-
26th August 2015, 02:53 PM
#2591
Junior Member
Diamond Hubber
நாம் எழுதும் பதிவுகளை வேறு மாதிரியாக புரிந்து கொண்டே தான் பதிவிடுகிறார் திரு rks ... இப்பொழுது ஓடிகொண்டிருக்கும் படத்தையே ஒழுங்காக காணாமல் அடுத்த படத்திற்கு சென்றுவிட்டார்!!!! முரளி அவர்கள் அங்கே புல் - இங்கே புல் என பதிவிட்டதாக நண்பர் கூறியபின் அந்த பதிவை போட்டது சார்...
-
26th August 2015 02:53 PM
# ADS
Circuit advertisement
-
26th August 2015, 02:55 PM
#2592
Junior Member
Diamond Hubber
‘அன்பே வா’ படத்தின் வேலைகள் தொடங்கும்போதே இந்தப் படம் மிக பிரம்மாண்டமாக வரும் என்பது தெரிந்தது. இயக்குநர் திருலோகசந்தர் எல்லா வேலைகளையும் நேர்த்தியாக திட்டமிட்டார். குமரன் சார் முன்னிலையில் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் வித்தியாசமான மெட்டுகளை அமைக்க, அதற்கு கவிஞர் வாலி புதுமையான வார்த்தைகளை புரட்சி தலைவருக்காகவே எழுதினார்.
படப்பிடிப்புக்காக எல்லோரும் ஊட்டிக்குப் புறப்பட்டோம். அங்கே போனதும், எம்.ஜி.ஆர் என்னை அழைத் தார். ‘‘நம்ம யூனிட்ல எத்தனை பேர் இருக்கிறோம் என்ற லிஸ்ட் கொடுங்க’’ என்றார். எதற்காக என்று தெரியாததால், ஒரு வார்த்தை சரவணன் சாரிடமும், திருலோகசந்தர் சாரிடமும் கேட்டுவிட லாம் என்று அவர்களிடம் கேட்டேன். ‘‘எங்களோட பெயர்களை விட்டுட்டு மத்தவங்க பெயர்களைக் கொடுங்க’’ என்றார்கள். அது மாதிரியே எம்.ஜி.ஆர் அவர்களிடம் லிஸ்ட் கொடுத்தேன். அந்த லிஸ்ட்டை வாங்கி பார்த்த எம்.ஜி.ஆர் அவர்கள், ‘‘முதலாளி, இயக்குநர் பெயர்கள் இல்லையே. இது எப்படி முழு லிஸ்ட்?’’ என்றார். முதலாளி, இயக்குநர் உட்பட யூனிட்டில் இருந்த அத்தனை பேருக்கும் ஸ்வெட்டர், மப்ளர் வாங்கி அன்புடன் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.
அதை நான் அணிந்துகொண்டு நிற்கும் காட்சியை இங்கே புகைப்படத்தில் பார்க்கலாம். உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எம்.ஜி.ஆர் மனதில் இயல்பாகவே ஊறிப்போன ஒன்று என்பதற்கு இது ஓர் உதாரணம்.
ஊட்டியில் எங்கு படப்பிடிப்பு நடத்தினாலும் பெரும் கூட்டம் கூடியது. அப்போது முருகன் சார், ‘‘ஊட்டியில் இருந்து மைசூர் போகும் வழியில் ஒரு லொக்கேஷன் மஞ்சள் பூக்களோடு வண்ணமயமாக இருக்கிறது. மக்கள் நடமாட்டமே இல்லை. அந்த இடத்தில் படப்பிடிப்பை வைத்துக்கொள்ளலாம்’’ என்றார். எம்.ஜி.ஆர் அவர்கள் நமட்டுச் சிரிப்போடு ‘‘ஓ.கே. போகலாம்’’ என்று சொல்லி புறப்பட்டார். அங்கு போய் படப்பிடிப்பை ஆரம்பித்தோம். நடமாட் டமே இல்லாத இடத்தில் முதலில் ஒரு தலை தெரிந்தது. அடுத்த சில நிமிடங்களில் நான்கு தலைகள் தெரிந்தன. அடுத்த நிமிடங்களில் அதுவே பத்தாகி, நூறாகி பின்னர் ஆயிரத்துக்கும் மேல் தலைகளாகிவிட்டன.
முருகன் சாரை எம்.ஜி.ஆர் திரும்பிப் பார்க்க, அவர் ஓடியே போய்ட்டார். அந்த அடர்ந்த காட்டுப் பகுதியிலும் எம்.ஜி.ஆருக்கு அப்படி ஒரு செல்வாக்கு. நாங்கள் கூட்டத்தை ஒதுக்கி அவரை வெளியில் கொண்டுவர முயற்சிக்க… எம்.ஜி.ஆர் எங்களிடம், ‘‘நீங்கள் கஷ்டப்பட்டுவிடுவீர்கள். ரசிகர்களை என்னிடம் விட்டுவிடுங்கள், நான் பார்த்துக்கொள்கிறேன்’’ என்று ரசிகர்கள் தன்னை நெருங்காமலும், தள்ளாமலும், தழுவாமலும் சாதூர்யமாக மக்களை சமாளித்து வெளியே வந்து காரில் ஏறி பறந்தார்.
- எஸ்.பி.முத்துராமன் ( தி இந்து )
-
26th August 2015, 03:37 PM
#2593
Junior Member
Diamond Hubber
அன்பே வா திரைப்படத்தில் தலைவர்.
தலைவரை காணச்சென்ற இயக்குனர் திரு ஏ.சி.திருலோகச்சந்தர் அவர்கள், படத்தின் கதையை கூறியவுடன், தலைவர்...
'இது முற்றிலும் ஒங்க
படமாகத்தான் இருக்கும்.
என் படமாக இருக்காது.
என்னை நன்றாக ஆட்டி
வைப்பீர்கள்.
இருந்தாலும் நடிக்க சம்மதம்'
என்று கூறி வந்திருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியதாக படித்திருக்கிறேன்.
கதையை கேட்டுவிட்டு, 'இந்த கதைக்கு எம்ஜிஆர்தான் பொருத்தமானவர், அவரிடம் பேசுங்கள்' என்றாராம் மறைந்த ஏவிஎம் அவர்கள்.
"நாடோடி,
போக வேண்டும் ஒடோடி"
பாடலின் படபிடிப்பு, தலைவர் பிசியாக இருந்ததால், தாமதமாகியதாம்.
இதையறிந்த ஏவிஎம் அவர்கள் கவலைப்பட, அதையறியந்த தலைவர், 'படபிடிப்பை தயார் செய்யுங்கள், நான் வருகிறேன்' என்று அறிவித்து விட்டு, ஒரே நாளில் பாடலின் படபிடிப்பை முடித்து, அனைவரையும் மீண்டும் வியப்பில் ஆழ்த்தியதாக படித்திருக்கிறேன்.
அப்படி எடுத்ததுதான், அன்பே வா.
-
26th August 2015, 03:49 PM
#2594
Junior Member
Diamond Hubber
ஒரு முறை சத்துணவு திட்டத்தை
எம் ஜி ஆர் நிறைவேற்றியப் போது
எதிர் அணியில் இருந்து
அறிவின் பெட்டகமானஂஅறிஞர் அண்ணா நினைவிடம் கடந்து வருகிறீர்கள் அதனால் பைத்தியஂகாரத்தனமானஂதிட்டங்கள்
போடுவது சரியில்லை என்றனர்
அதற்க்கு எம் ஜி ஆர்.
பைத்தியகாரர்கள் அமர்ந்திடஂகூடாது
என்று தான் எங்களை அமரவைத்துள்ளார்கள்
அதனால் நல்லஂதிட்டம் தான் வரும்
என்றார்
என்னஂஒரு சம்யோஜிதஂஅறிவு
எம் ஜி ஆர் எம் ஜி ஆர் தான்
பேச்சாலும் செய்கையாலும் வாக்காலும் எவராலும் வெல்லஂமுடியாதஂசக்தி எம் ஜி ஆர்
Last edited by Yukesh Babu; 26th August 2015 at 03:54 PM.
-
26th August 2015, 04:17 PM
#2595
Junior Member
Diamond Hubber
என்றுமே திரு சிவாஜி கணேசனுக்கு மரியாதை கொடுப்பது எங்கள் தெய்வம் மற்றும் அவர் தோற்றுவித்த கட்சி தான் ஆம் எங்கள் வள்ளலின் வழி தோன்றல் தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு நன்றி

Originally Posted by
RavikiranSurya
DEAR FRIENDS,
THANKS TO ALL OF YOU ON BEHALF OF ALL NT ADMIRERS ACROSS THE WORLD !
TWO IMPORTANT MILE STONES DONE DURING AIADMK REGIME
1) NADIGAR THILAGAM's MOTHER's STATUE OPENED BY THE THEN CHIEF MINISTER Thiru. M.G.R
2) NADIGAR THILAGAM's MANIMANDAPAM TO BE CONSTRUCTED & OPENED BY THE CURRENT CHIEF MINISTER, SELVI. J. Jayalalitha !
This is an ample proof that, Nadigar Thilagam is beyond POLITICS, POLITICS, RELIGION etc.,
THANKS FOR THE MAGNANIMOUS GESTURE OF AIADMK GOVT.
RKS
-
26th August 2015, 05:54 PM
#2596
Junior Member
Diamond Hubber
thanks sailesh sir here that photo


Originally Posted by
saileshbasu
‘அன்பே வா’ படத்தின் வேலைகள் தொடங்கும்போதே இந்தப் படம் மிக பிரம்மாண்டமாக வரும் என்பது தெரிந்தது. இயக்குநர் திருலோகசந்தர் எல்லா வேலைகளையும் நேர்த்தியாக திட்டமிட்டார். குமரன் சார் முன்னிலையில் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் வித்தியாசமான மெட்டுகளை அமைக்க, அதற்கு கவிஞர் வாலி புதுமையான வார்த்தைகளை புரட்சி தலைவருக்காகவே எழுதினார்.
படப்பிடிப்புக்காக எல்லோரும் ஊட்டிக்குப் புறப்பட்டோம். அங்கே போனதும், எம்.ஜி.ஆர் என்னை அழைத் தார். ‘‘நம்ம யூனிட்ல எத்தனை பேர் இருக்கிறோம் என்ற லிஸ்ட் கொடுங்க’’ என்றார். எதற்காக என்று தெரியாததால், ஒரு வார்த்தை சரவணன் சாரிடமும், திருலோகசந்தர் சாரிடமும் கேட்டுவிட லாம் என்று அவர்களிடம் கேட்டேன். ‘‘எங்களோட பெயர்களை விட்டுட்டு மத்தவங்க பெயர்களைக் கொடுங்க’’ என்றார்கள். அது மாதிரியே எம்.ஜி.ஆர் அவர்களிடம் லிஸ்ட் கொடுத்தேன். அந்த லிஸ்ட்டை வாங்கி பார்த்த எம்.ஜி.ஆர் அவர்கள், ‘‘முதலாளி, இயக்குநர் பெயர்கள் இல்லையே. இது எப்படி முழு லிஸ்ட்?’’ என்றார். முதலாளி, இயக்குநர் உட்பட யூனிட்டில் இருந்த அத்தனை பேருக்கும் ஸ்வெட்டர், மப்ளர் வாங்கி அன்புடன் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.
அதை நான் அணிந்துகொண்டு நிற்கும் காட்சியை இங்கே புகைப்படத்தில் பார்க்கலாம். உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எம்.ஜி.ஆர் மனதில் இயல்பாகவே ஊறிப்போன ஒன்று என்பதற்கு இது ஓர் உதாரணம்.
ஊட்டியில் எங்கு படப்பிடிப்பு நடத்தினாலும் பெரும் கூட்டம் கூடியது. அப்போது முருகன் சார், ‘‘ஊட்டியில் இருந்து மைசூர் போகும் வழியில் ஒரு லொக்கேஷன் மஞ்சள் பூக்களோடு வண்ணமயமாக இருக்கிறது. மக்கள் நடமாட்டமே இல்லை. அந்த இடத்தில் படப்பிடிப்பை வைத்துக்கொள்ளலாம்’’ என்றார். எம்.ஜி.ஆர் அவர்கள் நமட்டுச் சிரிப்போடு ‘‘ஓ.கே. போகலாம்’’ என்று சொல்லி புறப்பட்டார். அங்கு போய் படப்பிடிப்பை ஆரம்பித்தோம். நடமாட் டமே இல்லாத இடத்தில் முதலில் ஒரு தலை தெரிந்தது. அடுத்த சில நிமிடங்களில் நான்கு தலைகள் தெரிந்தன. அடுத்த நிமிடங்களில் அதுவே பத்தாகி, நூறாகி பின்னர் ஆயிரத்துக்கும் மேல் தலைகளாகிவிட்டன.
முருகன் சாரை எம்.ஜி.ஆர் திரும்பிப் பார்க்க, அவர் ஓடியே போய்ட்டார். அந்த அடர்ந்த காட்டுப் பகுதியிலும் எம்.ஜி.ஆருக்கு அப்படி ஒரு செல்வாக்கு. நாங்கள் கூட்டத்தை ஒதுக்கி அவரை வெளியில் கொண்டுவர முயற்சிக்க… எம்.ஜி.ஆர் எங்களிடம், ‘‘நீங்கள் கஷ்டப்பட்டுவிடுவீர்கள். ரசிகர்களை என்னிடம் விட்டுவிடுங்கள், நான் பார்த்துக்கொள்கிறேன்’’ என்று ரசிகர்கள் தன்னை நெருங்காமலும், தள்ளாமலும், தழுவாமலும் சாதூர்யமாக மக்களை சமாளித்து வெளியே வந்து காரில் ஏறி பறந்தார்.
- எஸ்.பி.முத்துராமன் ( தி இந்து )
-
26th August 2015, 06:47 PM
#2597
Junior Member
Veteran Hubber
Dear Suharaam sir
Ozhungaaga purindhadhaal dhaan ozhungaaga naanum padhivu seidhen. Ange Full aanadhaal Ange Full....Inge Full aanadhaaldhaan Inge Full endru padhivu seidhaar Thiru Murali. Full aanadhai Full endru padhivu seiyaamal.....oho....Arangu Niraivu endru avar tamizhil ezhudhaadhadhaal vandha vilaivo ? Ella Fullukkum Arangu Niraivu endrdhaan porul Suharaam sir !!! Andha fullukku oru arththam Indha Fullukkum Adhey Artham !!!!
Naan Padhivittadharkku Padhivin Porule Suhaaraam sir ! Neengal vendumaanaal kuritthu vaithu kollungal. Divya Films Meendum Karnanudan thirumbi varugiraara illayaa paarungal...!
Divya Films - Nadigar Thilagame Saranam..!
-
26th August 2015, 07:06 PM
#2598
Junior Member
Veteran Hubber
உலகப் பொதுச்சொத்தான நடிகர்திலகத்துக்கு மணிமண்டபம் என்னும் இதயபூர்வமான முத்தான அறிவிப்பை வெளியிட்ட மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு மனம் கனிந்த பொன்னான வணக்கங்களை தெரிவித்துக் கொள்ளும் இவ்வேளையில் Moral Support நல்கிய மக்கள் திலக திரி நண்பர்களுக்கும் மனப் பூர்வமான நன்றிகளை உரித்தாக்குகிறேன் !
தேவையற்ற கணக்குகளால் பிணக்குகள் பெருகாது சுணக்கமற்ற இணக்கமான நட்பு பேணல் திரிகளுக்கிடையே நிலைத்திட வேண்டுதல்கள்!!
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
26th August 2015, 08:04 PM
#2599
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
sivajisenthil
Advance Congratulations Kalaivendhan Sir, for your 'neither shaken nor stirred' attitude of strongly going to cross the 1000 mark postings in the elite service of Shri MGR the Makkal Thilakam's name and fame dissemination among the generations to come!
Best wishes and Kudos!!
senthil
முதலாயிரம் பதிவுகளை விரைவில் நிறைவு செய்யும் எழுத்துக் கலை முதலாளிக்கு இதயங்கனிந்த வாழ்த்துக்கள் !
கலைவேந்தரின் எழுத்துப் பாதை மலர்ப் படுகைகளாக மணம் பரப்பி மக்கள்திலகத்தின் வானுயர் புகழுச்சியை அலங்கரித்திட நடிகர்திலகத்தின் புகழார்வலப் பணியில் எளியவனின் வேண்டுதல்கள்!!
ஆயிரம் (பதிவுகள் கண்ட கலை) நிலவே வா என்றுதான் மக்கள் திலகம் உணர்த்துகிறாரோ ?!
திரு.சிவாஜி செந்தில் சார்,
முன்கூட்டியே வாழ்த்து தெரிவித்த தங்கள் அன்புள்ளத்துக்கு நன்றி. நானும் ஒரு தொழிலாளிதான் சார். அன்பு காரணமாக நீங்கள் புகழ்ந்து பாராட்டினாலும் அதற்கு என்னை தகுதிப்படுத்திக் கொள்ள முயற்சிப்பேன்.
தங்களைப் போல விதவிதமான கற்பனைகள் தோன்றவில்லையே என்ற சின்ன பொறாமை கூட உங்கள் மீது எனக்கு உண்டு.
ஆயிரம் பதிவுகளுக்கு பொருத்தமாக ஆயிரம் நிலவே வா பாடலை (இந்த சமயோசிதத்தைத்தான் சொல்கிறேன்) பதிவிட்டமைக்கு நன்றி. சிறைப்பாடல்களுக்கும் நன்றிகள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
26th August 2015, 08:06 PM
#2600
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
mgrbaskaran
http://www.youblisher.com/p/1203518-...-temple-malar/
please click the above link
5ம் ஆண்டு உற்சவ சிறப்பு மலர்
இறைவன் எம் ஜி ஆரின் மகோற்சவ வைபவத்தை நாமெல்லாம் கண்டு களிக்க மாயம் முகப்பில் மக்கள் திலகம் திரியில் பகிர்ந்து எமக்கு தெவிட்டாத விருந்து அளித்த அன்பர்கள் எல்லாருக்கும்
இதய தெய்வம் பக்தகோடிகள் சார்பில்
இந்த சிறு தொண்டனின் அன்பு நன்றிகள், இந்த இதழில் வெளியாகும் படங்கள் எல்லாம் மக்கள் திலகம் புகழ் பாடும் எம் ரத்தத்தின் ரத்தங்களால் பதியப்பட்ட பதிவுகளில் இருந்து நகல் எடுக்கப்பட்டது . அவர்களுக்கு எனது நன்றிகள்.
உங்கள் கருத்துக்களை எனக்கு அறியத் தருமாறு வேண்டும்
உங்கள் அன்பு தொண்டருக்கெல்லாம் தொண்டன் பாஸ்கரன்
(please help me to hide the above link and display heading ) or please re post the above
நன்றி திரு.பாஸ்கரன். அருமையான வடிவமைப்பு. தங்களின் உழைப்புக்கு பாராட்டுக்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks