-
6th September 2015, 04:30 PM
#11
Junior Member
Junior Hubber
அன்பு நண்பர் ரவிகிரன் சார்
நடிகர்திலகம் இருந்த காலத்தில் நீங்களும் நானும் அவரது இடது வலது கைகள் போல அவருக்கு மிக நெருக்கமாக இருந்திருந்தால் அவர் எல்லா துறைகளிலும்
உச்சத்தை அடைய தொண்டாற்றி இருப்போம்! உங்கள் கோபம் நியாயமானது! உங்களை போன்ற இளம் வயதினர் அவர் மேல் கொண்டுள்ள உண்மையான
அன்பும், அவருக்கு அநீதி இழைக்கப்படும் போது பொங்கிஎழும் போர்குணமும் போற்றதக்கது! இருப்பினும் ஆவேசத்தை குறைத்து நிதானமாக செயல்படுவதும்
நல்லது தான் என்று ராகவேந்தர் சார் சொல்வதும் ஓரளவுக்கு ஏற்று கொள்ள கூடியதே! திராவிடகட்சிகள் காமராஜருக்கு சிவாஜி பெரும் பலமாக இருக்கிறாரே
என்ற எரிச்சலில் 1975 வரை அவரின் பெரிய வெற்றிபடங்களை கூட தோல்விப்படம் என்று தொடர்ந்து பொய்பிரச்சாரம் செய்து மக்களை நம்பவும் வெய்தார்கள்! இன்றும் அதை நம்பும் மக்கள் நிறைய இருக்கிறார்கள்! உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள்! 1969 தீபாவளி சமயத்தில் சிவந்தமண் வந்தது!
அதே சமயம் மற்றவரின் ஒரு பெரிய படமும் வந்தது! உண்மையிலே இரண்டு படங்களும் பெரிய வெற்றிதான்! ஆனால் தமிழ்நாட்டில் ஒன்பது திரைஅரங்குகளில் 100 நாட்கள் ஓடிய சிவந்தமண் தோல்விபடம் என்றும் ஆறு திரைஅரங்குகளில் 100 நாட்கள் ஓடிய அவர்கள் படம் தான் வெற்றியென்றும்
பொய் பிரச்சாரம் செய்தார்கள்! ரவிகிரண் சார் இப்போதும் கூட 55 வயதுக்கு மேற்பட்ட நம் ரசிகர்அல்லாதவரிடம் கேட்டு பாருங்கள்! சிவந்தமண் தோல்விப்படம் என்றுதான் கூறுவார்கள்! கேட்டுவிட்டு திரியில் பதிவிடுங்கள்! இதையெல்லாம் அன்று செய்தது திமுகவினர்! தங்கள் கட்சி சார்ந்தவரை
உயர்த்த சிவாஜியை தாழ்த்தி பேசினார்கள்! இதில் மற்றவருக்கு நிச்சயம் பங்கு இருக்காது என்றபோதிலும் திமுகவினர் இப்படி செய்வதில் கெட்டிக்காரர்கள்!
அது மட்டுமா ? சிவாஜியை கஞ்சன் என்று பொய் பிரச்சாரம் தொடர்ந்து செய்து இன்றும் அதை உண்மையென்று நம்பும்படி செய்தார்கள்! வள்ளலை வள்ளல் என்று உயர்த்தி பேசட்டும்! தப்பில்லை! ஆனால் சிவாஜியை திட்டமிட்டு தாழ்த்தினார்கள்! 1960 களில் சிவாஜி நேருவிடம் ஒரு லட்சம் நன்கொடை
அளித்து அதை ஆனந்தவிகடன் பத்திரிக்கை தலையங்கம் எழுதி வாழ்த்தியது! 1960 களில் ஒரு லட்சம் என்பது இன்றைய மதிப்பில் குறைந்தது 20 கோடியாவது இருக்கும்! அவர் அளித்த ஒரு நன்கொடையின் இன்றைய மதிப்பே 20 கோடிஎன்றால் மற்றவற்றின் மதிப்பு இன்றைக்கு எவ்வளவு இருக்கும்!
சிவாஜி கஞ்சனாம்! நல்லவர்களுக்கு மட்டும் காலமில்லை இன்றைய தமிழ்நாட்டில் என்று கட்டபொம்மனில் சிவாஜி வசனம் 1959 இல் பேசினார்!
56 வருடங்களுக்கு பிறகும் இன்னும் தமிழ்நாடு மாறவில்லை! என் மனதுக்கு தோன்றியதை வழக்கம் போல் சொல்லிவிட்டேன்!
நன்றி !
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th September 2015 04:30 PM
# ADS
Circuit advertisement
Bookmarks