகம்] இருக்கும் நண்பர்களை பிரிக்க பதிவு செய்யும் அந்த "ஈ"/"கொசு" விற்கு சமர்ப்பணம்.

    Last edited by saileshbasu; 24th August 2015 at 10:46 PM.

  2. Likes Richardsof liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2552
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    திரு ஜெய்சங்கர் அவர்களின் அறிவிப்பு
    மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தொடரட்டும் அவரின் எழுத்துப்பணி. வாழ்த்துக்கள்.

    அன்புடன்,

    எஸ் ரவிச்சந்த
    Last edited by ravichandrran; 25th August 2015 at 04:15 AM.

  5. #2553
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by saileshbasu View Post
    இனிய நண்பர் திருசைலேஷ் சார்

    1968ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் 100 வது படமான ''ஒளிவிளக்கு '' கடந்த 47 ஆண்டுகள் தொடர்ந்து பல முறை வெளிவந்து மறு வெளியீடுகளில் சாதனை புரிந்துள்ளது . மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள் ''all time record''என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளது ஒளிவிளக்கு .
    Last edited by esvee; 25th August 2015 at 05:21 AM.

  6. Thanks Russellrqe thanked for this post
    Likes ainefal liked this post
  7. #2554
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    ‘ஒளிவிளக்கு’ இரண்டாவது தடவையாக ராஜா தியேட்டரில் வெளியாகி நூறு நாட்களைக் கடந்தபோது நாங்கள் எங்களது கிராமத்தின் சார்பில் தியேட்டருக்கு முன்பு கஞ்சி காய்ச்சி ரசிகர்களுக்கு வழங்கினோம். ‘நாளைநமதே’ ராணி தியேட்டரில் தொடர்ந்து 140 காட்சிகள் ஹவுஸ்புல்லாகக் காண்பிக்கப்பட்டது. இது அகில இலங்கை வசூல் சாதனை. அப்போது எம்.ஜி.ஆரின் படங்களுக்குக் காட்சி நேரம் நிர்ணயிக்கப்படுவதில்லை. கொழும்பிலிருந்து ரயிலில் படப் பெட்டி வந்தவுடனேயே அதிகாலையிலேயே காட்சி தொடங்கிவிடும். இரவு முழுவதும் நாங்கள் தியேட்டருக்கு முன்புதான் படுத்துக்கிடப்போம். எம்.ஜி.ஆரின் புதிய பட விளம்பரங்களுக்குக் கீழே ‘கொட்டகை நிறைந்ததும் காட்சிகள் ஆரம்பமாகும், பாஸ்கள் சலுகைகள் ரத்து’ என்ற வரிகள் தவறாமல் இடம்பெறும்.

    எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்குப் புகழ்பெற்றிருந்த குருநகரில் கூட வாசகசாலைக்கு ‘அண்ணா சனசமூக நியைம் ‘என்றே பெயர் வைத்திருந்தார்கள். ஆனால் எங்கள் ஊர் வாசகசாலைக்கு நாங்கள் ‘மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் சனசமூக நிலையம்’ என்று கட்டன் ரைட்டாக பெயர் வைத்திருந்தோம். மட்டக்களப்பில் புயலால் ஏற்பட்ட சேதத்துக்கு நிவாரணமாக அப்போது எம்.ஜி.ஆர் பத்து இலட்சம் ரூபாய்கள் வழங்கியதற்கு நன்றி தெரிவிப்பதற்காக மனோகரா தியேட்டரில் பத்து நாட்களுக்கு எம்.ஜி.ஆரின் பத்துப் படங்களை அரை ரிக்கட்டுக்குக் காண்பித்தார்கள். எம்.ஜி.ஆர். மட்டக்களப்புக்கு நிதி வழங்கியதையொட்டி நாங்களும் எங்கள் வாசகசாலையின் பெயரிலிருந்த ‘மக்கள் திலகம்’ என்ற பட்டத்தை நீக்கிவிட்டு ‘பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் சனசமூக நிலையம்’ எனப் புதிதாகப் பெயரிட்டோம்.
    Courtesy - net

