Results 1 to 10 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

Threaded View

  1. #11
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    செந்தில் வேல் - ஒரு வரி ராமாயணம் அருமை !!. உங்களைப்பற்றி பல நல்ல விஷயங்களை வாசுசார் சொல்லக்கேட்டிருக்கிறேன் . உங்களையும் , செந்தில் சாரையும் விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன் - உங்கள் உழைப்பில் எனக்கு என்றுமே ஒரு பொறாமை உண்டு . அரிமா எப்படி செல்கிறது? - சிங்க நடையைப்பற்றி என்ன சொல்ல வேண்டும் என்று கேட்க்கிறீர்களா ?? உங்களுக்காக 16 வார்த்தைகளில் இராமாயணம் -இதோ !!

    16 வார்த்தை ராமாயணம்
    ******************************
    பிறந்தார் வளர்ந்தார் கற்றார் பெற்றார்
    மணந்தார் சிறந்தார் துறந்தார் நெகிழ்ந்தார்
    இழந்தார் அலைந்தார் அழித்தார் செழித்தார்
    துறந்தார் துவண்டார் ஆண்டார் மீண்டார்

    விளக்கம்:
    ************
    1. பிறந்தார்: ஸ்ரீராமர் கௌசல்யா தேவிக்கு தசரதரின் ஏக்கத்தைப் போக்கும்படியாக பிறந்தது.

    2.வளர்ந்தார்: தசரதர் கௌசல்யை சுமித்திரை கைகேயி ஆகியோர் அன்பிலே வளர்ந்தது

    3.கற்றார்: வஷிஷ்டரிடம் சகல வேதங்கள் ஞானங்கள் கலைகள் முறைகள் யாவும் கற்றது.

    4.பெற்றார்: வஷிஷ்டரிடம் கற்ற துனுர்வேதத்தைக் கொண்டு விஸ்வாமித்ரர் யாகம் காத்து விஸ்வாமித்ரரை மகிழ்வித்து பல திவ்ய அஸ்திரங்களை பெற்றது.

    5.மணந்தார்: ஜனகபுரியில் சிவனாரின் வில்லை உடைத்து ஜனகர்-சுனயனாவின் ஏக்கத்தை தகர்த்து மண்ணின் மகளாம் சீதையை மணந்தது.

    6.சிறந்தார்: அயோத்யாவின் மக்கள் மற்றும் கோசல தேசத்தினர் அனைவர் மனதிலும் தன் உயரிய குணங்களால் இடம் பிடித்து சிறந்து விளங்கியது.

    7.துறந்தார்: கைகேயியின் சொல்லேற்று தன்னுடையதாக அறிவிக்கப்பட்ட ராஜ்ஜியத்தை துறந்து வனவாழ்வை ஏற்றது.

    8. நெகிழ்ந்தார்:

    *அயோத்தியா நகரின் மக்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்தது.
    *குகனார் அன்பில் நெகிழ்ந்தது.
    *பரத்வாஜர் அன்பில் நெகிழ்ந்தது.
    *பரதரின் அப்பழுக்கற்ற உள்ளத்தையும் தன் மீது கொண்டிருந்த பாலனைய அன்பினையும் தன்னலமற்ற குணத்தையும் தியாகத்தையும் விசுவாசத்தையும் கண்டு நெகிழ்ந்தது.
    *அத்ரி-அனுசூயை முதல் சபரி வரையிலான சகல ஞானிகள் மற்றும் பக்தர்களின் அன்பிலே நெகிழ்ந்தது.
    *சுக்ரீவர் படையினரின் சேவையில் நெகிழ்ந்தது.
    *விபீஷணரின் சரணாகதியில் நெகிழ்ந்தது.
    *எல்லாவற்றுக்கும் மேலாக ஆஞ்சநேயரின் சேவையைக் கண்டு, 'கைம்மாறு செய்ய என்னிடம் எதுவுமில்லை. என்னால் முடிந்தது என்னையே தருவது' எனக் கூறி ஆஞ்சநேயரை அணைத்துக் கொண்டது.

    9.இழந்தார்: மாய மானின் பின் சென்று அன்னை சீதையை தொலைத்தது.

    10.அலைந்தார்: அன்னை சீதையை தேடி அலைந்தது.

    11.அழித்தார்: இலங்கையை அழித்தது.

    12.செழித்தார்:

    *சீதையை மீண்டும் பெற்று அகமும் முகமும் செழித்தது.
    *ராஜ்ஜியத்தை மீண்டும் பெற்று செல்வச் செழிப்பான வாழ்க்கைக்கு திரும்பியது.

    13.துறந்தார்:

    அன்னை சீதையின் தூய்மையை மக்களில் சிலர் புரிந்து கொள்ளாத நிலையில் மக்களின் குழப்பத்தை நீக்குவதற்காக அன்னை சீதையை துறந்தது.

    13.துவண்டார்:

    அன்னை சீதையை பிரிய நேர்ந்தது சீராமருக்கு மிகுந்த வலியை தந்தது. அந்த வலி அவரை சில காலம் மனதளவில் துவள செய்தது.

    15.ஆண்டார்:

    என்ன தான் மனதினுள் காயம் இருந்தாலும் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் குறைவற செய்து மக்கள் உடலால், மனதால் ஆரோக்கியமானவர்களாகவும் செல்வச் செழிப்புடன் வாழும்படியும் பார்த்துக் கொண்டது.

    16.மீண்டார்:

    பதினோறாயிரம் ஆண்டுகள் நல்லாட்சி செய்து மக்கள் அனைவரையும் ராமராகவும் சீதையாகவும் மாற்றி தன்னுடனே அழைத்துக் கொண்டு தன் இருப்பிடமான வைகுண்டம் மீண்டது.

    ஜெய் ஸ்ரீராம்.


    Last edited by g94127302; 7th October 2015 at 08:30 AM.

  2. Thanks Georgeqlj, eehaiupehazij thanked for this post
    Likes Georgeqlj, Russellmai, madhu liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •