-
6th November 2015, 01:25 PM
#1411
Senior Member
Diamond Hubber
வாசு ஜி...
தொட்டுப்பார்.. பாட்டு அந்தக் காலத்திலேயே ஒரு வித்தியாசமான பாட்டாகத்தான் உணரப் பட்டது... அதாவது எனக்கு...
அது பேய்ப்படம்.. மர்மப்படம் என்று சொல்லி எங்களை பாட்டி வீட்டில் விட்டுவிட்டு பெரியவங்க ( வயசானவங்க எங்களுக்கு காவல் )
கூட்டமாக போய் பார்த்து விட்டு வந்து கதை சொன்ன படம்..
எல்.ஆர் பாடவேண்டிய பாட்டை அசத்தலாகப் பாடி ஆட வைத்தவரைப் பற்றி சொல்ல ராஜேஷ்தான் வரணும்..
"பாடி வரும் நிலவோ", " நெஞ்சுக்கு தெரியும் நிலவுக்கு தெரியும்", "ஆனாலும் நிலவு வந்தால்", "நிலவு பிறந்த நேரத்திலே" என்று படத்தின் பல பாடல்களிலும் வந்து கொஞ்சும் நிலா இந்தப் பாட்டில் வராமல் இருக்குமா ?
பாப்பா பாப்பா கதை கேளுன்னு சொல்லி சிக்காவை அழைப்போம்...
வாசுஜி.... என்னால் டைப் அடிக்க முடிஞ்சது இவ்வளவுதான்.. ராகவ்ஜி எனும் சுனாமி வந்து முத்து, பவளம் என அள்ளிக் கொட்டப் போகுது....
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
6th November 2015 01:25 PM
# ADS
Circuit advertisement
-
6th November 2015, 01:53 PM
#1412
Senior Member
Diamond Hubber

Originally Posted by
madhu
வாசு ஜி...
தொட்டுப்பார்.. பாட்டு அந்தக் காலத்திலேயே ஒரு வித்தியாசமான பாட்டாகத்தான் உணரப் பட்டது... அதாவது எனக்கு...
எனக்கு(ம்)
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th November 2015, 01:54 PM
#1413
Senior Member
Diamond Hubber

Originally Posted by
madhu
வாசு ஜி...
ராகவ்ஜி எனும் சுனாமி வந்து முத்து, பவளம் என அள்ளிக் கொட்டப் போகுது....
நானும் உங்களைப் போலவே எதிர்பார்த்துக் கொண்டேதான் இருக்கிறேன் மதுண்ணா!
-
6th November 2015, 02:01 PM
#1414
Senior Member
Diamond Hubber

Originally Posted by
rajeshkrv
NT nadithirundhal adhu oru madhiri irundhirkkum.
vera madhiri
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th November 2015, 04:32 PM
#1415
Senior Member
Senior Hubber
//பாப்பா பாப்பா கதை கேளுன்னு சொல்லி சிக்காவை அழைப்போம்...// அஃதெல்லாம் வேண்டாம் மதுண்ணா.. எனக்கு ரொம்பப் பிடிச்ச ஹிந்திப்பாட்டோட தமிழ் வெர்ஷன் ஆஹா ஆஹா இன்று தேன் நிலவு கொடுத்து அழைச்சுட்டீங்களே..
நெஞ்சுக்குத்தெரியும்.... நினைவுக்குப் புரியும் - இந்தப் பாட் ரேடியோ சிலோன்ல ஈவ்னிங் பாட்டும் பதமும் ல.. அம்மா அப்பா சேர்ந்து இருந்தால் வாழ்க்கையில் நெஞ்சுக்கு நிம்மதி - என்பது போல வார்த்தை போட்டு - நெஞ்சுக்கு என்று வரும் போது இந்தப் பாட்டை மயில்வாகனமோ அப்துல் ஹமீதோ போடுவார்..ஆஹா ஒரு மாதிரி ச்சிலீர் என்று இருக்கும் ஈவ்னிங்க் டயத்திலேயே.. அப்புறம் இப்போதுசமீபத்தில் தான் பார்த்துக் கேட்டேன்..
அதே படத்தில் தொட்டுப்பார் பாட்டு வழங்கிய வாஸ்ஸூவிற்கு நன்றி.. பாட் கேட் படித் ரசித் செய்ய என்னமோ இன்னும் கைவரவில்லை மதுண்ணா செய்றேன்..
இப்போ ஆஜா ஆஜா கேக்கலாமா..
இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் துபாயில் வீக் எண்ட் பார்ட்டிகளில் - ஹோட்டலில் மியூசிக் ட்ரூப் இருந்தால்- நான் விரும்பிக் கேட்ட பாடல் இதுவே..
Last edited by chinnakkannan; 6th November 2015 at 04:34 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th November 2015, 10:51 PM
#1416
Junior Member
Diamond Hubber
நான் ராஜா வீட்டு கன்னுக்குட்டி கன்னுக்குட்டி
எந்த ராணியும்நிக்கனும்
கையக்கட்டி கையக்கட்டி
முன்புஅடிக்கடி ஒலிக்கும் இந்தப்பாடல் என்னபடம்?
-
6th November 2015, 10:54 PM
#1417
Senior Member
Seasoned Hubber
அடடா.. அசத்தலான பாட்டைப் போட்டு வாசு தூள் கிளப்பியிருக்கிறாரேன்னு படிச்சிட்டு வந்தா, முத்து பவளம் முக்கனி சக்கரையெல்லாம் எதிர்பாக்கிறாங்களே...
என்ன செய்யலாம்...
சட்டியில் இருப்பதைக் கொட்டி விடுவோம். அது முக்கனியோ சக்கரையோ முத்தோ பவளமோ ,,, அவரவர் தீர்மானித்துக் கொள்ளட்டுமே...
வேதா என்ற மாபெரும் இசை மேதையைத் தமிழுலகிற்குத் தந்த இறைவனுக்கு முதலில் நன்றி சொல்வோம்...
அம்மா எங்கே அவருடைய மாஸ்டர்பீஸ் என்றே சொல்ல வேண்டும்...
சின்ன வயதில் அம்மா எங்கே படமென்றால் முதலில் ஞாபகத்திற்கு வந்தது பாப்பா பாப்பா கதை கேளு தான்..
ஆனால் படமோ பேய்ப் படம்... இப்போ என்னென்னமோ பேய்ப் படம் எடுக்கிறாங்களாமே... அதையெல்லாம் ஓரங்கட்டி விட்டு இந்தப் படத்தை டிஜிட்டலில் எடுத்து வெளியிட்டால்... வசூல் அள்ளி விடும்...
கொஞ்சம் விவரம் தெரிந்து பாடல்களில் நாட்டம் வந்த போது முதலில் ஈர்த்தது நான் வணங்கும் தெய்வம் நீயே பாடல் தான். ரொம்ப நாள் இந்தப் பாட்டு வாழ்க்கை வாழ்வதற்கே என்று நினைத்துக் கொண்டிருந்தேன், ரேடியோவில் கேட்கும் வரை. அதற்கு முன் சவுண்டு சர்வீஸ், கல்யாணம், மீட்டிங் இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் தான் கேட்டதுண்டு. அப்போதெல்லாம் தி.மு.க. காங்கிரஸ் மீட்டிங் தவிர, மற்ற எல்லா நிகழ்ச்சிகளிலும் எல்லா பட பாடல்களும் போடுவார்கள். ரேடியோவில் அறிவிப்பு கேட்கும் வரை அம்மா எங்கே படத்தில் பாப்பா பாட்டும், சுசீலாவின் நிலவு பிறந்த நேரத்திலே பாட்டும் தான் தெரியும். நெஞ்சுக்குத் தெரியும் பாட்டை ரிக்கார்டில் ஒலிபரப்பியதே எனக்கு தெரிந்து கிடையாது. ரிலீஸான போது படம் பார்ப்பதற்குத் தடை.. அதனால் சில ஆண்டுகள் கழித்து மறுவெளியீட்டில் தான் பார்க்க முடிந்தது. படம் முழுக்க வேதாவின் இசை படத்தின் திகிலுணர்வைக் கூட்டிக்கொண்டே இருக்கும்.
தொட்டுப்பார் பாட்டு மட்டுமல்ல, நெஞ்சுக்குத் தெரியும் பாட்டிலும் ரொம்ப நேரம் இசைக்குப் பிறகு தான் சுசீலாவின் குரல் ஒலிக்கும். அது கூட தாளம் எதுவும் கிடையாது. மிகவும் யதார்த்தமாக சூழ்நிலைக்கு ஏற்றவாறு அமைத்திருப்பார். என்னதான் தழுவல் என்றாலும் அதை அவர் கொண்டு வந்த விதம் வேறு யாராலும் கற்பனை கூட செய்ய முடியாத அளவிற்கு அற்புதமாக இருக்கும்.
அம்மா எங்கே .. வேதாவின் ரசிகர்களுக்கு திகட்டாத தேனமுது
எப்போது கேட்டாலும் சலிக்காத, அலுக்காத அந்த விருந்திலிருந்து ஒரு பகுதி...
நான் வணங்கும் தெய்வம் நீயே கண்ணான கண்ணா..
வாசு சார் நினைவுகளை மீட்ட வைத்ததற்கு மிக்க நன்றி.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
6th November 2015, 11:10 PM
#1418
Senior Member
Senior Hubber
செந்தில்வேல்,
எம்.ஹெச் சிவண்ணா ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர், அவர் மனைவி தேவரம்மா.. அவர்கள் இருவருக்கும் பிறந்தவர் தான் மஞ்சுளா..கன்னடத்திலிருந்து வந்து தமிழ்ப்புதுவெள்ளத்தில் நனைந்ததால் கன்னட மஞ்சுளா என அழைக்கப் பட்டார்.. கன்னடத்தில் நிறைய படங்கள் தமிழில் சில அவ்வப்போது சி.க நினைவிலிருந்து நழுவி பின் வாசுவிடம் திட்டு வாங்கி நினைவு படுத்தப் படுபவர்..
கன்னடத்தில் நல்ல நடிகையாக நடித்திருந்தாலும் உடல் நிலை சரியில்லாமல் போனதாம்.. பின் ஒரு சுபயோக சுப வேளையில் தமிழ் டைரக்டர் கம் கன்னட டைரக்டர் அமிர்தத்தை மணம் புரிந்து கொண்டாராம்..பட் பட்.. 86 இலேயே தற்கொலையோ அல்லது உடல் நலக் குறைவின் காரணமாகவோ இறந்து விட்டாராம்.. என விக்கிப் பீடியா சொல்கிறது..
ஸோ.. நீங்கள் கேட்ட ராஜா வீட்டுக் கன்னுக்குட்டிப் பாடலில் நடித்தவர் அவரே
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
6th November 2015, 11:11 PM
#1419
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
senthilvel
நான் ராஜா வீட்டு கன்னுக்குட்டி கன்னுக்குட்டி
எந்த ராணியும்நிக்கனும்
கையக்கட்டி கையக்கட்டி
முன்புஅடிக்கடி ஒலிக்கும் இந்தப்பாடல் என்னபடம்?
pudhuvellam
music: M.B.Srinivasan
Lyrics: vaali
singer:P.Susheela
Actress: Kannada Manjula
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th November 2015, 11:20 PM
#1420
Junior Member
Diamond Hubber
சிம்பொனிக்காக வெளிநாடு சென்று வந்த இளையராஜா அந்த சிம்பொனி இசைக்கோப்புகளில் சிலவற்றை இரண்டு படங்களுக்கு பயன்படுத்தியதாக அப்போது செய்தி
பத்திரிக்கைகளில் வந்தது.
அந்த இரண்டு படங்கள்
1.ராஜகுமாரன்
2.மகாநதி
ராஜகுமாரனில் ஒரு சங்கீதம் இப்போது கேட்கலாம்.
பொட்டு வச்சதாரு யாரு யாரு
அன்னையே வட்ட முகத்துல
பொட்ட வச்சதாரு யாரு
கட்டி வச்சதாரு யாரு யாரு
தாலியை தேதிகுறிச்சு*
வெட்டி வச்சதாரு யாரு யாரு
வெள்ளி கொலுசு மண்ணில் விழுதே
சொல்லி அழுது என் சோகம் பாடுதே
பொட்ட வச்சதாரு யாரு யாரு
அன்னையே வட்ட முகத்துல
பொட்ட வச்சதாரு யாரு
ஆலான பேரு வேரோடு போச்சு
ஆவாரம் காண வீணாகலாச்சு
தாயே உன் தாலி சேதாராமாச்சு
தீயோடு சேர்ந்து தீயாகிப்போச்சு
கண்டாங்கிச்சேல வண்ணச்சோலை வெறும் நூலாச்சு
செண்டான மாலை இந்த வேளை அந்த நூலாச்சு
தாங்காத பாரம் யார் தாங்கக்கூடும்
தாய் வாடினால் சேய் தாங்குமா
பொட்ட வச்சதாரு யாரு யாரு
அன்னையே வட்ட முகத்துல
பொட்ட வச்சதாரு யாரு
கூண்டோடு சாய்ஞ்சு தூங்காம தேங்கி
நீ பாட கேட்டேன் தாலாட்டு பாட்டு
ஊராரும் கூடி உன் பேரை கூறி
ஒப்பாரிப்பாட்டை இப்போது கேட்டேன்
கல்லான சாமி முகம் காமி இது பொய்தானா
இல்லாது போனால் இங்கு நீ வாழ்ந்தது மெய்தானா
ஆகாயம் சாய்ஞ்ச்சா ஆதாரம் யாரு
தாய் வாடினால் சேய் தாங்குமா
பொட்ட வச்சதாரு யாரு யாரு
அன்னையே வட்ட முகத்துல
பொட்ட வச்சதாரு யாரு
சோகம்
Pottu Vachathu Yaaru - Prabhu,Sujatha - Sad Song :
சந்தோசம்
Pottu Vachathu Yaaru | Rajakumaran | Tamil Film S:
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
Bookmarks