  8. Thanks Russellrqe thanked for this post
    Likes ujeetotei liked this post
  9. #2555
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    பி.யு.சின்னப்பாவிலிருந்து இன்றைய சூர்யா வரைக்கும் கதாநாயகர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் சண்டைக் காட்சிகள் புகழ்பெற்றவை. என்னைப் பொறுத்தவரையில் எத்தனை ஹீரோக்கள் எத்தனை விதமாக சண்டைக் காட்சிகளில் நடி்ததாலும், என் மனதில் நிற்பது அன்றும் இன்றும் என்றும் எம்.ஜி.ஆர். நடித்த சண்டைக் காட்சிகள்தான். நன்றாகக் கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், ஹீரோ ஒரு குத்து விட்டதும், வில்லனின் ஆட்கள் அரைப்படி ரத்தத்தை வாய் வழியாகக் கக்கிக் கொண்டு விழுவதும், ஹீரோவின் ஒரு உதையில் முககால் கிலோமீட்டர் ஆகாய மார்க்கமாகப் பறந்து சென்று லைட் கம்பத்தைப் பெயர்த்துக் கொண்டு விழுவதும் போன்ற அபத்தமான சண்டைகளாக அவருடையது இருக்காது. அனைத்தும் ஒரு கலையழகுடன் அமைந்திருக்கும்.

    ஒரு படத்தில் நான்கைந்து சண்டைக் காட்சிகள் வருகின்றன என்றால், அவற்றிற்கிடையே வித்தியாசம் காட்ட அவர் எடுத்துக் கொள்ளும் சிரத்தை அபாரமானது. உதாரணத்துக்கு ‘உலகம் சுற்றும் வாலிபன்’ பாருங்கள். முதலில் ஆர்.எஸ்.மனோகருடன் அவர் செய்யும் கராத்தே ஸ்டைல் சண்டை, பின்னர் ஜஸ்டினுடன் செய்கிற ஸ்டைலிஷ்ஷான ஜுடோ சண்டை, அழகான பொய்ப்பல் நம்பியாருடன் செய்கிற புத்தர் கோயில் சண்டை என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித ரசனையில் அமைந்திருக்கும். ‘கண்ணன் என் காதலன்’ படம் பார்த்தீர்கள் என்றால் கையில் கிடார் என்ற இசைக் கருவியை வைத்துக் கொண்டு, முழுக்க முழு்க்க கால்களை மட்டும் பயன்படுத்தி அவர் நடித்திருக்கும் சண்டைககாட்சி உதட்டை மடித்து விசிலடிக்க வைக்கும். கால்களைப் பயன்படுத்துவதில் புரட்சிக் கலைஞருக்கு அப்பவே முன்னோடி புரட்சித் தலைவர்தாங்க.


    எம்.ஜி.ஆரின் ஸ்பெஷாலிட்டின்னா அது வாள் சண்டைதான். வாள் சுழற்றுவதில் இணையற்ற திறமை படைத்திருந்த அவருக்கு ஜாடிக்கேத்த மூடியா அமைஞ்சவரு வில்லன் நம்பியார். ‘கலை அரசி’ன்னு ஒரு படம். அந்தக் காலத்துலயே பறக்கும் தட்டுல பறந்து வேற கிரகத்துக்குப் போறாங்கன்னுல்லாம் கதை அமைச்ச சயன்ஸ் ஃபிக்ஷன். அதுல எம்.ஜி.ஆரும் நம்பியாரும் மோதுவாங்க பாருங்க... அந்த வாள் சண்டையில ரெண்டுபேரும் ஆக்ரோஷமா மோதி, கடைசியில நம்பியாரோட வாளைத் கீழ தட்டி நிராயுதபாணியாக்கிட்டு, ஸ்டைலா நிப்பாரு பாருங்க எம்.ஜி.ஆர். சான்ஸே இல்ல... இப்பப் பாத்தாலும் அந்த சீன் நகம் கடிக்க வைக்கும்.

    ‘நீரும் நெருப்பும்’ படம் டி.வி.யில அடிக்கடி போடறாங்க. அந்தப் படத்துல சிவப்பா இருக்கற அண்ணன் எம்.ஜி.ஆர். இடதுகைக் காரர். கறுப்பா இருக்கற தம்பி எம்.ஜி.ஆர். வலதுகைக் காரர். ஆக, படத்துல இடது கையால வாளைச் சுழற்றி அவர் சண்டை போடற லாகவத்தைப் பாக்க எக்ஸ்*ட்ரா ரெண்டு கண்ணுதாங்க வேணும். க்ளைமாக்ஸ்ல ரெண்டு கைலயும் வாளை வெச்சுக்கிட்டு சுழற்றி அவர் அசோகனை வீழ்த்தற காட்சி இருக்கே... அபாரம்பா! ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘அரசிளங்குமரி’, ‘நாடோடி மன்னன்’ -இப்பிடி நிறையப் படங்கள்ல அவர் வாள் சுழற்றுகிற லாகவத்தை இப்பவும் பாக்கறப்பல்லாம் ரசிச்சுக்கிட்டுதான் இருக்கேன்.


    வாத்யாரின் திறமைகள்ல இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் சிலம்பாட்டம். முறைப்படி அதைக் கற்று தேர்ச்சியடைஞ்சிருந்த அவர் பல படங்கள்ல கம்பு சுத்தற அழகைப் பாத்துட்டே இருக்கலாம். ‘தாயைக் காத்த தனயன்’ படத்துல சின்னப்பா தேவரோட அவர் போடற கம்பு சண்டைய இதுவரை பாக்காதவங்க, அவசியம் தேடிப்பிடிச்சு பாத்துடுங்க. அசரடிககிற வித்தை அது. அந்த சண்டை ஆக்ரோஷமானதுன்னா... ‘ரிக்ஷாக்காரன்’ படத்துல ரிக்ஷாவை விட்டு இறங்காமலே வண்டியை ரிவர்ஸ்ல வட்டமா ஓட்டி கம்பைச் சுத்தி, ரவுடிகளை பின்னிப் பெடலெடுப்பார் பாருங்க... பாத்துடறேங்கறீங்களா? அப்ப சரி. அதே மாதிரி ‘மாட்டுக்கார வேலன்’ படத்தோட க்ளைமாக்ஸ்ல கம்பு சுத்துவாரு பாருங்க... முதல்ல ரெண்டு பேர், அதை சமாளிக்கறப்பவே இன்னும் ரெண்டு பேர், நாலு பேரையும் சமாளிக்கறப்ப இன்னும் நாலு பேர் சேந்துக்க... எட்டுக் கம்புகளையும் சூறாவளியா சுத்தி அவர் சமாளிச்சு அடிக்கிறது... கண்டிப்பா பாத்து ரசிக்க வேண்டிய ஒண்ணு. இன்னும் நிறையப் படங்கள் சொல்லிக்கிட்டே போகலாம்.

    ‘குமரிக்கோட்டம்’ படத்துல புத்திசுவாதீனமில்லாத ஜெயலலிதாவுக்காக காளி கோயில் முனனால ஆர்.எஸ்.மனோகரோட வாத்யார் போடற சண்டை ஒண்ணு வரும். அதுல மனோகர் ரெண்டு கைலயும் கம்பைப் பிடிச்சுட்டு அடிக்க வர... அதைத் தடுத்து அந்தக் கம்புல கைகள் இருக்க, கால்கள் ரெண்டும் வான் நோக்கியிருக்க ரெண்டு நிமிஷம் ஜிம்னாஸ்டிக் வீரர் மாதிரி அந்தரத்துலயே சுத்தி அப்புறம் கீழ இறங்கி அடிப்பாரு... இப்பப் பாத்தாலும் பிரமிச்சுத்தான் போவீங்க! சுருள் கத்தின்னு ஒரு ஐட்டம் அந்தக் காலத்துல உண்டு. ஒரு கைப்பிடியில, சில மெல்லிய தட்டையான கம்பிகள் செருகப்பட்டிருக்கும். நீளமா பாக்கறதுக்கு தென்னை விளக்குமாறு மாதிரி இருக்கற அது ஒரு அபாயமான ஆயுதம். எதிராளியை தோலைச் சீவிரும். சரியா சுத்தத் தெரியாட்டி சுத்தறவனையே அது சீவிரும். அந்த சுருள் கத்தியைக் கையாண்டு ‘ரிக்ஷாக்காரன்’ பட க்ளைமாக்ஸ்ல எம்.ஜி.ஆர். போடற சண்டைகள் இப்பவும் ஹீரோக்களுக்கு ஒரு பாடமா வைக்கலாம்.


    சிங்கத்தையும், சிறுத்தையையும் சண்டையிட்டுக் கொல்ற மாதிரியான சண்டைக் காட்சிகள்லயும் அவர் நடிச்சதுண்டு. அந்த மிதமிஞ்சிய ஹீரோத்தனங்களைப் பத்தி நான் பெருமையாச் சொல்ல வரலை. நான் சொன்ன மாதிரி, மென்மையாக, கலையழகோட அவர் சண்டை போடறதுக்கு நான் இன்*னிக்கும் ரசிகன்கறதை மட்டும் பெருமையாச் சொல்லிக்கறேன். நான் குறிப்பிட்ட சண்டைக்காட்சிகளையெல்லாம் ஒருமுறை பார்த்து ரசிச்சா நீங்களும் இதேயேதான் சொல்வீங்கங்கறது என் நம்பிக்கை!

    Courtesy - balaganesh- net

  10. Thanks Russellrqe, ainefal thanked for this post
    Likes ujeetotei liked this post
  11. #2556
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் திரை உலக ஆவணங்கள் - அரசியல் ஆவணங்கள் மற்றும் அவரை பற்றிய ஏராளமான தகவல்கள் , வீடியோ காட்சிகள் , அபூர்வ நிழற் படங்கள் , என்று பல்வேறு தொகுப்புகளை காணும் அரிய சந்தர்ப்பம் நமக்கு கிடைத்தது என்றால் அதற்கு முக்கிய காரணம் மையம் திரியின் நண்பர்கள் . குறிப்பாக 21.4.2007ல் இனிய நண்பர் திரு ஜோ அவர்கள் துவக்கிய மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் 2 ல் அவருடைய பதிவுகளுடன் மற்றும் இனிய நண்பர்கள் திரு ராகவேந்திரன் , திரு நெய்வேலி வாசுதேவன் , திரு பம்மலார் மற்றும் பல நண்பர்கள் பதிவுகளை வழங்கி திரிக்கு பெருமை சேர்த்தார்கள் என்பதை நாம் மறக்க முடியாது .

    மையம் திரியின் மூலம் நமக்கு பல நட்பு வட்டங்கள் கிடைத்தது ஒரு மாபெரும் பாக்கியம் . மேலும் மக்கள் திலகத்தின் தீவிர ரசிகர்கள் திரு ரவிச்சந்திரன் , திரு ஜெய்சங்கர் , திரு கலியபெருமாள் . திரு ரூப்குமார் , திரு லோகநாதன் , திரு ராமமூர்த்தி , திரு பேராசிரியர் செல்வகுமார் , திரு கலைவேந்தன் , திரு யுகேஷ் பாபு , திரு முத்தையன் திரு சி .எஸ்.குமார் திரு தெனாலி ராஜன் , திரு சத்யா , திரு சைலேஷ் , திரு சுகராம் திரு எம்ஜிஆர் பாஸ்கரன் , திரு மாசானம் மற்றும் பல நண்பர்களின் அருமையான பங்களிப்பில் கடந்த 23.10.2012 முதல் இன்று வரை மக்கள் திலகம் எம்ஜிஆர் திரி பல பாகங்களை கடந்து வெற்றி நடை போடுகிறது .

    மையம் திரியின் மூலம் கிடைத்த நட்பின் விளைவாக நமக்கு கிடைத்த மற்றுமொரு வெகுமதி ''மலர்மாலை ''.இனிய நண்பர் திரு பம்மலாரின் கை வண்ணத்தில் உருவான நம் மக்கள் திலகத்தின் உலக தரம் வாய்ந்த ஆல்பம்.

    உலகமெங்கும் வாழும் மக்கள் திலகத்தின் கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவு புத்தகம் இது . முதல் பதிப்பில் விற்பனையில் சாதனை புரிந்து 1000 புத்தகங்கள் மேல் மக்கள் திலகம் எம்ஜிஆர் அன்பு உள்ளங்களால் வாங்கப்பட்டுள்ளது . விரைவில் திரு பம்மலாரின் அடுத்த படைப்பான மலர் மாலை -2 வெளியீடு பற்றிய அறிவிப்பு வெளிவரும் என்று தெரிவித்து கொள்கிறேன் .


    திரியில் நமது நண்பர்களின் தொடர் பங்களிப்பின் மூலம் மக்கள் திலகத்தின் ஆளுமைகள் பற்றி நாம் படிக்கும் போது மக்கள் திலகம் நம்மோடு வாழ்கிறார் என்ற உணர்வு எல்லோருக்கும் இருக்கிறது .எம்ஜிஆர் என்ற பெயரை உச்சரிக்கும் நேரத்தில் நமக்கு கிடைக்கும் உற்சாகம் , ஆனந்தம், - கணக்கிட முடியாது. அப்படி ஒரு இன்ப அதிர்வுகள்.அவருடைய முகத்தை பார்த்தாலே அந்த புன்சிரிப்பு நமக்கு கிடைத்த உற்சாக உணர்வு. மறக்க முடியாது .
    வினோத்
    உங்களுடய விரிவான தகவலுக்கு நன்றி . மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் அசூர வளர்ச்சியில் நண்பர்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது .

  12. #2557
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by jaisankar68 View Post
    மக்கள் திலகம்
    புரட்சி நடிகர்
    மன்னாதி மன்னன்
    நடிகர் பேரரசர்
    பொன்மனச் செம்மல்
    இதய தெய்வம்
    புரட்சித் தலைவர்
    வறுமைக்கு வைத்தியம் செய்த டாக்டர்
    இப்படி எத்தனை எத்தனையோ பட்டங்கள் . ஆனால் அவையாவும் அதிர்ஷ்டதேவதை அள்ளித் தந்த வெகுமதியல்ல. எம்.ஜி.ஆர் அவர்கள் அடிக்கடி சொல்லும் தாரக மந்திரமான உழைப்பவரே உயர்ந்தவர்கள் என்னும் மூலமந்திரத்தின் முதிர்ந்த விளைவு. அவரது வாழ்வு ஒரு பரமபத விளையாட்டை போன்றது. விழுவது போலத் தெரியும். அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து விட்டு வெற்றி வீரராக மீண்டும் எழுந்து வருவார். தன்னம்பிக்கைக்கும், விடா முயற்சிக்கும் , செயல் திறனுக்கும் அவரது வாழ்வு ஒரு பாடம். அவர் மேல் வீசி எறியப்பட்ட அம்புகள் யாவும் முனைமளுங்கிப் போனன. ஆனால் அவரது மறைவுக்குப் பிறகும் அவர் மேல் அம்புகள் வீச ஒரு கூட்டம் இருக்கிறது. அவர் வாழ்ந்த போதே பல்வேறு கருத்து முரண்பாடுகளால் பொய்யான பல குற்றச்சாட்டுகள் , கேலி விமர்சனங்கள் அவர் மீது தொடர்ந்து மிகச் சிறுபான்மையான ஒரு கூட்டத்தால் வைக்கப்பட்டன. அலட்சியம் ஒன்றையே அவற்றுக்கு பதிலாக அளித்தார் நம் எம்.ஜி.ஆர். ஏராளமான மக்களுக்கு அவர் தெய்வம். அவரைச் சந்தித்த / சிந்தித்த அத்துணை மனிதர்களிடத்திலும் ஏதாவது ஒரு செய்தியை , நெகிழ்வை விட்டுச் சென்றிருக்கிறார் அந்தக் கோமகன்.
    கம்ப ராமாயணத்திலே ஒரு நிகழ்வு. மிதிலை நகரிலே இளவல் இலக்குவன், விசுவாமித்திரர் புடை சூழ ஜானகி தேவியின் சுயம்வரத்தில் கலந்து கொள்ள வருகிறார் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி. நகர மாந்தர்கள் அவரை ஆவலுடன் தரிசிப்பதை கம்பன் அழகாக வர்ணிப்பார் அவரது தோளைக் கண்டவர்களின் கண்கள் தோளை விட்டு அகலாது . அவரது பாதத்தைக் கண்ட கண்கள் அந்தத் பாதார விந்தங்களிலேயே சரணாகதியடைந்து விடும். அவரது நீண்ட நெடிய கரங்களைக் கண்டவர்களும் மற்ற அவயவங்களைக் காணும் எண்ணமற்று அதிலேயே மனம் ஒன்றி மற்றவற்றை மறந்து மதிமயங்கி நிற்பதாக கம்பன் கவி காட்டும். அது போல மக்கள் திலகத்தின் மகத்துவத்தின் ஒரு பகுதியை கண்ணுற்ற மாந்தர் அதிலேயே திளைத்து அதிலேயே ஒன்றி மற்றவற்றை மறந்து திளைக்கும் நிலையை பலரிடமும் காண முடிகிறது. அவரிடம் விரோதம் பாராட்டுவோரும் ஏதாவது ஒரு விதத்தில் அவரைப் பாராட்டுவது என்பது மிகச் சாதாரணமாக இருக்கிறது.
    இன்னமும் அவரது பெயரால் புத்தகங்கள், கட்டுரைகள் அவரது புகழ்பாடி வெளிவந்த வண்ணம் உள்ளன. வசைபாடியும் வருகின்றன. அவற்றில் காணப்படக் கூடிய பல முரண்பாடுகளை ஆராய்ந்து புறந்தள்ளுவதும் நமது கடமையாகிறது.அவரது வாழ்வில் அறியப்படாத பல விஷயங்களை அறிந்து கொள்வதும் நமது கடமையாகிறது. இது தொடர்பாக அனைவரும் பங்கேற்று தங்கள் கருத்துக்களைப் பதிவேற்றுவதன் மூலம் பல அரிய செய்திகள் பகிரப்படும்.
    ஜெய் சங்கர்
    உங்களுடய புதிய படைப்பிற்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  13. #2558
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    Sent from my HM NOTE 1LTE using Tapatalk

  14. Likes Russellrqe liked this post
  15. #2559
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    கலைவேந்தன்,

    உங்கள் உளப்பூர்வமான பதிலுரைக்கு மிக்க நன்றி.
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  16. Thanks Russellzlc thanked for this post
  17. #2560
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தென்னிந்திய திரை உலகின் சாதனை.
    மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்களின் சாதனைகளை மக்கள் திலகத்தின் படங்களே முறியடித்தது.

    13

    1958ல் நாடோடிமன்னன் முதல் வெளியீட்டில் தமிழகத்தில் 13 அரங்கில் 100 நாட்கள் ஓடியது .


    15

    1965ல் நாடோடி மன்னன் சாதனையை எங்க வீட்டு பிள்ளை முறியடித்து தமிழகத்தில் முதல் வெளியீட்டில் 15 அரங்கில் 100 நாட்கள் ஓடியது .


    20

    1973ல் எங்க வீட்டு பிள்ளை சாதனையை உலகம் சுற்றும் வாலிபன் முறியடித்து தமிழகத்தில் மட்டும் 20 அரங்கில் 100நாட்கள் ஓடியது .

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •