Results 1 to 10 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

Threaded View

  1. #11
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like
    திரு ஜாக்கி சேகர் ஒரு பன்முக பிரமுகர் ... அவரின் பக்கத்திலிருந்து ...


    Deiva Magan-1969/உலகசினிமா/இந்தியா/தெய்வமகன்/சிவாஜி எனும் மகா கலைஞன்.



    நிறைய விமர்சனங்கள் எழுதி இருக்கின்றேன்..
    ஆனால் இந்த விமர்சனத்தை எழுத எனக்கு தகுதி இருக்கின்றதா என்று தெரியவில்லை. இந்த படத்தில் பணியாற்றிய ஜாம்பவான்கள் எல்லோரும் மன்னிப்பார்களாக....

    அது போன்ற ஒரு காட்சியை நான் ரசித்து பார்த்ததே இல்லை... அப்படி ஒரு காட்சி அதுவும் தமிழ்சினிமா....

    கருப்பு வெள்ளை திரைப்படம் அது....

    பொதுவாய் கருப்பு வெள்ளை திரைப்படங்களை நான் அதிகம் பார்க்க விரும்புவதில்லை... ஆனால் சில படங்கள் எப்போது போட்டாலும் சில படங்களை வச்ச கண் வாங்காமல் படம் பார்த்தது உண்டு.

    அந்த வகையில் இந்த படமும்... குறிப்பாக இந்த காட்சியையும் சொல்லலாம்.... நம்ம கிட்டயும் சரக்கு இருக்குன்னு நான் நம்பிய படம்.....

    அந்த படத்தில் வரும் அந்த சீனும் காம்போசிஷனும்.. சான்சே இல்லாத ரகம்.. அந்த காலத்திலேயே இப்படி அசத்தி இருக்கானுங்களே என்று பொறாமை கொண்டு பார்க்கும் காட்சி அது...

    சிவாஜி நடிப்புக்கு நிறைய படங்களை உதாரணம் சொல்லுவார்கள்.. முக்கியமாக வயலுக்கு வந்தாயா-? நாற்று நட்டாயா? என்பதை பெரியதாய் சொல்லுவார்கள்...ஆனால் என்னை பொறுத்தவரை இந்த படத்தையும் இந்த படத்தில் குறிப்பாக இந்த காட்சியையும் சொல்லுவேன்...


    இந்த காட்சியில் சிவாஜி மட்டும் அல்ல மேஜர் சந்தர்ராஜனும் சேர்ந்தே கலக்கி இருப்பார்.. இரண்டு பேரும் போட்டி போட்டு நடித்து இருப்பார்கள்...


    காட்சி இதுதான் தான் அவலட்சனமாக இருந்து சொந்து போகும் பெரும் பணம் படைத்த்த பணக்கார சிவாஜி அவலட்சனமாக பிறந்த தன் பிஞ்சு மகனை இரக்கமில்லாமல் தன் டாக்டர் நண்பரிடம் கொல்ல சொல்கின்றார்... டாக்டர் நண்பரும் கொன்று விட்டேன் என்று சொல்லி விட்டு அந்த அவலட்சனமான பையனை வளர்கின்றார்... இதனால் அவர்கள் இருவரும் பேசிக்கொள்வதில்லை....

    வளர்ந்த பையன் தன் தாய் தந்தை யார் என்று தெரிந்து கொண்டு .... தாயை பார்க்க செல்கின்றான்.. யாரோ ஒருவன் தன்னை பார்க்கும் போது தனக்கு ஏன் அவன் மீது அளப்பறியா பாசம் ஏற்ப்படுகின்றது என்று தன் கணவனிடம் கதறுகின்றாள்.. ஒருவேளை தன் டாக்டர் நண்பன் கொல்லாமல் தன் பிள்ளையை வளர்ந்து இருந்தால்? என்று பணக்கார சிவாஜியின் குறுக்கு புத்தி வெகு வேகமாய் கணக்கு போடுகின்றது..

    .ஆனால் 25 வருடமாக டாக்டர் நண்பர் மேஜர் சுந்தர்ராஜனுக்கும் பணக்கார சிவாஜிக்கும் இடையில் பேச்சு வார்த்தை சுத்தமாக இல்லை... ஆனால் அந்த குழந்தை பற்றி முழுதும் தெரிய வேண்டும் என்றால் டாக்டரிடம் பேசி ஆக வேண்டும்... 25 வருடம் கழித்து தன் டாக்டர் நண்பனை பார்க்க வரும் அந்த காட்சி இருக்கின்றதே....


    xxxx நான் அடிச்சி சொல்லுவேன்....

    இனிமே அப்படி ஒரு காட்சியை எடுக்கவும் முடியாது.. அப்படி ஒரு ஷாட் கம்பொசிஷனை வைக்கவும் முடியாது.. அது போல உணர்பூர்வமா நடிக்கவும் முடியாது...அப்படி ஒரு மீயூசிக்க போடவும் முடியாது......அதுவும் அந்த காலத்துலேயே..... என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....? என்ன நடிப்பு? என்ன நடிப்பு....?


    முத ஷாட்... டிரலியில கேமரா மெல்ல நகர.....வீட்டோட பர்ஸ்ட் புலோர்ல நின்னுகிட்டு மேஜர் பைப் பத்தவைப்பார்... கதவு தட்டற சத்தம் கேக்கும்.. உடனே மேஜர் கமின்ன்னு சொல்லுவார்....


    இப்ப டாப் ஆங்கிள்ள கேமரா இருக்கும்....கதவு திறக்கும் சிவாஜி அந்த வீட்டுக்கு 25 வரஷம் கழிச்சி வரார்...(கடுகடு கோபத்தோட உள்ளே வருவார்.... காரணம் அவர்தான் புள்ளைய அப்பவே கொல்ல சொன்னாரு இல்லை.... இப்ப ஒரு புது பிரச்சனை அதுக்கு காரணம் தன் சொல் பேச்சு கேட்காத டாக்டர்...)


    உள்ளே வந்து கிழ இறங்கி இரண்டு ஸ்டெப் எடுத்து வைப்பார்.. அப்ப அவர் மொகத்துக்கு லைட் இருக்காது டக்குன்னு ஒரு ஸ்டெப் பின்னாடி நகர்ந்து முகத்துக்கு லைட்டை அழகாக வாங்கி கிட்டு மேல பார்ப்பார்... (இது எல்லா ஒளிப்பதிவாளர்களுக்கும் , டெக்னிஷியன்களுக்கும் நன்றாக தெரியும்.)


    மிட் ஷாட்டுல இவர் மேல பார்ப்பார்... மேஜர் கீழ பார்ப்பார்... இரண்டு பேருக்கும் இன்டர்கட் ஷாட்டுல சிவாஜி திருட்டு பையன் போல மேல மேஜரை பார்த்துகிட்டு இருப்பார்.. அதுல கோபம் வெறுப்பு இயலாமை எல்லாம் இருக்கும்.... மேஜர் இறங்கி வரார் என்பதை கண்ணில் காட்டுவார்.. விழிகள் டிராவல் ஆகும் அதாவது அவர் மாடி படி விட்டு இறங்கி வருகின்றார் என்பதை கண்களில் குளோசப்பில் உணர்த்துவார்..


    இறங்கி வந்ததும்.... உட்கார சொல்லி விட்டு எதிர் இருக்கையில் மேஜர் அமருவார்... இரண்டு பேரும் எதுவும் பேசிக்கொள்ளமாட்டார்கள்.. இரண்டு பேரிடமும் டென்ஷன் ஓடிக்கொண்டு இருக்கும்.. பதட்டத்துக்கு மேஜர் பைப்பை நன்றாக புகைப்பார்..

    .
    சிவாஜிதான் முதலில் ஆரம்பிப்பார்...

    டாக்டர் என்னை உங்களுக்கு தெரியுதா? நான்தான் சங்கர்.... உங்க ஓல்டு பிரண்டு என்று சொன்னதும்.. எதுவும் பேசாமல் மேஜர் தலையசைத்து அதை ஆமோதிப்பார்.. (இரண்டு பேருக்கும் தனி தனி மிட் ஷாட்டுல கேமரா இருக்கும்.....)


    நாம சந்திச்சி ரொம்ப நான் ஆச்சி இல்லை என்று சிவாஜி சொல்லும் போது ரொம்ப வருஷம் ஆச்சி என்று மேஜர் சொல்லுவரர்..( அப்ப ஒய்டுல டூ ஷாட்டுல கேமரா இருக்கும்- சட்டுன்னுஉடனே மேஜர் பாயிண்ட் ஆப் யூ ல டூ ஷாட்ல டைட் பிரேம்ல ஒய்டுல இரண்டு பேரும் இருப்பாங்க...)


    எஸ் யூ ஆர் கரெக்ட்...25 வருஷம் கழிச்சி வந்து இருக்கேன்..


    ஆமாம்.. அப்போ பிறந்த குழந்தையை பார்க்க வந்திங்க...


    (சட்டென சிவாஜி ஆர்வமாக) இப்ப அந்த குழந்தையை பத்தி தெரிஞ்சிக்க வந்த இருக்கேன்.....
    ஏன் டாக்டர் அதை என்ன செஞ்சிங்க ..(அந்த அவலட்சனமான பிள்ளையை சிவாஜி..... குழந்தை என்று கூட அழக்க மாட்டார்.. அதை என்ன செஞ்சிங்க என்று விளிப்பார்...)


    நீங்க என்ன செய்ய சொன்னிங்க..? என்று மேஜர் கேட்க....?( சிவாஜி அதுக்கு குற்றஉணர்ச்சியில் எதுவும் பேசாமல் ஒரு ரியாக்ஷனை மட்டும் கொடுப்பார் அதன் பிறகு....)

    கொன்னுடசொன்னேன்....

    அதை நான் செய்துட்டேன்...

    பொய்..... (என்று சிவாஜிகோபமாக சொல்லுவார்)அந்த குழந்தை சாகவும் இல்லை.. உங்க வீட்டுலயும் வளர்க்கலை.. அதை எங்கேயோ கொண்டு போய் விட்டுடிங்க என்று சொல்ல..

    அதுக்கு மேஜர்,

    இல்லை அந்த குழந்தை செத்து 25 வருஷம் ஆயிடுச்சி என்பார்...

    கோபமாக சிவாஜி எழுந்து...

    இல்லை.. அவனுக்கு 25 வயசு ஆகுது... அவனை பத்திய முழு விபரமும் கண்டிப்பாக தெரிஞ்சாகனும்.. come on tell me the truth come on என்று சிவாஜி கத்த... அதுக்கு மேஜர் எழுந்து அவரும் கோபத்துடன் don’t be dare shout at me என்று மேஜர் கர்ஜிப்பார்... பெத்த புள்ளை கொல்ல சொன்ன உனக்கு என் எதிரில் நின்று பேச உனக்கு என்ன தைரியம் என்று ஆங்கிலத்தில் பொரிவார்...



    பைத்தியக்கரத்தனமான உன் பேச்சுக்களை எல்லாம் கேட்டு சகிச்சிகிட்டு இருந்த பழைய நண்பன் ராஜு இல்ல.. உங்க முன் நிக்கறது...just doctor raju to you…. என்று சொல்லுவார்... இந்த இடத்துல தன் இயலாமையால எதையும் பேச முடியாம சிவாஜி கொடுக்கும் ரியாக்ஷன் இருக்கே... சான்சே இல்லை..

    அதாவது உன் கிட்ட புள்ளை கொல்ல சொன்னா.. அதை விட்டு விட்டு அவனை அனாதை போல வளர்ந்து திருடனா ஆக்கி இருக்கே என்ற அடிப்படை கோபம்.. பாசக்கோபம்.. இவ்வளவு பணம் இருந்தும் தன் வித்து பிச்சைக்காரன் போல திருடுதே என்ற ஆதங்கம்.. அது எல்லாம் அந்த உடல் மொழியில் கண்களில் காண்பிப்பார்.. அதுக்கு மேஜரும் சளைக்காம ரியாக்ஷன் கொடுத்து இருப்பார்..


    டாக்டர் நீங்க ரொம்ப நல்லவர்.. ஆனா பொய் நிறைய சொல்லறிங்க.. உண்மை என்னன்னு எனக்கு தெரியும்.. நான் சொன்ன படி அவனை அன்னைக்கே கொன்னு இருந்தா.. இன்னைக்கு அவன் பிச்சைக்காரனா, திருடனா நடுத்தெருவுல அலஞ்சிகிட்டு இருக்க மாட்டான்...
    நோ... அப்படி இருக்கவே முடியாது... இதை நான் நம்பமாட்டேன்.. என்று மேஜர் சொல்லுவார்.


    நான் சொல்லறேன்... என் வீட்டுக்குள்ளேய திருட வந்தான்.. துப்பாக்கியால சுட்டேன் டாக்டர் சுட்டேன்...


    மகன் தெரிஞ்சுமா மனசு வந்து சுட்டிங்க...?


    ப்ச்சு... முதல்ல திருடன்னுதான் நினைச்சேன்... அப்புறம்தான் அவன் என் பிள்ளையா இருப்பானோன்னு யோசிச்சேன்... என்று சிவாஜி சொல்ல.
    .
    உடனே புள்ளை பாசம் உண்டாகி என் கிட்ட ஓடி வந்துட்டிங்க இல்லை என்று மேஜர் சரியான நக்கல் விடுவார்..

    அதுக்கு சிவாஜி.. என்னை கேலி செய்ய உரிமை உண்டு ராஜு.. ஐ மீன் டாக்டர் ராஜூ என்று சிவாஜி அவர் பங்குக்கு சொல்லுவார்.


    மிஸ்டர் ஷங்கர்... கொஞ்சம் சிந்திச்சி பாருங்க... ஒன்பது மாதங்களா தாயின் வயிற்றில் சிறையில் இருந்து... பத்தாவது மாசம் வெளிய வந்த உடனே கொலை செய்ய சொன்ன அந்த ஈவு இரக்கம் இல்லாத தகப்பன் எப்படி இருப்பான்? என்று பார்க்கும் ஆசையிலோ அல்லது வெறியிலேயோ உங்க பிள்ளை திருடனா வராம... திருடன் மாதிரி வந்து இருக்கலாம் இல்லையா? அதாவது நான் சொல்லறபடி சாகமா.. நீங்க சொல்லறபடி ஒருவேளை உயிரோடு இருந்து இருந்தா? என்று மேஜர் சொல்ல....


    சிவாஜி.. மேஜர் கிட்ட வந்து.. அழகான கற்பனை என்று சொல்லி விட்டு ஒருமைக்கு தாவி...ராஜூ நீ டாக்டருக்கு படிக்காம வக்கிலுக்கு படிச்சி இருந்தா நல்ல பேர் கிடைச்சி இருக்கும்டா என்று சொல்ல.,.. அதுவரை விரைப்பாய் இருந்த மேஜர் தன் நண்பன் தன்னை டா போட்டு பேசியதும் மகிழ்ச்சியில் இருவரும் மார்பில் செல்லமாக குத்திக்கொண்டு கட்டிப்பிடித்து கொள்ளும் காட்சி ஒன்று போதும்... சான்சே இல்லை.


    அயம் சாரி.. சங்கர்.. என்று மேஜர் சொல்ல....


    ராஜூ...


    சொல்லு சங்கர்.... என்று சொல்லியதில் இருந்து தன் மகனுக்காக பிளான்க் செக் கிழித்து கொடுக்கும் வரை நடக்கும் காட்சிகிள் உணர்ச்சி குவியல்கள்...


    கிளம்பும் நேரத்தில்... சித்தார் இசை கேட்க... கொல்ல சொன்ன பிள்ளையை இப்போதாவது எப்படி இருக்கின்றார் என்று நேரில் பார்க்க மனது துடிக்க.... ராஜூ , ராஜூ, ராஜூ, என்று பேசாமல் வீட்டை சுற்றி நடக்கும் அந்த காட்சியில் தகப்பன் பாசத்தை கண் முன்னால் நிறுத்தி இருப்பார் நடிகர் திலகம்.....


    உன் மகனை பார்க்கனுமா என்று மேஜர் கேட்கும் போது என்னால் எப்படி அவனை பார்க்கமுடியும்..? அதுக்கான அருகதை எனக்கு இருக்கா? என்பது போல் ரியாக்ஷன் காட்டிவிட்டு அந்த இடத்தை விட்டு கிளம்புவார்...


    இந்த இடத்தில் அவர் வெளியே போகாமல் கேமரா பிரேம் அவுட் ஆகிவிட்டோம் என்று நினைத்து சிவாஜி அவுட் பிரேமில் நிற்பார்.. ஆனால் அவர் ஷேடோ சுவற்றில் தெரியும்.. அதை அப்படியே கட் பண்ணி இருக்கலாம்...பட் மேஜர் அந்த பிளாக் செக்கை கையில் வைத்து ஒரு ரியாக்ஷன் கொடுப்பார்.... அதனால் அந்த ஷாட்டை ஷார்ப்பாக கட் பண்ணி இருக்கமாட்டார்கள்..

    கீழே முழு தெய்வமகன் படமும் இருக்கின்றது.. நான் மேலே விவரித்த அந்த காட்சி...1.41.47 நிமிடத்தில் ஆரம்பித்து 1.48.39 நிமிடத்தில் முடியும்.... அதில் முடியும் நேரத்தில் சிவாஜி வீட்டை வெளியே போகாத ஷேடோவையும் பார்க்கலாம்....


    அதுக்கு பிறகு பிள்ளை சிவாஜி பிளான்க் செக்கை எடுத்து போய் தன் தகப்பனை சந்திக்கும் அந்த காட்சியும் இதுவரை எந்த படத்திலும் பார்க்காத உணர்ச்சி குவியல் அது...அது கிழே உங்களுக்காக பார்த்து ரசியுங்கள்........





    ஆஸ்காருக்கு சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்பட வரிசைக்கு அனுப்பி வைக்கப்பட்ட திரைப்படம் இது..
    இயக்குனர் ஏசி திருலோக சந்தர்..வசனம் ஆருர்தாஸ், இசை விஸ்வநாதன் கேமரா தம்பு என்று தன் பங்குக்கு அத்தனை பேரும் மிரட்டி இருக்கின்றார்கள்...


    மற்றபடி இந்த ஒரு சீன் போதும் இந்த படத்துக்கு... மற்றது எல்லாம் பெரிய விஷயம் இல்லை...
    சிவாஜி என்ற அந்த மகா கலைஞனுக்கு இன்று பிறந்தநாள்...இது வைர விழா ஆண்டு... 1952 இல் பாரசக்தி திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்து 300க்கு மேற்ப்பட்ட படங்களில் நடித்து கலையை உயிர் மூச்சாக கொண்ட அந்த கலைஞனுக்கு இந்த பதிவும் அவருடைய மலர் பாதங்களுக்கு காணிக்கை... என் அம்மா ஒரு சிவாஜி வெறியை...

    படக்குழுவினர் விபரம்.

    Directed by A. C. Tirulokchandar
    Written by Harur Daas
    Starring
    Sivaji Ganesan
    Jayalalitha
    Music by M. S. Viswanathan
    Cinematography Thambu
    Release date(s)
    September 5, 1969
    Country India
    Language Tamil

    http://www.jackiesekar.com/2012/10/d...agan-1969.html
    Last edited by sss; 8th October 2015 at 05:36 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •