-
8th November 2015, 10:47 AM
#1451
Senior Member
Senior Hubber
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..
வாசு..விரிவான பின்னூட்டத்திற்கு தாங்க்ஸ்..
கன்னிப் பருவமதில்..பாட்டு கேட்டு கொஞ்ச நேரம் காதுகளிலேயே ரீங்கரிச்சுக்கிட்டு இருந்தது.. இதுல பிக்சரைஸேஷன் பண்றச்சே யோசிக்க மாட்டாங்களா என்ன பண்டரிபாய் சூட் ஆவாரான்னு..அஸோகன் அது வேற..
எ இ ம கேள்விப் பட்டு மட்டும் இருக்கிறேன் பார்த்ததில்லை..ப.கோ கல்யாண சுந்தரம் எழுதிய மிகச் சில காதல் பாடல்களில் என்னருமைக் காதலிக்கும் ஒன்று..கல் நாயக் போட்டிருந்தாரா தெரியவில்லை..
ஓ வெண்ணிலாவும் நல்ல ஃபாஸ்ட் சாங்க்..அதுவும் எனக்குப் பிடிக்கும்..
//ம்...கருணாநிதிக்கு தேவிகா ஆரம்பகால ஜோடி. முகம் அகன்று பின்னால் அம்சமாக களை கொண்ட தேவிகா போல இருக்க மாட்டார். ஆண்பிள்ளைக் களை கொஞ்சம் முகத்தில் குடி கொண்டிருக்கும்.// ப்ரிண்ட் நல்லா இல்லாததனால அந்த ஆ.பி களை எனக்குத் தெரியலை! (ஹெள ஐ கேன் லெட் டெளன் தேவிகா?!) பட் உடலிலும் முகத்திலும் உணர்விலும் அசாத்திய இளமை.. ஒண்ணு கவனிச்சீங்களா இந்தப் பாட் சிச்சுவேஷன் ந.தி பாடியிருந்தா இன்னும் நல்லா இருக்கும் பட் வித் தேவிகா அஸ் ஜோடி.. நோ பானுமதி!
தாங்க்ஸ் வாஸ்ஸு..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th November 2015 10:47 AM
# ADS
Circuit advertisement
-
8th November 2015, 12:00 PM
#1452
Senior Member
Diamond Hubber
'வெண்ணிலா ஜோதியை வீசுதே'
'மணமகன் தேவை' படப் பாடல் அலசல்.
'The Fabulous Senorita' என்ற ஆங்கிலப் படத்தின் தழுவலே 'மணமகன் தேவை'. 39 ஆவது படம் நடிகர் திலகத்திற்கு.

'நடிகர் திலகம்' கண்டசாலா குரலில் கிடார் இசைத்து அப்படியே இங்கிலீஷ் பிக்சர்தான் பார்க்கிறோமோ, ஹாலிவுட்டில்தான் இருக்கிறோமா என்று எண்ணுமளவிற்கு மேற்கத்திய இசையில் பால்கனியில் நின்று பார்க்கும் பானுமதியை பார்த்து பாடல் இசைக்க, ஒரே பானுமதி இரண்டு பெண்ணாக நடித்து இன்னொரு பக்கம் வேக வேகமாகப் பாடும் 'முட்டைக் கண்ண'ரையும் சமாளிக்க... அடடா! மீசை மழித்து நடிகர் திலகம் என்ன ஒரு ஆங்கில நடிகர் தோற்ற தேஜஸ்! என்ன மாதிரி வாயசைப்பு! (கண்டசாலாவும் நடிகர் திலகத்தை மனதில் வைத்து அழுத்தந்திருத்தமாகப் பாடி அசத்தியிருப்பார்)
'வெண்ணிலா ஜோதியை வீசுதே
மண்ணிலே வெண்முலாம் பூசுதே
என் மனம் இன்பமே காணுதே'
என்று கண்டசாலா எம் கணேசப் பெம்மானுக்குப் பாட,
உடன் ஒலிக்கும் பானுமதியின் இனிமையான குரலை எதனுடன் ஒப்பிடுவது! எப்படி ஒப்பிடுவது!
'தென்றலே இனிமையாய் வீசுதே
கண்களே காதலைப் பேசுதே
என் மனம் இன்பமே காணுதே'
நடிகர் திலகம் கீழே படுஸ்டைலாக நின்றுகொண்டு கிடார் இசைக்கும் அழகைக் காணுங்கள். 'டை'யுடன் டிரஸ் அமர்க்களம். இன்னிங் அவ்வளவு அழகாக, பெர்பெக்டாக இருக்கும் அவருக்கு.
'அன்பினால் நெஞ்சமே ஆடிப்பாடுதே
ஆசையும் நேசமும் உன்னை நாடுதே
கொஞ்சிடும் கோகிலம் சொந்தமே ஆகிடும்
அந்த நாள் காணவே ஏங்குதே'
'பொட்டு வைத்த முகமோ'விற்கு 'சுமதி என் சுந்தரி'யில் பாலாவிற்குத் தக்கபடி நடிகர் திலகம் வாயசைத்தது இருக்கட்டும். அது 1971ல்.ஆனால் 1957ல் வந்த 'மணமகன் தேவை' படத்திலேயே தனக்குப் பொருந்தாத கண்டசாலா குரலையும் கூட தன் திறமையான வாயசைப்பினால் அப்போதே பொருந்த வைத்த சிங்கக் குட்டி அல்லவோ எங்கள் சூரக்கோட்டை சிங்கம்.
பானுமதி அதற்கு பதில் கொடுப்பார் பாருங்கள் 'ஷாவ்லின் டெம்பிள்' சைனா கதாநாயகி மாதிரி.
'அந்தநாள் விரைவிலே வந்து சேருமே
சிந்தனைக் கனவுகள் நனவு ஆகுமே (சூப்பர்)
பண்புறும் இலலறம்
மாசில்லா நல்லறம்
தன்னிலே மகிழலாம் என்றுமே'
பானுமதி 'வெண்ணிலா ஜோத்தியை' என்று உச்சரிப்பது வெகு அழகு.
கண்டசாலா நடிகர் திலகத்திற்கு இப்போது பல்லவி வரிகளைப் பாடி முடிப்பதற்கு முன்னாலேயே அங்கு 'ஓ'...என்று மறுபக்க பால்கனி பக்கம் ஹம்மிங் கேட்கும் .டி.ஆர்.ராமச்சந்திரன் பானுமதியைப் பற்றி உருகிப் பாட ஆரம்பித்து இருப்பார் அதே பானுமதியை சைட் அடித்துக் கொண்டு. பானுமதி பால்கனியின் மறுபக்கம் சென்று கோட் அணிந்து ராமச்சந்திரனுக்கு பரவச தரிசனம் தருவார்
'திண்டாடுதே என் கண்களே
சிங்காரி உன்னையே தேடி
தீயாகுதே என் நெஞ்சமே
செய்யாதே வீண் காலதாமதம்
முன்னாலே வாராய்
என்னை நீ பாராய்
திண்டாடுதே என் கண்களே
சிங்காரி உன்னையே தேடி
தீயாகுதே என் நெஞ்சமே
செய்யாதே வீண் காலதாமதம்'
இப்போது ராமச்சந்திரனுக்கு பானுமதி பதில் தருவார் பாட்டிலே.
'வந்தேனே ஓடி (நடிகர் திலகத்துக்கு கல்தா கொடுத்துவிட்டு)
நான் உன்னைத் தேடி
வாடாமலே ஆடாமலே
ஒ வா மன்னா என்னைப் பாராய்'
பானுமதி 'வா மன்னா' வை அவ்வளவு வேகமாக அற்புதமாக உச்சரிப்பார். அடுத்த வரிதான் இன்னும் சூப்பர்.
'மண் மீதிலே சில நாளிலே நீ மாப்பிள்ளை ஆகப் போகிறாய்'
விரலால் உதைப்பது போன்ற பாவம் காட்டி ராமச்சந்திரனுக்கு நம்பிக்கை மோசம் தரப் போவதை அழகாக முன்னமேயே காட்டி விடுவார் பானுமதி. எப்பேர்பட்ட நடிகை! இப்போதும் இருக்குங்களே! பாவம் முட்டைக் கண்ணர். நடக்கப் போவது தெரியாமல் ஏமாந்து பரிதாபமாக உருகுவார் காதலி மீது.
'என் காதிலே தேன் பாயுதே
உன் இன்பமான மொழியாலே
திண்டாடுதே என் உள்ளமே
நம் வருங்காலம் தன்னை எண்ணியே'

அப்படியே கண்டசாலா குரல் இப்போது மீண்டும் ஆரம்பமாக பானுமதி மறக்காமல் கோட்டை கழற்றி அங்கேயே அதை நிற்க வைத்துவிட்டு பழைய உடையில் நடிகர் திலகத்தின் பக்கம் போய் விடுவார். (தன் கோட் மட்டுமே இருந்தால் கூடப் போதும்...அதைப் பார்த்தே ராமச்சந்திரன் தன்னை மறந்து மணிக்கணக்கில் பாடிக் கொண்டிருப்பார். ...தான் இல்லையென்று கண்டுபிடிக்க மாட்டார் என்று பானுமதிக்கு அவர் மேல் அவ்வளவு நம்பிக்கை. அவ்வளவு காதல் போதை பானுமதி மேல் ராமச்சந்திரனுக்கு)
இப்போது நடிகர் திலகம் பாடுவார்.
'ஆவியே ஈடில்லா உண்மைக் காதலால்
ஆனந்தம் பொங்குதே எனது வாழ்விலே'
இப்போது பானுமதி
'பூவிலே தேன்மணம்
மேவிடும் பொன்னைப் போல்
பூமியில் நாமினி வாழலாம்
தென்றலே இனிமையாய் வீசுதே
கண்களே காதலைப் பேசுதே
என் மனம் இன்பமே காணுதே'
என்று பாட, நடிகர் திலகம் 'வெண்ணிலா ஜோதியை வீசுதே' என்று மீண்டும் பல்லவி எடுக்க, அப்போது தன் கையில் உள்ள ஒற்றைப் பூவை பால்கனியிலிருந்து காதலாய் பானுமதி நடிகர் திலகத்தின் மீது வீச, அந்தப் பூ மேலிருந்து ஸ்லோவாக சுற்றியபடி அழகாக கீழே விழ, நடிகர் திலகம் பாடலைப் பாடிக்கொண்டே காதலில் வெற்றி அடைந்தவராய் அதை புதையல் கண்டது போல் குனிந்து பவ்யமாக எடுக்க, அந்த கண்கொள்ளாக் காட்சி வரும் வினாடிகள் என்ன ஒரு காவிய வினாடிகள்! அனுபவித்து ரசித்து உணர வேண்டிய காட்சிக் காதல்.
இப்போது அங்கே டி.ஆர்.ஆர்.ஓலமிட ஆரம்பிப்பார். பானுமதி அவர் பக்கம் ஓட ஆரம்பிப்பார்.
'திண்டாடுதே என் கண்களே
சிங்காரி உன்னைத் தேடி
தீயாகுதே என் நெஞ்சமே
செய்யாதே வீண் காலதாமதம்'
டி.ஆர்.ராமச்சந்திரனுக்கு 'பிதாபுரம்' நாகேஸ்வரராவ் என்பவர் குரல் தந்திருப்பார். இவர் குரல் வி.என்.சுந்தரம் என்ற பின்னணிப் பாடகரின் குரலை ஒத்திருப்பது போலத் தோன்றும். ('சிந்து பாடும் தென்றல் வந்து என்று ஒரு பாடலை 'நானே ராஜா' என்ற நடிகர் திலகத்தின் படத்தில் நடிகர் முஸ்தபாவுக்காக பாடி இருப்பார் சுந்தரம்)


பாடல் என்னவோ ஒரு பெண் இரு ஆண்களை மாற்றி மாற்றி ஏமாற்றிப் பாடும் காமெடி பாடல்தான். ஆனால் அதையும் மீறி அந்தப் பெண்ணைக் காதலிக்கும் அந்த இரு ஆண்களின் ஆழமான காதலை கவித்துவமாகவும் சொல்லத் தவறவில்லை இந்த அற்புதப் பாடல். அந்தப் பெண்ணிற்காக வாழ்வையே அர்ப்பணிக்கத் தயாராக இருக்கும் இரு இளைஞர்கள். அவள் மீது உயிரையே வைத்து, முழுவதுமாகத் தங்களை மறந்து, அவள் காதலுக்காகவே ஏங்கும் ஏக்கப் பெருமூச்சு விடும் வாலிபர்கள். கண்மூடித்தனமான, கண்ணிய முரட்டுக் காதலர்கள்.
ஜி.ராமனாதனின் அருமையான மேற்கத்திய பாணி இசை நம்மை சுண்டி இழுக்கிறது. கண்டசாலாவின் குரல் காந்தமாக இழுக்கிறது என்றால் பானுமதியின் குரல் பலாச்சுளை கலந்த தேனாய் இனிக்கிறது. நடிகர் திலகத்தின் ஆழமான அமைதிக் காதலும், ராமச்சந்திரனின் ஆர்ப்பாட்டக் காதலுமாய் இருவேறு பரிணாமங்களை காட்டும் பாடல் மட்டுமல்லாது பானுமதியின் ஒரே நேர சமாளிப்பு ரெட்டை வேட நடிப்பிலும், அவரின் அமர்க்களமான குரலிலும் வேறு சேர்ந்து இன்னொரு பக்கம் இன்னும் தனியாக ஒளிர்கிறது...மிளிர்கிறது.
கமலின் பின்னாளைய சூப்பர் ஆள்மாறாட்ட மைக்கேல் மதன காமராஜ கலட்டா, 'நாம் இருவர் நமக்கு இருவர்' பிரபுதேவா கலட்டாக்களையெல்லாம் அப்போதே பானுமதி தனி ஒருவராக பிரமாதமாக செய்து காட்டி விட்டதைக் கண்டால் வியப்பு மேலிடுகிறது! 'அஷ்டாவதானி' என்றால் இவர்தானே! 'மணமகன் தேவை' படத்தில் பானுமதியின் நடிப்பை வர்ணிக்க வார்த்தைகள் தேட வேண்டும். அவருடைய 'மாஸ்டர் பீஸ்'களில் முக்கியமான ஒன்று 'மணமகன் தேவை'. படம் முழுதும் 'கலகல' ஜாலி டைப்.
பார்த்து சிரித்து ரசித்து வியந்து மகிழுங்கள்.

சின்னா! இன்னைக்கு இந்தப் பாட்டை எழுதப் போறேன்னு கனவிலும் நினைக்கல. எல்லாம் உங்களால வந்தது.
நீங்க 'மணமகன் தேவை' விளம்பரம் கொடுக்காம இருந்திருந்தா இது வந்திருக்காது. திடீர் சமையல். உப்பு, காரம், மணம், சுவை கம்மியா இருந்தா கொவச்சிக்காதீங்க.
Last edited by vasudevan31355; 8th November 2015 at 08:04 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
8th November 2015, 02:59 PM
#1453
Senior Member
Senior Hubber
//சின்னா! இன்னைக்கு இந்தப் பாட்டை எழுதப் போறேன்னு கனவிலும் நினைக்கல. எல்லாம் உங்களால வந்தது. நீங்க 'மணமகன் தேவை' விளம்பரம் கொடுக்காம இருந்திருந்தா இது வந்திருக்காது. திடீர் சமையல். உப்பு, காரம், மணம், சுவை கம்மியா இருந்தா கொவச்சிக்காதீங்க// எனக்குத் தெரியும் வாஸ்ஸூ ஜி.. நன்றாக வாயைக்குவித்து ஊதி ஊதி மெல்லிதான ஒற்றைக் கண் நெருப்பு இருக்கும் ஊதுபத்தியை ஜொலிக்க வைத்து பின் அப்படியே நைஸாக எடுத்துப் போய் லட்சுமி (மேனன் )வெடிமீது வைக்க, அது மென்சிரிப்பு விரைவாய்ச் சிரித்துக் கொஞ்சம் உம்மென்று இருந்து விட்டு பின் “ஃபை ஃபை ஃபை கலாய்ச்சுஃபை” தன விஷம்ச் சிரிப்புடன் டப்ப்பார் என்று வெடிப்பது போலவே ... மெல்ல ம்ஹூஹும் மாட்டேன் பாட்டைப் பற்றி ஒருவரி எழுதிவிட்டுப் பேசாமலிருந்திருக்கிறீர்கள், பின் வெடிப்பீர்கள் என நினைத்திருந்தேன்..அதுபோலவே ஜோராக வெடித்துவிட்டீர்கள்..தாங்க்ஸ்.
இதுக்காகவே இந்த கிடார் பாட்டை(இதே படத்துல இன்னொரு பாட் இருக்கு கிடாரா வயலினான்னு தெரியலை ஆனா ந.தியும் டி.ஆரும் பானுவும் பாடுவதா நினைவு என எழுதாமல்) எழுதாமல் விட்டிருந்தேன்..
சொன்னாற்போலவே நல்ல பாட்டு..ஜோராய் எழுதியிருக்கிறீர்கள்..வீட் போய் கேட்டுவிட்டு மறுபடி சொல்கிறேன்..தாங்க்ஸ் அகெய்ன்..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th November 2015, 07:59 PM
#1454
Senior Member
Diamond Hubber
ராகவேந்திரன் சார்,
வேதா பற்றிய 'அம்மா எங்கே?' நினைவுகள் அருமை. நல்ல பதிவு. முக்கனி.. சக்கரை.. முத்து... பவளம் அத்தனையும் சேர்ந்ததுதான் தங்கள் பதிவு.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th November 2015, 10:09 PM
#1455
Senior Member
Senior Hubber
தென்ற்லடிக்குது என்னை மயக்குது தேன்மொழியே இந்தவேளையிலே
எங்கே சீரிஸில் இன்று “சுகம் எங்கே”
கே.ஆர் ராமசாமி சாவித்ரி விஸ்வ நாதன் அண்ட் ராமமூர்த்தி எக்ஸாக்ட்லி சிக்ஸ்டி ஒன் இயர்ஸ் அகோ..(அப்போ நான் போன ஜென்மத்தில இருந்தேன்
)
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th November 2015, 10:16 PM
#1456
Senior Member
Senior Hubber
உள்ளம் தேடாதே என்று சொல்லுதே
என்ன சொன்னாலும் கண் தேடுதே
என்னை அறியாமலே ஒன்றும் தெரியாமலே
நெஞ்சம் வாடுதே வாடுதே...ஆஹா என்னா கானம்...
கே.ஆர்.ராமசாமி எஸ் ஜானகி..
எதையும் தாங்கும் இதயம்
இளம் கன்னி மனசிலே பருவ காளை வயசிலே
வரும் காதலுன்னு உனக்கு இன்னும் புரியலே..
கே.ஆர்.ராமசாமி பற்றி ஏற்கெனவே அலசியாச்சா..இல்லைஎனில் மஸ்கட் அறுபத்து ஆறாவதுவட்டம் சார்பாக தலைவர் ராகவேந்திரனையும் பொருளாளர் வாசு அவர்களையும் பாடல் புரவலர் மதுண்ணாவையும் அழைக் அழைக்கிறேன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th November 2015, 10:34 PM
#1457
Senior Member
Senior Hubber
ராகவேந்தர், வாசு சார்,செந்தில்வேல் சி.செ எல்லாம் ந.தி பக்தர்கள்.. அப்ப நானு.. தக்கனூண்டு ரசிகன்..தம்மாத்தூண்டுன்னும் சொல்லலாம்.. ஆனால் தமிழில் சின்னஞ்சிறிய ரசிகன் ..யா.. என்ன சொல்லவந்தேன்..சின்னஞ்சிறிய.. நானும் சின்னஞ்சிறுசு..பார்க்கப் போவதும் சின்னஞ்சிறு - பாடல்கள். - ஆனால் வெகு ஆழமான பாடல்கள்..
**
சில பாடல்கள் சொல்லும் உணர்வினை விஷயஙகளை வார்த்தையில் வடிக்க ஏலாது..கொஞ்சம் அப்படியே உணர்வில் புகுந்து உயிரைத் தீண்டிவிடும் சில பாடலகள்..
இந்தப் பாடல் எழுதிய மகாகவி பாரதியார், உள்ள பூர்வமாகப் பாடிய எம்.எல்.வசந்தகுமாரி, வி.என்.சுந்தரம் (என்னுயிர் நின்னதன்றோ...எனச்சொல்லி நிற்கும் போது கொஞ்சம் மெய்சிலிர்க்கிறது... நெடு நாள் பிறகு கேட்கிறேன்..முதன் முதல் பார்க்கிறேன்..இளமை பத்மினி லலிதாவை விடுங்கள் பாலையா என்ன அழகு..
சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்!)
பிள்ளைக்கனியமுதே, -கண்ணம்மா!
பேசும் பொற்சித்திரமே!
அள்ளியணைத்திடவே-என்முன்னே
ஆடிவருந் தேனே
ஓடி வருகையிலே- கண்ணம்மா!
உள்ளம் குளிருதடீ;
ஆடித்திரிதல் கண்டால் உன்னைப்போய்
ஆவி தவிழுதடி
உச்சிதனை முகந்தால் - கருவம்
ஓங்கி வளருதடி
மெச்சி யுனை யூரார்- புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடீ.
கன்னத்தில் முத்தமிட்டால்-உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடீ
உன்னை தழுவிடிலோ- கண்ணம்மா
உன்மத்த மாகுதடீ.
உன் கண்ணில் நீர்வழிந்தால்- என்நெஞ்சில்
உத்திரங் கொட்டுதடி;
என் கண்ணில் பாவையன்றோ? கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th November 2015, 10:41 PM
#1458
Senior Member
Veteran Hubber
chinnakkaNNan: You are posting K R Ramasami songs? Don't be in a hurry to age!
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
8th November 2015, 10:58 PM
#1459
Senior Member
Senior Hubber

Originally Posted by
rajraj
chinnakkaNNan: You are posting K R Ramasami songs? Don't be in a hurry to age!

ஏன் யங்க்ஸ்டர்ஸ்லாம் கே.ஆர்.ராமசாமி பாட் கேக்கப் படாதோ.. ராஜ் ராஜ் சார் 
சின்னஞ்சிறுகண்மலர் செம்பவள வாய் மலர்
சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி
சிவகங்கைக் குளத்தருகே ஸ்ரீ துர்கை சிரித்திருப்பாள் சீர்காழி கணீர்க்குரல்
சின்னஞ்சிறு கண்ணன் அந்த சிங்கார வண்ணன்
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
சின்னஞ்சிறிய வண்ணப்பறவை எண்ணத்தைச் சொல்லுதம்மா
சின்னச்சின்ன வண்ணக்குயில் கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதமா
சின்னச்சின்னக் கண்ணனுக்கு என்ன தான்புன்னகையோ
சின்னச்சின்ன வீடு கட்டி சிங்கார வீடு கட்டி ஒன்றாக வாழ்ந்தோம் ஒன்றாக
சின்னஞ்சிறு வேறென்ன இருக்கு..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th November 2015, 01:50 AM
#1460
Senior Member
Veteran Hubber
chinnanchiru
From Thaai magaLukku kattiya thaali (1959)
chinnanchiru vayathu muthal serndhu naam pazhagi vandhom.......
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks