-
9th September 2015, 08:54 AM
#3611
Junior Member
Seasoned Hubber
Mr C K
Don't worry Be happy Do contribute as usual with your humourus postings.
-
9th September 2015 08:54 AM
# ADS
Circuit advertisement
-
9th September 2015, 10:00 AM
#3612
Senior Member
Diamond Hubber
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
35 ஆவது சிறப்புப் பதிவு

(நெடுந்தொடர்)
35
பாகம் 1
'தொடுவதென்ன தென்றலோ மலர்களோ'
'சபதம்'

இன்றைய பாலாவின் தொடரில் சிகரங்களைத் தொட்ட பாடல். என்றுமே சிரஞ்சீவித்துவம் நிறைந்து மனமெல்லாம் சுகந்த தென்றலை இனிமையாக வீசச் செய்யும் பாடல். மிகச் சிறந்த தமிழ்ப் பாடல்களின் வரிசையில் முன்னால் நிற்க போட்டி போடும் பாடல். நீங்கள் எவ்வளவு சோகத்தில் இருந்தாலும் இந்த பாட்டை ஒருமுறை கேளுங்கள். பிளாட் ஆகி விடுவீர்கள். குரலினிமையா... குழலினிமையா என்று போட்டி வைத்தால் பாலாவின் குரல்தான் இனிமை என்று ஒட்டுமொத்தமுமே கூக்குரல் எழுப்பும் அளவிற்கு அவரது வசந்த சுகந்த குரலால் பாராட்டு பெற்ற பாடல். 'சபத'மிட்டு சொல்கிறேன்.
ஆமாம். 'சபதம்' (1971) படத்தில் பாலா பாடிய
'தொடுவதென்ன தென்றலோ மலர்களோ' பாடல்தான் அது.
அதற்கு முன் 'சபதம்' படத்தைப் பற்றி ஒரு முன்னோட்டம் பார்த்து விடுவோம். அதனால் இந்தத் தொடரை உங்கள் வசதிக்காக இரண்டு பாகமாகப் பிரித்து தனித்தனியே தருகிறேன். படம், கதை பற்றிய விவரங்களை ஒரு பாகமாகவும், பாடல் பற்றிய சிறப்பம்சங்களை இன்னொரு பாகமாகவும் தருகிறேன்.
தேவநாயகி பிலிம்ஸ் 'சபதம்' ஓர் அருமையான ஒரு படம். ரவிச்சந்திரன், கே.ஆர்.விஜயா, நாகேஷ், டி கே.பகவதி, வி.கே.ராமசாமி, சஹஸ்ரநாமம், அஞ்சலிதேவி, பண்டரிபாய் நடித்த இத்திரைப்படம் கதாநாயகிக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்த ஒரு படம். நடனத்தை சலீம் அமைத்திருப்பார். நமது பி.என்.சுந்தரம் ஒளிப்பதிவு இயக்குனராக பணியாற்றி இருப்பார். இயக்கம் நமது பிரிய பி.மாதவன்.
கதை

மிக நல்லவரான பெரிய மனிதர் செல்வநாயகத்திற்கு (டி கே.பகவதி) அவரைப் போலவே உருவ ஒற்றுமையும், குரல் ஒற்றுமையும் கொண்ட துரைசிங்கம் (டி கே.பகவதி) என்ற தறுதலை தம்பி. அண்ணனிடமிருந்து சொத்தை பாகம் பிரித்துக் கொண்டு குடி, காமம் என்று சொத்தை அழிக்கிறான் அவன். தம்பியின் போக்கு கண்டு, மனம் நொந்து, மறுபடியும் அவனைத் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார் செல்வநாயகம். தன் மனைவி கண் தெரியாத ராஜேஸ்வரி (அஞ்சலிதேவி), மகன் முத்து மேல் அதிக பாசம் அவருக்கு. தம்பி துரைசிங்கத்திற்கு லஷ்மி (பண்டரிபாய்) என்ற பண்பான மனைவி.
வியாபார விஷயமாக அண்ணனும் தம்பியும் வெளியூர் புறப்பட, அந்த சந்தர்ப்பத்தைத் தனக்கு சாதமாக்கிக் கொள்கிறான் தம்பி. உருவ ஒற்றுமையைப் பயன்படுத்தி, அண்ணனைக் கொன்றுவிட்டு, அண்ணன் வேடத்தில் வந்து நல்லவன் போல ஊரில் கபடமாடுகிறான் துரைசிங்கம். ஊரும் அவனை செல்வநாயகம் என்று பரிபூரணமாக நம்பி ஏமாறுகிறது. குழந்தையுடன் இருக்கும் தன் அண்ணியை பைத்தியம் என்று பட்டம் கட்டி அவள் வீட்டை விட்டு ஓடும்படி செய்கிறான் செல்வநாயகம்.
தன் கணக்கப்பிள்ளை வள்ளிமுத்துவின் (சஹஸ்ரநாமம்) மகள் சிவகாமி (கே.ஆர்.விஜயா) என்ற பெண்ணின் மீது காமப் பித்து பிடித்து அலைந்து, அவளை ஆசைநாயகியாய் வைத்துக் கொள்ள வள்ளிமுத்துவிடமே அனுமதி கேட்கிறான். இல்லையென்றால் கொன்று விடுவதாக பயமுறுத்துகிறான். அவன் சுயரூபம் தெரிந்து கொண்ட வள்ளிமுத்து செய்வதறியாமல் திகைத்து தூக்கில் தொங்குகிறான். (உண்மையில் துரைசிங்கத்தால் தூக்கில் தொங்கவிடப் படுகிறான்) வெளியூரில் படிக்கும் சிவகாமி தன் தந்தை இறந்த சேதி கேட்டு துடிதுடித்துப் போகிறாள். தன் தந்தையின் கடிதம் மூலம் செல்வநாயகம் ஒரு காமுகன் என்று புரிந்து கொள்கிறாள். தந்தை சாவுக்குக் காரணமானவனை பழி வாங்கத் துடிக்கிறாள். ஆனால் செல்வநாயகம் போர்வையில் இருக்கும் துரைசிங்கம் ஊர்மக்களை அப்படியே தன்னை நல்லவன் என்று நம்பும்படி செய்திருக்கிறான். இதனால் சிவகாமி துரைசிங்கம் கெட்டவன் என்று ஆதாரத்துடன் ஊர் மக்களிடம் நிரூபித்தாலும் தன் சாமர்த்தியப் பேச்சாலும், பசுத்தோல் போர்த்திய புலி நடிப்பாலும் சிவகாமியின் ஆதாரங்கள் ஒவ்வொன்றையும் உடைத்தெறிகிறான் துரைசிங்கம். அவனை அயோக்கியன் என்று ஊர் மக்கள் முன்னிலையில் விரைவில் நிரூபிப்பதாக துரைசிங்கத்திடம் 'சபதம்' போடுகிறாள் சிவகாமி.
வீட்டை விட்டு ஓடிப்போன ஓடிப்போன ராஜேஸ்வரியின் மகன் முத்து (ரவிச்சந்திரன்) வளர்ந்து பெரியவனாகி எல்லா உண்மையையும் தன் தாயின் மூலம் அறிகிறான். முத்து சிவகாமியைக் காதலித்து துரைசிங்கம் மூலம் சிவகாமி பட்ட துயரங்களை அறிந்து கொள்கிறான். பாதிக்கப்பட்ட சிவகாமி, முத்து இருவரும் கூட்டணி அமைத்து, திட்டம் போட்டு துரைசிங்கம் வீட்டில் தம்பதிகளாக நுழைகிறார்கள். இவர்களுடன் துரைசிங்கத்தின் மகன் நாகேஷும் தன் தந்தையின் கபட நாடகத்தைத் தெரிந்து கொள்ள, மூவரும் துரைசிங்கத்துடன் ஆடு புலி ஆட்டம் விளையாட ஆரம்பிக்கிறார்கள். அவனுக்கெதிரான ஆதாரங்களைத் திரட்டி அவனை நிலைகுனிய வைத்து ஊருக்கு 'அவன் துரைசிங்கம்தான்...செல்வநாயகம் இல்லை' என்று புரிய வைக்கிறார்கள். இறுதியில் இறந்து போன செல்வநாயகமே உயிருடன் திரும்ப நேரில் வர, அதிர்ச்சியடைந்து தான் வாயாலேயே தன் அண்ணன் செல்வநாயகத்தைக் கொன்றதாக தன்னையுமறியாமல் ஊர் மக்கள் முன்னிலையில் கூறி காவலர் வசம் மாட்டிக் கொள்கிறான் துரை சிங்கம். ('புதிய பறவை' கோபால் போல) ஆனால் வந்தது உண்மையான அண்ணனா?..
இறுதியில் தன் 'சபத'த்தில் மாபெரும் வெற்றி காணுகிறாள் சிவகாமி.
'புன்னகை அரசி'க்கு இந்த மாதிரி சிவகாமி.ரோல் அல்வா சாப்பிடவது போல. கலக்கிவிடுவார். டி .கே.பகவதி நல்ல அண்ணனாகவும், கெட்ட தம்பியாகவும் அருமையான நடிப்பைத் தந்திருப்பார். படம் நெடுக கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் அமைதியாகச் சிரித்தபடியே வில்லத்தனம் புரிவது ஏ.ஒன். இந்தப் படம் சென்னையில் பாரகன், கிரௌன், புவனேஸ்வரி ஆகிய தியேட்டர்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது.
தொடரும்
Last edited by vasudevan31355; 9th September 2015 at 11:06 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
9th September 2015, 10:01 AM
#3613
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 5 Likes
-
9th September 2015, 10:04 AM
#3614
Junior Member
Seasoned Hubber
From Facebook
மகாராஜன் உலகை ஆளலாம்..
படம் : கர்ணன் (1964)
நடிப்பு : சிவாஜி கணேசன் & தேவிகா
பாடியவர்கள் : டி.எம்.சௌந்திரராஜன் & பி.சுசீலா
இசை : மெல்லிசை மன்னர்கள்
பாடல்கள் : கவியரசு கண்ணதாசன்
இயக்கம் : பி.ஆர்.பந்துலு
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th September 2015, 12:30 PM
#3615
Senior Member
Diamond Hubber
தெலுங்கிலும் 'சபதம்'

சூப்பர் பாடலான 'தொடுவதென்ன தென்றலோ மலர்களோ' பாடல் அதே மெட்டில் தெலுங்கிலும் அற்புதமாக நமது பாலாவின் குரலில் ஒலித்தது. தெலுங்கிலும் நமது 'புன்னகை அரசி' தான் நாயகி. ரவிக்கு பதில் தெலுங்கு 'சூப்பர் ஸ்டார்' கிருஷ்ணா.படத்தின் பெயர் 'கோடலு பிள்ளா'
'நன்னுதாக்கரெவ்வரோ எவ்வரோ' என்று அதே சிச்சுவேஷனில் ஒலிக்கும் பாடல். காட்சியமைப்புகள் தெலுங்கிலும், தமிழிலும் ஒன்றே. இதே 'சபதம்' படம்தான் தெலுங்கிலே 'கோடலு பிள்ளா' ஆனது. ஆனால் வெளியான ஆண்டு 1972. விஜயா 'சபதம்' படத்தை விட இன்னும் குண்டடித்திருப்பார். நன்றாகத் தெரியும். தமிழில் டி.கே.பகவதி நடித்திருந்த இரட்டை வேடத்தை தெலுங்கில் நாகபூஷணம் ஏற்று நடித்திருந்தார். தமிழிலும், தெலுங்கிலும் அதே அஞ்சலிதேவி. நாகேஷுக்கு பதிலாக ராஜ்பாபு. இசை இனிமை நாயகர் ஜி.கே.வெங்கடேஷ்தான்.
Last edited by vasudevan31355; 9th September 2015 at 12:44 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
9th September 2015, 01:03 PM
#3616
Junior Member
Veteran Hubber
வாசு சார்
தெலுங்கு சூப்பர்ஸ்டார் கிருஷ்ணா நமது ரவிசந்திரனின் பிம்பம்தான்!
டப்பிங் பட போஸ்டர்களில் கிருஷ்ணா ரவியைப் போலவே இருப்பார் !!
குழந்தைக்காக தமிழ் படத்தின் ஆரம்பத்தில் கிருஷ்ணா ஆடும் ஸ்டெப்புலு டான்சை அதன் தெலுங்கு ஆக்கத்தில் ரவிச்சந்திரன் ஆடியிருப்பார்!!
-
9th September 2015, 01:11 PM
#3617
Senior Member
Diamond Hubber

Originally Posted by
sivajisenthil
வாசு சார்
'குழந்தைக்காக' தமிழ் படத்தின் ஆரம்பத்தில் கிருஷ்ணா ஆடும் ஸ்டெப்புலு டான்சை அதன் தெலுங்கு ஆக்கத்தில் ரவிச்சந்திரன் ஆடியிருப்பார்!!
புரியல செந்தில் சார்.
'குழந்தைக்காக' படத்தில் கிருஷ்ணா, ரவி எல்லாம் ஏது? கிருஷ்ணா இருக்காரா என்ன? அது பத்மினி, மேஜர், மனோகர், ராமதாஸ், பேபி ராணி நடித்தாயிற்றே! வேற எதையோ சொல்றீகளா?
-
9th September 2015, 01:19 PM
#3618
Junior Member
Veteran Hubber
படத்தின் ஆரம்பத்தில் ஒரு டான்ஸ் வருமே வாசு சார்! கிருஷ்ணா ஆடி முடித்ததுடன் கொல்லப்பட்டு பேபி ராணி அனாதையாகி விடுவார் என்று
ஞாபகம் ...!!
இந்த டான்சை தெலுங்கில் எடுக்கும்போது ரவிச்சந்திரன் கஸ்ட் ஸ்டாராக ஆடியிருப்பார் ....எதற்கும் வெரிபை பண்ணிப் பார்க்கிறேன்!!
-
9th September 2015, 04:30 PM
#3619
Senior Member
Senior Hubber
ஹாய் குட் ஆஃப்டர் நூன் ஆல்..
காலையிலிருந்து ஒரே மீட்டிங்க்ஸ்லில் பொழுது போனதினால் வர முடியவில்லை..
வாசு, சி.செ ஸாரி..மன்னிச்சுக்கோங்கோ ஷமிக்கணும் என்னுடைய குழந்தைத்தனமான கோபத்திற்கு..
மதுண்ணா சாக்லேட்டிற்கு நன்றி அச்சோ நான் டயட்ல இருக்கேனே
எஸ். வாசு தேவன் தாங்க்யூ..
Last edited by chinnakkannan; 9th September 2015 at 04:32 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
9th September 2015, 05:38 PM
#3620
Junior Member
Veteran Hubber
BAGPIPER music and songs!
பேக்பைபெர் என்றதும் அந்தக்கால உற்சாகபானமான விஸ்கி ஞாபகத்துக்கு வந்தால் உங்களுக்கு வயது 40க்கு மேல்...அது ஒரு காற்றடைத்த பையை இசைக்காக வெவ்வேறு துவாரக் குழாய்கள் வழியாக முறையாக காற்றை வெளியேற்றும் இசைக்கருவி என்று மனதில் பட்டால் உங்கள் வயது 80க்கு மேல்தான்!! அது என்னவென்றே தெரியாதென்றால் நீங்கள் இந்த இளைய தலைமுறை சார்ந்தவரே!!
இந்த இசைக்கருவியை வாசித்துத்தான் யாரோ ஒருவர் எலிகளை எல்லாம் தன பின்னால் வரவைத்து கடலில் முக்கினாராம் கதை ! எப்போதோ கேட்ட கதை!
சங்கம் இந்திப்படத்தில் நான் இந்த இசைக்கருவியை முதல்முதல் பார்த்து இசையில் லயித்தேன் !!
Last edited by sivajisenthil; 9th September 2015 at 05:44 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks