Results 1 to 10 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

Threaded View

  1. #11
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பார்த்ததில் பிடித்தது -52

    தெனாலிராமன் , 1956 ல் தமிழ் , தெலுங்கு இரு மொழியிலும் ஒரே நேரத்தில் உருவான திரைப்படம் , தமிழில் நடிகர்திலகமும் , தெலுங்கு பதிப்பில் நாகேஸ்வர ராவ் தெனாலிரமனாகவும் நடிக்க, இரு மொழிகளிலும் மன்னராக NTR .

    நம்மில் பலருக்கு தெனாலிராமன் கதைகள் தெரிந்து இருக்கும் , ஆனால் அதே சமயம் தெனலிராமனின் ஆரம்பகால வாழ்கை தெரியாமல் இருக்கும் , இந்த திரைபடம் தெனாலிராமன் ஆரம்பகாலத்தில் பட்ட பொருளாதார நெருக்கடி , காளிமாதா அருளில் அவருக்கு வந்த வாழ்வை பற்றி அழகாக விவரிக்க படுகிறது . படத்துக்கு , தெனலிராமனின் துடுக்கு ஆதாரமாக விளங்குகிறது இந்த முதல் 30 நிமிடங்கள்

    தெனாலிராமன் கதைகள் மட்டுமே கேட்டு வளந்தவர்களுக்கு இந்த 30 நிமிடங்கள் கொஞ்சம் மெதுவாக தான் நகரும் , ஆனால் இதை கடந்து வந்தால் படம் முழுவதும் சிரிப்பு , சிலிர்ப்பு , மதியுகம் அனைத்தும் கலந்த அழகான பூமாலை

    வாழ்க்கையில் சோதனையை , எப்படி அணுக வேண்டும் என்று அழகாக விவரித்து இருப்பார் இயக்குனர் BS ரங்கா .

    17 யானைகளை முன்று பேருக்கு பங்கு போடும் காட்சி , யானை கால்களால் நசுக்க படும் பொது சாதுர்யமாக தப்பித்து கொள்ளும் காட்சி , கிளைமாக்ஸ் காட்சி , நான் மிகவும் ரசித்த காட்சிகள்

    தெனலிராமனாக சிவாஜி கணேசன் : பராசக்தி , மனோகரா போன்ற படங்களில் angry young man , திரும்பிப்பார் , நானே ராஜா படத்தில் வில்லன் என்று படத்துக்கு படம் வித்தியாசம் காட்டும் நடிகர் திலகம் , நகைச்சுவை படங்களில் அழகாக கலக்கி இருப்பார் ,
    உதாரணம் : கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி , சபாஷ் மீனா , கலாட்ட கல்யாணம்
    ஆனால் தெனாலிராமன் completely different ,எப்படி என்றால் , தெனாலிராமன் என்பவர் புத்திசாலி , சவால்களை எதிர்கொண்டு ஜெயித்து விடுவர் , அதே சமயம் முகத்தில் அப்பாவி தோற்றம் இருக்க வேண்டும் , மேலே சொன்ன படங்களில் situation காமெடி என்றால் , இந்த படத்தில் solutions மட்டுமே காமெடி , ஆனால் வர போகும் ஆபத்து மிகவும் பெரியது , இந்த மாதிரி சத்தமே இல்லாமல் அழகாக பொரிந்து விடுவார் நடிகர் திலகம் ,
    நாகையையும் -சிவாஜியும் கலக்கும் நாட்டு ஜனங்க பாடல் இன்றும் பொருந்தும் , அதில் அவர் தோற்றம் அசல் மாறுவேடம் - அடையாளம் கண்டுபிடிப்பது மிகுவ்ம் கடிதம்

    காளி அறிவு , செல்வம் இரண்டையும் கொடுத்து எதை வேண்டுமோ எடுத்துகொள் என்று சொல்லும் பொது இரண்டையும் எடுத்து கொண்டு கண்களில் ஒரு twinkle உடன் காரணம் சொல்லும் பொது அவர் மீது ஈர்ப்பு அதிகம் ஆகிறது

    மலையாள ஜோதிடராக மலையாளம் கலந்த தமிழில் சம்சாரிக்கும் பொது , அதே காட்சியில் அவர் சிகைஅலங்காரம், மீசை அனைத்தும் பொருத்தமாக அமைந்து இருப்பதில் அவர் எடுத்து கொண்ட அக்கறை அழகாக தெரிகிறது . பானுமதி உடன் அவர் உரையாடல் கண்ணதாசன் அவர்களின் trademark வசனங்கள் இனிமையான தமிழ்

    இந்த படத்தின் அடுத்த ஆச்சர்யம் நம்பியார்

    இவர் தான் வில்லன் என்று நினைத்து பார்க்கும் பொது , இவர் செய்கையும் அதை உறுதி படுத்த , அங்கே இருக்கும் ஒரு திருப்பம் , நம் எதிர்பாராத ஒன்று ,அவர் சாந்தமான முகம் அவர் மீது சந்தேகத்தை அதிக படுத்தும் ஒரு factor

    பானுமதி :

    traitor பாத்திரத்தில் அழகாக பொருந்துகிறார்

    NTR :

    படத்தில் இவர் பாத்திரம் வரும் கொஞ்ச நேரத்தில் இவர் தோற்றத்தில் நம்மளை இவர் ராஜா என்றே தோன்ற வைத்து விடுகிறார்


    இந்த படம் இன்னும் அதிகமாக கொண்டாட படவில்லை என்றே தோன்றுகிறது

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •