-
12th October 2015, 11:17 AM
#11
Senior Member
Diamond Hubber
வாசுஜி...
ம.க.ம.கா ஒரு அட்சய பாத்திரம் அல்லது அமுத சுரபி என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டு விட்டதால் எல்லோரும் "வாழ்த்துங்கள்" என்று கேட்டுக் கொள்கிறேன்.
அட கடவுளே... இந்த மூன்று பாடல்களுமே நான் கேட்டவைதான். ராகவ்ஜி சொல்லியிருக்கிறது போல இலங்கை வானொலியில் கேட்டிருக்கலாம். நினைவில் இல்லை. ஆனால் ஒவ்வொரு பாடலையும் கேட்க ஆரம்பித்ததுமே மெல்ல மெல்ல சரிந்தோடும் அருவி போல வரிகள் நினைவுக்கு வந்து விட்டன. ம்ம்.. இது போல எத்தனை எத்தனை முத்துக்கள் எந்தெந்த சிப்பிகளுக்குள் மறைந்து கிடக்குதோ ?
முத்துக் குளிக்க வாரீயளா ?
( ஆச்சியின் மறைவு அஞ்சலிகளில் பலரும் தில்லானா மோகனாம்பாளின் பாண்டியன் நானிருக்க பாடலும் அனுபவி ராஜா அனுபவி படத்தின் முத்துக் குளிக்க வாரீகளா பாட்டும் மனோரமா சொந்தக் குரலில் பாடியதாக வரிந்து கட்டிக் கொண்டு எழுதி இருக்காங்க..அவை எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலால் பிரபலமானவை அல்லவோ... திரை இசைப் பாடல்களை மிகவும் அறிந்து திறனாய்வு எழுதும் ஒருவர் தன் பதிவில் இவ்வாறு தவறுதலாக குறிப்பிட்டு எழுதி இருந்தார். இதை பதிவில் குறிப்பிட்டால் அவருக்கு கஷ்டமாக இருக்கும் என்று தனிமடல் அனுப்பினேன்... ஹிஹி.. என்னை குரூப்பிலிருந்து தள்ளிட்டாங்க )
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
12th October 2015 11:17 AM
# ADS
Circuit advertisement
Bookmarks