-
19th September 2015, 08:59 AM
#1861
Senior Member
Diamond Hubber
ராகுல்,
வாருங்கள்...வந்து எழுதுங்கள்.
-
19th September 2015 08:59 AM
# ADS
Circuit advertisement
-
19th September 2015, 09:23 AM
#1862
Senior Member
Diamond Hubber
ராகவேந்திரன் சார்,
மிக்க நன்றி! பாராட்டு ஸ்டில் அருமை.சுமதி என் சுந்தரி தங்களுடைய பேவரைட் என்று அனைவருக்குமே தெரியும். உங்களைப் போலவே என்னுடைய பள்ளித் தோழன் வேல்முருகன் என்று பெயர் அவன் சுமதி என் சுந்தரி படத்தை எத்தனை முறை பார்த்தான் என்று கணக்கே இல்லை. அவனாலேயே நான் பலமுறை இந்தப் படத்தைப் பார்த்திருக்கிறேன். அவன் எப்படியும் 300 தடவைகளாவது பார்த்திருப்பான். அவன் வாயில் கணேசன்-லலிதா என்ற வார்த்தையைத் தவிர வேறு எதுவுமே ஒலிக்காது. அந்த அளவிற்கு நடிகர் திலகம் ஜெயலலிதா ஜோடி என்றால் பைத்தியம். படத்தின் வசனக் காட்சிகளின் ஒவ்வொரு எழுத்தையும் மனப்பாடமாகச் சொல்வான். ஒரு நாளைக்கு எத்தனை காட்சிகளோ அத்தனை காட்சிகளையும் விடாமல் பார்ப்பான். இந்த ஊர் அந்த ஊர் என்ற கணக்கெல்லாம் இல்லை. தமிழ் நாட்டின் எந்த மூலையில் இந்தப் படத்தைப் போட்டாலும் அங்கு அவனைப் பார்க்கலாம். அவ்வளவு வெறித்தனம் இந்தப் படத்தின் மேல் அவனுக்கு. உங்கள் பதிவைப் பார்த்ததும் எனக்கு அவன் நினைவு வந்து விட்டது.
-
19th September 2015, 11:52 AM
#1863
டியர் வாசு சார்,
எவரும் எட்டாத தரத்தில் எட்டாயிரம் பதிவுகளைத்தந்த உங்களுக்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.
அதில் மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியாக சுமதி என் சுந்தரி பாடலைப் பதித்து எட்டாயிரம் அடிகள் உயரத்தில் தூக்கி நிறுத்தி விட்டீர்கள்.
எப்படியாவது பதிவுகள் இட்டு எண்ணிக்கையை கூட்ட வேண்டும் என்பது ஒருவகை. எத்தனை பதிவுகள் இட்டோம் என்பதைவிட, எப்படிப்பட்ட பதிவுகள் இட்டோம் என்பது இரண்டாவது வகை இந்த இரண்டாவது வகையில் கூட அதிக பதிவுகள் இட்டு சாதனை நிகழ்த்த முடியும் என்பதற்கு நீங்களே சான்று.
ஒவ்வொரு பதிவுக்கும்தான் எப்படிப்பட்ட உழைப்பு. அப்பப்பா மலைக்க வைக்கிறது. எந்த ஒரு சீரீஸை எடுத்துக்கொண்டாலும் அதை சிறப்பாக கொண்டுவர வேண்டும் என்பதில் உங்கள் மெனக்கெடல் அற்புதம். பதிவர் என்றால் இப்படியிருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் நீங்கள். உங்கள் துளிவிஷம் பதிவை 'பாட்ஷா' பார்த்திருந்தால் "இந்த ஒரு பதிவு நூறு பதிவு மாதிரி ஹா.ஹா.ஹா." என்று பாராட்டியிருப்பார்.
எட்டாயிரத்தில்தான் எத்தனை எத்தனை அதிசயப்பதிவுகள். மக்களே மறந்துபோன பழைய படங்கள், பழைய பாடல்கள், பழைய (வெளிச்சத்துக்கு வராத) நடிகர் நடிகைகள், பாடகர் பாடகிகள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள். நினைத்தால் நிச்சயம் தலைசுற்றும். அத்தனை உழைப்பும் இந்த ஒல்லியான உடம்புக்குள்ளிருந்து.
பாலா நடிகர்திலகத்துக்காக பாடிய பாடல்களை ஒதுக்கி வைத்திருந்தபோதே ஒரு எண்ணம், ஏதோ ஒரு காரணத்துக்காக என்று நினைத்தேன். ஆனால் எட்டாயிரம் என்ற லேண்ட் மார்க்குக்காக என்று நினைக்கவில்லை. ஒளித்துவைத்து சமயம் பார்த்து பிரம்மாண்டமாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்.
பதிவு என்றால் தேடிப்பிடித்து ஏதாவது குறைசொல்ல வேண்டுமல்லவா?. அதுதானே மனித இயல்பு. அந்த நோக்கில் தேடியதில் என் காதலன் சி.வி.ராஜேந்திரனையும், என் மாமா ஒளிப்பதிவாளர் தம்புவையும் குறிப்பிடவில்லை என்பதைத்தவிர வேறு குறைகளையே காணோம்.
'இரண்டில் ஒன்று' பாடலை ஒன்பதாயிரம் என்ற லேண்ட்மார்க்குக்காக ஒளித்து வைக்காமல் உடனே தாருங்கள்.
சலியாத உழைப்புக்கு பாராட்டுக்கள்,
எங்களை பரவசத்தில் ஆழ்த்தியதற்கு நன்றிகள்,
மேலும் மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்.
வாசுவின் பத்தாயிரமாவது பதிவுக்கு எப்படி வாழ்த்துச்சொல்லலாம் என்ற சிந்தனையுடன்.... உங்கள் ஆதி.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
19th September 2015, 12:24 PM
#1864
Junior Member
Veteran Hubber
Originally Posted by
raghavendra
ஒப்பீடு என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில் அது பெரும்பாலும் சார்பு நிலைக் கோட்பாட்டுக்குள் சென்று விடும் வாய்ப்பு மிகவும் அதிகம். அதுவும் இந்தக் கணிப்பினைப் பார்த்த பின் என்னுடைய நிலைப்பாடு இன்னும் நியாயமாகிறது. இவர்கள் இந்தக் கருத்துக்கணிப்பிற்கு எடுத்துக்கொண்ட அளவுகோல் என்ன, அல்லது கேட்கப்பட்ட கேள்விகள் என்ன போன்ற விவரங்கள் முழுதும் தெரிய வேண்டும். நடிகர் திலகத்தின் சதவீதத்திற்கும் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் கிடைத்துள்ள சதவீதம் இவ்வளவு அதிக வித்தியாசம் இருக்க வாய்ப்பே இல்லை. அதிக பட்சம் ஒன்று அல்லது இரண்டு விழுக்காடுகளுக்கு மேல் இருக்கக்கூடிய வாய்ப்பு என்னுடைய தனிப்பட்ட கருத்தின்படி இல்லை. 50-50 தான் உண்மையான அந்தக் கால நிலவரம். இது ஒன்று அல்லது இரண்டு விழுக்காடுகள் மட்டுமே fluctuation எனப்படும் ஊசலாட்டத்தில் இருந்திருக்க முடியும். ஒரேயடியாக 14 விழுக்காடு வித்தியாசம் என்றால் மனம் ஏற்க மறுக்கிறது. அப்படியே அதிகம் என்றால் கூட அது 48-52 அல்லது 47-53 என்ற அளவிற்கு மேல் இருக்க முடியாது. அது மட்டுமல்லாமல் இது 1980வரை என்பதையும் ஏற்க முடியாது. இப்போது இருக்கக்கூடிய இளைஞர்கள் 1980ல் பிறந்திருக்கக்கூட மாட்டார்கள். அப்படிப்பார்த்தால் 1980ல் சிவாஜி-எம்.ஜி.ஆர். அபிமானத்தைப் பற்றிக் கருத்துக் கூற வேண்டுமானால் 1980ல் சுமார் 20 வயதாவது நிரம்பியவர்களால் தான் தெளிவாக சொல்ல முடியும்.
அப்படி இருக்கும் போது 1980 கால ஹீரோக்களைப் பற்றிச் சொல்லியிருக்கக் கூடியவர்கள் 1960ல் அல்லது அதற்கு முன்போ பின்போ தான் பிறந்திருக்க முடியும். அந்த பிராயத்தில் இருவருக்குமே ரசிகர்களின் அளவு மிகத் துல்லியமாக யூகிக்க வேண்டுமென்றால் 50-50 அளவில் தான் இருக்க வேண்டும்.
மணிமண்டபம் அரசு செலவில் கட்டக் கூடாது என்ற விவாதத்திற்கும் இந்த கருத்துக்கணிப்பிற்கும் ஏனோ மனம் முடிச்சுப் போட்டுப் பார்க்கிறது. அப்படி இருக்கக் கூடாது என மனம் விரும்புகிறது.
இதில் இன்னோர் விஷயமும் இருக்கிறது. சிவாஜி, எம்.ஜி.ஆர். இவர்களுக்கு சமமாக மூவேந்தராக ஜெமினியும் சேர்த்து தமிழ்த்திரையுலக ரசிகர்கள் கொண்டாடினர் என பல பத்திரிகைகள் எழூதின. அப்படியென்றால் அந்தக் காலத்தில் ஜெமினிக்கு அபிமானம் மிகவும் குறைவு 9 சதம் என கருத்துக் கணிப்புக் கூறுகிறதே.
இதில் எது உண்மை. ஜெமினி மூவேந்தரில் ஒருவராக விளங்கினார் என்பதா அல்லது அப்படியில்லை, சிவாஜி-எம்.ஜி.ஆர். இருவர் மட்டுமே கோலோச்சினர் என்பது உண்மையா என்பது தெரியவில்லை.
நண்பர்களே இது ஒரு தனிப்பட்ட எண்ணமாகத்தான் கூறுகிறேன். எந்த ஒரு கருத்து மோதலுக்காகவும் அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
தந்தியின் கணக்குப்படி மக்கள் விரும்பிய சிறந்த நடிகர் இப்படி படித்திருக்கவேண்டும் - மக்கள் திலகம் அபிமான நடிகர் என்று உள்ள 14% அதிக சதவிகிதம் ஞாயப்படி மக்கள் விரும்பிய சிறந்த நடிகர் என்பதில் நடிகர் திலகம் அவர்கள் 41% உடன் 14% கூட்டி 55% என்பதே சரியான ஒரு சதவிகிதமாகும் என்பது எனது கருத்து காரணம் 1991 குமுதம் கருத்துகநிப்பும் அதுவே !
நடிப்பு என்பது கலையை சார்ந்தது - அபிமானம் என்பது அரசியலும் சார்ந்துள்ளது காரணம் திரு mgr அவர்கள் நடிகர் மட்டும் அல்ல..நாட்டை ஆண்ட முதல்வர் அவர் கட்சி இன்றும் ஆண்டுகொண்டிருக்கிறது. ஆகவே அபிமானம் என்பது வரைதான் செய்யும் அதிக சதவிகிதம் அரசியல் சார்ந்து அதனால் அதிகரித்துள்ள ஒரு விஷயம் கூட என்பது மறுக்கமுடியாத விஷயம்.
தந்தி கூரியிருக்கவேண்டியது மக்கள் தலைவராக அபிமானத்துடன் ஏற்றுகொண்ட நடிகர் யார் என்பதே சரியான கேள்வியாகும்.
சிறந்த நடிகர் என்று வரும்போது உலகம் அறிந்த ஏற்றுக்கொண்ட உண்மை...ஒரே ஒரு நடிகர் தான் என்பது ..அது நடிகர் திலகம் அவர்கள் தான் என்பது...இதற்க்கு ஒரு சதவிகிதமும் எவரும் கணிக்க முடியாதது !
எதற்கு இப்படி எல்லாம் இப்போது செய்கிறார்களோ தெரியவில்லை...சிலை...மணிமண்டபம்....என்ன நடக்குமோ அதுதான் நடக்கும்...நடக்கக்கூடாதது நடந்தால் ....நடக்ககூடாததேல்லாம் நடக்கவும் செய்யும் !
இது எனது பார்வையில் ...விவாதத்திற்கு அல்ல !
Rks
Last edited by RavikiranSurya; 19th September 2015 at 12:48 PM.
-
19th September 2015, 12:36 PM
#1865
Junior Member
Seasoned Hubber
A writeup on Pazhani in The Tamil Hindu on the occasion of 50 years.
பழனி (1965)
விவசாயம் அழிந்து கொண்டிருக்கும் காலம் இது. விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்கள் தொழிலகங்களை அமைக்க விவசாய நிலங்களையே விழுங்குகின்றன. இந்த நிகழ்கால அவலத்தைச் சித்தரிக்கும் திரைப்படங்கள் போதுமான அளவுக்கு சமீபகாலத் தமிழ் சினிமாவில் வெளிவராதது பெரும் சோகம்.
விவசாயியாக நடித்தால் எந்த சாகசங்களையும் செய்ய முடியாது என இன்றைய நாயகர்கள் நினைக்கலாம். ஆனால், எம்.ஜி.ஆரும் சிவாஜியும் சூப்பர் ஸ்டார்களாக இருந்த காலத்தில் பாமர விவசாயிகளாக நடிக்கத் தயங்கவில்லை. சிவாஜி எளிய விவசாயியாக, கள்ளம் கபடமற்ற அப்பாவியாக நடித்த பல படங்களில் அவருக்கு மகுடமாக அமைந்த படம் 1965-ல் வெளியான ‘பழனி’.
தியாக தீபம்
கிராமத்து விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான் நகரத்தில் வாழ்பவன் சோற்றில் கை வைக்க முடியும் என்று வழக்கமாகச் சொல்வதுண்டு. அப்படிப்பட்ட விவசாயியும் விவசாயம் சார்ந்த கிராம வாழ்க்கையும் காப்பாற்றப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியது பழனி படத்தின் கதை.
மனைவியை இழந்த கிராமத்து விவசாயி பழனி (சிவாஜி). இவருக்கு வேலு ( ராம்), ராஜூ (எஸ்.எஸ். ரேஜேந்திரன்), முத்து (முத்துராமன்) ஆகிய மூன்று தம்பிகள். இவர்களுடன் நிராதரவான அவர்களது அக்காள் மகள் காவேரியும் (தேவிகா) வசிக்கிறார். கிராமத்துப் பண்ணையார் சொக்கலிங்கத்தின் ( பாலையா) நிலத்தில் குத்தகை விவசாயம் செய்து, ஒற்றுமைக்குப் பேர்போன அண்ணன் தம்பிகளாக வசித்துவருகிறார்கள். இதே கிராமத்தைச் சேர்ந்த எமிலி (புஷ்பலதா) அருகிலுள்ள மதுரை நகருக்கு மிதிவண்டியில் சென்று கல்லூரியில் படித்துவருகிறாள். பழனியின் குடும்பத்தினருடன் நட்புடன் பழகிவருகிறாள். பழனியின் மூத்த தம்பியான வேலுவின் மனைவி நாகம்மா கூட்டுக் குடும்பத்தில் பிடிப்பில்லாமல் இருக்கிறாள். சமயம் பார்த்து சண்டையிட்டுத் தன் கணவனைத் தனியே பிரித்துச் சென்று தனிக்குடித்தனம் நடத்துகிறாள். பாம்பு கடித்து வேலு இறந்துவிட நாகம்மா கைம்பெண்ணாகிறாள்.
ஏழை விவசாயத் தொழிலாளர்களை வஞ்சிப்பதையே வாழ்க்கையாகக் கொண்ட பண்ணையார், எமிலியைத் தனது வீட்டுக்கு அழைத்துவந்து தவறாக நடந்துகொள்ள முயற்சிக்கிறார். இதனால் தனது தாயாருடன் கிராமத்தை விட்டுப் புறப்பட்டு சென்னை நகருக்குச் சென்றுவிடுகிறாள் எமிலி.
இதற்கிடையில் வினோபா பாவேவின் பூமி தான இயக்கம் பழனியின் கிராமத்துக்கு வருகிறது. பழனியின் விவசாய ஈடுபாட்டைக் கண்டு அவருக்கு ஐந்து ஏக்கர் நிலத்தைப் பண்ணையார் சொக்கலிங்கத்திடமிருந்து தானமாகப் பெற்றுத்தருகிறது. ஆனால், அது கடும் பாறை நிலம். அதைச் சீர்திருத்தி விளைநிலமாக மாற்ற 2,000 ரூபாயை பழனிக்குக் கடனாகத் தருகிறார் பண்ணையார். ஆனால், பழனி ரூ. 12,000 கடன் வாங்கியதாக ஊரை நம்ப வைத்து நிலத்தையும் பிடுங்கிக்கொள்கிறார். அண்ணனின் ஏமாளித்தனத்தைக் கண்டு குமுறும் தம்பிகள் ராஜு, முத்து இருவரும் அவரைப் பிரிந்து சென்னைக்குச் செல்கிறார்கள். அங்கே எமிலி அவர்களுக்கு வேலைக்கு ஏற்பாடு செய்கிறாள். ஆனால், நகர வாழ்க்கை ராஜூவைச் சிறையில் தள்ளுகிறது. தம்பிகளைக் காண சென்னை வரும் பழனி ராஜூவின் நிலையை எண்ணித் துடித்துப்போகிறார்.
கிராமத்திலோ பண்ணையாரின் கொடுமைகள் உச்சத்தை எட்டுகின்றன. தன் இச்சைக்கு இணங்காத நாகம்மாள் மீது அவர் இழிபெயர் சுமத்த, சாதுவாக இருந்த பழனி கொதித்தெழுகிறார். சிறையிலிருந்து விடுதலையாகி வரும் ராஜூ நடந்ததை அறிந்து சொக்கலிங்கத்தைத் தாக்குவதற்காகத் துரத்த, அவருடன் மொத்த கிராமமும் சேர்ந்துகொள்கிறது. உயிருக்கு பயந்து ஊர்க்கோயிலில் ஓடி ஒளியும் சொக்கலிங்கத்தை பழனி காப்பாற்றுகிறார். பழனியின் நல்ல குணத்தால் வெட்கித் தலைகுனியும் பண்ணையார் தான் செய்த குற்றங்களை ஏற்றுக்கொண்டு போலீஸில் சரணடைகிறார்.
இறுதியில் பண்ணையாரின் கைவசம் இருந்த பெரும் பகுதி நிலம் அவருடையது அல்ல என்பது தெரியவர, நிலத்தைக் கூட்டுறவுச் சங்கம் எடுத்துக்கொண்டு விவசாயிகளுக்குப் பிரித்துத் தருகிறது. மீண்டும் விவசாயம் செழிக்கிறது. அறுவடையின் முழுப் பலனும் உழுத விவசாயிக்கே கிடைக்கின்றன. பழனியும் சகோதரர்களும் பாசத்துடனும் ஒற்றுமையுடனும் வசிக்கிறார்கள்.
ஒரு பொங்கல் இரு திலகங்கள்
1965-ல் ஜனவரி மாதம் பொங்கல் தினத்தில் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியானது ‘எங்க வீட்டுப் பிள்ளை’. அதே நாளில் சிவாஜி நடிப்பில் வெளியானது ‘பழனி’. இரண்டு படங்களுமே வெள்ளிவிழா கொண்டாடிய படங்கள். ஏ. பீம்சிங் இயக்கம், சிவாஜி, ஜெமினி, சாவித்திரி, சரோஜாதேவி நடிப்பு, கண்ணதாசனின் பாடல்கள், விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை என்கிற வலுவான கூட்டணியில் வெளியான பல படங்கள் வெற்றிபெற்றன.
ஆனால், பழனி படத்தில் சிவாஜியுடன் எஸ்.எஸ். ராஜேந்திரன், ஆர். முத்துராமன், ஸ்ரீ ராம், தேவிகா, புஷ்பலதா ஆகியோர் இணைந்தனர். வில்லன்களாக டி.எஸ். பாலைய்யாவும் எம்.ஆர். ராதாவும் நடித்தனர். வில்லன்களோடு வளையவந்தாலும் நியாயத்தின் பக்கம் நிற்கும் நகைச்சுவையாளராக நாகேஷ் நடித்திருந்தார். சின்னக் கணக்குப்பிள்ளை சந்தானமாக நாகேஷ் செய்யும் கதா கலாட்சேபம் படத்தில் சிரிப்பு மழையைப் பொழிந்து, சிந்திக்கவும் வைத்தது.
விவசாயத் தொழிலின் மேன்மையையும் சகோதர பாசத்தின் உன்னதத்தையும் உயர்வாகப் பேசிய இந்தப் படத்தில் தமிழ்க் கலாச்சாரத்தின் முக்கிய அம்சமாக விளங்கிய கூட்டுக் குடும்ப முறையையும் முன்னிறுத்தியது பழனி படத்தின் கதையை எழுதியவர் ஜி.வி. ஐயர். படத்துக்குத் திரைக்கதை எழுதி, இயக்கியவர் ‘குடும்பப் படங்களின் பிதாமகன்’ பீம்சிங். தமிழ் கிராமியத்தைக் கண்முன் நிறுத்திய வசனங்களை எழுதியவர் எம்.எஸ். சோமசுந்தரம்.
விருதும் தாக்கமும்
படத்தில் நடித்த அனைவருமே குறைவான நாடகத்தனத்துடன் நடித்திருந்த படம் இது. தனது குடும்பத்தின் நலனுக்காகத் தியாக தீபமாக திருமணம் செய்துகொள்ளாமல் வாழும் அண்ணன் பழனியாக சிவாஜியின் நடிப்பும், தீமையை எதிர்க்கும் அவரது தம்பி ராஜூவாக எஸ்.எஸ். ராஜேந்திரனின் நடிப்பும் ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பெரிதும் பாரட்டப்பட்டன.
சிறந்த படத்துக்கான நற்சான்றிதழை (தேசிய விருது) பழனி படம் வென்றது. படிக்காதவர்கள் நகரத்துக்கு வந்தால் பிழைக்க முடியாது என்ற எண்ணத்தை எடுத்துக் காட்டியது பிற்போக்கான கருத்தென்று விமர்சனங்களில் சுட்டிக் காட்டப்பட்டது. அதேபோல் கிராமத்து வாழ்க்கையைப் பற்றிய சித்தரிப்புகளில் வில்லன்கள் பெண் இச்சையோடும், ஏமாற்றுவதை மட்டுமே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருப்பார்கள் என்பதும் வழக்கமான சித்தரிப்பாக இருந்ததை மறுக்க முடியாது.
மறக்க முடியாத பாடல்கள்
இந்தப் படத்தில் கிராமத்து வாழ்க்கையைப் பாடல் காட்சிகள் வழியே சித்தரித்த விதம் இயக்குநர் பீம்சிங்குக்கே உரிய தனித்துவம். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் ‘ஆறோடும் மண்ணில் இன்றும் நீரோடும்’ பாடல் இன்றும் ஏர் உழும் காட்சியையும் நடவு நடும் காட்சியையும் நம் கண்முன் கொண்டுவரும். ஹரி காம்போதி ராகத்தில் சாயலில் அமைந்த இந்தத் தெம்மாங்குப் பாடல் மட்டுமல்ல, படத்தின் அத்தனை பாடல்களும் மறக்க முடியாத கதைப் பாடல்களாக அமைந்தன. இன்றைய சூழ்நிலையில் மறுஆக்கம் செய்யப்பட வேண்டிய படம் பழனி என்பதில் ஐயமில்லை.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
19th September 2015, 04:44 PM
#1866
Originally Posted by
s.vasudevan
A writeup on Pazhani in The Tamil Hindu on the occasion of 50 years.
ஒரு பொங்கல் இரு திலகங்கள்
1965-ல் ஜனவரி மாதம் பொங்கல் தினத்தில் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியானது ‘எங்க வீட்டுப் பிள்ளை’. அதே நாளில் சிவாஜி நடிப்பில் வெளியானது ‘பழனி’. இரண்டு படங்களுமே வெள்ளிவிழா கொண்டாடிய படங்கள்.
தமிழ் ஹிண்டு நாளிதழில் தொகுப்பாளர் தவறான தகவலைத் தந்திருக்கிறார்.
'பழனி' வெற்றிப்படமல்ல. 50 நாட்களைக் கடந்ததற்கு கூட ஆதாரங்கள் இல்லை.
தமிழன் வெட்கப்பட வேண்டிய விஷயம்.
-
20th September 2015, 08:08 AM
#1867
Junior Member
Seasoned Hubber
பார்த்ததில் பிடித்தது -52
தெனாலிராமன் , 1956 ல் தமிழ் , தெலுங்கு இரு மொழியிலும் ஒரே நேரத்தில் உருவான திரைப்படம் , தமிழில் நடிகர்திலகமும் , தெலுங்கு பதிப்பில் நாகேஸ்வர ராவ் தெனாலிரமனாகவும் நடிக்க, இரு மொழிகளிலும் மன்னராக NTR .
நம்மில் பலருக்கு தெனாலிராமன் கதைகள் தெரிந்து இருக்கும் , ஆனால் அதே சமயம் தெனலிராமனின் ஆரம்பகால வாழ்கை தெரியாமல் இருக்கும் , இந்த திரைபடம் தெனாலிராமன் ஆரம்பகாலத்தில் பட்ட பொருளாதார நெருக்கடி , காளிமாதா அருளில் அவருக்கு வந்த வாழ்வை பற்றி அழகாக விவரிக்க படுகிறது . படத்துக்கு , தெனலிராமனின் துடுக்கு ஆதாரமாக விளங்குகிறது இந்த முதல் 30 நிமிடங்கள்
தெனாலிராமன் கதைகள் மட்டுமே கேட்டு வளந்தவர்களுக்கு இந்த 30 நிமிடங்கள் கொஞ்சம் மெதுவாக தான் நகரும் , ஆனால் இதை கடந்து வந்தால் படம் முழுவதும் சிரிப்பு , சிலிர்ப்பு , மதியுகம் அனைத்தும் கலந்த அழகான பூமாலை
வாழ்க்கையில் சோதனையை , எப்படி அணுக வேண்டும் என்று அழகாக விவரித்து இருப்பார் இயக்குனர் BS ரங்கா .
17 யானைகளை முன்று பேருக்கு பங்கு போடும் காட்சி , யானை கால்களால் நசுக்க படும் பொது சாதுர்யமாக தப்பித்து கொள்ளும் காட்சி , கிளைமாக்ஸ் காட்சி , நான் மிகவும் ரசித்த காட்சிகள்
தெனலிராமனாக சிவாஜி கணேசன் : பராசக்தி , மனோகரா போன்ற படங்களில் angry young man , திரும்பிப்பார் , நானே ராஜா படத்தில் வில்லன் என்று படத்துக்கு படம் வித்தியாசம் காட்டும் நடிகர் திலகம் , நகைச்சுவை படங்களில் அழகாக கலக்கி இருப்பார் ,
உதாரணம் : கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி , சபாஷ் மீனா , கலாட்ட கல்யாணம்
ஆனால் தெனாலிராமன் completely different ,எப்படி என்றால் , தெனாலிராமன் என்பவர் புத்திசாலி , சவால்களை எதிர்கொண்டு ஜெயித்து விடுவர் , அதே சமயம் முகத்தில் அப்பாவி தோற்றம் இருக்க வேண்டும் , மேலே சொன்ன படங்களில் situation காமெடி என்றால் , இந்த படத்தில் solutions மட்டுமே காமெடி , ஆனால் வர போகும் ஆபத்து மிகவும் பெரியது , இந்த மாதிரி சத்தமே இல்லாமல் அழகாக பொரிந்து விடுவார் நடிகர் திலகம் ,
நாகையையும் -சிவாஜியும் கலக்கும் நாட்டு ஜனங்க பாடல் இன்றும் பொருந்தும் , அதில் அவர் தோற்றம் அசல் மாறுவேடம் - அடையாளம் கண்டுபிடிப்பது மிகுவ்ம் கடிதம்
காளி அறிவு , செல்வம் இரண்டையும் கொடுத்து எதை வேண்டுமோ எடுத்துகொள் என்று சொல்லும் பொது இரண்டையும் எடுத்து கொண்டு கண்களில் ஒரு twinkle உடன் காரணம் சொல்லும் பொது அவர் மீது ஈர்ப்பு அதிகம் ஆகிறது
மலையாள ஜோதிடராக மலையாளம் கலந்த தமிழில் சம்சாரிக்கும் பொது , அதே காட்சியில் அவர் சிகைஅலங்காரம், மீசை அனைத்தும் பொருத்தமாக அமைந்து இருப்பதில் அவர் எடுத்து கொண்ட அக்கறை அழகாக தெரிகிறது . பானுமதி உடன் அவர் உரையாடல் கண்ணதாசன் அவர்களின் trademark வசனங்கள் இனிமையான தமிழ்
இந்த படத்தின் அடுத்த ஆச்சர்யம் நம்பியார்
இவர் தான் வில்லன் என்று நினைத்து பார்க்கும் பொது , இவர் செய்கையும் அதை உறுதி படுத்த , அங்கே இருக்கும் ஒரு திருப்பம் , நம் எதிர்பாராத ஒன்று ,அவர் சாந்தமான முகம் அவர் மீது சந்தேகத்தை அதிக படுத்தும் ஒரு factor
பானுமதி :
traitor பாத்திரத்தில் அழகாக பொருந்துகிறார்
NTR :
படத்தில் இவர் பாத்திரம் வரும் கொஞ்ச நேரத்தில் இவர் தோற்றத்தில் நம்மளை இவர் ராஜா என்றே தோன்ற வைத்து விடுகிறார்
இந்த படம் இன்னும் அதிகமாக கொண்டாட படவில்லை என்றே தோன்றுகிறது
-
Post Thanks / Like - 0 Thanks, 5 Likes
-
20th September 2015, 11:09 AM
#1868
Senior Member
Diamond Hubber
ஆதிராம் சார்!
தங்கள் மனமுவந்த பாராட்டுதல்களுக்கு மிக்க நன்றி! தலைவர் பாடல் ஏன் தாமதமானது என்று அழகாகக் கண்டு பிடித்து விட்டீர்களே!
//பதிவு என்றால் தேடிப்பிடித்து ஏதாவது குறைசொல்ல வேண்டுமல்லவா?. அதுதானே மனித இயல்பு. அந்த நோக்கில் தேடியதில் என் காதலன் சி.வி.ராஜேந்திரனையும், என் மாமா ஒளிப்பதிவாளர் தம்புவையும் குறிப்பிடவில்லை என்பதைத்தவிர வேறு குறைகளையே காணோம்.//
கண்டிப்பாக சார். நிச்சயம் அது ஒரு குறைதான். பாலா தொடரில் ஒளிப்பதிவாளர்களையும், இயக்குனர்களையும், இதர டெக்னீஷியன்களையும் பெரும்பாலும் குறிப்பிடாமல் இருந்தது கிடையாது. இதில் குறிப்பிடவில்லை. காரணம் இரண்டு.
ஒன்று
நம் ஸ்டைல் சக்கரவர்த்தியின் அங்க அசைவுகளிலேயே மைண்ட் செட் ஆகி இருந்தது. வேறு எதையுமே நினைக்கத் தோன்றவில்லை. எத்தனை முறை பார்த்தாலும் அவரது ஸ்டைல் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தது.
இரண்டு
நம் அனைவருக்கும் 'சுமதி என் சுந்தரி' பற்றி புள்ளி விவரமாகத் தெரியும். உங்களுக்கு மட்டுமல்ல... நம் ஒட்டுமொத்த நடிகர் திலகம் ரசிகர்களின் 'டார்லிங்' சி.வி.ஆர் தானே! ஒளிப்பதிவு இயக்குனர் தம்பு என்பதும் அனைவரும் அறிந்ததே.
இப்போது வட்டியும் முதலுமாகச் சேர்த்து டைட்டில் கார்டையே போட்டால் போயிற்று மூலவரையும் சேர்த்து.
அப்புறம் இன்னொரு சின்ன உரிமை வருத்தம். திடீரென்று அடிக்கடி சொல்லாமல் கொள்ளாமல் காணமல் போய் விடுகிறீர்கள். அலுவலகப் பணி அதிகமோ? பதிவுகளுக்கு தோதான துணைப் பதிவுகளையும் இணைப் பதிவுகளையும் சப்போர்ட்டாக அளிக்க உங்களை விட்டால் வேறு யார்? அதனால் நிறைய உங்களையும், நீங்கள் அளிக்கும் அற்புதமான விஷயங்களையும் மிஸ் செய்கிறோம். பாகம் 4 இல் நிறைய பதிவுகளுக்கு உங்கள் பின்னூட்டப் பதிவுகள் இல்லாமல் முழுமை பெறவில்லை. நல்லது கெட்டது என்று நடுநிலைமையுடன் எல்லாவற்றையும் சுட்டிக் காட்டுவதில் வல்லவர் தாங்கள். அதனால் திரியில் தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன்.
அதே போல 'உங்கள் ஆதி'யை அதே உரிமையுடன் ஆனந்தமாய் அனுபவித்தேன். நன்றி!
Last edited by vasudevan31355; 20th September 2015 at 11:31 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
20th September 2015, 11:28 AM
#1869
Senior Member
Diamond Hubber
ராகுல்,
எனக்கு மிக மிகப் பிடித்த 'தெனாலி ராமன்' படத்தைப் பற்றி எழுதி சந்தோஷப் படுத்தியுள்ளீர்கள். இந்தப் படத்தைப் பற்றி காட்சி காட்சியாக எழுத வேண்டும் என்று ரொம்ப நாட்களாக ஆசை. என் உயிரினில் கலந்த படம் என்றும் கூட கூறலாம். பானுமதியை மிரட்டும் காட்சி ஒன்று போதும். இந்தப் படத்தில் தலைவர் ஆக்டிங் பற்றி துண்டு துண்டாக அங்கங்கே எழுதியுள்ளேன். மனம் நிறைவு பெறவில்லை. கண்டிப்பாக எழுத வேண்டும்.
சுருக்கமாக அழகாக பதிவு செய்து உள்ளீர்கள். வாழ்த்துக்கள். ஆனால் சமுத்திரத்தை பானைக்குள் அடைக்க முடியாதல்லவா? மதியூகி, விதூஷுகன், தேசப் பற்றாளன், குடும்பத் தலைவன், ராயர் நேசன், கலாட்டா விற்பன்னன் என்று ஏகப்பட்ட முகங்கள் தெனாலிராமனுக்கு. அதைவிட அதிக முகங்கள் நம் தானைத் தலைவருக்கு. அறிவு ஒன்றையே பிரதானமாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'அறிவாளி' நடித்த காவியப் படம் இது. 1956-ல் வெளிவந்த படம். தலைவருக்கு வயது 28 தான். மிகச் சிறிய வயது. ஆனால் தெனாலிராமன் கதாபாத்திரம் வலியது. சிறிது தப்பினாலும் வேறு மாதிரி நகைச்சுவை கேலிக் கூத்து ஆகிவிடும். நகைச்சுவைக்கு நகைச்சுவை, சதிக்கு சதி, போட்டிக்குப் போட்டி, அறிவுக்கு அறிவு, சமயோசிதம் என்று ஒவ்வொன்றையும் கவனமாகக் கையாள வேண்டும். அந்த இளம் வயதில் நம் நடிகர் திலகக் குருவி இந்த பனங்காய் ரோலை அப்படியே தன்னந்தனியே அலட்சியமாய் சுமந்து பறந்தது. இத்தனைக்கும் அவரது 29 ஆவது படமே. 2000 படங்களில் நடித்து முடித்தது போன்ற அனுபவத்தை இந்த ஒரு படத்தில் அவரிடம் நாம் காணலாம். தெரியாதவர்கள் ஒரு முறை பார்த்தாலே நடிப்பின் நுணுக்கங்களை, பரிணாமங்களைக் கற்றுக் கொள்ளலாம். எந்த நடிப்புப் பயிற்சிக் கல்லூரியும் தேவை இல்லை. 'தெனாலி ராமன்' ஒன்று போதும்.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
20th September 2015, 12:27 PM
#1870
Junior Member
Junior Hubber
அன்பு நண்பர் நெய்வேலி வாசுதேவன் சார் ,
தாங்கள் 8000 பதிவுகள் கடந்தமைக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!
office work மற்றும் சொந்த வேலைகளினால் தாமதமான வாழ்த்துக்கு sorry sir!
சுமதி என் சுந்தரி உங்கள் எழுத்து நடை as usual மிகவும் பிரமாதம். உங்கள் எழுத்துக்கள் யாருக்கு தான் பிடிக்காமல் போகும்? keep it up sir!
அந்த படத்தில் வாணிஸ்ரீ அல்லது காஞ்சனா நடித்திருந்து அந்த பாடல் காட்சியை கற்பனை செய்து பாருங்கள் !
கற்பனை செய்து பார்த்தாலே கற்கண்டாய் இனிக்கிறதே!
நன்றி வாசு சார்!
-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
Bookmarks