-
1st November 2015, 10:53 AM
#1291
Senior Member
Seasoned Hubber
Thanks (again) Rajesh! Informative article about Sunanda; I am saving it in my collection!
-
1st November 2015 10:53 AM
# ADS
Circuit advertisement
-
1st November 2015, 08:02 PM
#1292
Junior Member
Diamond Hubber
ஆடியிலே காற்றடித்தால் ஆயிரமாய் இலையுதிரும்
ஐப்பசியில் மழை பொழிந்தால்
அத்தனையும் தழைத்து வரும்
அவள் ஆடி வரப் பார்த்திருந்தேன்
ஆடி வந்து சேர்ந்தம்மா
ஐப்பசிக்கு காத்திருந்தேன்
எப்பசியும் தீரவில்லை
"மாசமும் ஐப்பசி
மழையும் பெய்யுது
அதற்கு தோதா ஒரு பாட்டு"
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
1st November 2015, 09:34 PM
#1293
Senior Member
Senior Hubber
ஆடியிலே காற்றடித்தால் ஆயிரமாய் இலையுதிரும்
ஐப்பசியில் மழை பொழிந்தால்// லைக் போட்டுட்டேனகண்டி என்ன பாட்னு நினைவுக்கு வர மறுக்குது..செந்தில்வேல்..
ஆவணி மலரே ஐப்பசி மழையே பாட் தான் நினைவுக்கு வருது
-
1st November 2015, 09:40 PM
#1294
Senior Member
Senior Hubber
சாமீஸ்..எனக்கொரு சந்தேகம்.. இந்த என் காதல் கண்மணி பாட் போட்டாச்சா. தெரிலை. முன்ன பார்த்தேனான்னும் நினைவில்லை..பட்
இப்பப் பாக்கறச்சே அவர் உற்சாகமா தாவி த் தாவி ப் பாட சோர்ந்து சோர்ந்து ஷீலா மயங்கி மயங்கி விழப்பார்க்க அதைத் தடுத்துரவி பாடிக்கிட்டே இருக்கறது இடிக்குதே.. மஞ்ச் குங்க்கும் பார்த்ததில்லியே..என்னவாக்கும் காரணம்..
-
1st November 2015, 09:48 PM
#1295
Senior Member
Senior Hubber
காலம் பாருங்க செந்தில்வேல் மழையை நினைவுபடுத்திட்டார்..மயில் இப்பத் தான் வ்ருது..
மயிலே மயிலே உன் தோகை எங்கே...சூப்பர் டூப்பர் ஹிட்டோன்னோ பாட்டு அந்தக்காலத்தில..படம் பார்த்ததில்லை
ஜென்சியோட கீச் குரல் நன்கு இந்தப் பாட்டில் தெரியும்..
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
1st November 2015, 10:08 PM
#1296
Senior Member
Veteran Hubber
mazhai kooda oru naaLil
From Malaiyitta Mangai
mazhai kooda oru naaLil then aagalaam
maNal kooda sila naaLil pon aagalaam........
M.S.Rajeswari is the singer !
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
1st November 2015, 10:16 PM
#1297
Senior Member
Diamond Hubber
மீள் பதிவு
Originally Posted by
chinnakkannan
சாமீஸ்..எனக்கொரு சந்தேகம்.. இந்த என் காதல் கண்மணி பாட் போட்டாச்சா. தெரிலை. முன்ன பார்த்தேனான்னும் நினைவில்லை..பட்
இப்பப் பாக்கறச்சே அவர் உற்சாகமா தாவி த் தாவி ப் பாட சோர்ந்து சோர்ந்து ஷீலா மயங்கி மயங்கி விழப்பார்க்க அதைத் தடுத்துரவி பாடிக்கிட்டே இருக்கறது இடிக்குதே.. மஞ்ச் குங்க்கும் பார்த்ததில்லியே..என்னவாக்கும் காரணம்..
இன்றைய ஸ்பெஷல் (63)
'இன்றைய ஸ்பெஷலி' ல்
அன்று திரும்பிய இடங்களிலெல்லாம் எதிரொலித்த சூப்பர் ஹிட் பாடல். அனைத்து வானொலிகளிலும் தினம் தினம் ஒலித்த உற்சாகப் பாடல். பாகுபாடின்றி அனைவரும் ரசித்த ஒரு பாடல். பாலாவின் மணிமகுடத்தில் வைரமாய் பதிந்த பாடல். நம் நெஞ்சங்களில் நிறைந்த பாடல்.)
படம்: மஞ்சள் குங்குமம் (1973)
பாடல்: 'வாலிப கவிஞர்' வாலி
இசை: சங்கர் கணேஷ்
பாடியவர் : பாலா )
கொள்ளை அழகு கொஞ்சும் ரவிச்சந்திரன். இந்தப் படத்தில் பிளாக் அண்ட் ஒயிட்டில் ரொம்ப ரொம்ப சுந்தரனாகத் தெரிவார். உடம்பும் படு ஸ்லிம். சொந்த மனைவி ஷீலாவுடனான பாடல். ரவியைப் பொருத்தவரையில் இது டூயட். ஷீலாவைப் பொருத்தவரை இது சோகம்.
நர்ஸ் ஷீலாவை விரட்டி விரட்டிக் காதலிக்கும் ரவி. பிடி கொடுக்காத ஷீலா. ஆனால் தனக்கு ஏற்பட்ட நோயினால் மரண வாசலை எதிர் நோக்கும் ஷீலா. ஆனால் ரவியிடம் காதலை சூழ்நிலை காரணமாக சொல்லிவிட, ரவி மகிழ்ச்சித் தாண்டவம் ஆடி 'இதுவரை உன் காதலை என்னிடம் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தாயே' என்ற அர்த்தத்தில் பாட, ஆனால் அது ஷீலாவைத் தாக்கியுள்ள நோயை அவர் ரவியிடம் சொல்லாமல் மறைக்கும் அர்த்தத்தை நமக்கு உணர்த்தும் அருமையான வரிகள். ' என்னடா இது இப்படியா கதை'?! என்று படம் பார்த்தவர்கள் என்னை ஒரு பிடிபிடித்துவிடப் போகிறீர்கள்?
நான் இந்தப் படத்தை இன்னும் பார்க்கவில்லை. சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இந்தப் பாடலுக்கான காட்சியையும், பாடல் வரிகளையும் வைத்து என் மனதில் இப்படத்தின் கதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கற்பனை செய்து வைத்திருந்தது. அது ஓரளவிற்கு சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். (கார்த்திக் சார் இருக்கும் போது எனக்கென்ன பயம்?))
நோயின் கொடுமை தாளாமல் தள்ளாடித் தள்ளாடி மயங்கி விழப் பார்க்கும் ஷீலா. ரவி தன்னிடம் நெருங்கி வரும்போது அதை மறைக்குமிடம் பரிதாபம். அது தெரியாமல் காதல் வெற்றி பெற்றதே என்று ரவியின் அளவு கடந்த உற்சாக வெள்ளம். 'பிளாக் அண்ட் பிளாக்' பேண்ட் ஷர்ட்டில் ரவி கண் கவருவார். அந்த நடையும், ஓட்டமும், துள்ளலும், சுறுசுறுப்பும் நம்மை 'ரவி ரவிதான்' என்று சந்தோஷக் கூப்பாடு போட வைக்கின்றன. முகம் வசீகரம். (ஷீலா ஏன் மயங்க மாட்டார்?)
நடிகர் திலகத்தை பாலோ பண்ணி அதே போல் விக், உடை வகையறாக்கள் என்றாலும் அது இவர் ஒருவருக்குப் பொருந்துவது போல வேறு யாருக்கும் பொருந்த வில்லையே! அழகான நடிகர் திலக ஜெராக்ஸ். (திருப்பதி லட்டு கிடைக்காத பட்சத்தில் தி.நகர் லட்டு கிடைத்ததைப் போல)
பூங்காக்களிலும், மெரினாவிலும் படமாக்கப்பட்ட பாடல். உச்சி வெயிலில் படமாக்கியிருப்பார்கள். ரவி நிழலுருவம் மிகச் சிறியதாக விழும்.
பொலிவிழந்த ஷீலா பாடலுக்கு ஒரு மைனஸ் பாயிண்ட். கதை அப்படி இருக்கையில் ஒன்றும் செய்வதற்கில்லை.
வாலி கதை புரிந்து அதற்கேற்றவாறு பிளந்துகட்டியிருப்பார்.)
சங்கர் கணேஷின் மிகச் சிறந்த பத்துப் பாடல்களில் இப்பாடலும் இடம் பெறலாம். அற்புதமான இசைக்கருவிகளை ஆர்ப்பாட்டமாக உபயோகித்து காலத்தால் அழியாத காவியப் பாடலாக இரட்டையர்கள் இதைத் தந்து விட்டார்கள். இசைக்கருவிகளின் உன்னத ஆர்ப்பாட்டம். முக்கியமாக பாடலினூடே நிறைந்து வரும் அந்த புல்லாங்குழல் ஓசை. பாடல் முடிவடைந்தவுடன் நிறைவு தரும் அந்த இனிய ஓசை.
(எப்படிப்பட்ட பாடல்களையெல்லாம் தந்த திறமைசாலிகள்! கெடுத்துக் குட்டிச் சுவராக்கிய பெருமை தேவருக்கே உண்டு. சும்மா ஆட்டுக்கும், மாட்டுக்கும் 'டொன் டொன் டொய்ங்' பின்னணி போட வைத்து உருப்பட விடாமல் செய்த புண்ணியம். அப்புறம் இளையராஜாவின் போட்டியை சமாளிக்க 'கன்னிப் பருவத்திலே' கொடுத்து அது ஹிட்டாகித் தொலைக்க, டிராக் மாறியதால் நமக்குத்தான் நஷ்டம் நிறைய.)
சரி! எல்லோரையும் சொல்லியாயிற்று. இப்பாடலின் ஹீரோ யார்? ரவியா? ரவி இரண்டாவதுதான்.)
'பாடும் நிலா' பாலுதான் இப்பாடலின் ஹீரோ. மனிதர் மனதை அப்படியே கொள்ளை கொண்டு விட்டார். வேகம், தெளிவு, வைப்ரேஷன்ஸ், கம்பீரம், உற்சாகம், சந்தோஷம், ஹைபிட்ச், குழைவு, நெளிவு, சுளிவு என்று அமர்க்களமோ அமர்க்களம். அதுவும் 'ராதா' என்று முடிக்கும் போது தரும் அதிர்வுகள் அருமை. 'சொல்ல நா... ணம் வந்ததோ' அந்த 'நா' வுக்குப் பிறகு சின்ன இடைவெளிவிட்டு 'ணம்' தொடருவது பிரமாதம். இது ரவியின் சொந்தப்படம் என்று சொல்வார்கள்.)
என் காதல் கண்மணி
ஏதேதோ நினைத்தாளோ
சொல்ல நாணம் வந்ததோ
சொல்லாமல் மறைத்தாளோ
ராதா ராதா ராதா
என் காதல் கண்மணி
ஏதேதோ நினைத்தாளோ
சொல்ல நாணம் வந்ததோ
சொல்லாமல் மறைத்தாளோ
ராதா ராதா ராதா
(இடையிசை அமர்க்களம்)
என் வீட்டுத் தோட்டத்தின் புது மல்லிகை
எந்நாளும் சிந்தட்டும் இளம் புன்னகை
என் வீட்டுத் தோட்டத்தின் புது மல்லிகை
எந்நாளும் சிந்தட்டும் இளம் புன்னகை
வாடாத மலரே தேயாத நிலவே
வாடாத மலரே தேயாத நிலவே
நாள்தோறும் என்னோடு உறவாட வா
ராதா ஆஆ.......... ஆ
என் காதல் கண்மணி
ஏதேதோ நினைத்தாளோ
சொல்ல நாணம் வந்ததோ
சொல்லாமல் மறைத்தாளோ
ராதா ராதா ராதா
(ஷீலாவுக்கு வரப் போகும் ஆபத்தை முன்னமேயே அருமையாக உணர்த்தும் இசை)
கண்ணுக்குள் விளையாடும் கலை அன்னமே
காலத்தில் அழியாத எழில் வண்ணமே
கடல் வானம் யாவும் தடம் மாறினாலும்
கடல் வானம் யாவும் தடம் மாறினாலும்
மாறாத நிலை கொண்ட மனம் உண்டு வா
ராதா ஆஆ.......... ஆ
என் காதல் கண்மணி
ஏதேதோ நினைத்தாளோ
சொல்ல நாணம் வந்ததோ
சொல்லாமல் மறைத்தாளோ
ராதா ராதா ராதா
உன் நெஞ்சம் பொன் நெஞ்சம் அறியாததோ
உனதெல்லாம் எனதென்று தெரியாததோ
பனி தூங்கும் விழியே
பால் போன்ற மனமே
பனி தூங்கும் விழியே
பால் போன்ற மனமே
வருங்காலம் நமதென்ற முடிவோடு வா
ராதா ஆஆ.......... ஆ
என் காதல் கண்மணி
ஏதேதோ நினைத்தாளோ
சொல்ல நாணம் வந்ததோ
சொல்லாமல் மறைத்தாளோ
ராதா ராதா ராதா
Last edited by vasudevan31355; 1st November 2015 at 10:19 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
1st November 2015, 10:33 PM
#1298
Senior Member
Senior Hubber
என் நட்பான கண்மணீஈஈ..வாஸ்ஸு.. தாங்க்ஸ்..எஸ்.. நீங்கள் போட்டிருந்தது நினைவு வந்துவிட்டது..பட் என ஆரம்பித்து வாக்கியம் தொடங்கு முன்..எஸ்வி.சேகரின் வண்ணக்கோலங்களில் ஒரு காட்சி..
எஸ்வி.சேகர்.: எங்க மேனேஜர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்..எங்க ஆஃபீஸ் அக்கெளண்டண்ட்டுக்கு ஏற்பட்ட நிலைமையை க் கேட்டீன்னா உனக்குத் தெரியும்
ஃப்ளாஷ் பேக்..
என்ன ராமசாமி இப்படி ஆகிட்டீங்க.இப்படி கசங்கி இருக்கீங்களே
என்ன செய்றதுவாசு ( எதேச்சையாக சீரியலில் சேகர் பெயரும் வாசு தான்!) நான் இந்த நிலைமைக்கு வரக்காரணம் நம்ம மானே..ஜர் தான்...ர்ர்ர்
சரி சரி என்ன ஆச்சு
ரெண்டு நாள் குளிக்காம வந்தேன்னு என்னை டிஸ்மிஸ் பண்ணிட்டாம்ப்பா அந்த மேனேஜர்..
சேகர் மூக்கைப் பொத்தியவாறே... அதற்கப்புறமாவது குளிச்சுருக்கலாம்ல..
*
எனில் மீள் பதிவுல்லாம் சரி.. ம. கு பார்த்தீர்களா என்ன அதன் பிறகு..?
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st November 2015, 10:37 PM
#1299
Junior Member
Diamond Hubber
சின்னக்கண்ணன் சார்
Originally Posted by
chinnakkannan
ஆடியிலே காற்றடித்தால் ஆயிரமாய் இலையுதிரும்
ஐப்பசியில் மழை பொழிந்தால்// லைக் போட்டுட்டேனகண்டி என்ன பாட்னு நினைவுக்கு வர மறுக்குது..செந்தில்வேல்..
ஆவணி மலரே ஐப்பசி மழையே பாட் தான் நினைவுக்கு வருது
Uthaman│Kanavukaley Kanavukaley│Sivaji Ganesan, P:
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st November 2015, 10:46 PM
#1300
Senior Member
Senior Hubber
நம்ம நட்பு என்னா நட்பு வாசு..வர்ணிக்க வார்த்தையே இல்லை.. நான் கேட்டா தேடி எடுத்துச் சமர்த்தாக் கொடுத்துட்டீஙக்..
உமக்காக இரு தோழிகள் பாடும் பாடல் (ஆம்பள பாடற பாட் கிடைக்கலையான்னு கேக்கப் படாத் )
தீபத்தின் ஒளியாக ஒரு பாதி நான்
தேன் கொண்ட மலராக மறு பாதி நீ(ர்)
காற்றில் ஒலியாக வருவேனடி
கனவுக்குள் நினைவாக வருவாயடி..
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஒரே ராகம்..
தோழமை உறவுக்கு ஈடேதம்மா
நீ சொன்ன மொழி நானே கேட்பேனம்மா
வட்டத்துக்குள் சதுரம் மகரிஷி நாவலாய் மாலைமதியில் வந்த நினைவு..கதை இரு தோழிகள் கதை என்பது மட்டும் நினைவில் கொஞ்சூண்டு மிகத் தெளிவின்றீருக்கிறது..
லத்து சுமி..ம்ம் பார்க்கணும் படம்..
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
Bookmarks